என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "1500 கிலோ"

    • குழித்துறை அருகே கார், ஆட்டோ மூலம் முயற்சி
    • வட்ட வழங்கல் அதிகாரி அதிரடி நடவடிக்கை

    கன்னியாகுமரி:

    தமிழகத்தில் இருந்து கேரளாவிற்கு அரிசி உள்ளிட்ட பொருட்கள் கடத்தப்படுவதை தடுக்க வட்ட வழங்கல் அதிகாரி புரந்தரதாஸ் தலைமையில் வருவாய் ஆய்வாளர் ரெதன் ராஞ்குமார் கொண்ட குழு குழித்துறை அருகே வெட்டுமணி பகுதியில் ரோந்து பணியில் ஈடுபட்டிருந்தனர்.

    அப்போது சந்தேகத்துக்கு இடமாக கார் ஒன்று வந்து கொண்டிருந்தது. அந்த காரை நிறுத்துமாறு சைகை காட்டினர். ஆனால் அந்த கார் நிறுத்தாமல் சென்று விட்டது. தொடர்ந்து சுமார் 2 கிலோமீட்டர் தூரம் துரத்தி சென்று உதச்சிக்கோட்டை பகுதியில் வைத்து காரை மடக்கி பிடித்தனர். ஆனால் டிரைவர் தப்பி ஓடிவிட்டார். காரை சோதனை செய்து பார்த்த போது அதில் சிறுசிறு மூடைகளாக சுமார் 1000 கிலோ ரேசன் அரிசி இருந்தது கண்டு பிடிக்கப்பட்டது.

    மேலும் அதே பகுதியில் அதிகாரிகள் ரோந்து பணியில் ஈடுபட்டபோது சந்தேகத்துக்கு இடமாக ஆட்டோ ஒன்று வந்துக் கொண்டிருந்தது.ஆட்டோவை நிறுத்துமாறு சைகைகாட்டியும் ஆட்டோ நிற்காமல் சென்று விட்டது. தொடர்ந்து சுமார் 3 கிலோ மீட்டர் தூரம் துரத்தி சென்று மார்த்தாண்டம் பகுதியில் வைத்து மடக்கி பிடித்தனர். ஆனால் டிரைவர் தப்பி ஓடி விட்டார். ஆட்டோவை சோதனை செய்து பார்த்த போது அதில் சுமார் 500 கிலோ ரேசன் அரிசி இருந்தது கண்டுபிடிக்க பட்டது.

    இந்த ரேசன் அரிசி கேரளாவிற்கு கடத்தி செல்வது தெரிய வந்தது.

    பின்னர் ஆட்டோவில் இருந்தும் காரிலிருந்தும் கைப்பற்றப்பட்ட ரேசன் அரிசியை காப்பிக்காடு அரசு நுகர்வோர் வாணிப கிடங்கிலும் கடத்தல் வாக னங்களை வட்டாச்சியர் அலுவலகத்திலும் ஒப்படைக்கப்பட்டது. தப்பி ஓடிய டிரைவர்கள் யார்? என்று விசாரணை நடைபெற்று வருகிறது.

    ×