என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "பொருளாதார வல்லுநர்"

    • மத்திய பட்ஜெட் அடுத்த ஆண்டு பிப்ரவரி 1-ம் தேதி பாராளுமன்றத்தில் தாக்கல் செய்யப்பட உள்ளது.
    • நிதி மந்திரி நிர்மலா சீதாராமன் 8-வது முறையாக மத்திய பட்ஜெட்டை தாக்கல் செய்கிறார்.

    புதுடெல்லி:

    2025-26ம் நிதியாண்டிற்கான மத்திய பட்ஜெட் அடுத்த ஆண்டு பிப்ரவரி மாதம் 1-ம் தேதி பாராளுமன்றத்தில் தாக்கல் செய்யப்பட உள்ளது. மத்திய பட்ஜெட்டை நிதி மந்திரி நிர்மலா சீதாராமன் தாக்கல் செய்ய உள்ளார். பட்ஜெட் தயாரிப்புக்கான பணிகள் துரிதமாக நடைபெற்று வருகிறது.

    இந்நிலையில், தலைநகர் டெல்லியில் பிரதமர் மோடி, நிதி மந்திரி நிர்மலா சீதாராமன் ஆகியோர் பொருளாதார வல்லுநர்கள் மற்றும் நிபுணர்களை இன்று சந்தித்து ஆலோசனை நடத்தினர்.

    இந்தச் சந்திப்பின்போது பட்ஜெட் தயாரிப்பு உள்பட பல்வேறு விவகாரங்கள் குறித்து ஆலோசிக்கப்பட்டது. இந்தக் கூட்டத்தில் நிதி ஆயோக் துணை தலைவர் மற்றும் திட்டக்குழு உறுப்பினர்கள் கலந்து கொண்டனர்.

    மத்திய நிதி மந்திரி நிர்மலா சீதாராமன் 8-வது முறையாக பட்ஜெட்டை தாக்கல் செய்ய உள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.

    • மருத்துவம், இயற்பியல் உள்ளிட்ட துறைகளை தொடர்ந்து பொருளாதாரத்துக்கும் நோபல் பரிசு.
    • வங்கிகள், நிதி நெருக்கடி குறித்த ஆய்வுக்காக 3 பேருக்கும் நோபல் பரிசு பகிர்ந்தளிக்கப்படுகிறது.

    ஸ்டாக்ஹோம்:

    மருத்துவம், இயற்பியல், வேதியியல், இலக்கியம், பொருளாதாரம் மற்றும் அமைதிக்கான துறைகளில் சர்வதேச சமூகத்திற்கு சிறப்பான பங்களிப்பு செய்த சாதனையாளர்களுக்கான நோபல் பரிசுகள் ஆண்டுதோறும் வழங்கப்பட்டு வருகின்றன. அதன்படி 2022ம் ஆண்டிற்கு மருத்துவம், இயற்பியல் உள்ளிட்ட துறைகளுக்கான நோபல் பரிசுகள் கடந்த வாரம் அறிவிக்கப்பட்டிருந்தன.

    இந்நிலையில், இன்று பொருளாதாரத்துக்கான நோபல் பரிசு மூன்று பொருளாதார வல்லுநர்களுக்கு பகிர்ந்தளிக்கப்பட்டுள்ளது.

    அமெரிக்காவைச் சேர்ந்த பென் பெர்னாக், டக்லஸ் டைமண்ட், ஃபிலிப் ஹெச்.டிப்விக் ஆகிய மூன்று பொருளாதார வல்லுநர்களுக்கு நோபல் பரிசு கூட்டாக வழங்கப்பட்டுள்ளது. வங்கிகள் மற்றும் நிதி நெருக்கடிகள் குறித்து ஆய்வுக்காக மூன்று பேருக்கும் நோபல் பரிசு பகிர்ந்தளிக்கப்படுகிறது.

    ×