search icon
என் மலர்tooltip icon

    ஸ்வீடன்

    • மருத்துவத்திற்கான நோபல் பரிசு விக்டர் ஆம்ரோஸ், கேரி ருவ்குன் ஆகிய இருவருக்கு பகிர்ந்தளிப்பு
    • மைக்ரோ RNA கண்டுபிடிப்பு தொடர்பாக விருது அளிக்கப்பட்டுள்ளது.

    சுவீடன் நாட்டு தலைநகரான ஸ்டாக்ஹோம் நகரில் உள்ள சோல்னா (Solna) எனும் பகுதியில் உள்ளது 'கரோலின்ஸ்கா இன்ஸ்டிட்யூட்' எனப்படும் புகழ்பெற்ற மருத்துவ கல்வி நிறுவனம்.

    இக்கல்வி நிறுவனத்தின் 50 பேராசியர்களை கொண்ட 'நோபல் அசெம்பிளி' (Nobel Assembly) எனும் குழு ஒவ்வொரு வருடமும் மருத்துவ துறையில் மனித இனத்திற்கு பலனளிக்கும் வகையில் கண்டுபிடிப்புகளை செய்த நிபுணர்களுக்கு நோபல் பரிசு எனப்படும் உலகப்புகழ் வாய்ந்த விருதிற்கு தகுதியானவர்களை தேர்வு செய்கிறது.

    2024ம் ஆண்டின் மருத்துவத்திற்கான நோபல் பரிசு விக்டர் ஆம்ரோஸ், கேரி ருவ்குன் ஆகிய இருவருக்கு பகிர்ந்தளிக்கப்படுவதாக அறிவிக்கப்பட்டுள்ளது.

    மைக்ரோ RNA கண்டுபிடித்ததற்காகவும் டிரான்ஸ்கிரிப்ஷனுக்குப் பிறகு மரபணு வெளிப்பாட்டைக் கட்டுப்படுத்துவதில் முக்கிய பங்காற்றியதற்காகவும் இருவருக்கும் நோபல் பரிசு அறிவிக்கப்பட்டுள்ளது.

    உயிரினங்கள் எவ்வாறு உருவாகின்றன மற்றும் செயல்படுகின்றன என்பதை விளக்குவதற்கு இவர்கள் இருவரின் கண்டுபிடிப்பும் மிக முக்கியத்துவம் வாய்ந்தவை என்று நோபல் பரிசு கமிட்டி தெரிவித்துள்ளது.

    கடந்தாண்டு மருத்துவ துறைக்கான நோபல் பரிசு, கொரோனா தடுப்பூசி தயாரிக்க உதவிய கட்டாலின் கரிக்கோ மற்றும் ட்ரூ வைஸ்மேன் ஆகிய இருவருக்கும் இணைந்து வழங்கப்பட்டது.

    மருத்துவத்திற்காக நோபல் பரிசு இதுவரை மொத்தம் 227 பேருக்கு வழங்கப்பட்டுள்ளது. இதுவரை 13 பெண்கள் மட்டுமே மருத்துவத்திற்காக நோபல் பரிசை பெற்றுள்ளனர். நோபல் பரிசு தொகை இந்திய மதிப்பில் சுமார் ரூ.8.3 கோடியாகும்.

    விஞ்ஞானி ஆல்பிரட் நோபலின் நினைவாக இந்த பரிசு வருடம் தோறும் வழங்கப்படுகிறது. நோபலின் நினைவு தினமான டிசம்பர் 10 அன்று வெற்றியாளர்கள் தங்களின் விருதுகளைப் பெறுவார்கள்.

    இந்த வாரத்தில் இயற்பியல், வேதியியல், இலக்கியம், அமைதி மற்றும் பொருளாதாரத்திற்கான நோபல் பரிசுகள் அறிவிக்கப்படவுள்ளது குறிப்பிடத்தக்கது.

    • ஒரு நாட்டின் எதிர்காலம் அந்நாட்டின் இளைஞர்கள் கையில் தான் உள்ளது.
    • வீதியில் வந்து விளையாடி மகிழ்ந்த குழந்தைகள் இன்று செல்போனே கதி என்று கிடக்கிறார்கள்.

    ஒரு காலத்தில் வீடுகளில் தொலைபேசி இருந்தாலே அவர்களை பெரிய பணக்காரர்களாக பார்ப்பார்கள். அந்த தொலைபேசி படிப்படியாக வளர்ந்து தற்போது செல்போன்களாக உருவெடுத்து விட்டன.

    இன்றைய விஞ்ஞான உலகில் அனைத்தும் கையில் அடக்கம் என்பது போல செல்போன்கள் உள்ளன. பேசுவதற்கு மட்டுமே பயன்படுத்தப்பட்ட செல்போன்கள் இன்று வளர்ச்சி அடைந்து, பொழுதுபோக்கு, அறிவியல் அறிவு, விளையாட்டு, தொழில் என அனைத்து தகவல்களுக்கும் பயன்படுத்தப்படுகிறது.

    செல்போன் என்பது பலருக்கும் ஆறாவது விரலாகி விட்டது. தற்போது குழந்தைகள் முதல் முதியவர்கள் வரை அனைவரும் செல்போனை பயன்படுத்துகின்றனர். ஸ்மார்ட் போன்கள் வருவதற்கு முன்பெல்லாம் குழந்தைகளுக்கு தாய்மார்கள் நிலாவை காண்பித்து சோறு ஊட்டுவார்கள். விளையாட்டு காண்பித்தும், கதைகளை கூறியும் உணவு அளித்தார்கள். ஆனால் இன்றோ தலைகீழாக மாறி விட்டது. குழந்தைகள் உணவு சாப்பிட பெற்றோர்கள் செல்போனை கையில் கொடுத்து விடுகிறார்கள். குழந்தைகள் சாப்பிட்டால் போதும் என்று நினைக்கும் பெற்றோர், செல்போனை கொடுப்பதால், நாளடைவில் அதற்கு அடிமையாகி விடுகின்றன. பின்னர் செல்போன் கொடுக்காவிட்டால் அடம்பிடிக்கின்றன.

    குழந்தைகள் நிலைமை இவ்வாறு என்றால் இளம்பெண்கள், இளைஞர்களின் நிலைமை ரீல்ஸ்மோகம். அதுமட்டுமின்றி செல்பி மோகமும் அதிகரித்து விட்டது. இதனால் சமீபகாலமாக செல்போன்களால் பலரும் பாதிப்படைந்து வருகிறார்கள். செல்போன்களால் நன்மைகள் இருந்தாலும், அதில் தீமைகளும் அதிகமாகதான் இருக்கின்றன. பள்ளி மாணவ-மாணவிகள் செல்போனை நீண்ட நேரம் பார்ப்பதால் அவர்களது படிப்பு பாதிக்கப்படுகிறது. செல்போன் பார்ப்பதை பெற்றோர் கண்டித்தால், மாணவர்கள் தற்கொலை செய்து கொள்ளும் சம்பவங்களும் ஆங்காங்கே நடந்து வருகின்றன.

    முதலில் குழந்தைகள் செல்போன் பயன்படுத்துவதை தடுக்க வேண்டும். அதற்கு பெற்றோர் தான் நடவடிக்கை எடுக்க வேண்டும். அதிக நேரம் செல்போன்களை பார்ப்பதால், குழந்தைகளுக்கு மனச்சோர்வு, கவனக்குறைவு, தூக்கமின்மை, பார்வை குறைபாடு போன்ற பிரச்சினைகளும் ஏற்படுகின்றன. குழந்தைகள் செல்போன்களுக்கு அடிமையாவதை தடுக்காவிட்டால் எதிர்காலத்தில் விளைவு மோசமாகி விடும் என்று சமூக ஆர்வலர்கள் கூறுகிறார்கள். வீதியில் வந்து விளையாடி மகிழ்ந்த குழந்தைகள் இன்று செல்போனே கதி என்று கிடக்கிறார்கள். இதனால் அவர்களது உடல் ஆரோக்கியமும் பாதிக்கப்படுகிறது.

    இதை கருத்தில் கொண்டு பல்வேறு நாடுகள் குழந்தைகள் செல்போன்கள் பயன்படுத்த தடை விதிக்க ஆலோசித்து வருகின்றன. இதில் தற்போது சுவீடனில் மாணவர்கள் செல்போன் பயன்படுத்த தடை விதித்து அந்நாட்டு அரசாங்கம் உத்தரவிட்டுள்ளது. அதன்படி 2 வயதுக்குட்பட்ட குழந்தைகள் செல்போன், டி.வி. போன்றவற்றை பார்க்க பெற்றோர் அனுமதிக்கக்கூடாது. மேலும் 2 முதல் 5 வயது வரை உள்ள குழந்தைகள் ஒருநாளைக்கு அதிகபட்சம் 1 மணி நேரமும், 6 முதல் 12 வயது வரை உள்ளவர்கள் 2 மணி நேரம் வரையும் செல்போனை பயன்படுத்தலாம். 13 முதல் 18 வயதுடையவர்கள் அதிகபட்சம் 3 மணி நேரம் வரை செல்போனை பயன்படுத்திக் கொள்ள அனுமதி வழங்கலாம் என பெற்றோருக்கு சுவீடன் சுகாதாரத்துறை அறிவுறுத்தி உள்ளது. ஆனால் இதை பெற்றோர் தான் நடைமுறை படுத்த வேண்டும்.

    இதேபோல ஆஸ்திரேலியாவில் 14 வயதுக்குட்பட்ட சிறுவர்கள் சமூக ஊடகங்கள் பயன்படுத்த தடைவிதிக்கப்பட உள்ளது. இந்த ஆண்டு இறுதிக்குள் இதற்கான சட்டம் இயற்றப்பட்டு விரைவில் நடைமுறைக்கு கொண்டு வரப்படும் என அந்த நாட்டின் பிரதமர் அந்தோனி அல்பானிஸ் தெரிவித்துள்ளார்.

    இதுகுறித்து அவர் வெளியிட்டுள்ள ஒரு அறிக்கையில், "சமூக ஊடகங்கள் சிறுவர்களின் சமூக சூழலுக்கு தீங்கு விளைவிக்கும் என்பது நாம் அறிந்ததே. சிறுவர்கள் சமூக வலைத்தளங்களை பயன்படுத்துவதன் மூலம் உண்மையான நண்பர்களிடம் இருந்தும், உணர்வுபூர்வமான அனுபவங்களில் இருந்தும் விலகி விடுகின்றனர்" என்று தெரிவித்துள்ளார்.

    14 வயதுக்குட்பட்ட சிறுவர்களுக்கு சமூக ஊடகங்களில் இருந்து தடை செய்வதற்கான சட்டபூர்வ வழிகளை ஆராய சுப்ரீம் கோர்ட்டு முன்னாள் நீதிபதி தலைமையில் குழு ஒன்றை ஆஸ்திரேலியா அரசு அமைத்துள்ளது. இந்த சமூக ஊடகங்களை சிறுவர்கள் செல்போன்கள் மூலமாக தான் பயன்படுத்தி வருகிறார்கள்.

    ஒரு நாட்டின் எதிர்காலம் அந்நாட்டின் இளைஞர்கள் கையில் தான் உள்ளது. அந்த இளைஞர்கள் தற்போதைய குழந்தைகள். தற்போதே குழந்தைகள் செல்போன்களுக்கும், சமூக ஊடகங்களுக்கும் அடிமையாகி தங்களது வாழ்க்கையை தொலைத்து விடக்கூடாது என்று சுவீடன், ஆஸ்திரேலியா நாடுகள் நடவடிக்கை எடுத்து வருகின்றன. இதே போன்று நம்நாட்டிலும் செல்போன்களை பயன்படுத்த குழந்தைகள், பள்ளி, கல்லூரி மாணவர்களுக்கு கட்டுப்பாடு விதிக்கலாம். அவ்வாறு விதிக்கப்படும் போது அவர்களின் எதிர்காலம் பாதுகாக்கப்படும். இது போன்ற நடவடிக்கை சமூக நலன்களுக்கும் வழிவகுக்கும். குற்றச்சம்பவங்களும் குறைய வாய்ப்புகள் உள்ளதாகவும் சமூக ஆர்வலர்கள் கூறுகிறார்கள்.

    எனவே நமது நாட்டில் குழந்தைகள், மாணவ பருவத்தினர் படிப்பு மற்றும் விளையாட்டில் ஆர்வத்துடன் ஈடுபட செல்போன் பயன்பாட்டை கட்டுப்படுத்துவது அவசியம். அதற்கு அரசு நடவடிக்கை எடுத்தாலும் அதை நடைமுறை படுத்துவது பெற்றோர் கையில்தான் உள்ளது. எது எப்படியோ எதிர்கால இந்தியா இளைஞர்கள் கையில் உள்ளது என்பார்கள். அதை ஸ்மார்ட் போன்கள் விழுங்கி விடக்கூடாது என்பது பலரது எண்ணம். இந்த எண்ணம் நிறைவேறுமா?

    • ஸ்வீடிஷ் ஓபன் டென்னிஸ் தொடர் ஸ்வீடனில் நடந்து வருகிறது.
    • ஆண்கள் ஒற்றையர் பிரிவில் ரபேல் நடால் இறுதிப்போட்டியில் தோற்றார்.

    பாஸ்தாத்:

    ஸ்வீடிஷ் ஓபன் டென்னிஸ் தொடர் ஸ்வீடனில் நடைபெற்றது. இதில் ஆண்கள் ஒற்றையர் பிரிவு இறுதிச்சுற்று நடைபெற்றது.

    இன்று நடந்த போட்டியில் ஸ்பெயினின் ரபேல் நடால், போர்ச்சுகல் வீரர் நியுனோ போர்ஜஸ் உடன் மோதினார்.

    இதில் போர்ஜஸ் 6-3, 6-2 என்ற நேர் செட் கணக்கில் எளிதில் வென்று சாம்பியன் பட்டம் வென்றார்.

    • ஸ்வீடிஷ் ஓபன் டென்னிஸ் தொடர் ஸ்வீடனில் நடந்து வருகிறது.
    • ஆண்கள் ஒற்றையர் பிரிவில் ரபேல் நடால் இறுதிப்போட்டியில் நுழைந்தார்.

    பாஸ்தாத்:

    ஸ்வீடிஷ் ஓபன் டென்னிஸ் தொடர் ஸ்வீடனில் நடைபெற்று வருகிறது. இதில் ஆண்கள் ஒற்றையர் பிரிவின் அரையிறுதி சுற்று ஆட்டங்கள் நடந்து வருகின்றன.

    இன்று நடந்த போட்டியில் ஸ்பெயினின் ரபேல் நடால், குரோசியாவின் டுஜே அஜ்டுகோவிச் உடன் மோதினார்.

    இதில் முதல் செட்டை டுஜே 6-4 என கைப்பற்றினார். இதற்கு பதிலடி கொடுக்கும் விதமாக 2-வது செட்டை நடால் 6-3 என கைப்பற்றினார்.

    வெற்றியாளரை நிர்ணயிக்கும் 3-வது செட்டை நடால் 6-4 என கைப்பற்றினார்.

    இறுதியில் நடால் 4-6, 6-3, 6-4 என்ற செட் கணக்கில் வென்று இறுதிப்போட்டிக்கு முன்னேறினார்.

    • ஸ்வீடிஷ் ஓபன் டென்னிஸ் தொடர் ஸ்வீடனில் நடந்து வருகிறது.
    • ஆண்கள் ஒற்றையர் பிரிவில் ரபேல் நடால் அரையிறுதியில் நுழைந்தார்.

    பாஸ்தாத்:

    ஸ்வீடிஷ் ஓபன் டென்னிஸ் தொடர் ஸ்வீடனில் நடைபெற்று வருகிறது. இதில் ஆண்கள் ஒற்றையர் பிரிவின் காலிறுதி சுற்று ஆட்டங்கள் நடந்து வருகின்றன.

    இன்று நடந்த போட்டியில் ஸ்பெயினின் ரபேல் நடால், -அர்ஜெண்டினாவின் மரியானோ நவோன் உடன் மோதினார்.

    இதில் முதல் செட்டை நவோன் 7-6 (7-2) என கைப்பற்றினார். இதற்கு பதிலடி கொடுக்கும் விதமாக 2-வது செட்டை நடால் 7-5 என கைப்பற்றினார்.

    வெற்றியாளரை நிர்ணயிக்கும் 3-வது செட்டை நடால் 7-5 என கைப்பற்றினார்.

    இறுதியில் நடால் 6-7 (2-7), 7-5, 7-5 என்ற செட் கணக்கில் வென்று அரையிறுதிக்கு முன்னேறி அசத்தினார்.

    • ஸ்வீடிஷ் ஓபன் டென்னிஸ் தொடர் ஸ்வீடனில் நடந்து வருகிறது.
    • ஆண்கள் ஒற்றையர் பிரிவில் ரபேல் நடால் வென்றார்.

    பாஸ்தாத்:

    ஸ்வீடிஷ் ஓபன் டென்னிஸ் தொடர் ஸ்வீடனில் நடைபெற்று வருகிறது. இதில் ஆண்கள் ஒற்றையர் பிரிவின் 2வது சுற்று ஆட்டங்கள் நடந்தன.

    இன்று நடந்த போட்டியில் ஸ்பெயினின் ரபேல் நடால், அமெரிக்காவின் கேமரூன் நூரியுடன் மோதினார்.

    இதில் நடால் 6-4, 6-4 என்ற நேர் செட் கணக்கில் வென்று காலிறுதிக்கு முன்னேறி அசத்தினார்.

    • ஸ்வீடிஷ் ஓபன் டென்னிஸ் தொடர் ஸ்வீடனில் நடந்து வருகிறது.
    • ஆண்கள் ஒற்றையர் பிரிவு 2-வது சுற்றில் சுமித் நாகல் தோல்வி அடைந்தார்.

    பாஸ்தாத்:

    ஸ்வீடிஷ் ஓபன் டென்னிஸ் தொடர் ஸ்வீடனில் நடைபெற்று வருகிறது. இதில் ஆண்கள் ஒற்றையர் பிரிவின் 2வது சுற்று ஆட்டங்கள் நடந்து வருகின்றன.

    இதில் இந்திய வீரர் சுமித் நாகல், அர்ஜெண்டினாவின் மரியானோ நவோன் உடன் மோதினார்.

    இதில் சுமித் நாகல் 4-6, 2-6 என்ற நேர் செட் கணக்கில் தோல்வி அடைந்து தொடரில் இருந்து வெளியேறினார். மரியானோ நவோன் காலிறுதிக்கு முன்னேறினார்.

    இந்தியாவின் சுமித் நாகல் தரவரிசையில் 68-வது இடத்தில் உள்ளார். சுமித் நாகல் முதல் 70 இடங்களுக்குள் வருவது இது முதல் முறை என்பது குறிப்பிடத்தக்கது.

    • ஸ்வீடிஷ் ஓபன் டென்னிஸ் தொடர் ஸ்வீடனில் நடந்து வருகிறது.
    • ஆண்கள் ஒற்றையர் பிரிவு 2-வது சுற்றில் ரஷிய வீரர் தோல்வி அடைந்தார்.

    பாஸ்தாத்:

    ஸ்வீடிஷ் ஓபன் டென்னிஸ் தொடர் ஸ்வீடனில் நடைபெற்று வருகிறது. இதில் ஆண்கள் ஒற்றையர் பிரிவின் 2வது சுற்று ஆட்டங்கள் நடந்து வருகின்றன.

    இதில் ரஷிய வீரர் ஆண்ட்ரே ரூப்லெவ், அர்ஜெண்டினாவின் தியாகோ டிரண்டே உடன் மோதினார்.

    இதில் ரூப்லெவ் 6-7 (5-7), 6-3, 4-6 என்ற செட் கணக்கில் தோல்வி அடைந்து தொடரில் இருந்து வெளியேறினார். தியாகோ டிரண்டே காலிறுதிக்கு முன்னேறினார்.

    • ஸ்வீடிஷ் ஓபன் டென்னிஸ் தொடர் ஸ்வீடனில் நடந்து வருகிறது.
    • ஆண்கள் இரட்டையர் பிரிவு காலிறுதியில் நடால், ரூட் ஜோடி வென்றது.

    பாஸ்தாத்:

    ஸ்வீடிஷ் ஓபன் டென்னிஸ் தொடர் ஸ்வீடனில் நடைபெற்று வருகிறது. இதில் ஆண்கள் இரட்டையர் பிரிவின் காலிறுதி சுற்று ஆட்டங்கள் நடந்து வருகின்றன.

    இதில் நார்வேயின் கேஸ்பர் ரூட், ஸ்பெயினின் ரபேல் நடால் ஜோடி, பிரான்சின் தியோ ஆரிபேஜ், ரஷியாவின் ரோமன் சப்யூலின் ஜோடியுடன் மோதியது.

    இதில் ரூட்-நடால் ஜோடி 6-4, 3-6, 12-10 என்ற செட் கணக்கில் வென்று அரையிறுதிக்கு முன்னேறியது.

    • ஸ்வீடிஷ் ஓபன் டென்னிஸ் தொடர் ஸ்வீடனில் நடந்து வருகிறது.
    • ஆண்கள் ஒற்றையர் பிரிவு 2-வது சுற்றில் நார்வே வீரர் தோல்வி அடைந்தார்.

    பாஸ்தாத்:

    ஸ்வீடிஷ் ஓபன் டென்னிஸ் தொடர் ஸ்வீடனில் நடைபெற்று வருகிறது. இதில் ஆண்கள் ஒற்றையர் பிரிவின் 2வது சுற்று ஆட்டங்கள் நடந்து வருகின்றன.

    இதில் நார்வே வீரர் கேஸ்பர் ரூட், பிரேசில் வீரர் தியாகோ மான்டெய்ரோ உடன் மோதினார்.

    இதில் கேஸ்பர் ரூட் 3-6, 3-6 என்ற நேர் செட் கணக்கில் தோல்வி அடைந்து தொடரில் இருந்து வெளியேறினார். தியாகோ மான்டெய்ரோ காலிறுதிக்கு முன்னேறினார்.

    • ஸ்வீடிஷ் ஓபன் டென்னிஸ் தொடர் ஸ்வீடனில் நடந்து வருகிறது.
    • ஆண்கள் ஒற்றையர் பிரிவு முதல் சுற்றில் இந்தியாவின் சுமித் நாகல் வென்றார்.

    பாஸ்தாத்:

    ஸ்வீடிஷ் ஓபன் டென்னிஸ் தொடர் ஸ்வீடனில் நடைபெற்று வருகிறது.

    இதில் ஆண்கள் ஒற்றையர் பிரிவின் முதல் சுற்றில் இந்தியாவின் சுமித் நாகல், ஸ்வீடனின் எலியாஸ் ஒய்மெர் ஆகியோர் மோதினர்.

    இதில் சுமித் நாகல் 6-4, 6-3 என்ற செட் கணக்கில் வென்று இரண்டாவது சுற்றுக்கு முன்னேறினார்.

    நாளை மறுதினம் நடைபெறும் அடுத்த சுற்றில் இந்திய வீரர் சுமித் நாகல் அர்ஜென்டினா வீரர் மரியானோ நவோனுடன் மோத உள்ளார்.

    • வான் போக்குவரத்து அதிகாரிகளை பரபரப்பு நிலைக்கு ஆளாக்கியது.
    • ரஷிய போர் விமானிகளுக்கு எச்சரிக்கை விடுக்கப்பட்டது.

    ரஷிய ராணுவத்திற்கு சொந்தமான போர் விமானம் ஒன்று ஸ்வீடன் வான்வெளியில் அத்துமீறி நுழைந்த சம்பவம் அந்நாட்டு வான் போக்குவரத்து அதிகாரிகளை திடீர் பதற்றம் மற்றும் பரபரப்பு நிலைக்கு ஆளாக்கியது.

    கடந்த வெள்ளிக் கிழமை அரங்கேறிய இந்த சம்பவத்தின் போது ரஷிய போர் விமானங்கள் ஸ்வீடன் நாட்டின் கிழக்கில் உள்ள பால்டிக் தீவான கோட்லாந்தின் வான்பரப்பில் பறந்து சென்றுள்ளன. இதை அறிந்த ஸ்வீடன் ஆயுதப்படை சார்பில், ரஷிய போர் விமானிகளுக்கு எச்சரிக்கை விடுக்கப்பட்டது.

     


    எனினும், ரஷிய விமானிகள் ஸ்வீடனுக்கு எந்த பதிலும் அளிக்கவில்லை என்று கூறப்படுகிறது. இதையடுத்து ஸ்வீடன் சார்பில் இரண்டு போர் விமானங்கள் அனுப்பப்பட்டன. பிறகு ரஷிய விமானங்கள் அங்கிருந்து வெளியேறியுள்ளன. ஸ்வீடன் வான்வெளியில் ரஷியா நீண்ட நேரம் அத்துமீறியதாக ஸ்வீடன் ராணுவம் குற்றம்சாட்டியது.

    "ரஷியாவின் செயல்களை ஏற்றுக் கொள்ளவே முடியாது. இவை பிராந்திய ஒருமைப்பாட்டுக்கான மரியாதையை குறைக்கும் வகையில் உள்ளது," என ஸ்வீடன் விமான படை தளபதி ஜோனஸ் விக்மேன் தெரிவித்தார். 

    ×