என் மலர்
நீங்கள் தேடியது "முத்தரப்பு தொடர்"
- நேபாள் நாட்டில் முத்தரப்பு தொடர் நடைபெற்று வருகிறது.
- இந்த தொடரில் நேபாள், நமீபியா, நெதர்லாந்து ஆகிய அணிகள் மோதுகிறது.
நேபாள் நாட்டில் முத்தரப்பு தொடர் நடைபெற்று வருகிறது. இந்த தொடரில் நேபாள், நமீபியா, நெதர்லாந்து ஆகிய அணிகள் மோதுகிறது. இதன் முதல் போட்டி இன்று நடைபெற்றது. இதில் நமீபியா - நேபாள் மோதின. இதில் டாஸ் வென்ற நமீபியா பேட்டிங்கை தேர்வு செய்தது.
அதன்படி முதலில் ஆடிய நமீபியா 20 ஓவர் முடிவில் 4 விக்கெட்டுகளை இழந்து 206 ரன்கள் எடுத்தது. அதிகபட்சமாக லோஃப்டி ஈடன் 101 ரன்கள் குவித்தார். இதனையடுத்து களமிறங்கிய நேபாள் அணி 18.5 ஓவர்களில் 186 ரன்னில் ஆல் அவுட் ஆனது. இதன் மூலம் 20 ரன்கள் வித்தியாசத்தில் வெற்றி பெற்றது. ஆட்டநாயகனாக லோஃப்டி ஈடன் தேர்வு செய்யப்பட்டார்.
இந்த போட்டியில் அதிவேக சதம் அடித்து லோஃப்டி ஈடன் வரலாற்று சாதனை படைத்துள்ளார். அவர் 33 பந்துகளில் சதம் அடித்து அசத்தியுள்ளார். இதில் 11 பவுண்டரி, 8 சிக்சர்கள் அடங்கும்.
இதற்கு முன்னதாக 34 பந்துகளில் சதம் அடித்து கௌசல் மல்லா அதிவேகமாக சதம் அடித்தவர்களின் பட்டியலில் முதலிடத்தில் இருந்தார். இவரைத் தொடர்ந்து தென் ஆப்பிரிக்கா வீரர் டேவிட் மில்லர் (35 பந்துகள்) 2-வது இடத்திலும், ரோகித் சர்மா (35 பந்துகள்) 3-வது இடத்திலும் இடம் பெற்றிருந்தனர்.
இவர்கள் அனைவரையும் பின்னுக்கு தள்ளி, அதிவேகமாக சதம் அடித்தவர்களின் பட்டியலில் நம்பர் 1 இடத்தை ஈடன் பிடித்துள்ளார்.
- அனைத்து அணிகளும் இருதரப்பு தொடர்களிலும் விளையாட வேண்டும்.
- 3 அணிகளுக்கு இடையே முத்தரப்பு தொடர் நடத்த நாங்கள் தயாராக இருக்கிறோம்.
இந்தியா -பாகிஸ்தான் ஆகிய அணிகள் ஐசிசி தொடர்களில் மட்டுமே விளையாடி வருகிறது. இரு அணிகளும் இருதரப்பு தொடரில் விளையாடுவது இல்லை.
இந்நிலையில் இரு அணிகளுக்கு இடையேயான இரு தரப்பு தொடரை ஆஸ்திரேலியாவில் நடத்த அந்நாட்டு கிரிக்கெட் வாரிய தலைவர் ஹாக்லி விருப்பம் தெரிவித்துள்ளது.
இது குறித்து அவர் கூறியதாவது:-
இது தொடர்பான முறையான ஆலோசனைகளை நடத்தவில்லை. ஆனால் இந்தியா- பாகிஸ்தான் அணிகளுக்கு இடையேயான இருதரப்பு தொடருக்கு உதவுவதிலும், எளிதாக்குவதிலும் எங்களால் ஒரு பங்கை ஆற்ற முடிந்தால், அதைச் செய்வதில் நாங்கள் மிகவும் மகிழ்ச்சியடைவோம்.
அனைத்து அணிகளும் இருதரப்பு தொடர்களிலும் விளையாட வேண்டும் என்பதை உறுதி செய்வதே உலக கிரிக்கெட்டுக்கான சவால் என்று நான் நினைக்கிறேன். உலக டெஸ்ட் சாம்பியன்ஷிப் (WTC) தொடரில் நிறைய டெஸ்ட் போட்டிகளில் விளையாடி இறுதிப் போட்டிக்கு இரு அணிகள் முன்னேறும். அதுபோல ஒவ்வொரு தொடரிலும் இருக்க வேண்டும்.
வெள்ளை பந்து தொடருக்கும் இதே போன்ற ஒன்று தேவை. தரவரிசை மற்றும் இதர வழிகள் முறையே உலகக் கோப்பைகளுக்கான தகுதி இருக்க வேண்டும்.
மேலும் இந்தியா - பாகிஸ்தான் போட்டிகளுக்கு எப்போதும் நல்ல வரவேற்பு இருக்கும். 3 அணிகளுக்கு இடையே முத்தரப்பு தொடர் நடத்த நாங்கள் தயாராக இருக்கிறோம். ஆனால் இறுதி முடிவு இரு கிரிக்கெட் வாரியங்களின் கையில்தான் உள்ளது.
என்று நிக் ஹாக்லி கூறினார்.
- பாகிஸ்தான், தென் ஆப்பிரிக்கா, நியூசிலாந்து ஆகிய அணிகள் மோதும் முத்தரப்பு தொடர் வருகிற 8-ந் தேதி தொடங்குகிறது.
- பாபர் அசாம் முதல் ஓவரிலேயே டக் அவுட் முறையில் வெளியேறினார்.
பாகிஸ்தானில் முத்தரப்பு தொடர் நடைபெற உள்ளது. அதில் பாகிஸ்தான், தென் ஆப்பிரிக்கா, நியூசிலாந்து ஆகிய அணிகள் மோதுகின்றனர். இந்த தொடர் பிப்ரவரி 8-ந் தேதி தொடங்கி 14-ந் தேதி முடிவடைகிறது. இந்த தொடர் சாம்பியன்ஸ் டிராபிக்கு பயனுள்ளதாக அமையும். இந்த தொடருக்காக 3 அணி வீரர்களும் தீவிரமாக பயிற்சியில் ஈடுப்பட்டு வருகின்றனர்.
இந்நிலையில் இந்த தொடர் மற்றும் சாம்பியன் டிராபி தொடருக்காக பாகிஸ்தான் வீரர்கள் பயிற்சி போட்டியில் விளையாடி உள்ளனர். அப்போது பாபர் அசாம் பேட்டிங் ஆட களமிறங்கினார். அவருக்கு அந்த அணியின் வேகப்பந்து வீச்சாளர் ஷாஹீன் அப்ரிடி பந்து வீசினார். அவர் வீசிய பந்தில் பாபர் அசாம் முதல் ஓவரிலேயே டக் அவுட் முறையில் வெளியேறினார்.
இது தொடர்பான வீடியோ சமூக வலைதளங்களில் வைரலாகி வருகிறது. சமீம காலமாக பாபர் அசாம் பேட்டிங்கில் தடுமாறி வருவது பாகிஸ்தான் ரசிகர்களிடையே சோகத்தை ஏற்படுத்தி உள்ளது.
பாகிஸ்தானில் சாம்பியன்ஸ் டிராபி தொடர் வரும் 19-ம் தேதி தொடங்க உள்ளது குறிப்பிடத்தக்கது.
- நியூசிலாந்து- தென் ஆப்பிரிக்கா அணிகள் வருகிற 10-ந் தேதி மோதுகின்றனர்.
- தென் ஆப்பிரிக்காவில் 6 பேர் அறிமுக வீரர்களாக களமிறங்குகின்றனர்.
பாகிஸ்தானில் முத்தரப்பு தொடர் நடைபெற உள்ளது. அதில் பாகிஸ்தான், தென் ஆப்பிரிக்கா, நியூசிலாந்து ஆகிய அணிகள் மோதுகின்றனர். இந்த தொடர் பிப்ரவரி 8-ந் தேதி தொடங்கி 14-ந் தேதி முடிவடைகிறது. இந்த தொடர் சாம்பியன்ஸ் டிராபிக்கு பயனுள்ளதாக அமையும். இந்த தொடருக்காக 3 அணி வீரர்களும் தீவிரமாக பயிற்சியில் ஈடுப்பட்டு வருகின்றனர்.
இந்நிலையில் இந்த தொடரில் நியூசிலாந்து- தென் ஆப்பிரிக்கா அணிகள் வருகிற 10-ந் தேதி மோதுகின்றனர். இந்த போட்டிக்கான தென் ஆப்பிரிக்கா அணி அறிவிக்கப்பட்டுள்ளது. இதில் 6 பேர் அறிமுக வீரர்களாக களமிறங்குகின்றனர்.
தென் ஆப்பிரிக்கா டி20 தொடரில் சன்ரைசர்ஸ் ஈஸ்டர்ன் கேப் மற்றும் ஜோபர்க் சூப்பர் கிங்ஸ் அணிகள் எலிமினேட்டர் சுற்று ஆட்டத்தில் மோதுகின்றனர். இந்த ஆட்டத்திற்குப் பிறகு அணியில் கூடுதல் வீரர்கள் சேர்க்கப்படுவார்கள் எனவும் தென் ஆப்பிரிக்கா தரப்பில் கூறப்பட்டுள்ளது.
நியூசிலாந்துக்கு எதிரான தென் ஆப்பிரிக்கா அணி:-
டெம்பா பாவுமா, ஜெரால்ட் கோட்ஸி, ஜூனியர் டாலா, வியான் முல்டர், மிஹ்லாலி மபோங்வானா*, செனுரன் முத்துசாமி*, கிடியோன் பீட்டர்ஸ்*, மீகா-ஈல் பிரின்ஸ்*, ஈதன் போஷ்*, மேத்யூ ப்ரீட்ஸ்கே*, ஜேசன் ஸ்மித், மற்றும் கைல் வெர்ரைன்.
- முதலில் ஆடிய நியூசிலாந்து 50 ஓவரில் 330 ரன்கள் குவித்தது.
- அடுத்து ஆடிய பாகிஸ்தான் 252 ரன்களில் ஆல் அவுட்டாகி தோற்றது.
லாகூர்:
பாகிஸ்தான், நியூசிலாந்து, தென் ஆப்பிரிக்கா அணிகளுக்கு இடையிலான முத்தரப்பு ஒருநாள் கிரிக்கெட் தொடர் பாகிஸ்தானில் நடைபெற்று வருகிறது.
லாகூரில் இன்று நடந்த முதல் போட்டியில் பாகிஸ்தான், நியூசிலாந்து அணிகள் பலப்பரீட்சை நடத்தின. டாஸ் வென்ற நியூசிலாந்து பேட்டிங் தேர்வு செய்தது.
அதன்படி, முதலில் பேட் செய்த நியூசிலாந்து 50 ஓவரில் 6 விக்கெட்டுக்கு 330 ரன்கள் குவித்தது. 6-வது வீரராக களமிறங்கிய கிளென் பிலிப்ஸ் அதிரடியாக விளையாடி 74 பந்தில் 106 ரன்கள் விளாசினார். டேரில் மிட்செல் 81 ரன்னும், கேன் வில்லியம்சன் 58 ரன்னும் சேர்த்தனர். ரச்சின் ரவீந்திரா 25 ரன்னிலும் வெளியேறினார்.
பாகிஸ்தான் சார்பில் ஷாஹீன் அப்ரிடி 3 விக்கெட்டும், அப்ரார் அகமது 2 விக்கெட்டும் வீழ்த்தினர்.
இதையடுத்து, 331 ரன்கள் எடுத்தால் வெற்றி என்ற இலக்குடன் பாகிஸ்தான் களமிறங்கியது. தொடக்க ஆட்டக்காரர் பகர் சமான் அதிரடியாக ஆடி 69 பந்தில் 84 ரன்கள் எடுத்து ஆட்டமிழந்தார். சல்மான் ஆகா 40 ரன்னும் தயாப் தாஹிர் 30 ரன்னும் எடுத்தனர்.
இறுதியில், பாகிஸ்தான் 47.5 ஓவரில் 252 ரன்களுக்கு ஆல் அவுட்டானது. இதன்மூலம் நியூசிலாந்து 78 ரன்கள் வித்தியாசத்தில் வென்றது. ஆட்ட நாயகன் விருது கிளென் பிலிப்சுக்கு அளிக்கப்பட்டது.
- தென் ஆப்பிரிக்கா - நியூசிலாந்துக்கு இடையேயான ஒருநாள் போட்டி இன்று நடைபெற்று வருகிறது
- இதில் முதலில் பேட்டிங் செய்த தென் ஆப்பிரிக்கா அணி 304 ரன்கள் குவித்தது.
பாகிஸ்தான், நியூசிலாந்து, தென் ஆப்பிரிக்கா அணிகளுக்கு இடையிலான முத்தரப்பு ஒருநாள் கிரிக்கெட் தொடர் பாகிஸ்தானில் நடைபெற்று வருகிறது.
லாகூரில் நடந்த முதல் போட்டியில் பாகிஸ்தானை வீழ்த்தி நியூசிலாந்து வெற்றி பெற்றது. இந்நிலையில் தென் ஆப்பிரிக்கா - நியூசிலாந்து அணிகளுக்கு இடையேயான 2 ஆவது ஒருநாள் போட்டி இன்று நடைபெற்று வருகிறது
இப்போட்டியில் டாஸ் வென்ற நியூசிலாந்து பந்துவீச்சை தேர்வு செய்தது. அதன்படி முதலில் களமிறங்கிய தென் ஆப்பிரிக்கா அணி 50 ஓவர்கள் முடிவில் 6 விக்கெட் இழப்பிற்கு 304 ரன்கள் குவித்தது. அதிகபட்சமாக அறிமுக வீரர் மேத்யூ ப்ரீட்ஸ்கீ 150 ரன்கள் விளாசி அவுட்டானார்.
இதன்மூலம் கிரிக்கெட் வரலாற்றிலேயே அறிமுகமான முதல் சர்வதேச ஒருநாள் போட்டியில், 150 ரன்கள் விளாசிய முதல் வீரர் என்ற சாதனையை தென் ஆப்பிரிக்கா வீரர் மேத்யூ ப்ரீட்ஸ்கீ படைத்தார்.
இதற்கு முன்னதாக 1978 ஆம் ஆண்டு வெஸ்ட் இண்டீஸ் வீரர் ஹெய்ன்ஸ் அடித்த 148 ரன்கள் தான் அறிமுக ஒருநாள் போட்டியில் ஒருவர் அடித்த அதிகபட்ச ரன்களாக இருந்து வந்தது. கிட்டத்தட்ட 47 ஆண்டுகால சாதனையை மேத்யூ ப்ரீட்ஸ்கீ முறியடித்து வரலாற்று சாதனை படைத்துள்ளார்.
மேலும் ஒருநாள் கிரிக்கெட்டில் அறிமுக போட்டியிலேயே சதம் அடித்த 19 ஆவது வீரர் என்ற சாதனையையும் மேத்யூ ப்ரீட்ஸ்கீ முறியடித்துள்ளார்.
- தென் ஆப்பிரிக்கா, நியூசிலாந்து, பாகிஸ்தான் அணிகள் முத்தரப்பு தொடரில் விளையாடி வருகின்றனர்.
- முத்தரப்பு தொடரின் முதல் போட்டிக்கான தென் ஆப்பிரிக்க அணியில் 12 வீரர்கள் மட்டுமே இடம் பெற்றிருந்தனர்.
லாகூர்:
நியூசிலாந்து, பாகிஸ்தான், தென்ஆப்பிரிக்கா ஆகிய அணிகள் பங்கேற்றுள்ள முத்தரப்பு ஒருநாள் கிரிக்கெட் தொடர் பாகிஸ்தானில் நடந்து வருகிறது. இதில் ஒவ்வொரு அணியும் மற்ற அணியுடன் தலா ஒரு முறை மோத வேண்டும். லீக் சுற்று முடிவில் முதல் இரு இடங்களை பிடிக்கும் அணிகள் இறுதிப்போட்டிக்கு தகுதி பெறும்.
இந்த தொடரில் லாகூரில் நேற்று நடந்த 2-வது லீக் ஆட்டத்தில் நியூசிலாந்து - தென் ஆப்பிரிக்க அணிகள் மோதின. இதில் நியூசிலாந்து அணி தென் ஆப்பிரிக்காவை 6 விக்கெட்டுகள் வித்தியாசத்தில் வீழ்த்தி முதல் அணியாக இந்த தொடரின் இறுதிப்போட்டிக்கு தகுதி பெற்றது.
முன்னதாக இந்த ஆட்டத்தில் நியூசிலாந்து பேட்டிங் செய்யும் போது தென் ஆப்பிரிக்க அணியின் பீல்டிங் பயிற்சியாளரான வாண்டில் குவாவு மாற்று பீல்டராக களமிறங்கினார். இந்த வீடியோ சமூக வலைதளங்களில் வைரலானது.
இதற்கான காரணம் என்னவெனில், தென் ஆப்பிரிக்காவில் எஸ்.ஏ. 20 ஓவர் லீக் தொடர் நடைபெற்றதால் இந்த முத்தரப்பு தொடரின் முதல் போட்டிக்கான தென் ஆப்பிரிக்க அணியில் 12 வீரர்கள் மட்டுமே இடம் பெற்றிருந்தனர். அதன் காரணமாகவே இந்த ஆட்டத்தில் பீல்டிங் பயிற்சியாளரே மாற்று பீல்டராக களத்திற்குள் வந்துள்ளார்.
- முதலில் ஆடிய தென் ஆப்பிரிக்கா 50 ஓவரில் 352 ரன்கள் குவித்தது.
- அந்த அணியின் ஹென்றிச் கிளாசன் அதிகபட்சமாக 87 ரன் எடுத்தார்.
கராச்சி:
நியூசிலாந்து, பாகிஸ்தான், தென் ஆப்பிரிக்கா ஆகிய அணிகள் பங்கேற்றுள்ள முத்தரப்பு ஒருநாள் கிரிக்கெட் தொடர் பாகிஸ்தானில் நடந்து வருகிறது. இதில் ஒவ்வொரு அணியும் மற்ற அணியுடன் தலா ஒரு முறை மோதவேண்டும். லீக் சுற்று முடிவில் முதல் இரு இடங்களைப் பிடிக்கும் அணிகள் இறுதிப்போட்டிக்கு தகுதி பெறும்.
நியூசிலாந்து தனது முதல் 2 ஆட்டங்களில் முறையே பாகிஸ்தான் மற்றும் தென் ஆப்பிரிக்காவை வீழ்த்தி முதல் அணியாக இறுதிப்போட்டிக்கு முன்னேறிவிட்டது.
இந்நிலையில், இறுதிப்போட்டிக்கு முன்னேறும் 2வது அணி எது என்பதை தீர்மானிக்கும் கடைசி லீக் ஆட்டத்தில் பாகிஸ்தான், தென் ஆப்பிரிக்கா அணிகள் கராச்சியில் மோதின. டாஸ் வென்ற தென் ஆப்பிரிக்கா பேட்டிங் தேர்வு செய்தது.
அதன்படி, முதலில் ஆடிய தென் ஆப்பிரிக்கா அணி நிர்ணயிக்கப்பட்ட 50 ஓவரில் 5 விக்கெட்டுக்கு 352 ரன்கள் குவித்தது. கிளாசன் அதிரடியாக ஆடி 87 ரன்னும், பிரீட்ஸ்கே 83 ரன்னும், பவுமா 82 ரன்னும் எடுத்து ஆட்டமிழந்தனர்.
பாகிஸ்தான் சார்பில் ஷாகின் அப்ரிடி 2 விக்கெட் வீழ்த்தினார்.
இதையடுத்து, 353 ரன் எடுத்தால் வெற்றி என்ற இமாலய இலக்குடன் பாகிஸ்தான் களமிறங்கியது. பாபர் அசாம் 23 ரன்னும், சவுத் ஷகீல் 15 ரன்னும், பகர் சமான் 41 ரன்னும் எடுத்தனர்.
ஒரு கட்டத்தில் 3 விக்கெட்டுக்கு 91 ரன்கள் எடுத்த நிலையில் கேப்டன் முகமது ரிஸ்வானுடன், ஆகா சல்மான் இணைந்தார். இந்த ஜோடி தென் ஆப்பிரிக்கா பந்துவீச்சை திறம்பட சமாளித்தது. கிடைத்த பந்துகளை சிக்சர், பவுண்டரிகளாக விளாசியது. இருவரும் சதமடித்து அசத்தினர்.
ஆகா சல்மான் 134 ரன் எடுத்து ஆட்டமிழந்தார். 4வது விக்கெட்டுக்கு இந்த ஜோடி 260 ரன்கள் குவித்தது குறிப்பிடத்தக்கது.
இறுதியில், பாகிஸ்தான் 49 ஓவரில் 4 விக்கெட்டுக்கு 355 ரன்கள் எடுத்து அபார வெற்றி பெற்றதுடன், இறுதிப்போட்டிக்கும் முன்னேறியது. ரிஸ்வான் 122 ரன் எடுத்து ஆட்டமிழக்காமல் உள்ளார்.
நாளை மறுதினம் நடைபெறும் இறுதிப்போட்டியில் பாகிஸ்தான், நியூசிலாந்துடன் மோதுகிறது.
- 82 ரன்கள் அடித்து சிறப்பாக விளையாடி வந்த பவுமாவை சவுத் ஷகீல் ரன் அவுட் செய்தார்.
- பாகிஸ்தான் வீரர்களின் இந்த செயல் இணையத்தில் விமர்சனத்துக்கு உள்ளாகியுள்ளது.
நியூசிலாந்து, பாகிஸ்தான், தென் ஆப்பிரிக்கா ஆகிய அணிகள் பங்கேற்றுள்ள முத்தரப்பு ஒருநாள் கிரிக்கெட் தொடர் பாகிஸ்தானில் நடந்து வருகிறது.
நியூசிலாந்து தனது முதல் 2 ஆட்டங்களில் முறையே பாகிஸ்தான் மற்றும் தென் ஆப்பிரிக்காவை வீழ்த்தி முதல் அணியாக இறுதிப்போட்டிக்கு முன்னேறிவிட்டது.
இறுதிப்போட்டிக்கு முன்னேறும் 2வது அணி எது என்பதை தீர்மானிக்கும் கடைசி லீக் ஆட்டத்தில் பாகிஸ்தான், தென் ஆப்பிரிக்கா அணிகள் நேற்று மோதின.
இப்போட்டியில் முதலில் பேட்டிங் ஆடிய தென் ஆப்பிரிக்கா அணி 50 ஓவரில் 5 விக்கெட்டுக்கு 352 ரன்கள் குவித்தது. கிளாசன் அதிரடியாக ஆடி 87 ரன்னும், பிரீட்ஸ்கே 83 ரன்னும், பவுமா 82 ரன்னும் எடுத்து ஆட்டமிழந்தனர்.பாகிஸ்தான் சார்பில் ஷாகின் அப்ரிடி 2 விக்கெட் வீழ்த்தினார்.
இதையடுத்து, 353 ரன் எடுத்தால் வெற்றி என்ற இமாலய இலக்குடன் களமிறங்கிய பாகிஸ்தான் 49 ஓவரில் 4 விக்கெட்டுக்கு 355 ரன்கள் எடுத்து அபார வெற்றி பெற்று இறுதிப்போட்டிக்கும் முன்னேறியது. நாளை மறுதினம் நடைபெறும் இறுதிப்போட்டியில் பாகிஸ்தான், நியூசிலாந்துடன் மோதுகிறது.
இப்போட்டியில் 82 ரன்கள் அடித்து சிறப்பாக விளையாடி வந்த பவுமாவை சவுத் ஷகீல் ரன் அவுட் செய்தார். அப்போது சவுத் ஷகீல், கம்ரான் குலாம் ஆகியோர் பவுமா பக்கத்தில் சென்று கொண்டாட்டத்தில் ஈடுபட்டார்கள். இதனால் பவுமா சிறிது நேரம் அதே இடத்தில் நின்றார். உடனே அங்கு வந்த ஆகா சல்மான் இருவரையும் அங்கிருந்து வேறு இடத்திற்கு தள்ளி சென்றார்.
இதனையடுத்து பாகிஸ்தான் வீரர்களின் இந்த செயலுக்கு கேப்டன் ரிஸ்வானுக்கு கள நடுவர்கள் எச்சரிக்கை விடுத்தனர். பாகிஸ்தான் வீரர்களின் இந்த செயல் இணையத்தில் விமர்சனத்துக்கு உள்ளாகியுள்ளது.
- முத்தரப்பு தொடரின் இறுதிப்போட்டியில் பாகிஸ்தான் - நியூசிலாந்து அணிகள் விளையாடி வருகின்றனர்.
- இந்த போட்டியில் பாபர் அசாம் 29 ரன்னில் ஆட்டமிழந்தார்.
பாகிஸ்தான், தென் ஆப்பிரிக்கா, நியூசிலாந்து ஆகிய அணிகள் முத்தரப்பு தொடரில் விளையாடி வருகிறது. இந்த தொடரின் இறுதிப்போட்டியில் பாகிஸ்தான் - நியூசிலாந்து அணிகள் இறுதிப்போட்டிக்கு முன்னேறியது.
இரு அணிகளுக்கு இடையேயான இறுதிப்போட்டி இன்று நடைபெற்று வருகிறது. இதில் டாஸ் வென்ற பாகிஸ்தான் அணி பேட்டிங்கை தேர்வு செய்தது. அதன்படி பாகிஸ்தான் அணியின் தொடக்க வீரர்களாக ஃபக்கர் ஜமான்- பாபர் அசாம் களமிறங்கினர்.
ஃபக்கர் ஜமான் 10 ரன்னில் ஆட்டமிழந்தார். அடுத்து வந்த ஷகீல் 8 ரன்னில் வெளியேறினார். பேட்டிங்கில் சொதப்பி வரும் பாபர் அசாம் இந்த போட்டியில் 29 ரன்னில் அவுட் ஆகி மீண்டும் ஏமாற்றம் அளித்தார். இருந்தாலும் அவர் மிகப்பெரிய சாதனை ஒன்றை படைத்துள்ளார்.
குறைந்த போட்டியில் விளையாடி 6000 ரன்கள் கடந்த தென் ஆப்பிரிக்கா வீரர் ஹசிம் அம்லா சாதனையை பாபர் அசாம் சமன் செய்துள்ளார். அந்த பட்டியலில் பாபர் அசாம், ஹசிம் அம்லா 123 போட்டிகளில் விளையாடி 6000 ரன்களை கடந்துள்ளனர்.
இவர்களுக்கு அடுத்தப்படியாக விராட் கோலி (136 போட்டிகள்), கனே வில்லியம்சன் (139 போட்டிகள்), டேவிட் வார்னர் (139 போட்டிகள்), ஷிகர் தவான் (140 போட்டிகள்) ஆகியோர் உள்ளனர்.
- பாகிஸ்தான் அணியில் அதிகபட்சமாக ரிஸ்வான் 46 ரன்னிலும் சல்மான் 45 ரன்னிலும் ஆட்டமிழந்தனர்.
- நியூசிலாந்து தரப்பில் வில்லியம் ஓரூர்க் 4 விக்கெட்டுகளை கைப்பற்றினார்.
முத்தரப்பு தொடரின் இறுதிப்போட்டியில் பாகிஸ்தான் -நியூசிலாந்து அணிகளுக்கு இடையேயான போட்டி இன்று நடைபெற்றது. இதில் டாஸ் வென்ற பாகிஸ்தான் அணி பேட்டிங்கை தேர்வு செய்தது.
அதன்படி பாகிஸ்தான் அணியின் தொடக்க வீரர்களாக ஃபக்கர் ஜமான்- பாபர் அசாம் ஆகியோர் களமிறங்கினர். இதில் ஃபக்கர் ஜமான் 10 ரன்னில் அவுட் ஆனார். அடுத்து வந்த சவுத் சஹீல் 8 ரன்னிலும் பாபர் அசாம் 29 ரன்னிலும் ஆட்டமிழந்தனர்.
இதனையடுத்து கேப்டன் ரிஸ்வான் - சல்மான் ஆகா ஆகியோர் பொறுப்புடன் விளையாடி அணியின் ஸ்கோரை உயர்த்தினர். ரிஸ்வான் 46 ரன்னிலும் சல்மான் 45 ரன்னிலும் ஆட்டமிழந்தனர்.
அடுத்து வந்த தையப் தாஹிர் 38, ஃபஹீம் அஷ்ரஃப் 22, நசீம் ஷா 19 ஆகியோரை தவிர மற்ற வீரர்கள் ஒற்றை ரன்னில் வெளியேறினர். இதனால் பாகிஸ்தான் அணி 49.3 ஓவரில் 242 ரன்களுக்கு ஆல் அவுட் ஆனது. நியூசிலாந்து தரப்பில் வில்லியம் ஓரூர்க் 4 விக்கெட்டுகளை கைப்பற்றினார்.
- முதலில் ஆடிய பாகிஸ்தான் 49.3 ஓவரில் 242 ரன்கள் எடுத்தது.
- அடுத்து ஆடிய நியூசிலாந்து 243 ரன்கள் எடுத்து வென்றது.
லாகூர்:
பாகிஸ்தானில் முத்தரப்பு தொடரின் இறுதிப்போட்டி இன்று நடைபெற்றது. இதில் பாகிஸ்தான், நியூசிலாந்து அணிகள் மோதின. டாஸ் வென்ற பாகிஸ்தான் பேட்டிங் தேர்வு செய்தது.
அதன்படி, முதலில் ஆடிய பாகிஸ்தான் 49.3 ஓவரில் 242 ரன்களுக்கு ஆல் அவுட் ஆனது. ரிஸ்வான் 46 ரன்னிலும், சல்மான் 45 ரன்னிலும் ஆட்டமிழந்தனர். தையப் தாஹிர் 38 ரன்னும், பாபர் அசாம் 29 ரன்னும் எடுத்தனர்.
நியூசிலாந்து சார்பில் வில்லியம் ஓரூர்க் 4 விக்கெட் கைப்பற்றினார்.
இதையடுத்து, 243 ரன்கள் எடுத்தால் வெற்றி என்ற இலக்குடன் நியூசிலாந்து களமிறங்கியது. டேரில் மிட்செல், டாம் லாதம் அரை சதம் கடந்தனர். டேவன் கான்வே 48 ரன்னில் அவுட்டானார். கேன் வில்லியம்சன் 38 ரன் எடுத்தார்.
இறுதியில், நியூசிலாந்து 45.2 ஓவரில் 5 விக்கெட்டுக்கு 243 ரன்கள் எடுத்து அபார வெற்றி பெற்று கோப்பையை கைப்பற்றியது.