என் மலர்
நீங்கள் தேடியது "ஜானி மாஸ்டர்"
- ஜானி மாஸ்டர் தற்போது 'ரன்னர்' என்ற படத்தில் கதாநாயகனாக நடித்துள்ளார்.
- இப்படத்தின் ஃபர்ஸ்ட் லுக் போஸ்டர் இணையத்தில் வைரலாகி வருகிறது.
கன்னடம், தமிழ், இந்தி உள்ளிட்ட பல மொழி படங்களில் நடன இயக்குனராக பணியாற்றி பிரபலமடைந்தவர் ஜானி மாஸ்டர். இவர் தற்போது 'ரன்னர்' என்ற படத்தில் கதாநாயகனாக நடித்துள்ளார். ஆக்ஷன் டிராமாவாகமாக உருவாகி வரும் இப்படத்தை அறிமுக இயக்குனர் விஜய் சௌத்ரி இயக்கியுள்ளார். இப்படத்தை விஜய் டமருகா ஆர்ட்ஸ் சார்பில் விஜய் பாஸ்கர், ஜி.பனிந்திரா மற்றும் எம்.ஸ்ரீஹரி ஆகியோர் தயாரிக்கின்றனர்.
இந்நிலையில் 'ரன்னர்' படத்தின் ஃபர்ஸ்ட் லுக் போஸ்டரை ஜானி மாஸ்டரின் பிறந்தநாளை முன்னிட்டு படக்குழு வெளியிட்டுள்ளது. , வெளியாகியுள்ளது. இந்த போஸ்டர் தற்போது வைரலாகி வருகிறது. இப்படம் குறித்து இயக்குனர் விஜய் சௌத்ரி கூறியதாவது, "திறமையான நடன இயக்குனரான ஜானி மாஸ்டருடன் இணைந்து பணியாற்றுவதில் நான் மிகவும் மகிழ்ச்சியடைகிறேன். அவருடைய நடிப்புத் திறமை, அவரது குணாதிசயங்கள் மற்றும் அப்பா-மகன் இருவருக்கிடையிலான சென்டிமென்ட் காட்சிகள் நிச்சயமாக பார்வையாளர்களை ஈர்க்கும்.

இது ஒரு வித்தியாசமான த்ரில்லர் திரைப்படம். மணி சர்மா அற்புதமான இசையையும் பாடல்களையும் கொடுத்துள்ளார். ஜானி மாஸ்டரின் நடன அசைவுகள் படத்தின் ஹைலைட்டாக இருக்கும். படம் குறித்தான மற்ற விவரங்களை விரைவில் வெளியிடுவோம்" என்றார். சில ஆண்டுகளுக்கு முன்பு ஹைதராபாத்தில் நடந்த சில உண்மை சம்பவங்களை அடிப்படையாகக் கொண்ட கதையாக இந்தப் படம் உருவாகவுள்ளதாக கூறப்படுகிறது. இப்படத்தின் படப்பிடிப்பு ஜூலை 20 ஆம் தேதி ஹைதராபாத்தில் தொடங்கவுள்ளதாக படக்குழு தெரிவித்துள்ளது.
- நடன இயக்குநர் ஜானி மாஸ்டர் மீது பல்வேறு பிரிவுகளின் கீழ் வழக்குப் பதிவு.
- ஜன சேனா கட்சியில் தன்னை இணைத்துக் கொண்டிருந்தார்.
ஆந்திர மாநில திரைப்பட நடன கலைஞராக இருக்கும் இளம்பெண் நடன இயக்குநர் ஜானி மாஸ்டர் என்று அழைக்கப்படும் ஷேக் ஜானி பாஷா மீது சைதராபாத், ராய்துருக்கம் போலீசில் பாலியல் புகார் அளித்தார்.
புகார் குறித்து விசாரித்த போலீசார் நடன இயக்குநர் ஜானி மாஸ்டர் மீது கற்பழிப்பு, கொலை மிரட்டல் மற்றும் தானாக முன்வந்து காயப்படுத்துதல் உள்ளிட்ட பிரிவுகளின் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
நடன இயக்குனர் மீது அவரிடம் வேலை செய்யும் பெண் நடன கலைஞர் பலாத்கார புகார் அளித்துள்ள சம்பவம் தெலுங்கு திரைப்பட துறையில் பரபரப்பை ஏற்படுத்தியது. முன்னதாக இந்த ஆண்டு ஜனவரி மாதம் நடிகரும், ஆந்திர மாநிலத்தின் துணை முதல்வருமான பவன் கல்யாணின் ஜன சேனா கட்சியில் தன்னை இணைத்துக் கொண்டிருந்தார்.
தற்போது இவர் மீது பாலியல் புகார் எழுந்ததோடு, போலீசார் இவர் மீது வழக்குப் பதிவு செய்துள்ள நிலையில் நடன இயக்குநர் ஜானி மாஸ்டர் கட்சியில் இருந்து நீக்கபட்டுள்ளார்.
இது தொடர்பாக ஜன சேனா கட்சி வெளியிட்டுள்ள அறிக்கையில், "ஜன சேனா கட்சி பணிகளில் இருந்து ஜானி ஒதுங்கி இருக்க வேண்டும். அவருக்கு எதிராக காவல் நிலையத்தில் வழக்குப் பதிவு செய்யப்பட்டதை அடுத்து அவர் மீது இந்த நடவடிக்கை எடுக்கப்படுகிறது. இந்த முடிவு உடனடியாக அமலுக்கு வருகிறது," என குறிப்பிடப்பட்டு இருக்கிறது.
- நடன இயக்குநர் ஜானி மாஸ்டர் மீது இளம்பெண் நடன இயக்குநர் பாலியல் புகார் அளித்தார்.
- ஜன சேனா கட்சியில் இருந்து ஜானி நீக்கப்பட்டார்.
ஆந்திர மாநில திரைப்பட நடனக் கலைஞராக இருக்கும் இளம்பெண் நடன இயக்குநர் ஜானி மாஸ்டர் என்று அழைக்கப்படும் ஷேக் ஜானி பாஷா மீது சைதராபாத், ராய்துருக்கம் போலீசில் பாலியல் புகார் அளித்தார்.
புகார் குறித்து விசாரித்த போலீசார் நடன இயக்குநர் ஜானி மாஸ்டர் மீது பலாத்காரம், கொலை மிரட்டல் மற்றும் தானாக முன்வந்து காயப்படுத்துதல் உள்ளிட்ட பிரிவுகளின் வழக்குப் பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
நடன இயக்குநர் மீது அவரிடம் வேலை செய்யும் பெண் நடனக் கலைஞர் பலாத்கார புகார் அளித்துள்ள சம்பவம் தெலுங்கு திரைப்படத் துறையில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
இதனையடுத்து ஆந்திர மாநிலத்தின் துணை முதல்வருமான பவன் கல்யாணின் ஜன சேனா கட்சியில் இருந்து நடன இயக்குநர் ஜானி மாஸ்டர் நீக்கப்பட்டார்.
இந்நிலையில், இந்த விவகாரம் தொடர்பாக தெலுங்கானா ஃபிலிம் சேம்பரில் மத்தியப் பிரதேசத்தைச் சேர்ந்த பெண் ஒருவர் அளித்த புகார் அளித்திருந்தார்.
இதனையடுத்து தெலுங்கானா நடன இயக்குநர் சங்கத்தில் ஒரு கமிட்டி அமைத்து இதுதொடர்பாக விசாரணை நடத்தப்பட்டது. விசாரணையின் முடிவில் தெலுங்கானா நடன இயக்குநர் சங்கத்தில் இருந்து நடன இயக்குநர் ஜானி சஸ்பெண்ட் செய்யப்பட்டுள்ளார்.
உங்கள் அருகாமையில் உள்ள திரையரங்குகளில் ரிலீசான படங்களைப் பற்றிய தகவல்களை உடனுக்குடன் தெரிந்துக் கொள்ள இந்த லிங்க்-ஐ க்ளிக் செய்யவும்.
- ஜானி மீது குழந்தைகள் பாதுகாப்பு சட்டமான போக்சோ சட்ட பிரிவுகளின் கீழ் நர்சிங்கி போலீசார் நேற்று வழக்குப்பதிவு செய்தனர்.
- தலைமறைவான ஜானியை போலீசார் தீவிரமாக தேடி வந்தனர்.
தமிழ், தெலுங்கு திரை உலகில் பிரபல நடன இயக்குநராக திகழ்பவர் ஜானி.
கடந்த சில தினங்களுக்கு முன்பு இவர் மீது பெண் நடன கலைஞரான 21 வயது இளம்பெண் ஒருவர் பாலியல் பலாத்கார புகார் கொடுத்தார். சென்னை, ஐதராபாத் ஆகிய இடங்களில் நடந்த படப்பிடிப்புகளில் தன்னை ஜானி பாலியல் பலாத்காரம் செய்ததாக குற்றம் சாட்டி புகார் அளித்தார்.
இதையடுத்து ஐதராபாத் அருகில் உள்ள நர்சிங்கி போலீசார் விசாரணை நடத்தி ஜானி மீது 3 பிரிவுகளில் வழக்குப்பதிவு செய்தனர். இதை தொடர்ந்து அவர் தலைமறைவாகி விட்டதாக தகவல்கள் வெளியானது.
தொடர்ந்து தெலுங்கு திரை உலகில் நடன இயக்குநராக ஜானி பணிபுரிவதற்கு பிலிம் சேம்பர் தடை விதித்தது. மேலும் பவன் கல்யாண் கட்சியில் இருந்தும் நீக்கம் செய்யப்பட்டார்.
தனக்கு 16 வயதாக இருக்கும்போது ஜானி தன்னை பாலியல் பலாத்காரம் செய்ததாக இளம்பெண் குற்றம் சாட்டினார். மேலும் அதற்கான 40 பக்க ஆவணங்களை தெலுங்கானா மகளிர் ஆணையத்தில் இளம்பெண் சமர்பித்தார்.
இதையடுத்து பாதிக்கப்பட்ட இளம்பெண்ணுக்கு போலீஸ் பாதுகாப்பு வழங்க உத்தரவு பிறப்பிக்கப்பட்டது. இது பற்றி மகளிர் ஆணையத்தின் தலைவியான நெரெல்லி சாரதா கூறுகையில், திரைப்பட துறையில் இது போன்ற வழக்குகளை விசாரிக்க உயர்மட்ட கண்காணிப்பு குழுவும் அமைக்கப்படும். இந்த வழக்கை மிகவும் தீவிரமாக நாங்கள் எடுத்துக் கொள்வோம் என்று கூறினார்.
இந்நிலையில் ஜானி மீது குழந்தைகள் பாதுகாப்பு சட்டமான போக்சோ சட்ட பிரிவுகளின் கீழ் நர்சிங்கி போலீசார் நேற்று வழக்குப்பதிவு செய்தனர்.
இதை தொடர்ந்து தலைமறைவான ஜானியை போலீசார் தீவிரமாக தேடி வந்தனர். இந்த நிலையில் கோவாவில் தலைமறைவாக இருந்த அவரை தெலுங்கானா போலீசார் தற்போது கைது செய்துள்ளதாக தகவல்கள் வெளியாகி உள்ளது.
காவாலா, ரஞ்சிதமே, அரபிக்குத்து உள்பட பல தமிழ் பாடல்களுக்கு நடனம் அமைத்தவரும் சமீபத்தில் தேசிய விருது அறிவிக்கப்பட்டவருமான ஜானி மீது போக்சோ சட்டத்தின் கீழ் வழக்குப்பதிவு செய்து, கைது செய்யப்பட்டிருப்பது திரை உலகில் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
உங்கள் அருகாமையில் உள்ள திரையரங்குகளில் ரிலீசான படங்களைப் பற்றிய தகவல்களை உடனுக்குடன் தெரிந்துக் கொள்ள இந்த லிங்க்-ஐ க்ளிக் செய்யவும்.
- மும்பையில் நடந்த சம்பவத்திற்கு என்ன ஆதாரம் உள்ளது.
- ஏன் அப்போதே வெளியில் சொல்லவில்லை.
திருப்பதி:
பிரபல நடன இயக்குனர் ஜானி மாஸ்டர் என்கிற ஷேக் ஜானி பாஷா. இவரிடம் துணை நடன இயக்குனராக வேலை செய்து வந்த பெண் ஒருவர் தன்னை பலாத்காரம் செய்ததாக போலீசில் புகார் செய்தார்.
புகாரின் பேரில் போலீசார் வழக்கு பதிவு செய்து ஜானி மாஸ்டர் மீது போக்சோ வழக்கு பதிவு செய்து கைது செய்து ஜெயிலில் அடைத்தனர்.
இந்த நிலையில் ஜானி மாஸ்டரின் மனைவி சுமலதா என்கிற ஆயிஷா அளித்த பேட்டியில் கூறியதாவது:-
பாலியல் புகார் அளித்த பெண் சிறுமியாக இருந்த போது மேடை நிகழ்ச்சிகளில் நடனமாடி வந்தார். அப்போது சினிமா துறையை பார்த்து சொகுசு வாழ்க்கை வாழ ஆசைப்பட்டார். பின்னர் ஜானி மாஸ்டரிடம் வேலைக்கு சேர்ந்து உதவி நடன இயக்குனராக வேலை பார்த்து வந்தார்.

ஐதராபாத்தில் உள்ள திரைப்பட அசோசியனில் உறுப்பினராக பணம் கட்டக் கூட முடியவில்லை. அவருக்கு எனது கணவர் ஜானி மாஸ்டர் பண உதவி செய்தார். அப்போது பெண் உதவி நடன இயக்குனர் தான் சிறந்த நடன அமைப்பாளராக ஆக வேண்டும் அல்லது சிறந்த கதாநாயகியாக ஆக வேண்டும் என ஆசைப்பட்டார்.
இதனால் ஜானி மாஸ்டர் தன்னுடைய பட வாய்ப்புகளில் அந்த பெண்ணுக்கு வாய்ப்புகளை வழங்கி வந்தார். இப்போது அவர் மீது பாலியல் புகார் கூறுகிறார்.
மைனர் பெண்ணாக இருந்தபோது மும்பையில் நடந்த சம்பவத்திற்கு என்ன ஆதாரம் உள்ளது. அவர்கள் இருவரும் நெருக்கமாக இருப்பதை யாராவது பார்த்தீர்களா? ஏன் அப்போதே வெளியில் சொல்லவில்லை. பாலியல் தொல்லைக்கு ஆளானால் ஏன் அவரிடம் தொடர்ந்து வேலை செய்ய வேண்டும். அப்படியானால் ஜானி மாஸ்டரிடம் வேலை செய்வது அதிர்ஷ்டம் என ஏன் கூறினார்.
பலாத்காரம் செய்ததை நிரூபித்தால் நான் எனது கணவரை விட்டு விலக தயாராக இருக்கிறேன்.
இவ்வாறு அவர் கூறினார்.
உங்கள் அருகாமையில் உள்ள திரையரங்குகளில் ரிலீசான படங்களைப் பற்றிய தகவல்களை உடனுக்குடன் தெரிந்துக் கொள்ள இந்த லிங்க்-ஐ க்ளிக் செய்யவும்.
- தனக்கு 16 வயதாக இருக்கும்போது ஜானி தன்னை பாலியல் பலாத்காரம் செய்ததாக இளம்பெண் குற்றம் சாட்டினார்.
- ஜானியை கோவாவில் வைத்து தெலுங்கானா போலீசார் கைது செய்தனர்.
தமிழ், தெலுங்கு திரை உலகில் பிரபல நடன இயக்குநராக திகழ்பவர் ஜானி.
கடந்த சில தினங்களுக்கு முன்பு இவர் மீது பெண் நடன கலைஞரான 21 வயது இளம்பெண் ஒருவர் பாலியல் பலாத்கார புகார் கொடுத்தார். சென்னை, ஐதராபாத் ஆகிய இடங்களில் நடந்த படப்பிடிப்புகளில் தன்னை ஜானி பாலியல் பலாத்காரம் செய்ததாக குற்றம் சாட்டி புகார் அளித்தார்.
இதையடுத்து ஐதராபாத் அருகில் உள்ள நர்சிங்கி போலீசார் விசாரணை நடத்தி ஜானி மீது 3 பிரிவுகளில் வழக்குப்பதிவு செய்தனர். இதை தொடர்ந்து அவர் தலைமறைவாகி விட்டதாக தகவல்கள் வெளியானது.
தொடர்ந்து தெலுங்கு திரை உலகில் நடன இயக்குநராக ஜானி பணிபுரிவதற்கு பிலிம் சேம்பர் தடை விதித்தது. மேலும் பவன் கல்யாண் கட்சியில் இருந்தும் நீக்கம் செய்யப்பட்டார்.
தனக்கு 16 வயதாக இருக்கும்போது ஜானி தன்னை பாலியல் பலாத்காரம் செய்ததாக இளம்பெண் குற்றம் சாட்டினார். மேலும் அதற்கான 40 பக்க ஆவணங்களை தெலுங்கானா மகளிர் ஆணையத்தில் இளம்பெண் சமர்பித்தார்.
இதை தொடர்ந்து தலைமறைவாக இருந்த ஜானியை கோவாவில் வைத்து தெலுங்கானா போலீசார் கைது செய்தனர்.
இந்நிலையில், புகார் கொடுத்த பெண் மைனராக இருக்கும் போதிருந்தே அவரை பாலியல் வன்கொடுமை செய்ததாக ஜானி மாஸ்டர் போலீசாரிடம் ஒப்புக்கொண்டுள்ளதாக தற்போது தகவல் வெளியாகியுள்ளது.
முன்னதாக, என கணவர் ஜானி மீதான பாலியல் புகார் நிரூபிக்கப்பட்டால் அவரை விட்டு விலக தயாராக இருக்கிறேன் என்று அவரது மனைவி தெரிவித்திருந்தார் என்பது குறிப்பிடத்தக்கது.
உங்கள் அருகாமையில் உள்ள திரையரங்குகளில் ரிலீசான படங்களைப் பற்றிய தகவல்களை உடனுக்குடன் தெரிந்துக் கொள்ள இந்த லிங்க்-ஐ க்ளிக் செய்யவும்.
- ஜானி மாஸ்டர் மீது போக்சோ சட்டம் பாய்ந்து சிறையில் அடைக்கப்பட்டார்.
- பாதிக்கப்பட்ட பெண்ணிற்கு பிரபல நடிகர் தொழில் வாய்ப்பு உறுதி அளித்ததாக தகவல்.
பிரபல டான்ஸ் மாஸ்டர் ஜானி. 42 வயதாகும் ஷேக் ஜானி பாஷா "ஜானி மாஸ்டர்" என்று அழைக்கப்பட்டு வருகிறார். தென்இந்திய சினிமாவில் முன்னணி டான்ஸ் மாஸ்டராக திகழ்ந்து வரும் இவர் மீது, பெண் நடன கலைஞர் ஒருவர், தான் சிறுமியாக இருந்தபோது ஜானி மாஸ்டரின் பாலியல் துன்புறுத்தலுக்கு ஆளானேன் என புகார் அளித்தார்.
அந்த புகார் அடிப்படையில் போக்சோ சட்டத்தின்கீழ் ஜானி மாஸ்டர் கைது செய்யப்பட்டுள்ளார். ஜானி மாஸ்டர் வழக்கில் அல்லி அர்ஜூன் மற்றும் இயக்குனர் சுகுமார் பெயர்கள் இழுக்கப்பட்டதாக தகவல்கள் வெளியாகின.
இந்த நிலையில் புஷ்பா பட தயாரிப்பாளர் ரவி ஷங்கர், தேவையில்லாமல் அல்லு அர்ஜூன் பெயர் இழுக்கப்பட்டுள்ளது எனத் தெரிவித்துள்ளார்.
தெலுங்கு படம் ஒன்றின் ப்ரோமோசன் நிகழ்ச்சியில் கலந்து கொண்ட புஷ்பா பட தயாரிப்பாளர் ரவி சங்கரிடம், சுகுமாரும் அல்லு அர்ஜூனும் பாதிக்கப்பட்டதாகக் கூறப்படும் நபருக்கு தொழில்முறை ஆதரவை உறுதியளித்தார்களா? என்று கேட்டதற்கு, அவர் பதில் அளித்து கூறியதாவது:-
ஜானி மாஸ்டர் மற்றும் பாதிக்கப்பட்ட பெண் ஆகியோர் இடையே நடந்த விசயம் எல்லாம் அவர்களுக்கு இடையிலான தனிப்பட்ட விசயம். எங்கள் படத்திற்கு கூடுதல் டான்ஸ் மாஸ்டரான அவர் நீண்ட காலத்திற்கு முன்னதாகவே பணியமர்த்தப்பட்டார். தொடர்ந்து இந்த படத்தில் அவர் பணியாற்றுவார்.
புஷ்பா படத்திற்கு பிரத்யேக டான்ஸ் மாஸ்டராக பணியாற்ற ஜானி மாஸ்டர் இருந்தார். ஆனால், நாங்கள் திட்டமிட்டத்திற்கு இரண்டு நாட்களுக்கு முன் இது நடந்தது.
அல்லு அர்ஜூன் ஒருவர் பக்கம் இருக்கமாட்டார் அல்லது தொழில்முறை தொடர்பாக யாருக்கும் ஆதரவாக இருக்கமாட்டார். அல்லு அர்ஜூன் செட்டில் தனக்கு உள்ள வேலைகளை தவிர மற்றவைகள் பற்றி கவலைப்படுவது இல்லை. இந்த விவகாரத்தில் தேவையில்லாமல் இழுக்கப்பட்டுள்ளார். அவர் ஏன் ஒருவரை வேலை செய்வதைத் தடுக்க வேண்டும் அல்லது வேறொருவரைப் பதவி உயர்த்த வேண்டும்?. நாங்கள் அனைவரும் தொழில் ரீதியாக மட்டுமே அவர்கள் இருவருடனும் இணைந்துள்ளோம்.
இவ்வாறு தெரிவித்துள்ளார்.
நடிகை ஜான்சி கடந்த வாரம் பத்திரிகையாளர்களை சந்தித்தார். அப்போது "இந்தப் பிரச்னையில் தெலுங்குத் திரையுலகம் ஒன்றுபட்டு நிற்கிறது என்பதை நான் உறுதியளிக்க விரும்புகிறேன். பாதிக்கப்பட்டவருக்காக யாரும் பகிரங்கமாகப் பேசவில்லை என்று தோன்றலாம்.
ஆனால் ஒரு பெரிய இயக்குனர், குறைந்தது இரண்டு தயாரிப்பாளர்கள் மற்றும் திரைக்குப் பின்னால் ஒரு பெரிய ஹீரோ மூலம் வேலை உறுதி செய்யப்பட்டது. தொழில் துறை எப்போதும் திறமையை ஆதரிக்கும்" என்றார்.
ஜான்சி கூறிய இரண்டு பெரிய டைரக்டர் சிவகுமார் என்றும், மெகா ஸ்டார் அல்லு அர்ஜூன் என்றும் கருதப்பட்டது. இந்த நிலையில்தான் புஷ்பா படம் தயாரிப்பாளர் இவ்வாறு தெரிவித்துள்ளார்.
உங்கள் அருகாமையில் உள்ள திரையரங்குகளில் ரிலீசான படங்களைப் பற்றிய தகவல்களை உடனுக்குடன் தெரிந்துக் கொள்ள இந்த லிங்க்-ஐ க்ளிக் செய்யவும்.
- தன்னை ஜானி பாலியல் பலாத்காரம் செய்ததாகபுகார் அளித்தார்.
- பவன் கல்யாண் கட்சியில் இருந்தும் நீக்கம் செய்யப்பட்டார்.
தமிழ், தெலுங்கு திரை உலகில் பிரபல நடன இயக்குநராக திகழ்பவர் ஜானி. கடந்த மாதம் இவர் மீது பெண் நடன கலைஞரான 21 வயது இளம்பெண் ஒருவர் பாலியல் பலாத்கார புகார் கொடுத்தார். சென்னை, ஐதராபாத் ஆகிய இடங்களில் நடந்த படப்பிடிப்புகளில் தன்னை ஜானி பாலியல் பலாத்காரம் செய்ததாக குற்றம் சாட்டி புகார் அளித்தார்.
இதையடுத்து ஐதராபாத் அருகில் உள்ள நர்சிங்கி போலீசார் விசாரணை நடத்தி ஜானி மீது 3 பிரிவுகளில் வழக்குப்பதிவு செய்தனர். இதை தொடர்ந்து அவர் தலைமறைவானார். மேலும் தெலுங்கு திரை உலகில் நடன இயக்குநராக ஜானி பணிபுரிவதற்கு பிலிம் சேம்பர் தடை விதித்தது. மேலும் பவன் கல்யாண் கட்சியில் இருந்தும் நீக்கம் செய்யப்பட்டார்.
இதை தொடர்ந்து தலைமறைவாக இருந்த ஜானியை கோவாவில் வைத்து தெலுங்கானா போலீசார் கைது செய்தனர். இந்நிலையில், புகார் கொடுத்த பெண் மைனராக இருக்கும் போதிருந்தே அவரை பாலியல் வன்கொடுமை செய்ததாக ஜானி மாஸ்டர் போலீசாரிடம் ஒப்புக்கொண்டுள்ளதாக தகவல் வெளியானது.
இந்த நிலையில், ஜானி மாஸ்டருக்கு ஐந்து நாட்கள் இடைக்கால ஜாமின் வழங்கி நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. மேலும், ஜாமின் பெறுவதற்கு ரூ. 2 லட்சத்திற்கான உத்தரவாதத்தை இருவர் அளிக்க வேண்டும், ஊடகங்களில் பேட்டி எதுவும் கொடுக்க கூடாது, மற்றொரு இடைக்கால ஜாமின் பெறக்கூடாது போன்ற நிபந்தனைகளை விதித்து ஜானி மாஸ்டருக்கு இடைக்கால ஜாமின் வழங்கப்பட்டுள்ளது.
தேசிய விருதுகள் வழங்கும் நிகழ்ச்சியில் கலந்து கொள்வதற்காக ஜானி மாஸ்டர் ஜாமின் கோரியுள்ளார். இவருக்கு 2022 ஆம் ஆண்டு வெளியான "திருச்சிற்றம்பலம்" படத்தில் இடம்பெற்ற "மேகம் கருக்காதா" பாடலுக்காக தேசிய விருது அறிவிக்கப்பட்டு இருந்தது.
உங்கள் அருகாமையில் உள்ள திரையரங்குகளில் ரிலீசான படங்களைப் பற்றிய தகவல்களை உடனுக்குடன் தெரிந்துக் கொள்ள இந்த லிங்க்-ஐ க்ளிக் செய்யவும்.
- ஜானி மாஸ்டருக்கு 5 நாட்கள் இடைக்கால ஜாமின் வழங்கியது நீதிமன்றம்.
- "திருச்சிற்றம்பலம்" படத்தில் இடம்பெற்ற "மேகம் கருக்காதா" பாடலுக்காக தேசிய விருது அறிவிக்கப்பட்டு இருந்தது.
தமிழ், தெலுங்கு திரை உலகில் பிரபல நடன இயக்குநரான ஜானி மீது கடந்த மாதம் பெண் நடன கலைஞரான 21 வயது இளம்பெண் ஒருவர் பாலியல் பலாத்கார புகார் கொடுத்தார். இதையடுத்து ஜானி மீது 3 பிரிவுகளில் வழக்கு பதிவு செய்த போலீசார் தலைமறைவாக இருந்தவரை தேடி வந்தனர். இதனை தொடர்ந்து கோவாவில் வைத்து ஜானியை தெலுங்கானா போலீசார் கைது செய்தனர்.
இதையடுத்து, புகார் கொடுத்த பெண் மைனராக இருக்கும் போதிருந்தே அவரை பாலியல் வன்கொடுமை செய்ததாக ஜானி மாஸ்டர் போலீசாரிடம் ஒப்புக்கொண்டதாக கூறப்பட்டது.
இதனை தொடர்ந்து தேசிய விருதுகள் வழங்கும் நிகழ்ச்சியில் கலந்து கொள்வதற்காக ஜானி மாஸ்டர் ஜாமின் கோரியிருந்தார். மனுவை விசாரித்த நீதிமன்றம் ஜாமின் பெறுவதற்கு ரூ. 2 லட்சத்திற்கான உத்தரவாதத்தை இருவர் அளிக்க வேண்டும், ஊடகங்களில் பேட்டி எதுவும் கொடுக்க கூடாது, மற்றொரு இடைக்கால ஜாமின் பெறக்கூடாது போன்ற நிபந்தனைகளை விதித்து ஜானி மாஸ்டருக்கு 5 நாட்கள் இடைக்கால ஜாமின் வழங்கினர்.
இந்த நிலையில், நாளை மறுநாள் தேசிய விருந்துகள் வழங்கும் விழா நடக்கவிருந்த நிலையில், ஜானிக்கான தேசிய விருது நிறுத்தி வைக்கப்பட்டுள்ளது.
ஜானிக்கு 2022 ஆம் ஆண்டு வெளியான "திருச்சிற்றம்பலம்" படத்தில் இடம்பெற்ற "மேகம் கருக்காதா" பாடலுக்காக தேசிய விருது அறிவிக்கப்பட்டு இருந்தது குறிப்பிடத்தக்கது.
உங்கள் அருகாமையில் உள்ள திரையரங்குகளில் ரிலீசான படங்களைப் பற்றிய தகவல்களை உடனுக்குடன் தெரிந்துக் கொள்ள இந்த லிங்க்-ஐ க்ளிக் செய்யவும்.
- ஜானியை கோவாவில் வைத்து தெலுங்கானா போலீசார் கைது செய்தனர்.
- சங்கர் இயக்கத்தில் உருவாகியுள்ள கேம் சேஞ்சர் படத்தில் ஜானி மாஸ்டர் பணியாற்றியுள்ளார்.
தமிழ், தெலுங்கு திரை உலகில் பிரபல நடன இயக்குநராக திகழ்பவர் ஜானி. கடந்த மாதம் இவர் மீது பெண் நடன கலைஞரான 21 வயது இளம்பெண் ஒருவர் பாலியல் பலாத்கார புகார் கொடுத்தார். சென்னை, ஐதராபாத் ஆகிய இடங்களில் நடந்த படப்பிடிப்புகளில் தன்னை ஜானி பாலியல் பலாத்காரம் செய்ததாக குற்றம் சாட்டி புகார் அளித்தார்.
இதையடுத்து ஐதராபாத் அருகில் உள்ள நர்சிங்கி போலீசார் விசாரணை நடத்தி ஜானி மீது 3 பிரிவுகளில் வழக்குப்பதிவு செய்தனர். இதை தொடர்ந்து அவர் தலைமறைவானார். மேலும் தெலுங்கு திரை உலகில் நடன இயக்குநராக ஜானி பணிபுரிவதற்கு பிலிம் சேம்பர் தடை விதித்தது. மேலும் பவன் கல்யாண் கட்சியில் இருந்தும் நீக்கம் செய்யப்பட்டார்.
இதை தொடர்ந்து தலைமறைவாக இருந்த ஜானியை கோவாவில் வைத்து தெலுங்கானா போலீசார் கைது செய்தனர்.
இயக்குநர் சங்கர் இயக்கத்தில் ராம் சரண் மற்றும் கியாரா அத்வானி நடிப்பில் உருவாகியுள்ள கேம் சேஞ்சர் படத்தில் ஜானி மாஸ்டர் பணியாற்றியுள்ளார்.
இந்நிலையில், கேம் சேஞ்சர் படத்தில் பாடலுக்காக ஜானி மாஸ்டருடன் பணியாற்றிய அனுபவம் குறித்து நடிகை கியாரா அத்வானி தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் வீடியோ ஒன்றை பதிவிட்டிருந்தார்.
பாலியல் வழக்கில் ஜானி கைது செய்யப்பட்ட நிலையில் அவரை பாராட்டி கியாரா அத்வானி இன்ஸ்டாகிராமில் பதிவிட்டது சர்ச்சையை ஏற்படுத்தியது. இதனையடுத்து அந்த பதிவில் இருந்து ஜானி மாஸ்டரின் பெயரை கியாரா அத்வானி நீக்கியுள்ளார்.
கேம் சேஞ்சர் திரைப்படம் அடுத்தாண்டு ஜனவரி 10 ஆம் தேதி வெளியாகவுள்ளது குறிப்பிடத்தக்கது.
உங்கள் அருகாமையில் உள்ள திரையரங்குகளில் ரிலீசான படங்களைப் பற்றிய தகவல்களை உடனுக்குடன் தெரிந்துக் கொள்ள இந்த லிங்க்-ஐ க்ளிக் செய்யவும்.