என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "நீர் வழி பாதை"

    • செட்டேரி சுமார் 100 ஏக்கர் பரப்பளவில் அமைந்துள்ள இந்த ஏரிக்கு வரும் நீர் வழிப்பாதைகள் அனைத்தும் ஆக்கிரமிக்கப்பட்டு உள்ளது.
    • இதன் காரணமாக சுமார் 60 ஆண்டுகள் தண்ணீர் வராமல் வறண்டு காணப்பட்டது.

    ஓமலூர்:

    சேலம் மாவட்டம் ஓமலூர் அருகே உள்ள பெரியேரிப்பட்டி ஊராட்சி வேடப்பட்டியில் ஏரி அமைந்துள்ளது செட்டேரி சுமார் 100 ஏக்கர் பரப்பளவில் அமைந்துள்ள இந்த ஏரிக்கு வரும் நீர் வழிப்பாதைகள் அனைத்தும் ஆக்கிரமிக்கப்பட்டு உள்ளது இதன் காரணமாக சுமார் 60 ஆண்டுகள் தண்ணீர் வராமல் வறண்டு காணப்பட்டது.

    இந்த நிலையில் தற்போது ஓமலூர் சுற்றுவட்டார பகுதியில் பெய்து வரும் தொடர் மழையின் காரணமாக 60 ஆண்டுகளுக்கு பிறகு நிரம்பி உள்ளது நீண்ட காலமாக தண்ணீர் இல்லாமல் வறண்டு கிடந்த இந்த பகுதியில் தற்போது ஏறி நிரம்பி தண்ணீர் வெளியேறி வருவதால் அந்த பகுதி பொதுமக்கள் மலர் தூவி வரவேற்றனர் தொடர்ந்து பட்டாசு வெடித்தும் ஆட்டு கிடா பலியிட்டும் வணங்கி கொண்டாடி வருகின்றனர். இந்த ஏரி நிரம்பியதன் காரணமாக அறுபது ஆண்டுகளாக தண்ணீர் இல்லாமல் விவசாயம் செய்யாமல் இருந்த மக்கள் தற்போது நெல் நடவு தொடங்கியுள்ளனர். இதனால் இந்த பகுதி சேர்ந்த பொதுமக்கள் மகிழ்ச்சியில் உள்ளனர் தொடர்ந்து இதே போன்று வருடா வருடம் ஏரி நிரம்ப அதிகாரிகள் நீர் வழி பாதையின் ஆக்கிரமிப்புகளை அகற்றி தண்ணீர் வர ஏற்பாடுகளை செய்ய வேண்டும் என கோரிக்கை விடுத்துள்ளனர். 

    ×