என் மலர்
நீங்கள் தேடியது "தேவர் அமைப்பு"
- தங்க கவசத்தை கலெக்டரிடம் ஒப்படைக்குமாறு தேவர் அமைப்பு கோரிக்கை விடுத்தனர்.
- 2017-ம் ஆண்டு 2 அணிகளாக பிரிந்து, தேவரின் தங்க கவசத்திற்கு உரிமை கோரியது.
மதுரை
மதுரை மாவட்ட கலெக்டர் அனீஷ்சேகரிடம் தேவர் தேசபக்த முன்னணி நிர்வாகிகளான முருகன், ஞானசேகரன், கவிக்குமார் ஆகியோர் கொடுத்த கோரிக்கை மனுவில் கூறியிருப்பதாவது:-
அ.தி.மு.க கடந்த 2017-ம் ஆண்டு 2 அணிகளாக பிரிந்து, தேவரின் தங்க கவசத்திற்கு உரிமை கோரியது. அப்போது அன்றைய அரசு தங்கக் கவசத்தை கலெக்டர் வசம் ஒப்படைத்தது. இப்போது அ.தி.மு.க. மீண்டும் 2 அணிகளாக பிரிந்துள்ளது.
2017-ம் ஆண்டு எடுத்த முடிவின்படி கலெக்டரே தங்ககவசத்தை பெற்று, தேவர் சிலைக்கு அணிவிக்க வேண்டும்.
இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.