search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "வேளாண் புரட்சி"

    • மனிதனுடைய வளர்ச்சிக்கு அடிப்படையே வேளாண் புரட்சிதான் என்று கலெக்டர் பேசினார்.
    • பசுமைப் புரட்சிக்கு முன் அன்றாடம் பயன்பாட்டில் இருந்த இவை மெல்ல மெல்ல மறைந்து கடந்த 30 ஆண்டுகளில் பல காணாமலேயே போய்விட்டது.

    விருதுநகர்

    உலக உணவு தினத்தை முன்னிட்டு விருதுநகர் மாவட்ட கலெக்டர் அலுவலக கூட்டரங்கில் வேளாண்மை மற்றும் உழவர்நலத்துறை சார்பில் பாரம்பரியமிக்க, உயர்தர உளர் ரகங்கள் மேம்பாட்டு கருத்தரங்கம் கலெக்டர் மேகநாதரெட்டி தலைமையில் நடந்தது.

    இந்த கருத்தரங்கில் பாரம்பரியமிக்க, உயர்தர, உளர் ரகங்கள் குறித்த விளக்க கையேட்டை கலெக்டர் வெளியிட்டார்.

    அருப்புக்கோட்டை, கோவிலாங்குளத்தில் உள்ள தமிழ்நாடு வேளாண் பல்கலைக்கழக ஆராய்ச்சி நிலைய பேராசிரியர் ராஜாபாபு கலந்து கொண்டு, பாரம்பரிய தானியங்கள் மற்றும் அதில் அடங்கியுள்ள சத்துக்கள் குறித்து பேசினார்.

    இதில் கலெக்டர் மேகநாத ரெட்டி பேசியதாவது:-இந்தியாவில் லட்சத்தி ற்கும் மேற்பட்ட பாரம்பரிய ரகங்கள் இருந்துள்ளது. பசுமைப் புரட்சிக்கு முன் அன்றாடம் பயன்பாட்டில் இருந்த இவை மெல்ல மெல்ல மறைந்து கடந்த 30 ஆண்டுகளில் பல காணாமலேயே போய்விட்டது.

    விருதுநகர் மாவட்டத்தில் பல முன்னோடி விவசா யிகள் பல்வேறு சிறப்புப் பண்புகளைக் கொண்ட பாரம்பரிய பயிர் ரகங்களை சாகுபடி செய்து வருகிறார்கள். அவற்றுள் பல ரகங்கள் நோய் எதிர்ப்பு சக்தி உள்ளதாகவும், வறட்சியைத் தாங்கி வளரும் தன்மை கொண்டதாகவும் மற்றும் மருத்துவ குணம் கொண்டதாகவும் உள்ளது.

    இந்த பாரம்பரியமிக்க உளர் பயிர் ரகங்கள், தாவர மரபியல் ஆராய்ச்சியாளர்களுக்கு தேவையான விரும்பத்தக்க புதிய பயிர் ரகங்களை உருவாக்குவதற்கான வாய்ப்பை வழங்குகிறது.

    நானும் விவசாய குடும்பத்தை சேர்ந்தவன். ஒரு அரசு எத்தனை துறைகள் இருந்தாலும், வேளாண்மைத்துறைக்கு அதிக முக்கியத்துவம் கொடுத்துவருகிறது. ஏனெனில் உணவு மிக முக்கியமானது.

    மனிதனுடைய முதல் கண்டுபிடிப்பு வேளாண்மை ஆகும். அதற்கு பிறகுதான் மனிதனுடைய வளர்ச்சி பல்கி பெருகியது. மனிதனுடைய வளர்ச்சிக்கு அடிப்படையே வேளாண் புரட்சிதான். அடுத்த வருடம் உலக சிறுதானிய ஆண்டாக கொண்டாடப்பட உள்ளதால் விருதுநகர், தர்மபுரி ஆகிய மாவட்டங்கள் தேர்வு செய்யப்பட்டுள்ளன.

    சிறுதானியத்தை தொலைத்து விட்டு அதை தேடி அலைகிறோம். ருசிக்காக உணவின் ஊட்ட சத்தை விட்டுவிட்டோம். சிறுதானியங்கள் இன்று மதிப்பு கூட்டப்பட்ட பொருளாகவே கிடைக்கிறது. எனவே குழந்தைகளுக்கு ஊட்டசத்து உணவை கொடுக்க வேண்டும். மேலும் விருதுநகர் கலெக்டர் அலுவலக வளாகத்தில் சிறுதானியம் குறித்து விழிப்புணர்வு ஏற்படுத்தும் வகையில் சிறுதானிய உணவகம், சிறுதானிய மதிப்புகூட்டப்பட்ட பொருட்கள் விற்பனை அங்காடி அமைக்கப்படும்.

    விருதுநகர் மாவட்டத்தில் செயல்படுத்தப்படும் சிறப்பு திட்டமான கண்மணி மற்றும் இரும்பு பெண்மணி ஆகிய திட்டங்களில் மதிப்புகூட்டப்பட்ட சிறுதானிய பொருட்கள் வழங்கப்படும்.

    இவ்வாறு அவர் பேசினார்.

    ×