என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "கடைக்கு சென்ற மாணவி"

    • ஷாலினி திருத்துறையூர் அரசு மேல்நிலைப் பள்ளியில் 10-ம் வகுப்பு படித்து வருகிறார்.
    • கா சிநாதன் புதுப்பேட்டை போலீசில் புகார் செய்தார்.

    கடலூர்:

    பண்ருட்டி அருகே வரிஞ்சிபக்கம் முருகன் கோவில் தெரு சேர்ந்தவர்காசிநாதன். அவரது மகள் ஷாலினி (வயது 17). இவர்திருத்துறையூர் அரசு மேல்நிலைப் பள்ளியில் 10-ம் வகுப்பு படித்து வருகிறார். நேற்றுஇரவு 9 மணிக்கு தனது வீட்டில் இருந்து கடைக்கு சென்று வருவதாக சென்றவர் வீடு திரும்பவில்லை.அதிர்ச்சி அடைந்த காசிநாதன் தனது மகளை உறவினர்கள் வீடு மற்றும் பல்வேறு இடங்களில் தேடினர்.

    எங்கும் தேடியும் கிடைக்காததால் காசிநாதன் புதுப்பேட்டை போலீசில் புகார் செய்தார். அதன்பேரில் புதுப்பேட்டை போலீஸ் இன்ஸ்பெக்டர் நந்தகுமார் வழக்கு பதிவு செய்து காணாமல் போன பள்ளி மாணவி ஷாலினியை தேடி வருகிறார்.

    ×