என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "சட்டசபை கூட்டம்"

    • சட்டசபை கூட்டம் எத்தனை நாட்கள் நடத்துவது என்பது பற்றி முடிவு செய்வார்கள்.
    • கவர்னர் ஆர்.என்.ரவி ஆங்கிலத்தில் தயாரிக்கப்பட்ட உரையை வாசிப்பார்.

    ஒவ்வொரு ஆண்டும் ஜனவரி மாதம் முதல் வாரம் சட்டசபையின் முதல் கூட்டத்தொடர் நடத்துவது மரபாக உள்ளது. அந்த வகையில் இந்த ஆண்டு நாளை (திங்கட்கிழமை) சட்டசபை கூட்டம் தொடங்க உள்ளது.

    முதல் நாள் கவர்னர் ஆர்.என்.ரவி காலை 10 மணிக்கு உரையாற்ற உள்ளார். இதற்காக அவர் காலை 9.30 மணிக்கு கிண்டியில் உள்ள கவர்னர் மாளிகையில் இருந்து புறப்பட்டு வருவார். 9.50 மணி அளவில் சட்டசபை வளாகத்தில் அவரை சபாநாயகர் அப்பாவு, சட்டசபை செயலாளர் சீனிவாசன் இருவரும் மரபுபடி பூங்கொத்து கொடுத்து வரவேற்பார்கள்.

    பிறகு கவர்னர் ஆர்.என்.ரவி சட்டசபைக்குள் அழைத்து செல்லப்படுவார். அவருக்கு முன்னதாக சட்டசபையில் முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் மற்றும் அமைச்சர்கள், எம்.எல்.ஏ.க்கள் அமர்ந்து இருப்பார்கள்.

    கவர்னர் வந்ததும் அவர்கள் அனைவரும் எழுந்து வணக்கம் தெரிவிப்பார்கள். பதிலுக்கு கவர்னர் வணக்கம் தெரிவித்து விட்டு அமருவார். அதன் பிறகு தமிழ்த்தாய் வாழ்த்துடன் சட்டசபை நிகழ்ச்சிகள் தொடங்கும்.

    கவர்னர் ஆர்.என்.ரவி ஆங்கிலத்தில் தயாரிக்கப்பட்ட உரையை வாசிப்பார். அவர் உரையாற்றி முடிந்ததும் சபாநாயகர் அப்பாவு தமிழாக்கத்தை வாசிப்பார். அதுவரை கவர்னர் சபையில் அமர்ந்து இருப்பார்.

    வழக்கமாக கவர்னர் உரை புத்தகமாக தயாரிக்கப்பட்டு இருக்கும். ஆனால் இந்த ஆண்டு முதல் காகிதம் இல்லாத உரையாக மாற்றப்பட்டுள்ளது. அதன்படி கணினி திரையில் உள்ள உரையை கவர்னரும், சபாநாயகரும் பார்த்து படிப்பார்கள். கவர்னர் உரை முடிந்ததும் கவர்னர் ஆர்.என்.ரவியை மரபுபடி வழியனுப்பி வைப்பார்கள்.

    அதன் பிறகு சபாநாயகர் அப்பாவு தலைமையில் அலுவல் ஆய்வு கூட்டம் நடைபெறும். அதில் சட்டசபை கூட்டம் எத்தனை நாட்கள் நடத்துவது என்பது பற்றி முடிவு செய்வார்கள்.

    10-ந் தேதி சட்டசபை கூடியதும் ஈரோடு கிழக்கு தொகுதி எம்.எல்.ஏ. திருமகன் மறைவுக்கு இரங்கல் தெரிவித்து கூட்டத்தை ஒத்திவைக்க வாய்ப்புள்ளது. எனவே சட்டசபை 11, 12-ந்தேதிகளில் 2 நாட்கள் நடைபெறலாம் என்று கூறப்படுகிறது. தேவைப்பட்டால் 13-ந்தேதி வரை நடத்துவதற்கு முடிவு செய்வார்கள்.

    • எடப்பாடி பழனிசாமி தமிழகத்தில் சட்டம் ஒழுங்கு சரியில்லை என தெரிவித்தார்.
    • எதிர்க்கட்சி தலைவரை பேச அனுமதியுங்கள், நான் பதில் சொல்ல தயார், ஓடி ஒளிய மாட்டேன்.

    தமிழக சட்டசபையில் இன்று 11.30 மணியளவில் கேள்வி நேரம் முடிந்ததும் எதிர்க்கட்சி தலைவர் எடப்பாடி பழனிசாமி எழுந்து பேசினார்.

    அப்போது அவரது மைக் 'ஆப்' செய்யப்பட்டிருந்தது. அவர் பேசுவதற்கு உடனடியாக அனுமதி அளிக்கப்படவில்லை.

    சபாநாயகர் அப்பாவு, எடப்பாடி பழனிசாமியை பார்த்து நீங்கள் அமருங்கள். உங்களுக்கு நேரம் தனியாக ஒதுக்கப்படும். அப்போது பேசுங்கள். உரிமை மீறல் ஒன்று வந்துள்ளது. அதன் பிறகு உங்களுக்கு பேச அனுமதி தருகிறேன் என்று கூறினார்.

    இந்த நேரத்தில் அ.தி.மு.க. உறுப்பினர்கள் அனைவரும் எழுந்து எதிர்கட்சி தலைவரை முதலில் பேச அனுமதி அளியுங்கள். உரிமை மீறலை அப்புறம் எடுத்துக்கொள்ளுங்கள் என்று தெரிவித்தனர்.

    இதைத்தொடர்ந்து எடப்பாடி பழனிசாமி பேசுவதற்கு சபாநாயகர், அனுமதித்தார். இதைத் தொடர்ந்து பேசிய எடப்பாடி பழனிசாமி தமிழகத்தில் சட்டம், ஒழுங்கு கெட்டு விட்டது என்று பேச தொடங்கினார்.

    அப்போது குறுக்கிட்ட சபாநாயகர், சட்டம்- ஒழுங்கு கெட்டுள்ளது என்று பொத்தாம் பொதுவாக கூறுவது எந்த வகையில் நியாயம்? எந்த பிரச்சினையில் சட்டம்-ஒழுங்கு சீர் குலைந்துள்ளது. அரசு என்ன நடவடிக்கை எடுக்கவில்லை என்பதை குறிப்பிட்டு தான் பேச வேண்டும். இப்படி பேசக் கூடாது. எந்த ஆதாரமும் இல்லாமல் பேசக்கூடாது என்றார்.

    அப்போது முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் குறுக்கிட்டு, எதிர்க்கட்சி தலைவரை பேச விடுங்கள். அ.தி.மு.க. ஆட்சியில் தான் சட்டம்-ஒழுங்கு கெட்டுப் போயிருந்தது. அதற்கான பட்டியல் உள்ளது. எதிர்க் கட்சி தலைவர் இப்படி பேசினால் நானும் பேசுவ தற்கு தயாராக உள்ளேன்.

    அதே நேரத்தில் பத்திரிகை செய்தியை அடிப்படையாக வைத்து அவர் பேசுவதற்கு அனுமதி அளிக்க கூடாது என்றார்.

    இந்த நேரத்தில் அ.தி.மு.க. உறுப்பினர்கள் எடப்பாடி பழனிசாமி பேசுவதற்கு அனுமதி அளிக்க வேண்டும் என்று தொடர்ந்து ஒன்று பட்ட குரலில் பேசிக்கொண்டே இருந்தனர்.

    சபாநாயகர் அப்பாவு: இதுபோன்ற விஷயங்களை பேசும் போது அரசின் கவனத்தை ஈர்த்து தான் பேச வேண்டும்.

    முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின்: நேரமில்லா நேரத்தில் பேசுவதற்கு உங்களிடம் (சபாநாயகர்) உரிய அனுமதி பெற்று தான் பேச முடியும். எதிர்க்கட்சி தலைவர் பேசினால், நானும் பேச தயாராக உள்ளேன். எங்கேயும் ஓடி ஒளிய மாட்டேன்.

    சபாநாயகர்: இன்று காலையில் உறுப்பினர் வேலுமணி நேரமில்லா நேரத்தில் எதிர்க்கட்சி தலைவர் சில பிரச்சினைகள் குறித்து பேசுவார் என்று தெரிவித்து இருந்தார்.

    எடப்பாடி பழனிசாமி: இந்த அவையில் எதிர் கட்சி தலைவர் பேசுவதற்கு உரிய அனுமதியை நீங்கள் தருவதில்லை. அப்படியே நான் பேசினாலும் அதனை பதிவு செய்ய மாட்டீர்கள். இது எனக்கு மிகுந்த வேதனை அளிக்கிறது.

    சபாநாயகர்: நீங்கள் குறிப்பிடும் சம்பவத்தில் காவல்துறை உரிய நடவடிக்கை எடுத்து கைது செய்துள்ளது. கோர்ட்டிலும் அந்த வழக்கு விவகாரம் நிலுவையில் உள்ளது. அதைப்பற்றி இங்கே பேச அனுமதிக்க முடியாது.

    (அந்த நேரத்தில் அ.தி.மு.க. உறுப்பினர்கள் அனை வரும் எழுந்து நின்று ஒட்டு மொத்தமாக குரல் எழுப்பி னார்கள். இதனால் அவை யில் கூச்சல்-குழப்பம் ஏற்பட்டது).

    முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின்: எதிர்க்கட்சி தலைவரை பேச விடுங்கள். அப்போது தான் அவர் என்ன பேசுகிறார் என்பது தெரியும்.

    எடப்பாடி பழனிசாமி: முதல்-அமைச்சர் பேசுவ தற்கு அனுமதித்துக் கொண்டே இருக்கிறீர்கள். என்னை பேச அனுமதிப்ப தில்லை. இது வருத்தம் அளிக்கிறது.

    முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின்: எதிர்க்கட்சி தலைவர் சபாநாயகரை பார்த்து இது போன்று பேசுவது மரபல்ல.

    சபாநாயகர்: அரசின் கவனத்தை ஈர்த்து தான் குறிப்பிட்ட பிரச்சினை பற்றி பேச முடியும்.

    எடப்பாடி பழனிசாமி:-நான் பேசுவது மக்கள் பிரச்சினை.

    சபாநாயகர்:-மக்கள் பிரச்சினை பற்றி உங்கள் கட்சி உறுப்பினர்கள் ஏற்கனவே, நிறைய பேசி விட்டனர். இன்று எந்த பிரச்சினை பற்றி பேசப் போகிறீர்கள் என்று நீங்கள் சொல்லவில்லை.

    எடப்பாடி பழனிசாமி:-வேண்டுமென்றே பேச அனுமதி மறுக்கிறீர்கள்.

    முதல் அமைச்சர் மு.க.ஸ்டாலின்:-நான் எதிர்க் கட்சி தலைவராக இருந்த போது அப்போதைய சபா நாயகர் தனபாலிடம் உரிய அனுமதி பெற்றே இது போன்ற நேரங்களில் பேசி இருக்கிறேன்.

    எஸ்.பி.வேலுமணி (அ.தி.மு.க.):-அ.தி.மு.க. ஆட்சியில் எதிர்க்கட்சி தலைவர் பேசுவதற்கு எப்போதுமே உரிய அனுமதியை வழங்கி இருக்கிறோம்.

    (இந்த நேரத்தில் எடப்பாடி பழனிசாமி தனது மைக்கில் பேசிக் கொண்டே இருந்தார். ஆனால் அவர் என்ன பேசுகிறார் என்று கேட்கவில்லை. அவரது மைக் ஆப் செய்யப்பட்டு இருந்தது).

    இதற்கிடையே சபாநாயகர் அப்பாவு, தி.மு.க. உறுப்பினர் டி.ஆர்.பி.ராஜாவை பேச அழைத்தார். அவர் எழுந்து பேசிக் கொண்டு இருந்தார்.

    இதையடுத்து எடப்பாடி பழனிசாமி உள்பட அ.தி.மு.க. உறுப்பினர்கள் அனைவரும் சட்டசபையில் இருந்து வெளிநடப்பு செய் தனர்.

    அப்போது முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின், 'இது போன்று ஓடி ஒளியக் கூடாது. என்ன பேசுகிறோம் என்பதை இங்கிருந்து கேட்க வேண்டும்" என்றார்.

    ஆனால் அ.தி.மு.க. உறுப்பினர்கள் அனைவரும் வெளியேறினார்கள்.

    இதைதொடர்ந்து முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின், எடப்பாடி பழனிசாமி பேச்சுக்கு பதில் அளிக்கும் வகையில் விளக்கம் அளித்து சட்டசபையில் பேசினார்.

    அப்போது, "அ.தி.மு.க. ஆட்சியில் தான் சட்டம், ஒழுங்கு சீர்குலைந்து இருந்தது" என்று அவர் குற்றம் சாட்டினார்.

    • சட்டம், ஒழுங்கு குறித்த முதல்வரின் பதிலுக்கு எதிர்ப்பு தெரிவித்து அதிமுக உறுப்பினர்கள் வெளிநடப்பு செய்தனர்.
    • போதைப்பொருள் புழக்கத்தை கண்டித்து அதிமுக வெளிநடப்பு செய்துள்ளது.

    சட்டசபை கூட்டத்தில் பங்கேற்ற எதிர்க்கட்சி தலைவர் எடப்பாடி பழனிசாமி கூட்டத்தில் இருந்து வெளிநடப்பு செய்தார். அவர் அவையில் இருந்து வெளியேறியவுடன் அ.தி.மு.க. எம்.எல்.ஏ.க்களும் வெளியேறினார்கள்.

    வெளிநடப்பு செய்த எடப்பாடி பழனிசாமி நிருபர்களிடம் கூறியதாவது:-

    சென்னை சாலிகிராமத்தில் நடந்த தி.மு.க. பொதுக் கூட்டத்திற்கு பாதுகாப்பில் ஈடுபட்ட பெண் காவலரிடம் தி.மு.க.வினர் பாலியல் தொல்லையில் ஈடுபட்டனர். தவறு செய்த கட்சி நிர்வாகிகள் மீது உடனடியாக நடவடிக்கை எடுக்காமல் சமாதான பேச்சுவார்த்தை நடத்துகிறார்கள். 2 நாட்கள் கழித்துதான் வழக்குப்பதிவு செய்யப்படுகிறது.

    தவறு செய்தவர்கள் கையும் களவுமாக பிடிபட்ட போதிலும் அதுகுறித்து முழுமையான விசாரணை நடத்தியபிறகு தான் நடவடிக்கை எடுக்கப்படும் என்று போலீஸ் டி.ஜி.பி. கூறியுள்ளார்.

    தமிழகத்தில் பெண் காவலருக்கே பாதுகாப்பு இல்லை. சாமான்ய மக்களுக்கு எப்படி பாதுகாப்பு கொடுப்பார்கள். குறிப்பாக பெண்களுக்கு பாதுகாப்பு இல்லை.

    தமிழகத்தில் போதை பொருள் நடமாட்டம் அதிகரித்துள்ளது. தமிழ்நாட்டிற்கு, வெளிநாட்டில் இருந்து கடல் வழியாக போதைப்பொருள் வருகிறது.

    கஞ்சா, கோகைன், பவுடர் உள்ளிட்ட பல்வேறு வடிவத்தில் போதை பொருள் பள்ளி, கல்லூரி மாணவர்களுக்கு விற்பனை செய்யப்படுகிறது. இதனால் மாணவர்கள் சீரழியும் நிலை ஏற்பட்டுள்ளது. மாணவர்கள், இளைஞர்கள் பாதிக்கப்படுகிறார்கள்.

    தமிழகத்தில் சட்டம்-ஒழுங்கு அடியோடு சீரழிந்துவிட்டது. இதை அரசின் கவனத்திற்கு கொண்டு வந்தோம். ஆனால் அனுமதி கொடுக்க மறுக்கிறார்கள். எங்கள் கருத்தை சட்டசபையில் வேண்டும் என்றே பதிவு செய்ய மறுக்கிறார்கள்.

    சபாநாயகர் நடுநிலையோடு செயல்படுவதாக கூறுகிறார். ஆனால் அவ்வாறு செயல்படாதது வருத்தம் அளிக்கிறது.

    தமிழ்நாட்டில் கொலை, கொள்ளை, போதை பொருள் கடத்தல் என தினமும் செய்திகள் வந்து கொண்டே இருக்கின்றன. சட்டம்- ஒழுங்கு மோசமான நிலையில் இருப்பதற்கு எதிர்ப்பு தெரிவித்துதான் கருப்பு சட்டை அணிந்து சட்டசபைக்கு வந்தோம்.

    இளைஞர்களின் எதிர்காலம் சீரழியக்கூடாது என்பதற்காகத்தான் எங்கள் கருத்தை பதிவு செய்ய வந்தோம். ஆனால் அதற்கு வாய்ப்பு தரவில்லை.

    இவ்வாறு அவர் கூறினார்.

    • 24-ந்தேதி முதல் மானிய கோரிக்கை மீதான விவாதம் நடைபெறும்.
    • கூட்டத்தொடருக்கு முன்னதாக அலுவல் ஆய்வு குழு கூட்டம் நடைபெறும்.

    சென்னை:

    தமிழக சட்டசபை கூட்டம் கடந்த பிப்ரவரி மாதம் 12-ந்தேதி நடைபெற்ற போது இந்த ஆண்டின் முதல் கூட்டம் என்பதால் கவர்னர் ஆர்.என்.ரவி உரையாற்றினார்.

    அப்போது அரசு தயாரித்து கொடுத்த கொள்கை உரையில் தனக்கு உடன்பாடு இல்லை என தெரிவித்த கவர்னர் 2 நிமிடங்களில் தனது உரையை முடித்து இருக்கையில் அமர்ந்தார். சட்டப்பேரவை நிகழ்ச்சியின் தொடக்கத்திலும், இறுதியிலும் தேசிய கீதம் பாட வேண்டும் என்று நான் முன் வைத்த கோரிக்கை தொடர்ச்சியாக புறக்கணிக்கப்பட்டுள்ளது.

    தமிழக அரசு தயாரித்த உரையில் இடம் பெற்றுள்ள சில வரிகள் உண்மைக்கு மாறாகவும் தார்மீகத்துக்கு முரணாகவும் உள்ளதால் இதை நான் வாசித்தால் அரசியலமைப்பை கேலிக்கூத்தாக்கும் செயலாகிவிடும் என்பதால் உரையை முடித்துக் கொள்கிறேன் என்று அப்போது அவர் கூறினார்.

    இதன் பிறகு சபாநாயகர் அப்பாவு கவர்னர் உரையின் தமிழாக்கத்தை முழுவதையும் வாசித்து முடித்தார். இது அன்றைய தினம் சட்டசபையில் பரபரப்பான சூழ்நிலையை ஏற்படுத்தியது. அதற்கு மறுநாளில் இருந்து கவர்னர் உரைக்கு நன்றி தெரிவிக்கும் தீர்மானத்தின் மீது விவாதம் நடைபெற்றது. இதற்கு அமைச்சர்கள் பதிலுரை அளித்தனர்.

    அதைத் தொடர்ந்து 2024-2025-ம் ஆண்டுக்கான பட்ஜெட்டும், வேளாண்மை பட்ஜெட்டும் சட்டசபையில் தாக்கல் செய்யப்பட்டது. இதன் மீது நடைபெற்ற விவாதங்களுக்கும் அமைச்சர்கள் பதில் அளித்தனர். இதில் சில சட்ட மசோதாக்களும் நிறைவேற்றப்பட்டது. அதன் பிறகு சட்டசபை கூட்டத்தொடர் தேதி குறிப்பிடாமல் ஒத்தி வைக்கப்பட்டது.

    இந்த நிலையில், பரபரப்பான அரசியல் சூழ்நிலையில் தமிழக சட்டசபை கூட்டம் வருகிற 24-ந்தேதி தொடங்குகிறது என்று சபாநாயகர் அப்பாவு தெரிவித்துள்ளார்.

    மேலும் 24-ந்தேதி முதல் மானிய கோரிக்கை மீதான விவாதம் நடைபெறும். கூட்டத்தொடருக்கு முன்னதாக அலுவல் ஆய்வு குழு கூட்டம் நடைபெறும். எந்தெந்த நாட்களில் மானிய கோரிக்கை மீதான விவாதம் நடைபெறும் என அலுவல் ஆய்வு குழு கூட்டத்தில் முடிவு செய்யப்படும் என்று சபாநாயகர் அப்பாவு தெரிவித்துள்ளார்.

    இந்த முறை நடைபெறும் சட்டசபைக் கூட்டத்தொடரில் சட்டம்-ஒழுங்கு பிரச்சனை, போதைப் பொருள் விவகாரம், குடிநீர் பிரச்சனை உள்ளிட்ட பல்வேறு பிரச்சனைகளை எதிர்க்கட்சிகள் எழுப்ப திட்டமிட்டுள்ளதாக கூறப்படுகிறது.

    இதனால் அனல் பறக்கும் விவாதங்களுக்கு பஞ்சமிருக்காது என தெரிகிறது.

    • சட்டசபையில் இருந்து அ.தி.மு.க. மற்றும் பாம.க. உறுப்பினர்கள் குண்டுக்கட்டாக வெளியேற்றப்பட்டனர்.
    • எங்கும் ஓடி ஒளியாமல் இந்த விவகாரத்தில் எடுக்கப்பட்ட நடவடிக்கைகளைப் பட்டியலிட்டுள்ளேன் என்றார்.

    தமிழக சட்டசபை இரண்டாவது நாள் அமர்வு இன்று காலை கூடியது. கேள்வி நேரம் தொடங்கும் முன் அ.தி.மு.க எம்.எல்.ஏ.க்கள் கடும் அமளியில் ஈடுபட்டனர். மானிய கோரிக்கையை தவிர்த்துவிட்டு கள்ளச்சாராய விவகாரத்தை விவாதிக்க அ.தி.மு.க.வினர் கோரிக்கை விடுத்தனர்.

    மேலும், முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் பதவி விலக கோரி எழுதிய காகிதங்களை தூக்கி காண்பித்து இருக்கையை முற்றுகையிட்டதால் சபாநாயகர் அப்பாவு கண்டித்தார்.

    அமளியில் ஈடுபட வேண்டாம் என்றும் அமைதியாக இருக்குமாறும் அ.தி.மு.க. எம்.எல்.ஏ.க்களுக்கு சபாநாயர் அப்பாவு அறிவுறுத்தினார்.

    இருப்பினும் தொடர்ந்து அமளியில் ஈடுபட்டதால் அ.தி.மு.க.வினர் சட்டசபையில் இருந்து வெளியேற்றுமாறு காவலர்களுக்கு சபாநாயகர் உத்தரவிட்டார். இதையடுத்து சட்டசபையில் இருந்து அ.தி.மு.க. மற்றும் பாம.க. உறுப்பினர்கள் குண்டுக்கட்டாக வெளியேற்றப்பட்டனர்.

    இந்நிலையில், இதுதொடர்பாக முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் தனது எக்ஸ் பக்கத்தில் காணொளியுடன் கூடிய பதிவு ஒன்றை வெளியிட்டுள்ளார்.

    அந்த பதிவில், " அவையில் இருந்து கேட்க மனமில்லாமல் அரசியல் ஆதாயங்களுக்காக வெளியேறியவர்கள் இந்தக் காணொளியைக் காணட்டும்" என குறிப்பிட்டுள்ளார்.

    இதுகுறித்து அவர் மேலும் குறிப்பிட்டுள்ளதாவது:-

    சட்டப்பேரவையில் கேள்வி நேரம் முடிவுற்றதும் கள்ளக்குறிச்சி விவகாரம் பற்றிப் பேசப்படும் என்பதை அறிந்தே, வெளிநடப்பு எனும் மலிவான அரசியலை எதிர்க்கட்சியினர் செய்துள்ளனர்.

    முதலமைச்சர் ராஜினாமா செய்ய வேண்டும் என்று சொன்னவர்களுக்கு.. எங்கும் ஓடி ஒளியாமல் இந்த விவகாரத்தில் எடுக்கப்பட்ட நடவடிக்கைகளைப் பட்டியலிட்டுள்ளேன்.

    அவையில் இருந்து கேட்க மனமில்லாமல் அரசியல் ஆதாயங்களுக்காக வெளியேறியவர்கள் இந்தக் காணொளியைக் காணட்டும்.

    இவ்வாறு பதிவிட்டுள்ளார்.

    • 2025ம் ஆண்டு முதல் ஜூன் 3ஆம் தேதி செம்மொழி தமிழ் நாளாக கொண்டாடப்படும்.
    • பரிசு தொகையாக ரூ. 1.88 கோடி ஆண்டு தோறும் வழங்கப்படும்.

    சட்டசபை கூட்டத்தில் பல்வேறு துறைகள் மீதான மானியக் கோரிக்கைகள் விவாதம் நடைபெற்றது. இந்த விவாதத்தின் போது பேசிய தமிழ் வளர்ச்சி மற்றும் செய்தித் துறை அமைச்சர் சாமிநாதன் அறிவிப்பு ஒன்றை வெளியிட்டார்.

    அதில் கூறியிருப்பதாவது,

    • 2025ஆம் ஆண்டு முதல் ஜனவரி 25ம் தேதி தமிழ் வழி தியாகிகள் நாளாக கடைப்பிடித்து சென்னையில் உள்ள நினைவகங்களில் வீரவணக்கம் செலுத்தப்படும்.

    • 2025ம் ஆண்டு முதல் ஜூன் 3ஆம் தேதி செம்மொழி தமிழ் நாளாக கொண்டாடப்படும்.

    • முத்தமிழ் அறிஞர் கலைஞர் அவர்களின் வேண்டுகோளை ஏற்று மன்மோகன் சிங் தலைமையிலான அரசு 12.10 2004ஆம் ஆண்டு அன்று தமிழை செம்மொழியாக அறிவித்தது. இதனை அடுத்து முத்தமிழ் அறிஞர் கலைஞர் தலைமையில் 2010 ஆம் ஆண்ட உலக செம்மொழி விழா கோவையில் சிறப்பாக நடத்தப்பட்டது. தமிழிற்கு பெருமை செய்த கலைஞரின் பிறந்த நாளை செம்மொழி தமிழ் நாளாக தமிழ் அரசு சார்பாக கொண்டாடப்படும்.

    • செம்மொழி சிறப்பை உணர்த்தும் வகையில், 11ம் வகுப்பு, 12ம் வகுப்பு, கல்லூரி மாணவர்களுக்கு பேச்சு பேட்டி, கட்டுரை போட்டிகள் நடத்தப்படும்.

    • தமிழ் வளர்ச்சித்துறை சார்பில் நடத்தப்படும் இந்த போட்டிகளில் வெற்றிபெறும் மாணவர்களுக்கு பரிசு தொகையாக ரூ. 1.88 கோடி ஆண்டு தோறும் வழங்கப்படும்.

    • தமிழ் அறிஞர்கள் ஒன்பதின்மர் நூல்கள் நாட்டுடைமையாக்கப்படும். நூலுரிமை தொகைக்கென ரூபாய் 91 லட்சத்திலிருந்து 35 ஆயிரம் வழங்கப்படும்.

    • டெல்லி தமிழ் சங்கத்தின் கலையரங்கத்தில் தமிழ் கலை பண்பாட்டு நிகழ்ச்சிகள் நடத்திட ஏதுவாக ரூபாய் 50 லட்சம் நிதி உதவி வழங்கப்படும்.

    • சிறந்த நூலை எழுதிய நூலாசிரியர் நூலை பதிப்பிக்கும் பதிப்பாளருக்கு பரிசு தொகை உயர்த்தி வழங்கப்படும். கூடுதல் செலவினத்திற்கு ரூபாய் 11 லட்சத்து 55 ஆயிரம் வழங்கப்படும்

    • ஜனவரி 25ம் நாளினை தமிழ்மொழித் தியாகிகள் நாள் என பின்பற்றி, புகழ் வணக்கம் செய்திட ரூபாய் 2 லட்சம் வழங்கப்படும்

    • முத்தமிழ் அறிஞர் கலைஞர் விருது தோற்றுவிக்கப்படும் ரூபாய் 17 லட்சம் ஆண்டுதோறும் வழங்கப்படும்.

    • வீறுகவியரசர் முடியரசன் அவர்களின் புகழைப் போற்றும் வண்ணம் சிவகங்கை மாவட்டத்தில் திருவுருச் சிலை நிறுவிட ரூபாய் 50 லட்சம் வழங்கப்படும்

    • சண்டிகர் தமிழ் மன்றம் கட்டிட விரிவாக்க பணிக்கு ரூபாய் 50 லட்சம் நிதி உதவி வழங்கப்படும்

    இவ்வாறு கூறியுள்ளார்.

    • சட்டசபை விதிகள் குழுவில் கொண்டுவரப்பட்ட திருத்தம்.
    • சபாநாயகர் அப்பாவு முறைப்படி அறிவித்து விதிகளில் திருத்தம் கொண்டு வந்தார்.

    சென்னை:

    தமிழக சட்டசபை கூட்டம் வழக்கமாக காலை 10 மணிக்கு தொடங்கும் கடந்த மாதம் நடைபெற்ற சட்டசபை கூட்டத்தொடர் காலை 10 மணிக்கு பதிலாக 9.30 மணிக்கு தொடங்கி மதியம் 1.30 மணிக்கு முடிவடைந்தது. மாலையில் 5 மணி முதல் இரவு 8 மணி வரை சட்டசபை கூட்டம் நடத்தப்பட்டது.

    விக்கிரவாண்டி இடைத்தேர்தல் நடந்ததையொட்டி கூட்டத்தொடரை விரைவாக முடிக்க இந்த நடைமுறை கொண்டுவரப்பட்டது.

    இதற்காக தமிழ்நாடு சட்டமன்ற விதிகள் குழுவில் முடிவெடுத்து தீர்மானம் கொண்டு வரப்பட்டு நிறைவேற்றப்பட்டது. இதற்கான அறிவிப்பை சமீபத்தில் சட்டசபையில் சபாநாயகர் அப்பாவு முறைப்படி அறிவித்து விதிகளில் திருத்தம் கொண்டு வந்தார்.

    சட்டசபை விதிகள் குழுவில் கொண்டுவரப்பட்ட திருத்தம் அப்படியே நீடிப்பதால் இனி வரும் காலங்களில் சட்டசபை கூட்டம் காலை 9.30 மணிக்கு தொடங்கி மதியம் 1.30 மணிக்கு முடிவடையும் என்று அதிகாரிகள் தெரிவித்தனர்.

    கருணாநிதி முதலமைச்சாக இருந்த கால கட்டத்தில் சட்டசபை கூட்டம் காலை 9.30 மணிக்கு தொடங்குவது வழக்கம். அந்த நடைமுறை இப்போதும் கொண்டுவரப்பட்டுள்ளது குறிப்பிடத்தக்கது.

    • மறுநாள் அதிகாலை 3.15 மணி வரை சட்டசபை கூட்டம் நடந்தது.
    • உறுப்பினர்களுக்கு உணவு இடைவேளை அளிக்கப்பட்டது.

    திருப்பதி:

    தெலுங்கானா சட்டசபை கூட்டம் கடந்த திங்கட்கிழமை காலை 10 மணிக்கு தொடங்கியது. இந்த கூட்டத்தில் 31-ந்தேதிக்குள் பல்வேறு மசோதாக்கள் நிறைவேற்ற திட்டமிடப்பட்டிருந்தது.

    மின்சாரம், நகராட்சி நிர்வாகம், உள்துறை மற்றும் பிற துறைகள் தொடர்பான கோரிக்கைகள் மீது விவாதம் நடந்தது.

    இதனால் காலையில் தொடங்கிய சட்டசபை கூட்டம் இரவிலும் நீடித்தது. தொடர்ந்து ஆளுங்கட்சி மற்றும் எதிர்க்கட்சி உறுப்பினர்கள் விவாதம் செய்ததால் மறுநாள் அதிகாலை 3.15 மணி வரை சட்டசபை கூட்டம் நடந்தது. இந்த கூட்டத்தில் 19 கோரிக்கைகளுக்கு ஒப்புதல் அளிக்கப்பட்டது.

    தொடர்ந்து 17 மணி நேரம் சட்டசபை கூட்டம் நடத்தப்பட்டது சாதனையாக அமைந்தது. இந்த கூட்டத்தில் 70 சதவீதத்திற்கு அதிகமான எம்.எல். ஏ.க்கள் கலந்து கொண்டனர். கூட்டத்தின் நடுவில் உறுப்பினர்களுக்கு உணவு இடைவேளை அளிக்கப்பட்டிருந்தது.

    என்.டி.ராமராவ் ஒருங்கிணைந்த ஆந்திராவில் என்.டி. ராமராவ் முதல் மந்திரியாக இருந்தபோது ஒருமுறை அதிகாலை 2 மணி வரை சட்ட சபை கூட்டம் நடைபெற்றுள்ளது.

    இதேபோல் சந்திரசேகர ராவ் ஆட்சியில் 2 முறை நள்ளிரவு 1 மணி வரை தெலுங்கானா சட்டசபை கூட்டம் நடைபெற்றுள்ளதாக அதிகாரிகள் தெரிவித்தனர்.

    • பேரவை விதிகளின்படி, சட்டசபை கூட்டம் முடிவுற்ற நாளில் இருந்து 6 மாதத்துக்குள் மீண்டும் கூடியாக வேண்டும்.
    • ஆளுங்கட்சி மற்றும் எதிர்க்கட்சி உறுப்பினர்களின் கேள்விகளுக்கு துறை சார்ந்த அமைச்சர்கள் பதில் அளிப்பார்கள்.

    சென்னை:

    தமிழக சட்டசபையின் இந்த ஆண்டின் முதல் கூட்டம் கடந்த பிப்ரவரி மாதம் 12-ந்தேதி கவர்னர் ஆர்.என்.ரவி உரையுடன் தொடங்கியது.

    கவர்னர் உரைக்கு நன்றி தெரிவிக்கும் தீர்மானத்தின் மீதான விவாதம் அடுத்த 2 நாட்கள் நடந்தது. தொடர்ந்து, பிப்ரவரி 15-ந்தேதி முதலமைச்சர் மு.க.ஸ்டாலினின் பதில் உரையுடன் கூட்டம் நிறைவடைந்தது.

    அதன்பிறகு, பிப்ரவரி 19-ந்தேதி சட்டசபை மீண்டும் கூடியது. அன்றைய தினம் 2024-2025-ம் ஆண்டுக்கான பொது பட்ஜெட்டும், அதற்கு அடுத்த நாள் வேளாண் பட்ஜெட்டும் தாக்கல் செய்யப்பட்டது. அடுத்த 2 நாட்கள் பட்ஜெட் மீதான விவாதம் நடைபெற்று, அமைச்சர்கள் பதில் உரையுடன் கூட்டம் நிறைவடைந்தது.

    அதனைத்தொடர்ந்து, துறைகள் வாரியாக மானியக் கோரிக்கை விவாதம் நடைபெறுவதற்காக ஜூன் 20-ந்தேதி முதல் 29-ந்தேதி வரை 10 நாட்கள் சட்டசபை கூட்டம் நடந்தது.

    பேரவை விதிகளின்படி, சட்டசபை கூட்டம் முடிவுற்ற நாளில் இருந்து 6 மாதத்துக்குள் மீண்டும் கூடியாக வேண்டும்.

    அந்த வகையில், பரபரப்பான அரசியல் சூழலில், தமிழக சட்டசபை நாளை (திங்கட்கிழமை) காலை 9.30 மணிக்கு கூடுகிறது. கூட்டம் தொடங்கியதும் மறைந்த முன்னாள் உறுப்பினர்களுக்கு இரங்கல் தெரிவிக்கப்படுகிறது.

    தொடர்ந்து, தமிழ் தேசியக் கூட்டமைப்பின் தலைவர் இரா.சம்பந்தன், மேற்கு வங்காள முன்னாள் முதல்-மந்திரி புத்ததேவ் பட்டாச்சார்யா, முன்னாள் ராணுவ தலைமை தளபதி எஸ்.பத்மநாபன், மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்டு கட்சியின் பொதுச்செயலாளர் சீதாராம் யெச்சூரி, ஈ.சி.ஐ. திருச்சபையின் பேராயர் எஸ்றா சற்குணம், பிரபல தொழில் அதிபர் ரத்தன் டாடா, தமிழக அரசின் முன்னாள் தலைமைச் செயலாளர் பி.சங்கர், முரசொலி நாளிதழின் நிர்வாக ஆசிரியர் முரசொலி செல்வம் ஆகியோர் மறைவுக்கு இரங்கல் தீர்மானம் கொண்டுவரப்படுகிறது.

    அதன் பின்னர், கேள்வி நேரம் தொடங்குகிறது. ஆளுங்கட்சி மற்றும் எதிர்க்கட்சி உறுப்பினர்களின் கேள்விகளுக்கு துறை சார்ந்த அமைச்சர்கள் பதில் அளிப்பார்கள்.

    தொடர்ந்து, 2024-2025-ம் ஆண்டில் ஏற்பட்ட கூடுதல் செலவுக்காக துணை பட்ஜெட் தாக்கல் செய்யப்பட இருக்கிறது. பின்னர், அரசினர் தனித் தீர்மானம் ஒன்று கொண்டுவரப்பட இருக்கிறது.

    அதாவது, மதுரை மாவட்டத்தில் இந்துஸ்தான் ஜிங்க் லிமிடெட் நிறுவனத்திற்கு வழங்கப்பட்ட டங்ஸ்டன் சுரங்க உரிமையை உடனடியாக ரத்து செய்திடவும், சம்பந்தப்பட்ட மாநில அரசின் அனுமதியின்றி சுரங்க உரிம ஏலங்களை மேற்கொள்ளக்கூடாது என்றும் மத்திய அரசை வலியுறுத்தி தீர்மானம் நிறைவேற்றப்பட இருக்கிறது.

    நாளை மறுநாள் (செவ்வாய்க்கிழமை) காலை 9.30 மணிக்கு கேள்வி நேரத்துடன் கூட்டம் தொடங்குகிறது. கேள்வி நேரம் முடிந்ததும், 2024-2025-ம் ஆண்டு துணை பட்ஜெட் மீது விவாதம் நடைபெறுகிறது. விவாதத்தில் உறுப்பினர்கள் எழுப்பும் கேள்விகளுக்கு நிதி அமைச்சர் தங்கம் தென்னரசு பதில் அளிக்க இருக்கிறார். தொடர்ந்து, கூடுதல் நிதி ஒதுக்குவதற்கான சட்ட மசோதா நிறைவேற்றப்பட இருக்கிறது. அத்துடன் இந்த ஆண்டுக்கான சட்டசபை கூட்டம் நிறைவடையும்.

    அடுத்து, புத்தாண்டில் (2025) ஜனவரி மாதம் கவர்னர் உரையுடன் சட்டசபை கூடும்.

    • டங்ஸ்டன் சுரங்க ஒப்பந்த புள்ளி கோரப்பட்டபோது தமிழக அரசு அமைதியாக இருந்தது.
    • 10 மாதங்கள் மாநில அரசு அமைதியாக இருந்தது என்று அவர் குற்றம்சாட்டினார்.

    தமிழக சட்டசபையில் மதுரை அரிட்டாப்பட்டியில் டங்ஸ்டன் சுரங்கம் அமைப்பதற்கு எதிராக தனித்தீர்மானம் நிறைவேற்றப்பட்டது.

    டங்ஸ்டன் சுரங்கம் அமைப்பதற்கு எதிரான தமிழக அரசின் தீர்மானத்திற்கு அனைத்து கட்சிகளின் உறுப்பினர்களும் வரவேற்பு தெரிவித்தனர்.

    இந்நிலையில டங்ஸ்டன் சுரங்கத்திற்கு எதிரான தீர்மானத்தின் மீது அதிமுக பொதுச் செயலாளர் எடப்பாடி பழனிசாமி உரையாற்றினார். அப்போது அவர் கூறியதாவது:

    * டங்ஸ்டன் சுரங்கம் குறித்த முழு தகவல்களும் தீர்மானத்தில் இல்லை.

    * பாராளுமன்றத்தில் திமுக எம்.பி.க்கள் செயல்பட்டிருக்க வேண்டும்.

    * தமிழகத்திற்கு எதிரான திட்டங்களை திமுக எம்.பி.க்கள் தடுத்து நிறுத்த வேண்டும்.

    * மாநில உரிமை பறிபோகும்போது பாராளுமன்றத்தில் தமிழக எம்.பி.க்கள் எதிர்ப்பை தெரிவிக்க வேண்டும்.

    * டங்ஸ்டன் சுரங்க ஒப்பந்த புள்ளி கோரப்பட்டபோது தமிழக அரசு அமைதியாக இருந்தது.

    * 10 மாதங்கள் மாநில அரசு அமைதியாக இருந்தது என்று அவர் குற்றம்சாட்டினார்.

    இதற்கிடையே, குறுக்கிட்ட அமைச்சர் துரைமுருகன் எதிர்க்கட்சி தலைவர் இ.பி.எஸ்., போல் ஆவேசமாக மிமிக்ரி செய்து பேசினார். இது, ஆளும் கட்சியினர் மத்தியில் சிரிப்பலையை ஏற்படுத்தியது.

    அப்போது இபிஎஸ் போன்று ஆக்ரோஷமாக பேசிய அமைச்சர் துரைமுருகன், ''எதிர்க்கட்சி தலைவர் இ.பி.எஸ்., உரக்கப்பேசுகிறார். நானும் பேசிவிடுவேன். ஏற்கனவே இந்த திட்டத்துக்கு எல்லா முயற்சியும் எடுத்து, மத்திய அரசுக்கு தெரிவித்த பிறகு தான் தீர்மானத்தை கொண்டு வந்து இருக்கிறோம்" என்றார்.

    அவரது பேச்சும், குரலும், ஆளும் கட்சியினர் மத்தியில் சிரிப்பலையை ஏற்படுத்தியது.

    இதைக்கண்ட எதிர்க்கட்சித்தலைவர் இ.பி.எஸ்., ''பேரவை தலைவர் அவர்களே ஒன்னும் சாதிக்க முடியவில்லை என்றால் இப்படி தான் பேசி ஆகணும். வேற என்ன பேச முடியும்? சரக்கு இருந்தால் தான பேச முடியும். இப்படி பேசினால் என்ன அர்த்தம். ஆ ஊன்னா என்ன? சட்டமன்றம் தான? மூத்த உறுப்பினர் மக்களுக்கு வழி காட்டியாக இருக்க வேண்டும். அதை விட்டு விட்டு, ஆ ஊன்னா என்ன? இதுக்கு எல்லாம் பயப்பட மாட்டேன். மக்களுடைய பிரச்னை உயிரை கொடுத்தும் காப்பாத்துவோம்,'' என்றார்.

    • சட்டசபையில் திமுக, அதிமுக இடையே இந்த விவகாரம் தொடர்பாக காரசார விவாதம் நடந்தது.
    • தமிழக அரசின் தீர்மானத்திற்கு அனைத்து கட்சிகளின் உறுப்பினர்களும் வரவேற்பு தெரிவித்தனர்.

    தமிழக சட்டசபையில் மதுரை அரிட்டாப்பட்டியில் டங்ஸ்டன் சுரங்கம் அமைப்பதற்கு எதிராக தனித்தீர்மானம் நிறைவேற்றப்பட்டது.

    டங்ஸ்டன் சுரங்கம் அமைப்பதற்கு எதிரான தமிழக அரசின் தீர்மானத்திற்கு அனைத்து கட்சிகளின் உறுப்பினர்களும் வரவேற்பு தெரிவித்தனர்.

    இதற்கிடையே, திமுக, அதிமுக இடையே இந்த விவகாரம் தொடர்பாக காரசார விவாதம் நடந்தது. இறுதியில் எதிர்க்கட்சிகளின் ஆதரவுடன் ஒருமனதாக தனித்தீர்மானம் நிறைவேற்றப்பட்டது.

    முன்னதாக, மத்திய அரசின் சுரங்கம் மற்றும் கனிம திருத்தச் சட்ட மசோதாவுக்கு நாடாளுமன்றத்தில், திமுக எதிர்ப்பு தெரிவிக்கவில்லை என சட்டசபையில் இன்று இபிஎஸ் கடும் குற்றச்சாட்டை பதிவு செய்த நிலையில், மாநிலங்களவையில் அதிமுக அம்மசோதாவுக்கு ஆதரவு தெரிவித்தது.

    கடந்த, 2023ம் ஆண்டு ஆகஸ்ட் மாதம் அதிமுக எம்.பி. தம்பிதுரை, இம்மசோதாவுக்கு ஆதரவு தெரிவித்து அவையில் பேசியுள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.

    இந்நிலையில், அதிமுகவின் இரட்டை நிலைப்பாடு தற்போது வெளிவந்துள்ளது.

    இதுகுறித்து முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் தனது எக்ஸ் தள பக்கத்தில் பதிவு ஒன்றை வெளியிட்டுள்ளார்.

    அந்த பதிவில் கூறப்பட்டுள்ளதாவது:-

    சுரங்கம் மற்றும் கனிமத் திருத்தச் சட்ட வரைவிற்கு நாடாளுமன்றத்தில் ஆதரித்து வாக்களித்துவிட்டு, இப்போது சட்டப்பேரவையில் தமிழ்நாட்டின் நலனுக்காகப் பேசுவதுபோல் நடிக்கும் திரு. பழனிசாமி அவர்கள், அவதூறுகளைப் பரப்பி உயிர்வாழும் அ.தி.மு.க.வின் துரோக வரலாற்றுக்கு அடையாளமாய் இருக்கிறார்.

    சட்டப்பேரவையில் சொன்னதை மீண்டும் சொல்கிறேன்…

    தமிழ்நாட்டுக்கு ஊறு விளைவிக்கும் எந்தத் திட்டத்தையும் திராவிட முன்னேற்றக் கழகம் ஒருபோதும் அனுமதிக்காது!

    இவ்வாறு அவர் குறிப்பிட்டுள்ளார்.

    • மக்களுக்குக் கொண்டு சேர்க்கும் நேரலை ஒளிபரப்பை நிறுத்துவதை ஏற்றுக்கொள்ள முடியாது.
    • ஜனநாயக முறையில் நடைபெறும் விவாதங்களை, வெளிப்படையாகத் தமிழக மக்கள் தெரிந்துகொள்வது அவசியம்.

    தமிழக சட்டமன்றத்தின் முதல் கூட்டம் இன்று தொடங்கியது. ஆளுநர் ஆர்.என். ரவி சுமார் 45 நிமிடங்கள் உரையாற்றுவார் என்று எதிர்பார்க்கப்பட்ட நிலையில், மூன்றே நிமிடங்களில் அவர் அவையில் இருந்து வெளியேறினார்.

    இந்நிலையில், சட்டமன்றத்தில் நடைபெறும் நிகழ்ச்சிகளின் நேரடி ஒளிபரப்பபை நிறுத்தப்பட்டது.

    இதுதொடர்பாக தவெக தலைவர் விஜய் தனது எக்ஸ் தள பக்கத்தில் பதிவு வெளியிட்டுள்ளார்.

    அந்த பதிவில் அவர் கூறியிருப்பதாவது:-

    ஆண்டின் முதல் சட்டமன்றக் கூட்டத் தொடர் தொடங்கியுள்ள நிலையில், அதன் நிகழ்வுகளை உடனுக்குடன் மக்களுக்குக் கொண்டு சேர்க்கும் நேரலை ஒளிபரப்பை நிறுத்துவதை ஏற்றுக்கொள்ள முடியாது.

    சட்டமன்றத்தில் ஆளும் கட்சி மற்றும் எதிர்க்கட்சிகளுக்கு இடையே ஜனநாயக முறையில் நடைபெறும் விவாதங்களை, வெளிப்படையாகத் தமிழக மக்கள் தெரிந்துகொள்வது அவசியமாகும்.

    எனவே சட்டமன்ற நிகழ்ச்சிகள் முழுவதையுமே எந்தவித இடையூறும் இல்லாமல் நேரலையில் ஒளிபரப்ப வேண்டும் என்று தமிழக அரசை வலியுறுத்துகிறேன்.

    இவ்வாறு அவர் குறிப்பிட்டுள்ளார்.

    ×