என் மலர்
நீங்கள் தேடியது "ஆஸ்தானம்"
- 24-ந்தேதி நடக்கிறது
- கன்னியாகுமரி திருமலை திருப்பதி தேவஸ்தானத்தின் கீழ் இயங்குகிறது
கன்னியாகுமரி:
கன்னியாகுமரி விவேகானந்தபுரத்தில் உள்ள விவேகானந்த கேந்திர கடற்கரை வளாகத்தில் திருமலை திருப்பதி தேவஸ்தானம் சார்பில் வெங்கடாஜலபதி கோவில் கட்டப்பட்டு உள்ளது.
இந்தக் கோவில் கடந்த 2019-ம் ஆண்டு ஜனவரி மாதம் 27-ந்தேதி திறக்கப்பட்டு கும்பாபிஷேகம் நடத்தப்பட்டது. இந்த கோவில் கட்டப்பட்டு 3 ஆண்டுகள் நிறைவடைந்த நிலையில் திருப்பதியில் ஆண்டு தோறும் ஐப்பசி மாதத்தில் வரும் நரக சதுர்த்தி அன்று தீபாவளி ஆஸ்தானத்தை தேவஸ்தானம் நடத்தி வருவது போல் கன்னியாகுமரியில் உள்ள வெங்கடாஜலபதி கோவிலிலும் தீபாவளி ஆஸ்தானம் நிகழ்ச்சி வருகிற 24-ந்தேதி நடக்கிறது.
இதையொட்டி அன்று காலையில் சுப்ரபாதம் நிகழ்ச்சியும் அதைத் தொடர்ந்து சிறப்பு பூஜைகள் மற்றும் வழிபாடுகள் நடக்கிறது. பின்னர் சுவாமிக்கு புதிய பட்டாடை அணிவித்து பல வண்ண மலர்களால் அலங்க ரித்து பூலங்கி சேவை நடக்கிறது. அதைத்தொ டர்ந்து அலங்கார தீபாராத னையும் அர்ச்சகர்கள் பாராயணம் பாடும் நிகழ்ச்சியும் நடக்கிறது.
மாலையில் தோமாலை சேவையும், இரவு ஏகாந்த சேவையும் நடக்கிறது. இதில் திரளான பக்தர்கள் கலந்து கொண்டு தரிசனம் செய்வார்கள். இதற்கான ஏற்பாடுகளை கன்னியாகுமரி திருமலை திருப்பதி தேவஸ்தான வெங்கடாஜலபதி கோவில் ஆய்வாளர் சாய் கிருஷ்ணா தலைமையில் பக்தர்கள் செய்து வருகிறார்கள்.