என் மலர்
நீங்கள் தேடியது "2-ம் நிலை போலீசார்"
- இன்று மாலை மாவட்ட ஆயுதப்படை மைதானத்தில் நடக்கிறது
- பயிற்சி பள்ளியின் முதல்வராக கன்னியாகுமரி மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு ஹரிகிரண் பிரசாத் இருந்து வருகிறார்.
நாகர்கோவில்:
குமரி மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு அலுவலகம் வெளியிட்டுள்ள செய்தி குறிப்பில் கூறி இருப்பதாவது:-
கன்னியாகுமரி மாவட்டத்தில் 2-ம் நிலை காவலர்களுக்கான பயிற்சி மறவன்குடியிருப்பு மாவட்ட ஆயுதப்படை மைதானத்தில் தற்காலிக காவலர் பயிற்சி பள்ளியில் நடைபெற்று வருகிறது. இதில் தேர்ச்சி பெற்ற 199 காவலர்கள் பயிற்சி பெற்று வருகின்றனர்.
பயிற்சி பள்ளியின் முதல்வராக கன்னியாகுமரி மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு ஹரிகிரண் பிரசாத், துணை முதல்வராக ஆயுதப்படை துணை சூப்பிரண்டு சேம் வேதமாணிக்கம் ஆகியோர் இருந்து வருகிறார்கள். பயிற்சி காவலர்களுக்கு சிறந்த முறையில் சட்ட வகுப்புகள் மற்றும் கவாத்து பயிற்சி சிறப்பான முறையில் கொடுக்கப்பட்டு வருகிறது.
பயிற்சி காவலர்களின் நிறைவு விழா இன்று (19-ந் தேதி) மாலை 3.30 மணிக்கு மாவட்ட ஆயுதப்படை மைதானத்தில் நடைபெற இருக்கிறது. இதில் தென்மண்டல காவல்துறை தலைவர் அஸ்ரா கார்க் பங்கேற்று பயிற்சி காவல்களின் கவாத்து அணிவகுப்பினை பார்வையிடுகிறார்.
பயிற்சி காவலர்கள் தமிழக காவல்துறைக்கு குடியரசு தலைவரால் வழங்கப்பட்ட கொடி அங்கீகார லோகோவை தங்கள் சீருடையில் அணிந்து கொண்டு மரியாதை செலுத்த உள்ளார்கள்.
மேலும் சிறந்த முறையில் கவாத்து, சட்டப் பயிற்சி, துப்பாக்கி சுடுதல் போன்ற நிகழ்வுகளில் சிறப்பாக செயல்பட்ட பயிற்சி காவலர்களுக்கு காவல்துறை தலைவர் பதக்கங்களை வழங்குகிறார். நிறைவு விழாவில் பயிற்சி காவலர்களின் களரி, கராத்தே நிகழ்ச்சிகள் நடைபெறுகிறது.
இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.