என் மலர்
நீங்கள் தேடியது "கண்காணிப்புக்குழு ஆய்வு"
- குழுவில் உள்ள கேரளாவைச் சேர்ந்த 2 பேரை நீக்க வேண்டும்.
- 14 அம்ச கோரிக்கைகளை வலியுறுத்தி முற்றுகை போராட்ட பேரணி.
கூடலூர்:
முல்லைப்பெரியாறு அணையை கண்காணிக்க உச்சநீதிமன்றத்தால் அமைக்கப்பட்ட பழைய குழு களைக்கப்பட்டு தற்போது 7 பேர் கொண்ட புதிய கண்காணிப்பு குழு உருவாக்கப்பட்டுள்ளது.
இந்த குழுவின் தலைவராக தேசிய அணைகள் பாதுகாப்பு ஆணைய தலைவர் அனீஸ் ஜெயின் நியமிக்கப்பட்டுள்ளார். இந்த ஆணையமே முல்லைப்பெரியாறு அணை தொடர்பான அனைத்து விவகாரங்களையும் கவனிக்கும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது.
இந்தக் குழு அமைக்கப்பட்ட பிறகு முதல் முறையாக முல்லைப்பெரியாறு அணையின் தன்மை குறித்து நாளை (22-ந்தேதி) ஆய்வு செய்ய வருகின்றனர். இந்த நிலையில் குழுவில் இடம் பெற்றுள்ள கேரளாவைச் சேர்ந்த நீர் பாசனம், நிர்வாகத் தலைமை பொறியாளர் பிரியோஸ், நீர் வளத்துறை தலைமை செயலர் விஸ்வாஸ் ஆகிய 2 பேரையும் நீக்கம் செய்ய வலியுறுத்தி இன்று பெரியாறு, வைகை பாசன விவசாய சங்கத்தினர் முற்றுகை போராட்டம் நடத்தப்போவதாக அறிவித்தனர்.
அதன்படி லோயர் கேம்ப்பில் இருந்து தமிழக எல்லையான குமுளியை நோக்கி பேரணியாக சென்று போராட்டம் நடத்த திட்டமிட்டனர். இதனையடுத்து காலை முதலே பல்வேறு பகுதிகளில் இருந்து விவசாயிகள் வரத் தொடங்கினர்.
இது குறித்து பெரியாறு, வைகை பாசன விவசாய சங்க ஒருங்கிணைப்பாளர் அன்வர் பால சிங்கம் தெரிவிக்கையில், முல்லைப்பெரியாறு அணை தேசிய அணைகள் கட்டுப்பாட்டு ஆணைய தலைவர் அனீஸ் ஜெயின் தலைமையில் 7 பேர் கொண்ட குழு ஆய்வு செய்ய வருகிறது.
மத்திய நீர்வளத்துறை கட்டுப்பாட்டில் இருந்த அணை தற்போது தேசிய அணைகள் பாதுகாப்பு ஆணையத்தின் கட்டுப்பாட்டில் உள்ளது.
இந்த குழுவில் உள்ள கேரளாவைச் சேர்ந்த 2 பேரை நீக்க வேண்டும் என தொடர்ந்து எதிர்ப்பு தெரிவித்து வருகிறோம். கேரளாவைச் சேர்ந்த இவர்களால் அணையில் மேற்கொள்ளப்படும் எந்த பராமரிப்பு பணிகளுக்கும் அனுமதி கொடுக்க மாட்டார்கள்.
மேலும் பெரியாறு புலிகள் காப்பகம், கேரள நீர்வளத்துறை, கேரள காவல் துறை ஆகிய 3 துறைகள் இணைந்து தமிழக பொறியாளர்கள் அணையில் பணிகள் செய்ய அனுமதி கொடுப்பதில்லை.
இந்த அணை பாதுகாப்புக்கு மத்திய தொழில் பாதுகாப்பு படை வீரர்களை நியமிக்க வேண்டும் என்பது உள்ளிட்ட 14 அம்ச கோரிக்கைகளை வலியுறுத்தி முற்றுகை போராட்ட பேரணி நடத்தி வருகிறோம் என்றார்.
விவசாயிகள் போராட்ட அறிவிப்பைத் தொடர்ந்து பென்னிகுவிக் நினைவு மணிமண்டபம், லோயர் கேம்ப், குமுளி உள்ளிட்ட பகுதிகளில் அதிக அளவு போலீசார் குவிக்கப்பட்டு இருந்தனர்.
- விதைப்பயிர் நடவு முறை, விதைப்பயிரில் பிற ரக கலவன்கள், பயிர் விலகு தூரம், குறித்தறிவிக்கப்பட்ட நோய்கள் போன்றவற்றையும் ஆய்வு செய்தனர்.
- தரமான வல்லுநர் விதைகளை உற்பத்தி செய்திட தேவையான அனைத்து நடைமுறை களையும் கடைபிடிக்க களப்பணியாளர்களுக்கு அறிவுறுத்தப்பட்டது.
ஈரோடு:
தமிழ்நாடு வேளாண்மை ப்பல்கலைக்கழகம் மற்றும் வேளாண்மை ஆராய்ச்சி நிலையங்கள் ஒவ்வொரு ஆண்டும் உயர் விளைச்சல் தரும் பயிர் ரகங்களை கண்டறிந்து வெளியிட்டு வருகின்றது.
வெளியிடப்பட்ட உயர் விளைச்சல் ரகங்களின் கரு விதைகளைக்கொண்டு கோவை தமிழ்நாடு வேளா ண்மை ப்பல்கலைக்கழகம் மற்றும் வேளாண்மை ஆராய்ச்சி நிலையங்களில் விதைப்பண்ணைகள் அமைத்து வல்லுநர் விதை உற்பத்தி செய்து மாநில அரசு விதைப்பண்ணை களுக்கு விதைபெருக்கம், விவசாயிகளுக்கு சாகுபடி க்காகவும் வழங்கப்பட்டு வருகின்றது.
இவ்வாறு அமைக்கப்படும் விதைப்பண்ணை களை ஆய்வு செய்து வயல் ஆய்வு தரத்தினை துல்லிய மாக கடைபிடித்து தரமான விதைகளை உற்பத்தி செய்வதை உறுதி செய்திடும் பொருட்டு வல்லுநர் விதை உற்பத்தி கண்காணிப்புக்குழு அமைக்கப்பட்டு அவர்கள் விதைப்பயிர் பூப் பருவம், அறுவடைப்பருவம் மற்றும் விதைக்குவியல் விதைசுத்தி ஆகிய நிலைகளில் ஆய்வு செய்து விதைத்தரத்தினை உறுதி செய்கின்றனர்.
இந்நிலையில் நடப்பு பருவத்தில் பவானிசாகர் வேளாண்மை ஆராய்ச்சி நிலையத்தில் நெல் - கோ 51 ரகம் வல்லுநர் நிலை விதை ப்பண்ணை அமைக்க ப்பட்டு விதைப்பயிர் பூப்பரு வத்தில் உள்ளது.
இவ்விதைப்பண்ணையை பவானிசாகர் வேளா ண்மை ஆராய்ச்சி நிலைய பேராசிரியர் மற்றும் தலைவர் சக்திவேல், பேராசிரியர்கள் உத்தராசு, அமுதா, மற்றும் ஈரோடு விதை ச்சான்று மற்றும் அங்கக ச்சான்று உதவி இயக்குநர் மோகன சுந்தரம், விதைச்சான்று அலுவலர்கள் மாரிமுத்து, ராதா அடங்கிய வல்லுநர் விதை உற்பத்தி கண்காணிப்புக்குழு ஆய்வு செய்தது.
ஆய்வின் போது விதை ப்பயிர் நடவு முறை, விதைப்பயிரில் பிற ரக கலவன்கள், பயிர் விலகு தூரம், குறித்த றிவிக்கப்பட்ட நோய்கள் போன்றவற்றையும் ஆய்வு செய்தனர்.
மேலும் தரமான வல்லுநர் விதைகளை உற்பத்தி செய்திட தேவையான அனைத்து நடைமுறை களையும் கடைபிடிக்க களப்பணியாளர்களுக்கு அறிவுறுத்தப்பட்டது.
- விதை உற்பத்தி கண்காணிப்புக்குழுவினர் ஆய்வு செய்தனர்.
- அனைத்து நடைமுறைகளையும் கடைபிடிக்க களப்பணியாளர்களுக்கு அறிவுறுத்தப்பட்டது.
ஈரோடு:
தமிழ்நாடு வேளாண்மை பல்கலைக்கழகம் மற்றும் வேளாண்மை ஆராய்ச்சி நிலையங்கள் ஒவ்வொரு ஆண்டும் உயர் விளைச்சல் தரும் பயிர் ரகங்கள் கண்டறிந்து வெளியிட்டு வருகின்றது.
அவ்வாறு வெளி யிடப்பட்ட உயர் விளைச்சல் ரகங்களின் கருவிதைகளை கொண்டு தமிழ்நாடு வேளாண்மை பல்கலைக்க ழகம், கோவை மற்றும் வேளாண்மை ஆராய்ச்சி நிலையங்களில் விதைப்பண்ணைகள் அமைத்து வல்லுநர் விதை உற்பத்தி செய்து மாநில அரசு விதைப்பண்ணை களுக்கு விதை பெருக்கத்திற்காகவும் விவசாயிகளுக்கு சாகுபடிக்காகவும் வழங்கப்பட்டு வருகின்றது.
இவ்வாறு அமைக்கப்படும் விதைப்பண்ணைகளை ஆய்வு செய்து வயல் ஆய்வு தரத்தினை துல்லியமாக கடைபிடித்து தரமான விதைகளை உற்பத்தி செய்வதை உறுதி செய்திடும் பொருட்டு வல்லுநர் விதை உற்பத்தி கண்காணிப்புக்குழு அமைக்கப்பட்டு இக்குழு வானது விதைப்ப யிர் பூப் பருவம், அறுவடைப்பருவம் மற்றும் விதைக்குவியல், விதைசுத்தி ஆகிய நிலைகளில் ஆய்வு செய்து விதைத் தரத்தினை உறுதி செய்கின்றது.
இந்நிலையில் நடப்பு பருவத்தில் பவானிசாகர் வேளாண்மை ஆராய்ச்சி நிலையத்தில் நிலக்கடலை பி எஸ் ஆர் 2 இரகம் வல்லு நர் நிலை விதை ப்பண்ணை அமை க்கப்பட்டு விதைப்ப யிர் பூப் பருவம் மற்றும் அறு வடை பருவ த்தில் உள்ளது.
இவ்விதைப்ப ண்ணை யை தமிழ்நாடு வேளாண்மைப்பல்கலைக்கழகத்தின் பயிர் இனப்பெ ருக்கம் மற்றும் மரபியல் துறையின் இயக்குநர் ரவிகே சவன்,
பேராசிரியர் குமரேசன், பவானிசாகர் வேளாண்மை ஆராய்ச்சி நிலைய பேராசிரியர் மற்றும் தலைவர் சக்திவேல், பேராசிரியர்கள் உத்தராசு,
அமுதா மற்றும் ஈரோடு விதைச்சான்று மற்றும் அங்ககச்சான்று உதவி இயக்குநர் மோகனசுந்தரம் அடங்கிய வல்லுநர் விதை உற்பத்தி கண்காணிப்புக்குழுவினர் ஆய்வு செய்தனர்.
ஆய்வின்போது விதைப்பயிர் நடவு முறை, விதைப்பயிரில் பிற ரக கலவன்கள், பயிர் விலகு தூரம், குறித்தறிவிக்கப்பட்ட நோய்கள் போன்றவற்றையும் ஆய்வு செய்தனர்.
மேலும் தரமான வல்லுநர் விதைகளை உற்பத்தி செய்திட தேவையான அனைத்து நடைமுறைகளையும் கடை பிடிக்க களப்பணியாளர்களுக்கு அறிவுறுத்தப்பட்டது.
மேலும் பவானிசாகர் வேளாண்மை ஆராய்ச்சி நிலையத்தில் அமைக்கப்பட்டிருந்த பல இட ஆராய்ச்சி திடல்களான நிலக்கடலை, எள், கம்பு, சூரியகாந்தி மற்றும் மக்காச்சோளம் பயிர்களின் செயல்திறன் ஆய்வு செய்யப்பட்டது.
- வல்லுநர் விதை உற்பத்தி கண்காணிப்புக்குழு ஆய்வு செய்தது.
- அனைத்து நடைமுறைகளையும் கடை பிடிக்க களப்பணியாளர்களுக்கு அறிவுறுத்தப்பட்டது.
ஈரோடு:
தமிழ்நாடு வேளாண்மை பல்கலைக்கழகம் மற்றும் வேளாண்மை ஆராய்ச்சி நிலையங்கள் ஒவ்வொரு ஆண்டும் உயர் விளைச்சல் தரும் பயிர் ரகங்களைக் கண்டறிந்து வெளியிட்டு வருகின்றது.
அவ்வாறு வெளியிடப்பட்ட உயர் விளைச்சல் ரகங்களின் கருவிதைகளை கொண்டு தமிழ்நாடு வேளாண்மைப் பல்கலைக்கழகம், கோவை மற்றும் வேளா ண்மை ஆராய்ச்சி நிலையங்க ளில் விதைப்பண்ணைகள் அமைத்து வல்லுநர் விதை உற்பத்தி செய்து மாநில அரசு விதைப் பண்ணை களுக்கு விதை பெருக்கத்தி ற்காகவும் விவசாயிகளுக்கு சாகுபடிக்காகவும் வழங்கப்பட்டு வருகின்றது.
இவ்வாறு அமைக்கப்ப டும் விதைப்பண்ணைகளை ஆய்வு செய்து வயல் ஆய்வு தரத்தினை துல்லியமாக கடைபிடித்து தரமான விதைகளை உற்பத்தி செய்வதை உறுதி செய்திடும் பொருட்டு வல்லுநர் விதை உற்பத்தி கண்காணி ப்புக்குழு அமைக்கப்பட்டு இக்குழுவானது விதைப்ப யிர் பூப்பருவம், அறுவடை ப்பருவம் மற்றும் விதைக்குவியல் விதைசுத்தி ஆகிய நிலைகளில் ஆய்வு செய்து விதை தரத்தினை உறுதி செய்கின்றது.
இந்நிலையில் நடப்பு பருவத்தில் பவானிசாகர் வேளாண்மை ஆராய்ச்சி நிலையத்தில் துவரை கோ (ஆர்ஜி) 7 என்ற ரகத்தில் வல்லுநர் நிலை விதைப் பண்ணை அமைக்கப்பட்டு விதைப்பயிர் பூப்பருவத்தில் உள்ளது.
இந்த ரகமானது 120 முதல் 130 நாட்களில் முதிர்வடையக் கூடிய குறுகிய கால ரகமாகும்.
மேலும் செம்பழுப்பு தானிய நிறம் உடையதாகவும், மானாவாரியில் 950 கிலோ மற்றும் இறவையில் 1200 கிலோ தானிய மகசூல் ஒரு எக்டருக்கு தரவள்ளது.
இவ்விதைப்பண்ணையை பவானிசாகர் வேளாண்மை ஆராய்ச்சி நிலைய பேராசி ரியர் மற்றும் தலைவர் சக்திவேல், உதவி பேராசிரிய ர்கள் ஆனந்தி, உத்தராசு, அமுதா, ஈரோடு விதைச்சா ன்று மற்றும் அங்ககச்சான்று உதவி இயக்குநர் மோகனசு ந்தரம் மற்றும் பவானிசாகர் விதைச்சான்று அலுவலர் ஹேமாவதி ஆகியோர் அடங்கிய வல்லுநர் விதை உற்பத்தி கண்காணிப்புக்குழு ஆய்வு செய்தது.
ஆய்வின்போது விதைப்பயிர் நடவு முறை, விதைப்பயிரில் பிற ரக கலவன்கள், பயிர் விலகு தூரம், குறித்தறிவிக்கப்பட்ட நோய்கள் போன்றவற்றையும் ஆய்வு செய்தனர்.
மேலும் தரமான வல்லுநர் விதை களை உற்பத்தி செய்திட தேவையான அனைத்து நடைமுறைகளையும் கடை பிடிக்க களப்பணியாளர்களுக்கு அறிவுறுத்தப்பட்டது.
- பவானிசாகர் வேளாண்மை ஆராய்ச்சி நிலையத்தில் நெல்-கோ55 ரகத்தில் வல்லுநர் நிலை விதைப்பண்ணை அமைக்கப்பட்டு விதைப்பயிர் பூப்பருவத்தில் உள்ளது.
- மேலும் இந்த ரகமானது 66 சதவீதம் அரவைத்திறன் கொண்டது.
ஈரோடு:
தமிழ்நாடு வேளாண்மை ப்பல்கலைக்கழகம் மற்றும் வேளாண்மை ஆராய்ச்சி நிலையங்கள் ஒவ்வொரு ஆண்டும் உயர் விளைச்சல் தரும் பயிர் ரகங்களை கண்டறிந்து வெளியிட்டு வருகின்றது.
அவ்வாறு வெளியிடப்பட்ட உயர் விளைச்சல் ரகங்களின் கருவிதைகளைக்கொண்டு தமிழ்நாடு வேளாண்மை ப்பல்கலைக்கழகம், கோவை மற்றும் வேளாண்மை ஆராய்ச்சி நிலையங்களில் விதைப் பண்ணைகள் அமைத்து வல்லுநர் விதை உற்பத்தி செய்து மாநில அரசு விதைப்பண்ணைகளுக்கு விதை பெருக்கத்திற்காகவும் விவசாயிகளுக்கு சாகுபடிக்காகவும் வழங்கப்பட்டு வருகின்றது.
இவ்வாறு அமைக்கப்படும் விதைப்பண்ணைகளை ஆய்வு செய்து வயல் ஆய்வு தரத்தினை துல்லியமாக கடைபிடித்து தரமான விதைகளை உற்பத்தி செய்வதை உறுதி செய்திடும் பொருட்டு வல்லுநர் விதை உற்பத்தி கண்காணிப்புக்குழு அமைக்கப்பட்டு இக்குழுவானது விதைப்பயிர் பூப் பருவம், அறுவடைப்பருவம் மற்றும் விதைக்குவியல் விதைசுத்தி ஆகிய நிலைகளில் ஆய்வு செய்து விதைத்தரத்தினை உறுதி செய்கின்றது.
இந்நிலையில் நடப்பு பருவத்தில் பவானிசாகர் வேளாண்மை ஆராய்ச்சி நிலையத்தில் நெல்-கோ55 ரகத்தில் வல்லுநர் நிலை விதைப்பண்ணை அமைக்கப்பட்டு விதைப்பயிர் பூப்பருவத்தில் உள்ளது.
இந்த ரகமானது தமிழ்நாடு வேளாண்மைப்பல்கலைக்கழகத்தால் 2022-ம் ஆண்டு ஆர்என்ஆர் ரகத்திற்க்கு மாற்றாக வெளியிடப்பட்டுள்ளது. 115 நாட்களில் அறுவடைக்கு வரக்கூடிய சன்ன ரகமாகும். ஒரு எக்டருக்கு சராசரியாக 6500 கிலோ தர வல்லது.
மேலும் இந்த ரகமானது 66 சதவீதம் அரவைத்திறன் கொண்டது.
இந்த ரகத்தின் சான்று பெற்ற விதைகள் விரைவில் விவசாயிகளுக்கு வழங்கப்பட உள்ளது. பவானிசாகர் வேளாண்மை ஆராய்ச்சி நிலைய பேராசிரியர் மற்றும் தலைலர் சக்திவேல், பேராசிரியர்கள் உத்தராசு, அமுதா, மற்றும் ஈரோடு விதைச்சான்று மற்றும் அங்ககச்சான்று உதவி இயக்குநர் மோகனசுந்தரம் மற்றும் பவானிசாகர் விதைச்சான்று அலுவலர் மாரிமுத்து அடங்கிய வல்லுநர் விதை உற்பத்தி கண்காணிப்புக்குழு ஆய்வு செய்தது. ஆய்வின் போது விதைப்பயிர் நடவு முறை, விதைப்பயிரில் பிற ரக கலவன்கள் , பயிர் விலகு தூரம், குறித்தறி–விக்கப்பட்ட நோய்கள் போன்றவற்றையும் ஆய்வு செய்தனர்.
மேலும் தரமான வல்லுநர் விதைகளை உற்பத்தி செய்திட தேவை–யான அனைத்து நடைமுறை–களையும் கடைபிடிக்க களப்பணியாளர்களுக்கு அறிவுறுத்தப்பட்டது.