search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "6 நாட்கள்"

    • குமரி கலெக்டர் - போலீஸ் சூப்பிரண்டு உறுதிமொழியை ஏற்றனர்
    • திராவகம் கலந்த குளிர்பானம் விவகாரத்தில் சி.பி.சி.ஐ.டி. போலீசார் விசாரணை தீவிரம்

    கன்னியாகுமரி:

    களியக்காவிளை அருகே உள்ள மெதுகும்மல் நுள்ளிக் காடு பகுதியைச் சேர்ந்தவர் சுனில். இவர் வெளிநாட்டில் வேலை பார்த்து வந்த நிலையில், அவரது மனைவி மற்றும் மகன் அஸ்வின் (வயது 10) ஆகியோர் இங்கு வசித்து வந்தனர்.

    அதங்கோடு பகுதியில் உள்ள ஒரு பள்ளியில் 6-ம் வகுப்பு படித்து வந்த அஸ்வின், கடந்த 24-ந் தேதி பள்ளி முடிந்து வீடு திரும்பிய போது உடல்நலக்குறைவு ஏற்பட்டது. ஆஸ்பத்திரியில் அவனை பரிசோதித்த டாக்டர்கள், திராவகம் கலந்த ஏதோ ஓன்றை குடித்ததால் தான் அஸ்வினுக்கு பாதிப்பு ஏற்பட்டு இருப்பதாக தெரிவித்தனர்.

    இது தொடர்பாக அஸ்வினிடம் கேட்ட போது, பள்ளி முடிந்து வீடு திரும்பும் போது, பள்ளிச் சீருடை அணிந்து வந்த ஓருவர் குளிர்பானம் கொடுத்ததாக கூறினான். அதனை கொடுத்தது யார் என போலீசார் விசாரணை நடத்தி வந்த நிலையில், ஆஸ்பத்திரியில் சிகிச்சை பலனின்றி கடந்த 17-ந் தேதி அஸ்வின் பரிதாபமாக இறந்தான்.

    இதனைத் தொடர்ந்து ஆசாரிபள்ளம் ஆஸ்பத்திரியில் பிரேத பரிசோதனைக்கு பிறகு அஸ்வின் உடலை அவரது பெற்றோரிடம் போலீசார் ஓப்படைத்தனர். ஆனால் அவர்கள் உடலை வாங்க மறுத்தனர். குளிர்பானத்தில் திராவகம் கலந்து கொடுத்த வரை கைது செய்ய வேண்டும். அதுவரை உடலை வாங்க மாட்டோம் என அஸ்வினின் பெற்றோர் மற்றும் உறவினர்கள் போராட்டத்தில் ஈடுபட்டனர்.

    இதற்கிடையில் இந்த வழக்கு சி.பி.சி.ஐ.டி. போலீசாரின் விசாரணைக்கு மாற்றப்பட்டது. அவர்கள் சம்பந்தப்பட்ட பள்ளிக்குச் சென்று விசாரணை நடத்தினர். இந்த நிலையில் மாணவன் அஸ்வினின் பெற்றோர் மற்றும் உறவினர்களை மாவட்ட கலெக்டர், போலீஸ் சூப்பிரண்டு ஆகியோர் நேரில் சந்தித்து பேசினர். குற்றவாளிகள் விரைவில் கைது செய்யப்படுவார்கள் என அவர்கள் உறுதி அளித்தனர்.

    இதனை தொடர்ந்து, உடலை பெற்றுக் கொள்ள அஸ்வினின் பெற்றோர் சம்மதம் தெரிவித்தனர். அதன்பிறகு 6 நாட்களுக்குப் பிறகு நேற்று மாலை அஸ்வின் உடலை உறவினர்கள் பெற்றுக் கொண்டனர்.

    தொடர்ந்து, மெதுகும்மல் பகுதிக்கு உடல் கொண்டு செல்லப்பட்டது. அங்கு இறுதிச்சடங்குக்கு பிறகு அஸ்வின் உடல் அடக்கம் செய்யப்பட்டது.

    ×