என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "கழிவு பொருட்கள்"

    • இறைச்சி கழிவுகள், ஓட்டல் கழிவுகள் மற்றும் பல்வேறு விதமான கழிவுகள் இருப்பது தெரியவந்தது.
    • சோதனை சாவடிகளில் தடுத்து நிறுத்தி கடுமையான நடவடிக்கை எடுக்க வேண்டும்

    அருமனை, 

    அருமனை சுற்றுவட்டார பகுதிகளில் பன்றி பண்ணைகள் இருந்து வருகிறது. இந்நிலையில் பன்றி பண்ணையை அகற்றக்கோரி பொதுமக்கள் பல்வேறு விதமாக போராட்டங்கள் நடத்தி வருகின்றனர். தற்போது கேரளாவிலிருந்து கழிவு பொருட்களை வாகனங்கள் மூலம் கொண்டு வரப்படுகிறது.

    இந்நிலையில் இன்று காலையில் களியல் வழியாக படப்பச்சை பகுதிக்கு பல்வேறு கழிவுகளை ஏற்றி கொண்டுவரப்பட்ட லாரியை பொதுமக்கள் விரட்டி குஞ்சாலுவிளை பகுதியில் வைத்து பிடித்துள்ளனர். லாரி டிரைவர் அங்கிருந்து தப்பியோடி விட்டார். இதுகுறித்து போலீசாருக்கும், அருமனை பேரூராட்சி நிர்வாகத்திற்கும் தகவல் தெரிவிக்கப்பட்டது. போலீசார் சம்பவ இடத்திற்கு விரைந்து வந்து, லாரியை பறிமுதல் செய்தனர். போலீசார் லாரியில் சோதனையிட்ட போது அதில் இறைச்சி கழிவுகள், ஓட்டல் கழிவுகள் மற்றும் பல்வேறு விதமான கழிவுகள் இருப்பது தெரியவந்தது. இது தொடர்பாக போலீசார் தொடர்ந்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

    மேலும் பொதுமக்கள் கூறும்போது, கேரளாவில் இருந்து கழிவுகள் அடிக்கடி கொண்டு வருகின்றனர். இதனை சாலையின் ஓரத்தில் கொட்டி விட்டு வாகனங்கள் செல்கிறது. எனவே மாவட்ட நிர்வாகம் கேரளாவில் இருந்து கழிவு பொருட்களை ஏற்றி வரும் வாகனங்களை சோதனை சாவடிகளில் தடுத்து நிறுத்தி கடுமையான நடவடிக்கை எடுக்க வேண்டும் என கூறினர்.

    • வாகனங்களில் இருந்து கடும் துர்நாற்றம் வீசியது.
    • வாகனங்களை பறிமுதல் செய்த போலீசார், டிரைவர்களை போலீஸ் நிலையத்திற்கு அழைத்து சென்று விசாரணை நடத்தினர்.

    களியக்காவிளை:

    தமிழக-கேரளா எல்லைப்பகுதியான குமரி மாவட்டம் களியக்காவிளை வழியாக தினமும் சுமார் 10 ஆயிரத்திற்கும் மேற்பட்ட வாகனங்கள் தமிழகத்தில் இருந்து கேரள மாநிலத்திற்கும், கேரளாவில் இருந்து தமிழகத்திற்கும் சென்று வருகின்றன.

    கேரளாவில் இருந்து தமிழகத்திற்கு வரும் காலியான சரக்கு வாகன டிரைவர்கள் பணத்திற்கு ஆசைப்பட்டு அந்த மாநிலத்தில் இருந்து புழுக்கள் நெளியும் மீன், கோழி உள்ளிட்ட பல்வேறு கழிவுகளை ஏற்றி வந்து தமிழகத்திற்குள் கொட்டி செல்லும் நிலை கடந்த சில மாதங்களாக அதிகரித்து வருகிறது.

    அதனை கட்டுப்படுத்த அனைத்து சோதனை சாவடிகளிலும் கண்காணிப்பை பலப்படுத்த வேண்டும் என்று மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு சுந்தரவதனம் உத்தரவு பிறப்பித்திருந்தார். இதனைத்தொடர்ந்து அனைத்து சோதனை சாவடிகளிலும் தீவிர சோதனை நடந்து வருகிறது.

    இந்நிலையில் இன்று அதிகாலை களியக்காவிளை போலீஸ் இன்ஸ்பெக்டர் பாலமுருகன் தலைமையில் போலீசார் களியக்காவிளை பகுதியில் ரோந்து பணியில் ஈடுபட்டிருந்தனர். அப்போது கேரளாவில் இருந்து ஒரு மினி டெம்போ மற்றும் செப்டிக் டேங்க் கழிவுகள் கொண்டு செல்லும் (மனித கழிவு) வாகனம் வேகமாக வந்தது.

    அந்த வாகனங்களில் இருந்து கடும் துர்நாற்றம் வீசியது. இதனால் சந்தேகமடைந்த போலீசார் அதனை மடக்கி பிடித்தனர். பின்னர் அந்த வாகனங்களை சோதனை செய்தபோது அதில் ஒரு வாகனத்தில் கோழி கழிவுகளும், மற்றொரு வாகனத்தில் செப்டிக் டேங்க் கழிவுகள் இருந்ததும் கண்டுபிடிக்கப்பட்டது.

    இதையடுத்து அந்த வாகனங்களின் டிரைவர்களிடம் போலீசார் விசாரணை நடத்தினர். விசாரணையில் அவர்கள் தென்காசி மாவட்டம் ஆலங்குளத்தை சேர்ந்த மணிகண்ட தேவா மற்றும் நெல்லை மாவட்டத்தை சேர்ந்த வள்ளி முருகன் என்பது தெரியவந்தது. இந்த கோழி மற்றும் செப்டிக் டேங்க் கழிவுகளை கேரள மாநிலத்தில் இருந்து எடுத்து நெல்லை மாவட்டத்தில் கொட்ட கொண்டு சென்றது தெரியவந்தது.

    இதைத்தொடர்ந்து அந்த வாகனங்களை பறிமுதல் செய்த போலீசார், டிரைவர்களை போலீஸ் நிலையத்திற்கு அழைத்து சென்று விசாரணை நடத்தினர். பின்னர் இரு வாகனங்களின் டிரைவர்கள் 2 பேர் மீதும், வாகனங்கள் மீதும் வழக்குப்பதிவு செய்தனர். மேலும் வாகனங்களின் உரிமையாளர்கள் குறித்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

    மேலும் கேரளாவில் இருந்து குமரிக்கு மறைமுகமாக வாகனங்களில் தொடர்ச்சியாக கழிவுகள் வந்த வண்ணம் இருப்பதால் குமரி மாவட்டம் குப்பை கூடமாக மாறிவிட வாய்ப்புள்ளது. எனவே இதற்கு முற்றுப்புள்ளி வைக்கும் விதமாக கேரளாவில் இருந்து கோழி உள்ளிட்ட கழிவு பொருட்களை குமரி மாவட்டத்திற்குள் கொண்டு வந்து கைதானவர்கள் மீது குண்டர் சட்டத்தில் நடவடிக்கை எடுக்கப்படும் என குமரி மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு சுந்தரவதனம் எச்சரிக்கை விடுத்துள்ளார்.

    நெல்லை மாவட்டம் சுத்தமல்லி அருகே கடந்த சில நாட்களுக்கு முன்பு டன் கணக்கில் கேரளா மருத்துவ கழிவுகள் கொட்டப்பட்டன. இதனை உடனடியாக கேரளா அதிகாரிகள் அகற்ற வேண்டும் என பசுமை தீர்ப்பாயம் உத்தரவிட்டது. இதையடுத்து அங்கு கேரளா அதிகாரிகள் மருத்துவ கழிவுகளை கேரளாவுக்கு கொண்டு செல்லும் நடவடிக்கையில் ஈடுபட்டுள்ளனர். இந்நிலையில் இன்று கேரளா கழிவு பொருட்களை ஏற்றி கொண்டு குமரி மாவட்டத்தில் கொட்ட வந்த 2 வாகனங்கள் சிக்கிய சம்பவம் அப்பகுதியில் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது. 

    • டெம்போ மாநகராட்சி அலுவலகத்திற்கு கொண்டு வரப்பட்டது.
    • மாநகராட்சி அதிரடி நடவடிக்கை

    நாகர்கோவில்:

    நாகர்கோவில் மாநகரப் பகுதியில் சுகாதாரத்தை பேணிக்காக்க பல்வேறு நடவடிக்கைகள் மாநகராட்சி சார்பில் மேற்கொள்ள ப்பட்டு வருகிறது.

    இந்த நிலையில் தெங்கம் புதூர் பகுதியில் மினி டெம்போவில் கழிவு பொருட்கள் ஏற்றி கொண்டு வரப்பட்டதாக மாநகராட்சி அதிகாரிகளுக்கு தகவல் கிடைத்தது.

    அதன் பேரில் மாநகராட்சி சுகாதார ஆய்வாளர் ராஜா தலைமையிலான குழுவினர் அங்கு விரைந்து சென்று டெம்போவை பிடித்தனர். பின்னர் டெம்போ மாநகராட்சி அலுவல கத்திற்கு கொண்டு வரப்ப ட்டது. தொடர்ந்து டெம்போ உரிமையாளருக்கு ரூ.50 ஆயிரம் அபராதம் விதிக்க ப்பட்டது.

    ×