search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "சிறப்பு வார்டு"

    • தேவையான முன்னேற்பாடுகள் செய்யப்பட்டுள்ளன.
    • மதுரை, திருச்சி, கோவை ஆகிய நகரங்களில் சிறப்பு வார்டுகள்.

    சென்னை:

    சென்னை ராஜீவ் காந்தி அரசு ஆஸ்பத்திரியில் குரங்கம்மை நோய்க்கான சிறப்பு சிகிச்சை வார்டுகளை அமைச்சர் மா.சுப்பிரமணியன் இன்று பார்வையிட்டார். பின்னர் அவர் கூறியதாவது:-

    ஆப்பிரிக்க நாடுகளில் பரவி வரும் குரங்கம்மை நோய் இங்கும் பரவி விடாமல் தடுக்க தேவையான முன்னேற்பாடுகள் செய்யப்பட்டுள்ளன.

    ஆப்பிரிக்க நாடுகளில் இருந்து வரும் விமானப் பயணிகள் தீவிரமாக கண்காணிக்கப்படுகிறார்கள். இதுவரை யாருக்கும் இந்த தொற்று இல்லை. தொடர்ந்து விமான நிலையங்களில் கண்காணித்து வருகிறார்கள்.

    குரங்கம்மை அறிகுறியுடன் யாராவது வந்தால் அவர்களை தனிமைப்படுத்தி சிகிச்சை அளிப்பதற்காக சென்னை, மதுரை, திருச்சி, கோவை ஆகிய 4 நகரங்களில் உள்ள அரசு மருத்துவக்கல்லூரி மருத்துவமனைகளில் சிறப்பு வார்டுகள் அமைக்கப்பட்டுள்ளது.

    10 படுக்கைகளுடன் தொற்று நோயை தகுந்த பாதுகாப்புடன் சிகிச்சை அளிப்பதற்கான வசதிகளுடன் இந்த வார்டுகள் அமைக்கப்பட்டு உள்ளது. தமிழகத்தில் டெங்கு காய்ச்சல் கட்டுக்குள் உள்ளது. உயிரிழப்புகள் கடந்த 3 ஆண்டுகளை விட குறைந்து உள்ளது.

    இந்த ஆண்டு தனியார் மருத்துவமனைகளிலும் காய்ச்சலுக்காக சிகிச்சை பெறுபவர்களை கண்காணித்து வருகிறோம்.

    இவ்வாறு அவர் கூறினார்.

    • வெயிலின் தாக்கம் அதிகமாக இருப்பதால் வெப்ப அயர்ச்சி (ஹீட் ஸ்ட்ரோக்) ஏற்பட்டு உயிருக்கு ஆபத்து ஏற்பட அதிக வாய்ப்பு உள்ளது.
    • காரைக்கால் பகுதிகளில் இதுவரை மது போதையில் வெயில் மயக்கத்துடன் 6 பேர் சுருண்டு விழுந்து பலியாகி உள்ளனர்.

    புதுச்சேரி:

    புதுச்சேரி முழுவதும் கோடை வெயில் தாக்கம் நாளுக்கு நாள் அதிகரித்து வருகிறது. தற்போது கத்திரி வெயில் கொளுத்தி வருகிறது.

    புதுச்சேரியில் நேற்று 96.1 டிகிரி வெயில் பதிவானது. புதுச்சேரி, காரைக்கால் பகுதிகளில் வருகிற 10-ந் தேதி வரை 96.8 டிகிரி முதல் 100 டிகிரி வரை வெப்பம் பதிவாகும் என்று வானிலை ஆய்வு மையம் எச்சரிக்கை விடுத்துள்ளது.

    வெயிலின் தாக்கம் அதிகமாக இருப்பதால் வெப்ப அயர்ச்சி (ஹீட் ஸ்ட்ரோக்) ஏற்பட்டு உயிருக்கு ஆபத்து ஏற்பட அதிக வாய்ப்பு உள்ளது.

    இவ்வாறு பாதிக்கப்படுபவர்களுக்கு உடனடியாக முதலுதவி செய்யாவிட்டால் உயிருக்கு ஆபத்து நேரலாம்.

    இந்த நிலையில் வெயிலின் தாக்கத்தில் இருந்து தப்பித்துக் கொள்ள பகல் நேரங்களில் பொதுமக்கள் தங்கள் வீடுகளுக்குள்ளேயே முடங்கி கிடக்கின்றனர்.

    புதுவை, காரைக்கால் பகுதிகளில் இதுவரை மது போதையில் வெயில் மயக்கத்துடன் 6 பேர் சுருண்டு விழுந்து பலியாகி உள்ளனர்.

    புதுவையில் வெயிலின் தாக்கத்தில் மயக்கம் அடைப வர்களுக்கு சிகிச்சை அளிக்க புதுச்சேரி அரசு ஆஸ்பத்திரிகளில் அனைத்து மருத்துவ வசதிகளுடன் கூடிய சிறப்பு வார்டுகள் அமைக்கப்பட்டுள்ளன.

    இது குறித்து புதுச்சேரி சுகாதாரத் துறை இயக்குனர் ஸ்ரீராமுலு கூறியதாவது:-

    புதுவை மாநிலத்தில் வெப்பத்தின் தாக்கம் நாளுக்கு நாள் அதிகரித்து வருகிறது. இது மேலும் அதிகரிக்கும் என்று வானிலை ஆய்வு மையம் எச்சரிக்கை விடுத்துள்ளது. பாதிக்கப்படுவோருக்கு சிகிச்சை அளிக்க தற்போது கதிர் காமம் அரசு மருத்துவக்கல்லூரி ஆஸ்பத்திரியில் 5 படுக்கைகள் கொண்ட வார்டும், ராஜீவ்காந்தி மகளிர் மற்றும் குழந்தைகள் மருத்துவமனையில் 5 படுக்கைகள் கொண்ட வார்டும், அரசு பொது மருத்துவமனையில் 2 படுக்கைகள் கொண்ட வார்டும் அமைக்கப்பட்டுள்ளது.

    இங்கு அனைத்து மருத்துவ வசதிகளும் தயார் நிலையில் உள்ளது. போதுமான மருந்துகள் கையிருப்பு வைக்கப்பட்டுள்ளது. 24 மணி நேரமும் டாக்டர்கள் மற்றும் நர்சுகள் அங்கு பணியில் இருப்பார்கள்.

    வெப்ப அயர்ச்சியால் பொதுமக்கள் யாரும் பாதிக்கப்பட்டால் உடனடியாக அரசு ஆஸ்பத்திரிக்கு அவர்களை சிகிச்சைக்கு கொண்டு வந்து சேர்க்கலாம்.

    இவ்வாறு அவர் கூறினார். 

    • கோவை அரசு ஆஸ்பத்திரியில் ஏற்படுத்தப்படுகிறது.
    • 10 டாக்டர்கள் அடங்கிய மருத்துவக் குழு அமைக்கப்பட்டுள்ளது.

    கோவை,

    தமிழகம் முழுவதும் தீபாவளி பண்டிகை நாளை கோலாகலமாக கொண்டாடப்படவுள்ளது. தீபாவளி பண்டிகையின் போது பட்டாசுகள் வெடித்து பொது மக்கள் மகிழ்ச்சியை வெளிப்படுத்துகின்றனர்.

    பட்டாசுகளை வெடிப்பதில் வாலிபர்கள் பலர் சாகசத்தில் ஈடுபடுவது வழக்கம். இது போன்ற சாகசங்கள் சில நேரங்களில் விபத்துக்கு வழிவகுக்கிறது. ஒருசில நேரங்களில் பாதுகாப்பான முறையில் பட்டாசுகள் வெடிக்கும் போது விபத்து ஏற்படுகிறது.

    இந்நிலையில் தீபாவளி பண்டிகையின் போது பாட்டாசு வெடித்து விபத்து ஏற்பட்டால் பாதிக்கப்படுபவர்களுக்கு சிகிச்சை அளிக்கும் விதமாக அரசு ஆஸ்பத்திரியில் 40 படுக்கைகளுடன் கூடிய சிறப்பு பிரிவு ஏற்படுத்தப்பட்டுள்ளது.

    இதுகுறித்து அரசு ஆஸ்பத்திரி டீன் நிர்மலா கூறியதாவது:-

    ஆண்டுதோறும் தீபாவளி பண்டிகையின் போது பட்டாசு விபத்தில் பாதிக்கப்படுபவர்களுக்கு சிகிச்சை அளிப்பதற்காக அரசு ஆஸ்பத்திரியில் சிறப்பு வார்டு ஏற்படுத்தப்படுகிறது. அதன்படி இந்த ஆண்டும் 40 படுக்கைகளுடன் கூடிய சிறப்பு பிரிவு ஏற்படுத்தப்பட்டுள்ளது.

    இதில் 24 மணி நேரமும் பணியாற்றும் வகையில் 10 டாக்டர்கள் அடங்கிய மருத்துவக் குழு அமைக்கப்பட்டுள்ளது. மேலும் தீ விபத்தில் பாதிக்கப்பட்டவர்களுக்கு சிகிச்சை அளிப்பதற்கான அனைத்து மருந்துகளும் தயார் நிலையில் வைக்கப்பட்டுள்ளன.

    எனவே, பட்டாசு வெடிப்பின் போது ஏற்படும் தீ விபத்தில் பாதிக்கப்படுபவர்களை சிறிதும் தாமதிக்காமல் அரசு ஆஸ்பத்திரியில் சேர்த்து சிகிச்சை அளிக்க வேண்டும். பொது மக்கள், வாலிபர்கள் அனைவரும் விபத்தில்லாத வகையில் பாதுகாப்பான முறையில் தீபாவளியை கொண்டாட வேண்டும்.

    இவ்வாறு அவர் தெரிவித்தார்.

    ×