என் மலர்
நீங்கள் தேடியது "பட்டாசுக்கு தடை"
- அடுத்த ஆண்டு முதல் கர்நாடகா முழுவதும் பட்டாசுக்கு தடை விதிக்கப்படும் என்று கர்நாடக உள்துறை அமைச்சர் தெரிவித்தார்.
- இந்த விபத்தில் உயிரிழந்தவர்களின் குடும்பங்களுக்கு, கர்நாடக அரசு தலா ரூ. 5 லட்சம் தருவதாக உறுதியளித்தது.
ஓசூர் அருகே கர்நாடக மாநில எல்லையான அத்திப் பள்ளியில் நவீன் என்பவருக்கு சொந்தமான பட்டாசு கடையில் கடந்த 7-ந் தேதி நடந்த வெடிவிபத்தில் 14 பேர் சம்பவத்தன்றும், மேலும், ஆஸ்பத்திரியில் சிகிச்சை பெற்று வந்த 3 பேர் என இதுவரை 17 பேர் உயிரிழந்துள்ளனர்.
இந்த நிலையில், வெடி விபத்து நிகழ்ந்த பகுதியை, கர்நாடக உள்துறை மந்திரி ஜி.பரமேஸ்வரா, நேற்று நேரில் பார்வையிட்டு ஆய்வு செய்தார்.
மேலும் முழு விபரங்கள் குறித்து அதிகாரிகள் மற்றும் காவல் துறை அதிகாரிகளிடம் கேட்டறிந்தார்.
பின்னர் நிருபர்களுக்கு பேட்டியளித்த பரமேஸ்வரா, "பட்டாசு கடை தீ விபத்தில் இன்றுடன் 17 பேர் உயிரிழந்துள்ளனர். இந்த துயர சம்பவம், பாடம் கற்றுத் தந்துள்ளது. இந்தாண்டு, தீபாவளி பண்டிகையின் போது, பெங்களூருவில் பட்டாசுக்கு தடை விதிக்க ஆலோசிக்கப்பட்டுள்ளது. மேலும் அடுத்த ஆண்டு முதல், டெல்லியைப் போன்று, கர்நாடக மாநிலம் முழுவதும் அனைத்து ரக பட்டாசுகளுக்கும் தடைவிதிக்கப்படும்.
இந்த விபத்தில் உயிரிழந்தவர்களின் குடும்பங்களுக்கு, கர்நாடக அரசு தலா ரூ. 5 லட்சம் தருவதாக உறுதியளித்தது. அந்த தொகை விரைவில் வழங்கப்படும். விபத்து நடந்த பட்டாசு கடையின் உரிமம் கடந்த 2022-ஆம் ஆண்டு, லைசென்ஸ் தேதி காலாவதியானதாகவும் தெரிய வந்துள்ளது. மேலும் அதன் உரிமையாளர் நவீன் என்பவர் போலியான சான்றுகளை வைத்து பட்டாசு கடை நடத்தி வந்தது ஆய்வில் தெரியவந்துள்ளது. இவ்வாறு அவர் நிருபர்களிடம் கூறினார். இந்த ஆய்வின்போது, தீயணைப்பு துறை ஏடிஜிபி கமல்நாத், ஐஜிபி ரவி காந்தே கவுடா, டி.ஐ.ஜி.ரவி சென்னன்னா,பெங்களூருரூரல் கூடுதல் போலீஸ் சூப்பிரண்டு புருசோத்தம், ஆனேக்கல் துணை போலீஸ் சூப்பிரண்டு மோகன் குமார், அத்திப்பள்ளி சர்க்கிள் இன்ஸ்பெக்டர் ராகவேந்திரா கவுடா, சப் இன்ஸ்பெக்டர் நாராயண் ராவ், ஆகியோர் உடன் இருந்தனர்.
- கெஜ்ரிவால் குஜராத்திற்கு வந்தால் பிறகு எப்படி நீங்கள் பட்டாசு வெடிப்பீர்கள்?
- பண்டிகை கொண்டாடுவதைத் தடுப்பவர்களை அடையாளம் கண்டு கொள்ள வேண்டும்.
ராஜ்கோட்:
தேசிய தலைநகரான டெல்லியில் பசுமைப் பட்டாசு உள்பட அனைத்து வகை பட்டாசுகளின் உற்பத்தி விற்பனை மற்றும் பயன்பாட்டிற்கு கெஜ்ரிவால் தலைமையிலான ஆம் ஆத்மி அரசு மீண்டும் கடந்த மாதம் தடை விதித்தது. டெல்லியில் இன்று தீபாவளியையொட்டி பட்டாசு வெடித்தால் 6 மாதம் வரை சிறைத் தண்டனையும் 200 ரூபாய் அபராதமும் விதிக்கப்படும் என டெல்லி சுற்றுச்சூழல் அமைச்சர் கோபால்ராய் அண்மையில் அறிவித்தார்.
பட்டாசுகளை சேமித்தல் மற்றும் விற்பனை செய்தால் ரூ. 5,000 வரை அபராதம் மற்றும் வெடிபொருள் சட்டத்தின் கீழ் மூன்று ஆண்டுகள் சிறைத்தண்டனை விதிக்கப்படும் என்றும் அவர் குறிப்பிட்டிருந்தார். இந்நிலையில், குஜராத் மாநிலம் ராஜ்கோட்டில் நடைபெற்ற தீபாவளி கொண்டாட்ட நிகழ்ச்சியில் கலந்து கொண்டு பேசிய அம்மாநில பாஜக தலைவர் சி.ஆர்.பாட்டீல், கூறியதாவது:
டெல்லி முதல்வர், டெல்லியில் பட்டாசு வெடிக்க தடை விதித்ததாக செய்திகளைப் படித்தேன். அந்த சகோதரர் இங்கு (குஜராத்) நடைபெறும் தேர்தலுக்கு வர முயற்சிக்கிறார். பிறகு எப்படி நீங்கள் பட்டாசு வெடிப்பீர்கள்? எனவே பட்டாசு வெடித்து எங்கள் பண்டிகைகளை கொண்டாடுவதைத் தடுப்பவர்களை நீங்கள் அடையாளம் கண்டு கொள்ள வேண்டும். இவ்வாறு அவர் தெரிவித்துள்ளார்.
முன்னதாக தீபாவளியன்று மட்டும் டெல்லியில் மக்கள் இரண்டு முதல் மூன்று மணி நேரம் பட்டாசு வெடிக்க முதல்வர் கெஜ்ரிவால் அனுமதிக்க வேண்டும் என்று பாஜக எம்பி மனோஜ் திவாரி கோரிக்கை விடுத்திருந்தது குறிப்பிடத்தக்கது.