என் மலர்
நீங்கள் தேடியது "வெள்ளநீர்"
- கிருதுமால் நதியில் தண்ணீர் திறக்கப்பட்ட நிலையில் தற்போது ஆற்றில் நீர்வரத்து அதிகமாக வந்து கொண்டிருக்கிறது.
- கரைபுரண்டு ஓடி வரும் வைகை தண்ணீர் திடீரென அருகிலுள்ள உலக்குடி காலனி குடியிருப்புகளுக்குள் தண்ணீர் புகுந்தது.
திருச்சுழி:
விருதுநகர் மாவட்டம் நரிக்குடி ஒன்றியம் உலக்குடி காலனி பகுதியில் சுமார் 150-க்கும் மேற்பட்ட குடும்பத்தினர் வசித்து வருகின்றனர். இந்த நிலையில் கடந்த சில வாரங்களாக வைகை அணையிலிருந்து குடிநீர் தேவைக்காக கிருதுமால் நதியில் தண்ணீர் திறக்கப்பட்ட நிலையில் தற்போது ஆற்றில் நீர்வரத்து அதிகமாக வந்து கொண்டிருக்கிறது.
வைகை அணையில் திறக்கப்பட்ட தண்ணீர் விரகனூர் அணைக்கட்டு வழியாக அத்திகுளம் அணையை வந்தடைந்து பின்னர் அங்கிருந்து கிருதுமால் ஆற்றின் வழியாக உலக்குடி மற்றும் மானூர் கண்மாய்களை சென்றடைகிறது.
உலக்குடி காலனி குடியிருப்பை ஒட்டியே கிருதுமால் ஆற்று குறுகிய கால்வாய் செல்வதாலும், அப்பகுதியில் பல ஆண்டுகளாக தடுப்புச் சுவர் இல்லாததாலும், கரைபுரண்டு ஓடி வரும் வைகை தண்ணீர் திடீரென அருகிலுள்ள உலக்குடி காலனி குடியிருப்புகளுக்குள் தண்ணீர் புகுந்தது. இதனால் குடியிருப்புவாசிகள் கடும் சிரமத்திற்கு ஆளாகினர்.
இந்த நிலையில் காலனி குடியிருப்பை சேர்ந்த பொதுமக்களின் பலரது வீடுகளை கிருதுமால் ஆற்று தண்ணீர் சூழ்ந்துள்ளதால் அவர்கள் தங்கள் வீட்டிற்குள் குடியிருக்க முடியாமல் வெளியேறி உள்ளனர்.
எனவே உலக்குடி-மானூர் செல்லும் கால்வாயை ஒட்டியுள்ள உலக்குடி காலனி குடியிருப்பு பகுதியில் கிருதுமால் ஆற்று கால்வாயில் விரைவில் சுற்றுச்சுவர் அமைக்க நடவடிக்கை எடுக்க வேண்டுமெனவும், தண்ணீரால் பாதிக்கப்பட்டு வீடுகளை இழந்து வாழ்வாதாரமின்றி தவித்து வரும் காலனி குடியிருப்பு பொதுமக்களுக்கு உரிய நிவாரணமாக இழப்பீடு தொகையும் வழங்க வேண்டுமென தமிழக அரசுக்கும், மாவட்ட கலெக்டருக்கும் வேண்டுகோள் விடுத்துள்ளனர்.
- ஆதித்த சோழன் காலத்தில் கட்டப்பட்டு, 1,600 ஆண்டுகள் பழமையானது.
- கொள்ளிடம் ஆற்றில் ஏற்பட்ட வெள்ளப் பெருக்கால் கோவில் கருவறை வரை தண்ணீர் சூழ்ந்துள்ளது.
திருமழபாடி:
அரியலூர் மாவட்டம், திருமானூர் ஒன்றியத்துக்கு உட்பட்ட திருமழபாடியில் உள்ள வைத்தியநாத சுவாமி கோவில் ஆதித்த சோழன் காலத்தில் கட்டப்பட்டது. 1,600 ஆண்டுகள் பழமையான இந்த கோவில் குறித்த தகவல் அண்மையில் வெளியான பொன்னியின் செல்வன் திரைப்படத்தில் இடம் பெற்றுள்ளது. இக்கோவிலில் நடைபெறும் நந்திய பெருமான் திருக்கல்யாணம் மிகவும் பிரசித்தி பெற்றது.
இந்நிலையில் கொள்ளிடம் ஆற்றில் தற்போது ஏற்பட்டுள்ள வெள்ளப் பெருக்கின் காரணமாக அதன் கரையில் உள்ள இந்த கோவிலுக்குள் ஊற்று நீர் புகுந்தது. இதைத் தொடர்ந்து சுவாமி கருவறை வரை தண்ணீர் சூழ்ந்துள்ளது. கோவிலுக்கு வரும் பக்தர்களின் இதனால் மிகுந்த அவதியடைந்துள்ளனர்.
பொன்னியின் செல்வன் திரைப்படம் வெளியான பின்னர் இந்த கோவிலுக்கு தற்போது அதிக அளவில் சுற்றுலா பயணிகள் வரும் நிலையில்,கோவிலின் உள்ளே தேங்கி உள்ள நீரை மோட்டார் மூலம் வெளியேற்ற வேண்டும் என்று அரசுக்கு, பக்தர்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.