என் மலர்
நீங்கள் தேடியது "சூரிய கிரகணத்தால்"
- சென்னிமலை முருகன் கோவிலில் இன்று, அமாவசை தினத்தில் ஏரளாமான பக்தர்கள் வருகை தந்து சாமி தரிசனம் செய்தனர்.
- சூரிய கிரகணத்தை யொட்டி இன்று மதியம் 1 மணிக்கு அனைத்து கோவில்களின் நடை அடைக்கப்பட்டது.
ஈரோடு:
சென்னிமலை முருகன் கோவிலில் இன்று, அம்மாவசை தினத்தில் ஏரளாமான பக்தர்கள் வருகை தந்து சாமி தரிசனம் செய்தனர்.
இன்று அமாவசை நாளில் தீபாவளி பண்டிகை விடுமுறை, செவ்வாய்கிழமையும் ஒருங்கிணைந்து வந்ததால் சென்னிமலை முருகன் கோவிலில் அதிகாலை 5.30 மணி முதலே கூட்டம் அதிகமாக இருந்தது. இதைத்தொடர்ந்து மதியத்துக்கு மேல் நடை சாத்தப்பட்டது,
இதே போல் சத்திய மங்கலம் அடுத்த பண்ணாரி யம்மன் கோவிலில் அமா வாசையை யொட்டி இன்று ஏராள மான பக்தர்கள் வந்து சாமி தரிசனம் செய்தனர்.
இதையொட்டி இன்று அதிகாலை அம்மனுக்கு சிறப்பு அபிஷேகம் செய்ய ப்பட்டது. தொடர்ந்து ஈரோடு மாவட்ட பக்தர்கள் மட்டுமின்றி கர்நாடகா மாநில பக்தர்களும் அதிகளவு வந்து சாமி தரிசனம் செய்தனர்.
சூரிய கிரகணத்தை யொட்டி இன்று மதியம் 1 மணி கோவில் நடை சாத்த ப்பட்டது. இதே போல் ஈரோடு பெரிய மாரியம்மன், சத்திய மங்கலம் தண்டு மாரியம்மன், கோபிசெட்டிபாளையம் சாரதா மாரியம்மன், பாரியூர் கொண்டத்து காளியம்மன் அந்தியூர் பக்தர காளியம்மன் கோவில் உள் அனைத்து கோவில் களிலும் ஏராளமாக பக்தர்கள் சாமி தரிசனம் செய்தனர்.
தொடர்ந்து சூரிய கிரகணத்தை யொட்டி இன்று மதியம் 1 மணிக்கு அனைத்து கோவில்களின் நடை அடைக்கப்பட்டது.