என் மலர்
நீங்கள் தேடியது "போக்குவரத்து போலீஸ்காரர்"
- 100 மீட்டர் அளவிற்கு கம்பிகள் இழுத்து கட்டினார்.
- மக்கள் செல்வதற்கான நடைபாதை அமைக்கப்பட்டு உள்ளது.
அரவேணு,
கோத்தகிரி மக்கள் கூடும் பகுதியாகவும், பள்ளி வளாகமும், மார்க்கெட் பகுதியும் அமைந்துள்ளது. இங்கு அதிகப்படியான வாகன நெரிசலும், மக்கள் நடமாட்டம் அதிகளவில் காணப்படும். எனவே அங்கு மக்கள் செல்வதற்கான நடைபாதை அமைக்கப்பட்டு உள்ளது.அந்த பகுதியில் வாகனங்கள் எதுவும் நிறுத்தப்படாமல் இருப்பதற்காக கம்பிகள் கட்டப்பட்டு தடுப்புகள் அமைக்கப்பட்டு உள்ளது. அவை அனைத்தும் அறுந்து கீழே தொங்கி கொண்டு இருந்தது. இதனை பார்த்த போக்குவரத்து போலீஸ்காரர் ராஜேந்திரன் என்பவர் தொங்கி கிடந்த அனைத்து கம்பிகளையும் ஒழுங்குபடுத்தி இழுத்து கட்டினார். சுமார் 100 மீட்டர் அளவிற்கு கம்பிகள் இழுத்து கட்டினார்.இதை அந்த வழியாக சாலையில் சென்ற மக்கள் அவரை பாராட்டினர்.