search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "கிருஷ்ணா"

    • குழந்தைகளின் பாத வடிவ சுவடு பார்ப்பதற்கு எட்டு (8) போன்ற வடிவுடன் இருக்கும்.
    • அதற்கு மேல் 5 விரல் பதிவுகள் இருக்கும்.

    கிருஷ்ணர் ஆயர்பாடி பெண்கள் வைத்துள்ள வெண்ணையை திருடும்போது வெண்ணை கீழே சிந்தி அதில் அவன் பாதங்கள் பதிந்து வீடு முழுவதும் கண்ணன் வந்து போனதற்கான கால் தடங்கள் இருக்கும்.

    இதை வைத்தே கண்ணன் வெண்ணை திருடியிருக்கிறான் என்பதை அறிந்து கொள்வார்களாம்.

    இருப்பினும், கோபப்பட மாட்டார்கள்.

    கண்ணன் வந்து போனால் அவர்கள் வீட்டு பசுக்கள் நிறைய பால் சொறியும்.

    செல்வம் பொங்கும் என்பது அவர்களது நம்பிக்கை.

    இந்த தாத்பரியத்திற்காகவே நம் முன்னோர்கள் கிருஷ்ண ஜெயந்தி தினத்தன்று தங்கள் வீடுகளில் வெண்ணையினால் கண்ணன் பாதங்கள் போடுவதை வழக்கமாக கொண்டனர்.

    கிருஷ்ண ஜெயந்தியன்று குழந்தை பாத சுவட்டை மாக்கோலமாக வரைவது நாடெங்கும் எல்லா இடங்களிலும் மரபுவழி பழக்கமாக உள்ளது.

    இப்படி பாதம் வரைவதில் சைவ வைணவ ஒற்றுமை இருப்பதாக சொல்கிறார்கள்.

    குழந்தைகளின் பாத வடிவ சுவடு பார்ப்பதற்கு எட்டு (8) போன்ற வடிவுடன் இருக்கும்.

    அதற்கு மேல் 5 விரல் பதிவுகள் இருக்கும்.

    அதாவது ஓம் "நமோ நாராயணா" என்ற எட்டு எழுத்து மந்திரமும் "நமசிவாய" என்ற ஐந்தெழுத்து மந்திரமும் ஒருங்கிணைந்து இருப்பதை திருப்பாதம் பிரதிபலிக்கிறது.

    16,108 ராணிகளுடன் துவாரகையில் கண்ணன் அரசாட்சி செய்தான்.

    அப்போது நாரத முனிவர், அரசிகள் ஒவ்வொருவரின் வீட்டுக்கும் சென்றபோது எல்லோர் இல்லத்திலும் கண்ணன் இருப்பதைக் கண்டு அதிசயித்தார்.

    அதேபோல் பிருந்தாவனத்தில் நடந்த "ராஸ லீலை'யிலும் ஒவ்வொரு கோபிகைக்கும் ஒவ்வொரு கண்ணன் கூட இருந்து ஆடிப் பாடினார். இந்தக் காட்சியை சிவபெருமானே தரிசித்து ஆனந்தப்பட்டிருக்கிறார்.

    "இப்படி ஒரே நேரத்தில் பல்லாயிரம் இடங்களில் இருக்க வல்ல மகிமை வாய்ந்த தெய்வக் குழந்தை கண்ணன்' என்பதைக் குறிப்பிடவே ஒவ்வொருவர் வீட்டிலும் கிருஷ்ண ஜெயந்தியன்று "திருவடிக் கோலம்' இடப்படுகிறது. அன்று எல்லோர் இல்லத்திலும் ஒரே நேரத்தில் "கிருஷ்ணரின் அருளாட்சி' இருக்கும்.

    அதாவது கண்ணனின் அருட்சக்தி அங்கே கொலு வீற்றிருக்கும்.

    • கண்ணன் அந்த ஆடைகளை எல்லாம் எடுத்துக் கொண்டு அருகில் இருந்த மரத்தின் மேல் ஏறிக் கொண்டான்.
    • பின்னர் அம்மனங்களைத் தனது தெய்வீகச் சக்தியால் நிரப்பி விடுவார்.

    ஆயர்பாடியில் உள்ள கோபியர் கண்ணபிரானிடம் கொண்ட வேட்கை மிகுதியால் அவன் தம்மைக் காதலிக்க வேண்டி நோன்பு நோற்றனர்.

    முடிவில் யமுனையில் நீராடச் சென்றனர். அங்கே அவர்கள் சேலைகளைக் கரையில் வைத்து விட்டு நீராடினர்.

    கண்ணன் அந்த ஆடைகளை எல்லாம் எடுத்துக் கொண்டு அருகில் இருந்த மரத்தின் மேல் ஏறிக் கொண்டான்.

    சிறிது நேரம் அவர்களை அலைக்கழித்தான்.

    பின்பு அவர்கள் கைகூப்பி வணங்கிக் கேட்க, ஆடைகளைத் திருப்பி கொடுத்தான்.

    ஸ்ரீகிருஷ்ணர், கோபிகைகளின் மேல் வைத்திருந்த தீராத அன்பின் காரணமாக அவர்களின் வீடுகளுக்குச் சென்று வெண்ணையினைத் திருடி ஆசை தீர உண்பார்.

    ஆனால் அவர் உண்மையிலேயே திருடியது தனது பக்தர்களின் மனங்களில் உள்ள கெட்ட குணங்களைத் தான்.

    பின்னர் அம்மனங்களைத் தனது தெய்வீகச் சக்தியால் நிரப்பி விடுவார்.

    அதன் பயனாக அவர்கள் உவகை மறந்து ஸ்ரீகிருஷ்ணரிடமே அதிதீவிர பக்தி பூண்டு, அவரது பாதாரவிந்தத்தையே நினைத்துக் கொண்டிருந்தனர். அதனால் அவர்கள் எல்லையற்ற பேரானந்தத்தை அடைந்தனர்.

    ஸ்ரீகிருஷ்ணரின் தனிப்பட்ட ஆத்மா, உலக உயிர்களிலெல்லாம் வாசம் செய்கின்றது என்பது இதன் மூலம் தெளிவாக விளங்குகின்றது.

    • வாசலில் தொடங்கி பூஜை அறை வரை குழந்தையின் பிஞ்சு பாத தடங்களை அரிசி மாவால் பதிப்பார்கள்.
    • இதனால் பகவான் கிருஷ்ணரின் ஆசீர்வாதம் நமது இல்லத்திற்கும், உள்ளத்திற்கும் கிடைக்கும்.

    பகவான் கிருஷ்ணர் குழந்தை அவதாரமாக நம் வீட்டிற்கு வந்து அருள்பாலிப்பதே கோகுலாஷ்டமி பண்டிகையின் முக்கிய அம்சமும், நோக்கமும் ஆகும்.

    அதனால்தான் கிருஷ்ண ஜெயந்தி அன்று வீட்டை கழுவி சுத்தம் செய்து அரிசி மாவில் கோலமிட்டு பூக்கள், மாவிலை தோரணங்களால் அழகுபடுத்துவர்.

    வாசலில் தொடங்கி பூஜை அறை வரை குழந்தையின் பிஞ்சு பாத தடங்களை அரிசி மாவால் பதிப்பார்கள்.

    ஆலிலை கிருஷ்ணன் தனது பிஞ்சு பாதங்களை அடிமேல் அடி வைத்து வீட்டிற்குள் தத்தித் தத்தி நடந்து வருவதாக ஐதீகம்.

    கிருஷ்ணனின் படத்தை அலங்கரித்து மாலைகளும், மலர்களும் சூடி அவனுக்கு பிடித்தமான வெண்ணெய், இனிப்பு வகைகள், சீடை, முறுக்கு, தேன்குழல், பொங்கல், பால் பாயாசம் போன்ற நைவேத்யங்கள் படைத்து அவரவர் குடும்ப வழக்கப்படி விரதம் இருந்து பூஜைகள் செய்து பக்தி பாமாலைகள் பாடி வழிபட வேண்டும்.

    அந்த நீலவண்ண கண்ணன் நம் இல்லம் வந்து அருள்புரிய சூடிக்கொடுத்த சுடர்க்கொடி ஆண்டாள் தனது திருப்பாவையில் இவ்வாறு பாடியருளியுள்ளார்.

    'மாயனை மன்னு வட மதுரை மைந்தனை

    தூய பெருநீர் யமுனைத் துறைவனை

    ஆயர் குலத்தினில் தோன்றும் அணிவிளக்கை

    தாயை குடல் விளக்கஞ் செய்த தாமோதரனை

    தூயோமாய் வந்து நாம் தூமலர் தூவித் தொழுது

    வாயினாற்பாடி மனத்தினால் சிந்திக்க

    போய பிழையும் புகு தருவானின்றனவும் தீயினில் தூசாகும் செப்பேலோ ரெம்பாவாய்.'

    கிருஷ்ணனை இவ்வாறு பாடி வழிபட்டால் எல்லா விதமான தடைகளும், பிழைகளும் தீயினில் பட்ட தூசாக அழியும் என்று தனது திருப்பாவை பாசுரத்தில் கூறியுள்ளார்.

    பாகவதத்தில் கண்ணனின் பிறப்பை விவரிக்கும் தசம ஸ்கந்தம் எனப்படும் பத்தாவது அத்தியாயத்தை ஒருவர் படிக்க, குடும்பத்தில் மற்றவர்கள் கேட்க வேண்டும்.

    இதனால் பகவான் கிருஷ்ணரின் ஆசீர்வாதம் நமது இல்லத்திற்கும், உள்ளத்திற்கும் கிடைக்கும்.

    கிராமங்களில் மாலை வேளையில்தான் கிருஷ்ண ஜெயந்தி பூஜை செய்வார்கள்.

    வீட்டில் பூஜையும் நைவேத்தியமும் செய்து முடித்தபிறகு அருகே உள்ள கண்ணன் ஆலயத்துக்குச் சென்று இறைவனை வணங்கி மகிழ்வது சிறப்பு.

    • இந்தப் போர் தொடங்கும் முன் இவர் அர்ஜூனனிடம் மேற்கொண்ட உரையாடலே பகவத் கீதை ஆனது.
    • பின்னர் துவாரகையில் தன் மனைவியான ருக்மணியுடன் வாழ்ந்து யாதவர்களின் அரசராக விளங்கினார்.

    அரக்க குணம் கொண்ட கம்சனை அழிக்கவும், குருச்சேத்திர போர் மூலம் 100 கவுரவர்களையும் அவர்களுக்கு உதவியவர்களை அழித்து தர்மத்தை நிலைநாட்டவும் கண்ணன் அவதாரம் நிகழ்ந்ததாக புராணங்கள் கூறுகின்றன.

    தன் தங்கை தேவகிக்கும், வசுதேவருக்கும் திருமணம் முடிந்ததும், அவர்களை தேரில் வைத்து ஊர்வலமாக சென்று கொண்டிருந்தான் கம்சன்.

    அப்போது, 'உன் தங்கைக்கு பிறக்கப்போகும் எட்டாவது ஆண் குழந்தையால் உன் உயிர் போகும்' என்று ஒரு அசரீரி ஒலித்தது.

    தன் உயிர் போகும் என்ற வார்த்தையைக் கேட்டதும், பாசம் வைத்திருந்த தங்கையின் மீது வாளை வீசும் முடிவுக்கு கம்சன் வந்தான்.

    'கம்சா! தேவகிக்கு பிறக்கப்போகும் எட்டாவது மகனால்தானே உனக்கு அழிவு.

    அவளுக்கு பிறக்கும் அத்தனை குழந்தைகளையும் உன்னிடம் ஒப்படைத்து விடுகிறேன்.

    தேவகியை விட்டு விடு!' என்று வாசுதேவர் கூறவே, தேவகியை கொல்லும் எண்ணத்தை கைவிட்டான் கம்சன்.

    உடனே வசுதேவரையும் தேவகியையும் சிறையில் அடைத்து, தன் கண்காணிப்பிலேயே வைத்துக் கொண்டான்.

    தேவகிக்கு பிறந்த குழந்தைகளை தொடர்ச்சியாக கொன்றுவிட்டான் கம்சன்.

    8வது குழந்தையின் கருவை தன் வயிற்றில் சுமந்திருந்தாள் தேவகி.

    இந்த குழந்தையும் தன் அண்ணனின் கையால் இறக்கப்போவதை எண்ணி, கர்ப் பவதியான தேவகி கண்ணீரில் கரைந்து கொண்டிருந்தாள்.

    ஒரு நள்ளிரவு நேரத்தில் தேவகிக்கு எட்டாவதாக ஆண் குழந்தை பிறந்தது.

    அக்குழந்தையைப் பார்த்ததும் வசு தேவருக்கும், தேவகிக்கும் ஏற்பட்ட மகிழ்ச்சி, மறுகணமே மறைந்து போனது.

    பொழுது விடிந்ததும் கம்சன் வந்து குழந்தையை கொண்டுபோய்விடுவான் என்பதால் அவர்கள் கலக்கம் கொண்டிருந்தனர்.

    அப்போது குழந்தை, மகாவிஷ்ணுவாக சுய உருகொண்டு பேசத் தொடங்கியது.

    'உங்களது முற்பலனால் நான் உங்கள் மகனாக பிறந்துள்ளேன். என்னை கோகுலத்திற்கு கொண்டு செல்லுங்கள்.

    அங்கு வசுதேவரின் நண்பரான நந்தகோபருக்கு பிறந்துள்ள பெண் குழந்தையை இங்கே கொண்டு வந்து விடுங்கள்.

    யாசோதை என்னை வளர்க்கட்டும். உரிய நேரத்தில் எல்லாம் நல்ல விதமாக நடக்கும்'

    என்று கூறிய விஷ்ணு பகவான், மறுகணமே சாதாரண குழந்தையாக மாறினார்.

    குழந்தையை மாற்றுவதற்கு தோதாக, சிறையின் வாயில்கள் தானாக திறந்தன. காவலர்கள் மயக்கமுற்றனர்.

    வசுதேவர் சற்றும் தாமதிக்காமல், குழந்தையை ஒரு கூடையில் எடுத்து வைத்தபடி கோகுலம் சென்றார்.

    குழந்தையை மாற்றிக் கொண்டு, பெண் குழந்தையை கொண்டு வந்தார்.

    காலையில் தேவகிக்கு குழந்தை பிறந்த செய்தி கேட்டு வந்த கம்சன், பெண் குழந்தையைப் பார்த்ததும் வியப்படைந்தான்.

    ஆண் குழந்தைதானே பிறந்திருக்க வேண்டும் என்று எண்ணியவன் இறுதியில் எந்தக் குழந்தையாக இருந்தாலும் அதை அழித்து விடுவது என்ற முடிவில், பெண் குழந்தையை வாளால் வெட்ட ஓங்கினான்.

    ஆனால் அந்தக் குழந்தை மேல் நோக்கி பறந்தது. துர்க்கையாக வடிவெடுத்தது.

    'ஏ! கம்சா! உன்னைக் கொல்லப்போகிறவன், வேறொரு இடத்தில் பத்திரமாக இருக்கிறான். உரிய நேரத்தில் அவன் உன்னை அழிப்பான்' என்று கூறி மறைந்தது.

    அந்த குழந்தைதான் பின்னாளில் பவானி அம்மனாக அவதாரம் எடுத்ததாக புராண வரலாறுகளில் சொல்லப்பட்டுள்ளது.

    மாயமாய் மறைந்த பெண் குழந்தை சொன்னதைக் கேட்டு கம்சன் மேலும் அதிர்ச்சி அடைந்தான்.

    தனது பணியாட்களை அனுப்பி விசாரித்தான். அப்போது கோகுலத்தில் வளரும் கிருஷ்ணர் தான் தேவகி பெற்ற 8 வது குழந்தை என்பது தெரிய வந்தது.

    இதையடுத்து கம்சன் தனது வீரர்களை அனுப்பி கிருஷ்ணனை கொல்ல முயன்றான்.

    அந்த அசுரர்கள் அனைவரையும் கிருஷ்ணர் வதம் செய்தார்.

    இளவயதில் பிருந்தா வனத்தில் இருந்த பெண்களின் மனதில் கிருஷ்ணர் இடம் பிடித்தார்.

    இவர்களுள் ஒருவரான ராதையுடன் தெய்வீகக் காதல் புரிந்தார்.

    பிறகு மதுரா சென்று கம்சனை வென்று தன் தாத்தாவான உக்கிர சேனரிடம் ராஜ்யத்தை ஒப்படைத்தார்.

    தனது அத்தை மகன்களான பாண்டவர்களுடன், குறிப்பாக அர்ஜூனனுடன் நட்பு கொண்டார்.

    பின்னர் துவாரகை எனும் ஊருக்கு மதுரா மக்களுடன் குடிபெயர்ந்தார்.

    பாண்டவர்களுக்கும், கவுரவர்களுக்கும் இடையே நடந்த குருசேத்திரப் போரில், தனது சேனையை கவுரவர்களிடம் கொடுத்து விட்டு தான் அர்ஜூனனின் தேரோட்டியாக பணிபுரிந்தார்.

    இந்தப் போர் தொடங்கும் முன் இவர் அர்ஜூனனிடம் மேற்கொண்ட உரையாடலே பகவத் கீதை ஆனது.

    பின்னர் துவாரகையில் தன் மனைவியான ருக்மணியுடன் வாழ்ந்து யாதவர்களின் அரசராக விளங்கினார்.

    அவரது அவதார தினம்தான் உலகம் முழுவதும் ஸ்ரீகிருஷ்ண ஜெயந்தியாகக் கொண்டாடப்படுகிறது.

    • நவநீதம் என்றால் புதுசாக எடுத்தது என்று அர்த்தம்.
    • அது வெறுப்பைத் தருகிற கருப்பு அல்ல, மோகத்தை உண்டாக்குகிற மேகத்தின் கருப்பு.

    கிருஷ்ண பரமாத்மாவுக்கு எத்தனையோ பெயர்கள் உள்ளன.

    அதுபற்றி மகாபெரியவர் சொன்ன ஒரு சிறிய விளக்கம்...

    நவநீதம் என்றால் புதுசாக எடுத்தது என்று அர்த்தம்.

    'நவ' என்றால் புதுசு என்று அர்த்தம். 'நீதம்' என்றால் எடுக்கப்பட்டது என்று அர்த்தமாகும்.

    புத்தம் புதுசாக அதிகாலை நேரத்தில் பசும்பாலில் உறை ஊற்றி சாயங்காலமே அந்த தயிரை எடுக்கிற வெண்ணெய்தான் நவநீதம் என்று சொல்லப்படுகிறது.

    அதோடு சேரும் கிருஷ்ணன், நவநீத கிருஷ்ணராவார்.

    கன்னங்கரேலென்று இருக்கிறதால் கிருஷ்ணன் என்றே பெயர் வைத்துள்ளனர்.

    அது வெறுப்பைத் தருகிற கருப்பு அல்ல, மோகத்தை உண்டாக்குகிற மேகத்தின் கருப்பு.

    அவனைக் 'கார்வண்ணன்' என்று சொல்வார்கள்.

    மேகம் எத்தனைக்கு எத்தனை கருப்போ அத்தனைக்கு அத்தனை அதிகமாக மழை நீரை கொட்டும்.

    அந்த தண்ணீர் கருப்பாகவா இருக்கிறது? இப்படி பரம பிரேம தாரையைப் பிரவாகமாக கொட்டுகிறவனே கிருஷ்ணன்.

    • விஷ்ணு தசாவதாரங்களில் ஒன்பதாவது அவதாரம்தான் கிருஷ்ணாவதாரம்.
    • தனது ஏழாவது வயதில் கம்சனை வீழ்த்தி பெற்றோரை விடுவித்தார் கிருஷ்ணர்.

    "எப்போதெல்லாம் உலகில் அதர்மம் தலை தூக்குகிறதோ, அப்போதெல்லாம் அவதரிக்கிறேன்" என்று

    பகவத் கீதையில் கிருஷ்ண பரமாத்மா கூறியுள்ளார்.

    விஷ்ணு தசாவதாரங்களில் ஒன்பதாவது அவதாரம்தான் கிருஷ்ணாவதாரம்.

    அவர் இந்த பூலோகத்தில் அவதரித்த நாளையே கிருஷ்ண ஜெயந்தி அல்லது கோகுலாஷ்டமியாக கொண்டாடுகிறோம்.

    வட இந்தியாவில் 'ஜென்மாஷ்டமி' என்று இது அழைக்கப்படுகிறது.

    ஆவணி மாதம் தேய்பிறை அஷ்டமி அன்று, ரோகிணி நட்சத்திரத்தில் நள்ளிரவு நேரத்தில் கம்சனின்

    சிறைச்சாலையில் இருந்த வசுதேவர் தேவகிக்கு மகனாக கிருஷ்ணர் அவதரித்தார்.

    3 வயது வரை கோகுலத்திலும், 3 முதல் 6 வயது வரை பிருந்தாவனத்திலும், 7 வயதில் கோபியர் கூட்டத்திலும் ,

    8 வயது முதல் 10 வயது வரை மதுராவிலும் கிருஷ்ணரின் இளம் வயது நாட்கள் கழிந்தன.

    தனது ஏழாவது வயதில் கம்சனை வீழ்த்தி பெற்றோரை விடுவித்தார் கிருஷ்ணர்.

    தீராத விளையாட்டுப் பிள்ளையான கிருஷ்ணரின் இளமைப் பருவம் பற்றி கேட்பதற்கே இனிமையாக இருக்கும்.

    நாளரு மேனியும், பொழுதொரு வண்ணமுமாக வளர்ந்த கிருஷ்ணர், ஆயர்கள் கட்டி வைத்த கன்றுகளை

    அவிழ்த்து விடுவது... நீர் ஏந்தி வரும் பெண்களின் குடங்களை கல் விட்டு உடைப்பது...

    வெண்ணையை திருடி உண்பது... போன்ற பல்வேறு சேட்டைகளில் ஈடுபட்டார்.

    கிருஷ்ணர் இரவு 12 மணிக்கு பிறந்ததை நினைவு கூறும் வகையில் வட இந்தியாவில் இரவு 12 மணி வரையிலும்

    உபவாசம் இருந்து, பஜனை செய்வார்கள்.

    ஆயர்பாடியில் வளர்ந்த கண்ணன் இளமையில் வெண்ணை திருடி உண்டவர் என்பதால் கோகுலாஷ்டமி அன்று

    கண்ணனுக்கு பால், தயிர், வெண்ணை ஆகியவற்றை தவறாது நிவேதனம் செய்து வழிபடுவது சிறப்பு.

    ஆயர்பாடியில் மாடுகளை மேய்த்து திரிந்த கண்ணன், பகல் நேரம் முழுவதும் மாடுகளை நன்றாக மேய்த்து விட்டு

    மாலை நேரத்தில் தான் வீடு திரும்புவதை வழக்கமாக கொண்டிருந்தார்.

    அதனால் மாலை நேரம்தான் கிருஷ்ண ஜெயந்தி பூஜை செய்ய ஏற்ற நேரமாகும்.

    • இந்த தெய்வீக அதிர்வை நாம் கேட்கும் போதும், இந்த உணர்வு புத்துயிர் பெறுகிறது.
    • ஹரா என்ற வார்த்தை பகவானின் சக்தியை குறிப்பதாகும்.

    ஹரே கிருஷ்ண ஹரே கிருஷ்ண கிருஷ்ண கிருஷ்ண ஹரே ஹரே

    ஹரே ராம ஹரே ராம ராம ராம ஹரே ஹரே

    இந்த மந்திர உச்சரிப்பில் இருந்து உண்டாகும் தெய்வீக அதிர்வானது நமது கிருஷ்ண உணர்வை புத்துயிர்

    பெறச் செய்யும் ஆத்மாக்களாகிய நாம் அனைவரும் உண்மையில் கிருஷ்ண உணர்வுள்ள ஜீவன்களாகவோம்.

    ஆனால் பவுதிகத்துடன் நமது தொடர்பின் காரணமாக நினைவிற் கெட்டாத காலத்திலிருந்தும்

    நமது உணர்வானது மாசடைந்துள்ளது.

    நமது கிருஷ்ண உணர்வை உயிர்ப்பிப்பதன் மூலம் பவுதிக இயற்கைக்கு எதிரான மாயை உடனேயே நிறுத்த முடியும்.

    கிருஷ்ண உணர்வு என்பது செயற்கையாக மனதில் திணிக்கப்படும் ஒன்றல்ல, இந்த உணர்வே உயிர்வாழியின் உண்மையான சக்தியாகும்.

    இந்த தெய்வீக அதிர்வை நாம் கேட்கும் போதும், இந்த உணர்வு புத்துயிர் பெறுகிறது.

    ஹரா என்ற வார்த்தை பகவானின் சக்தியை குறிப்பதாகும்.

    கிருஷ்ண, ராம என்ற வார்த்தைகள் கடவுளையே குறிப்பதாகும்.

    கிருஷ்ண, ராம என்பதன் பொருள் மிக உன்னத ஆனந்தம் என்பதாகும்.

    ஹரா என்பது பகவானின் அதி உன்னத சக்தியை குறிக்கிறது.

    இது பேச்சு வழக்கில் ஹரே என்று மாறி உள்ளது.

    இந்த மந்திரமானது பகவானை அடைய நமக்கு உதவுகிறது.

    ஹரே, கிருஷ்ண, ராம என்ற மூன்று வார்த்தைகள் மஹா மந்திரத்தின் தெய்வீக விதைகளாகும்.

    மந்திர உச்சாடனமானது கட்டுண்ட அத்மாக்களுக்கு பாதுக்கு கொடுப்பதற்காக கடவுளிடமும் அவரது

    உள்ளுர சக்தியான ஹரா (ராதாராணி) விடமும் விடுவிக்கும் ஒரு ஆன்மீக அழைப்பாகும்.

    தாயை நினைத்து கதறும் ஒரு குழந்தையின் அழுகைக்கு சமமானது.

    இந்த மந்திர உச்சாடனம், ஹரா என்ற தாய் ஹரி அல்லது கிருஷ்னர் என்று அழைக்கப்படும்

    உன்னதமான தந்தையின் அருளைப் பெறுவதற்கு பக்தர்களுக்கு உதவுகிறார்.

    ஆகவே ஆன்மீக தன்னுணர்வை அடைவதற்கு

    ஹரே கிருஷ்ண ஹரே கிருஷ்ண கிருஷ்ண கிருஷ்ண ஹரே ஹரே

    ஹரே ராம ஹரே ராம ராம ராம ஹரே ஹரே

    என்ற இந்த மகாமந்திரத்தை உச்சரிப்பதை தவிர, இந்த கலியுகத்தில் வேறு சக்தி வாய்ந்த மந்திரம் ஒன்றுமில்லை.

    தற்போதைய கெட்ட விளைவுகளை முறியடிக்க ஒரே வழி இந்த 6 நாமங்களே, பிறரிப் பெருங்கடலைக் கடக்க

    இப்புனித நாமங்களை தினமும் சொல்லுங்கள்.

    உங்கள் மனம் பக்குவப்படுவதை நீங்கள் உணர்வீர்கள்.


    • நடிகர் ஈஸ்வர் ரகுநாதன் டி.வி. நடிகர் ஆவார்.
    • இவர் தற்போது பல தொடர்களில் நடித்து வருகிறார்.

    டி.வி. நடிகர் ஈஸ்வர் ரகுநாதனால் எனது உயிருக்கு ஆபத்து ஏற்பட்டுள்ளதாக பிரபல பாடகர் கிருஷ்ணா பரபரப்பு புகார் அளித்துள்ளார். அதில் கூறி யிருப்பதாவது:- நேற்று முன்தினம் நான் இசை நிகழ்ச்சிக்காக தனியார் ஓட்டலுக்கு சென்றிருந்தேன். அங்கு சின்னத்திரை நடிகர் ஈஸ்வர் ரகுநாதன், சக நடிகர்களுடன் இருந்தார். என்னை பார்த்ததும் என்னிடம் வந்து உட னடியாக அங்கிருந்து கிளம்பிவிடுமாறு மிரட்ட தொடங்கினார்.

    காரணம் கேட்ட போது ஏதும் கூறாமல் உன்னை கொல்வதற்கு 10 பேரை தயார் செய்துள்ளேன். மேலும் தன் அருகில் அமர்ந்திருந்த நண்பர்களை காட்டி இங்கிருந்து நீ கிளம்பாவிட்டால் இவர்கள் உன்னை உடனே அடித்து கொன்றுவிடுவார்கள் என்று மிரட்டினார். மேலும் உன் நாட்களை எண்ணிக் கொள் என்று மிரட்டியதுடன் நான் அங்கிருந்து கிளம்பிவிட்டேன்.


    பாடகர் கிருஷ்ணா

    எனக்கும் அவருக்கும் எந்தவித முன்விரோதமும் இல்லை. அவருடன் பேசியே பல ஆண்டுகள் ஆகிவிட்டது. உயிர் பயம் கொடுக்கும் அளவிற்கு என்னை மிரட்டியதற்கான காரணமும் தெரியவில்லை. ஆதலால் தாங்கள் தயவு செய்து அவரை விசாரித்து தக்க நடவடிக்கை எடுக்குமாறு வேண்டிக் கொள்கிறேன்.

    நான் கூறியது அனைத்தும் அங்குள்ள கேமராவில் பதிவாகி இருக்கும். மேலும் என் முதிர்ந்த தாயாருடன் தனியாக வசித்து வருவதால், ஈஸ்வரிடம் இருந்து எங்களுக்கு பாதுகாப்பு அளிக்குமாறு கேட்டுக் கொள்கிறேன். இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.

    • உலக கிருஷ்ண பக்தி இயக்கம் (இஸ்கான்) 1966-ம் ஆண்டு பக்தி வேதாந்த சுவாமி பிரபுபாதரால் தொடங்கப்பட்டது.
    • பக்தி வேதாந்த அகடமியின் மூலம் நவீன காலத்திற்கு உகந்த யோகப்பயிற்சியை கற்றுத்தருதலையும் செய்து வருகின்றனர்.

    ஹரே கிருஷ்ண இயக்கம் என்ற பெயரில் உலகெங்கிலும் பிரபலமாக விளங்கும் அகில உலக கிருஷ்ண பக்தி இயக்கம் (இஸ்கான்) 1966-ம் ஆண்டு பக்தி வேதாந்த சுவாமி பிரபுபாதரால் தொடங்கப்பட்டது.

    முறையான குரு சீடப் பரம்பரையில் வந்த ஆச்சாரியரான ஸ்ரீல பிரபுபாதர், பகவத்கீதை, ஸ்ரீமத் பாகவதம் போன்ற வேத சாஸ்திரங்களின் அடிப்படையில் கிருஷ்ண பக்தியினை மக்கள் மத்தியில் எடுத்துரைத்தார்.

    அவரது தெளிவான கருத்துக்கள் அமெரிக்க, ஐரோப்பிய மக்களின் இதயத்தில் உட்புகுந்து பெருத்த மாற்றத்தை ஏற்படுத்தின. அதனைத் தொடர்ந்து, இந்த இயக்கம் மிகவும் குறுகிய காலத்தில் இமாலய வளர்ச்சி பெற்று உலகெங்கும் பரவியது.

    இயக்கத்தில் இணைந்த ஆயிரக்கணக்கான இளைஞர்கள் ஸ்ரீல பிரபுபாதரின் போதனைகளைப் பின்பற்றி, கிருஷ்ண பக்தியை மக்களிடம் எடுத்துச்செல்லும் சுயநலமற்ற திருப்பணியை மேற்கொண்டனர்.

    ஸ்ரீல பிரபுபாதரால் எழுதப்பட்ட பல்வேறு புத்தகங்கள் லட்சக்கணக்கில் பல்வேறு மொழிகளில் வினியோகம் செய்யப்பட்டன. அந்த புத்தகங்கள் உலகின் பல்வேறு அறிஞர்களாலும், பண்டிதர்களாலும் விரைவில் அங்கீகரிக்கப்பட்டன.

    ஸ்ரீல பிரபுபாதரால் தொடங்கப்பட்ட இஸ்கான் தொடர்ந்து உலகெங்கிலும் வளர்ச்சி பெற்று வருகின்றது. ஜாதி, மதம், இனம், மொழி, அந்தஸ்து, கல்வியறிவு போன்ற எந்த பேதங்களும் இன்றி மனித குலத்தின் மேன்மைக்காக ஆன்மீக ஞானத்தைப் பரப்பி வரும் இந்த இயக்கம், தற்போது நூற்றுக்கணக்கான நாடுகளிலும், பல்வேறு நகரங்களிலும் உற்சாகத்துடன் செயல்பட்டு வருகின்றது.

    கோவை பீளமேடு கொடிசியா வளாகம் அருகில் ஸ்ரீ ஜெகன்னாதர் கோவில் (இஸ்கான்) உள்ளது. இந்த ஆலயத்தின் நிர்வாகிகள் மற்றும் பக்தர்கள் பல்வேறு அறப்பணிகளை செய்து வருகிறார்கள்.

    ஹரி நாம சங்கீர்த்தனம், பகவத் கீதை போன்ற சாஸ்திரங்களை வினியோகித்தல் பணியை செம்மையாக செய்து வருகின்றனர். மேலும் பக்தி வேதாந்த அகடமியின் மூலம் நவீன காலத்திற்கு உகந்த யோகப்பயிற்சியை கற்றுத்தருதலையும் செய்து வருகின்றனர். கல்லூரி மாணவர்களுக்கு ஆன்மீகப்பயிற்சி, இல்லங்களில் ஆன்மீக நிகழ்ச்சிகளை நடத்தி வருகின்றனர்.

    ஞாயிறு விருந்து

    ஒவ்வொரு ஞாயிற்றுக்கிழமையும் மாலை 5 மணி முதல் இரவு 9 மணி வரை பஜனை, கீர்த்தனை, ஆரத்தி, ஆன்மீகப் பிரசங்கம் நடைபெறுகிறது. பிரசங்கம் முடிந்ததும் சுவையான பிரசாத விருந்து வழங்கப்படுகிறது. இஸ்கானின் ஆன்மீகப்பணியின் தொடர்ச்சியாக ஸ்ரீஸ்ரீ ராதாகிருஷ்ணருக்குப் புதிய கோவில் அமைக்கும் பணியும், -பகவான் ராதாகிருஷ்ணருக்கு பிரம்மாண்டமான கோவிலுக்கான ஆரம்பகட்டப்பணிகளும் முழுவீச்சில் நடைபெற்றுவருகின்றன.

    நாம் தற்போது வாழ்ந்துவரும் இந்த கலியுகம் சண்டையும், சச்சரவுகளும் நிறைந்தது. இதனை நாம் கண்கூடாகப் பார்க்கிறோம். உடல் ஆரோக்கியமின்மை, வியாதிகள், மனசஞ்சலங்கள், குடும்பப் பிரச்சினைகள், சமுதாயப் பிரச்சினைகள், தேசப் பிரச்சினைகள், அதிக குளிர், அதிக வெப்பம், புயல், மழை போன்றவை அதிகரித்தவண்ணம் உள்ளன. மக்கள் மத்தியில் பல்வேறு வசதிவாய்ப்புகள் உள்ளபோதிலும் எவரும் மகிழ்ச்சியாகவோ, அமைதியாகவோ வாழ்வதில்லை.

    சுயநல ஆசைகளுடன் வாழும் பலரும் உண்மையில் மிருகத்தினைப்போல் வாழ்ந்து வருகின்றனர்.

    பெறுவதற்கு அரிய மானிடப்பிறவியைப் பெற்றவர்கள் இதனை முழுமையாக உபயோகித்து, நாம் யார்? கடவுள் யார்? நாம் ஏன் துன்பப்படுகிறோம்? வாழ்க்கையின் குறிக்கோள் என்ன? போன்றவற்றை அறிந்து கொள்வது அவசியம். இவற்றை உணர்வது தன்னுணர்வு எனப்படும்.

    இந்த தன்னுணர்வை அடைய பல்வேறு வழிகள் வேத சாஸ்திரங்களில் கொடுக்கப்பட்டுள்ள போதிலும், இந்த கலியுகத்தில் உள்ள மக்கள் மற்ற யுகங்களைக் காட்டிலும் குறைந்த புத்தி மற்றும் ஆயுளைப் பெற்ற துரதிருஷ்டசாலிகளாக இருப்பதால், அவர்களுக்கென்று ஓர் எளிமையான வழிமுறை கொடுக்கப்பட்டுள்ளது அதுவே ஹரிநாமசங்கீர்த்தனம்.

    இந்த சங்கீர்த்தனத்தில் ஈடுபடுவதன் மூலம் முக்தியடைவது எளிது. இதுவே எல்லா வேதங்களின் கூற்றுமாகும். பகவான் கிருஷ்ணரின் திருநாமங்களை உச்சரிப்பதற்குக் கட்டுப்பாடுகள் ஏதுமில்லை. எனவே கீழ்க்கண்ட மந்திரத்தை தினமும் குறைந்தது 108 முறை காதுகளுக்குக் கேட்கும்படி உச்சரியுங்கள். ஆனந்தம் அடையுங்கள்:

    ஹரே கிருஷ்ண ஹரே கிருஷ்ண, கிருஷ்ண கிருஷ்ண ஹரே ஹரே, ஹரே ராம ஹரே ராம ராம ராம ஹரே ஹரே.

    கோவையில் உள்ள இஸ்கானின் முக்கிய விழாக்கள்:

    தேர்த்திருவிழாஆண்டு தோறும் ஜனவரி மாதம் நடைபெறும். உலகப்புகழ்பெற்ற, புராதனமான பூரிஜகன்னாதர் ரதயாத்திரையைப் பின்பற்றி இங்கு இந்த திருவிழா நடைபெறுகிறது. அகில உலக கிருஷ்ண பக்தி இயக்கத்தினர் கோவையில் இந்த விழாவை நடத்துகின்றனர்.

    ஒவ்வொரு ஆண்டும் பிப்ரவரி அல்லது மார்ச் மாதம் கவுர பூர்ணிமா விழா நடத்தப்படுகிறது. ஹரே கிருஷ்ண மஹாமந்திரத்தின் முன்னோடியான பகவான் ஸ்ரீ சைதன்யர் அவதரித்த திருநாளாக இது கடைபிடிக்கப்படுகிறது.

    நரசிம்ம ஜெயந்தி மே மாதம் கொண்டாடப்படுகிறது. பகவான் கிருஷ்ணர், தன்னுடைய பக்தரான பிரகலாததனை காக்க அவதரித்த திருநாளாக இது கடைபிடிக்கப்படுகிறது.

    ஸ்ரீராதாகோவிந்தர் ஊஞ்சல் உற்சவம் ஜூலை அல்லது ஆகஸ்டு மாதம் நடைபெறுகிறது. 5 நாட்கள் நடைபெறும் இவ்விழாவின் போது பக்தர்களே ஊஞ்சல் சேவையைச் செய்து பேரானந்தமடையலாம்.

    ஸ்ரீகிருஷ்ண ஜென்மாஷ்டமி ஆகஸ்டு அல்லது செப்டம்பர் மாதம் கோலாகலமாக நடைபெறுகிறது. பகவான் கிருஷ்ணர் பூலோகத்தில் அவதரித்த திருநாளாக இது கொண்டாடப்படுகிறது.

    ஸ்ரீதாமோதர ஆரத்தி விழா அக்டோபர், - நவம்பர் மாதங்களில் நடைபெறுகிறது. ஒருமாத காலத்திற்குத் தொடர்ந்து நடைபெறும் இந்த உற்சவத்தில், பகவான் தாமோதரருக்கு நெய்விளக்கு ஆரத்தியைச் சமர்ப்பிக்கலாம். இந்த மாதத்தில் செய்யும் ஒவ்வொரு பக்தித்தொண்டும், 10ஆயிரம் மடங்கு பலன் அளிக்கவல்லது என சாஸ்திரங்கள் கூறுகின்றன.

    • கிருஷ்ணா, சரண்யா, கிருத்திகா, ஆனந்த்ராஜ், மொட்டை ராஜேந்திரன், மனோபாலா நடிப்பில் உருவாகியுள்ள படம் “ராயர் பரம்பரை”.
    • இப்படத்தின் பத்திரிக்கையாளர் சந்திப்பு நடைபெற்றது.

    இயக்குனர் ராம்நாத் டி இயக்கத்தில் கிருஷ்ணா, சரண்யா, கிருத்திகா, ஆனந்த்ராஜ், மொட்டை ராஜேந்திரன், மனோபாலா நடிப்பில் உருவாகியுள்ள படம் "ராயர் பரம்பரை". மேலும் கஸ்தூரி, கேஆர் விஜயா, ஆர்என்ஆர் மனோகர், பாவா லக்ஷ்மணன், ஷேஷு, பவர் ஸ்டார் ஶ்ரீனிவாசன் உள்ளிட்ட பலர் நடித்துள்ளனர். இப்படம் ஜூலை 7ஆம் தேதி திரையரங்குகளில் வெளியாகவுள்ள நிலையில் படக்குழுவினர் பத்திரிகையாளர்களை சந்தித்தனர்.



    இந்நிகழ்வில் தயாரிப்பாளர் கே ராஜன் பேசியதாவது, ஒரு நல்ல படம் என்பது டிரைலரிலேயே தெரிகிறது. பாட்டு, ஃபைட், காமெடி என எல்லாமே நன்றாக இருக்கிறது. கிருஷ்ணா அட்டகாசமாக நடித்திருக்கிறார். இது சின்ன படம் இல்லை நிறையச் செலவு செய்திருக்கிறார்கள், இது பெரிய படம். இப்போது நிறைய படங்கள் ஜாதி வெறியைத் தூண்டுவதாக அமைந்துள்ளது. அந்த சமூகத்திற்குப் பாதிப்பு என ஜாதி வெறியைத் தூண்டுகிறார்கள்.



    ஆனால் இந்த படத்தில் மதம் பற்றி நல்ல விசயத்தைக் காட்டுகிறார்கள். முஸ்லீம் பெண்ணை காப்பாற்ற இந்து கடவுளின் வேலை தூக்கி வருகிறான் நாயகன். இப்படி நல்ல விஷயங்களை காட்டுங்கள், யாரும் மத வெறியைத் தூண்டாதீர்கள். ஒரு படம் வெற்றி பெறத் தயாரிப்பாளர் தான் காரணம் இயக்குனர் கலைஞர்கள் உணர்ந்து செயல்பட வேண்டும். இப்படத்தில் பாடல்கள் நன்றாக இருக்கிறது. வெற்றி பெற அனைத்து தகுதியும் இப்படத்திற்கு உள்ளது. இப்படம் வெற்றி பெற வாழ்த்துக்கள் நன்றி என்றார்.

    • இயக்குனர் திரு இயக்கத்தில் அஞ்சலி நடித்த வெப்தொடர் ‘ஜான்சி’.
    • இந்த வெப்தொடரின் இரண்டு சீசன்களும் மக்களிடையே நல்ல வரவேற்பை பெற்றுள்ளது.

    'அங்காடி தெரு' படத்தின் மூலம் பிரபலமான அஞ்சலி, எங்கேயும் எப்போதும், மங்காத்தா, கலகலப்பு, சேட்டை, இறைவி, பலூன், காளி, நாடோடிகள் 2, நிசப்தம் என்று தொடர்ந்து வித்தியாசமான கதையம்சம் கொண்ட படங்களை தேர்ந்தெடுத்து நடித்து வருகிறார்.


    ஜான்சி வெப்தொடர் குழு

    இவர் இயக்குனர் திரு இயக்கத்தில் 'ஜான்சி' என்ற வெப்தொடரில் நடித்திருந்தார். நடிகர் கிருஷ்ணா தயாரித்திருந்த இந்த வெப்தொடரின் முதல் சீசன் டிஸ்னி ஹாட்ஸ்டார் தளத்தில் வெளியாகி பெரும் வரவேற்பு பெற்றதையடுத்து தற்போது இதன் இரண்டாவது சீசன் வெளியாகியுள்ளது.


    ஜான்சி வெப்தொடர் குழு

    முதல் சீசன் போலவே இரண்டாவது சீசனுக்கும் ரசிகர்கள் நல்ல வரவேற்பை அளித்த நிலையில், இந்த வெப்தொடர் குறித்து நடிகர் தயாரிப்பாளர் கிருஷ்ணா பேசியதாவது, "முதல் சீசன் தமிழ், தெலுங்கு, இந்தியில் நல்ல ஹிட். இப்போது இரண்டாவது சீசன் நன்றாக போகுமென்று நம்புகிறேன். சீசன் 1 விட 2 எனக்கு நிறைய பிடித்திருக்கிறது. திரு அசத்தியிருக்கிறார். சுரேஷ் சக்ரவர்த்தி முழு காய்ச்சலோட வந்து நடித்துக் கொடுத்திருக்கிறார். இதை முதலில் 6 மாசத்தில் முடித்துவிடலாமென்று தான் ஆரம்பித்தோம். ஆனால் 2 வருடம் ஆகிவிட்டது. ஆனால் உங்களுக்கு உறுதியாக சொல்கிறேன் சீசன் மூன்றும் வரும். உங்கள் ஆதரவைத் தாருங்கள்" என்று பேசினார்.

    • தெலுங்கு சினிமாவின் பழம்பெரும் நடிகர் கிருஷ்ணா.
    • இவர் சமீபத்தில் மாரடைப்பு காரணமாக உயிரிழந்தார்.

    தெலுங்கு சினிமாவின் பழம்பெரும் நடிகரும், நடிகர் மகேஷ் பாபுவின் தந்தையுமான கிருஷ்ணா சமீபத்தில் திடீரென வீட்டில் மயங்கி விழுந்து சுயநினைவை இழந்ததன் காரணமாக அவரது குடும்பத்தினர் ஐதராபாத்தில் உள்ள தனியார் மருத்துவமனையில் அவரை அனுமதித்தனர். அங்கு அவருக்கு மாரடைப்பு ஏற்பட்டு இருப்பது கண்டறியப்பட்டது.


    மருத்துவமனையில் அவருக்கு 20 நிமிடங்கள் சிபிஆர் சிகிச்சை அளிக்கப்பட்டதை அடுத்து அவருக்கு சுயநினைவு திரும்பியது. பின்னர் தீவிர சிகிச்சை பிரிவில் ஆபத்தான நிலையில் உள்ளார் என மருத்துவமனை அறிக்கை வெளியிட்டது. அத்துடன் செயற்கை சுவாச கருவிகள் மூலம் அவருக்கு சிகிச்சை வழங்கப்பட்டு வந்தது.


    பின்னர் அவர் சிகிச்சை பலன் அளிக்காமல் உயிரிழந்தார். நடிகர் கிருஷ்ணா, திரை வாழ்கையில் 300க்கும் மேற்பட்ட படங்களில் நடித்துள்ளார், தெலுங்கு திரையுலகின் முன்னணி நடிகராக வலம் வந்த கிருஷ்ணா, கடைசியாக 2016ஆம் ஆண்டு வெளியான ஸ்ரீ ஸ்ரீ படத்தில் நடித்திருந்தார்.


    இந்நிலையில், நடிகர் மகேஷ்பாபு தனது சமூக வலைதளப் பக்கத்தில் தனது தந்தையின் பழைய புகைப்படம் ஒன்றை பகிர்ந்து பதிவு ஒன்றை பகிர்ந்துள்ளார். அதில்,"உங்கள் வாழ்க்கை கொண்டாடப்பட்டது. உங்கள் மறைவு இன்னும் கொண்டாடப்படுகிறது. இதுவே உங்கள் மகத்துவம். நீங்கள் உங்கள் வாழ்க்கையை அச்சமின்றி வாழ்ந்தீர்கள். துணிச்சலும் தைரியமும் உங்கள் இயல்பு. எனது உத்வேகமாக நீங்கள் இருந்தீர்கள்.


    நான் பார்த்த அனைத்தும் அப்படியே மறைந்துவிட்டன. ஆனால், இதுவரை நான் உணராத வலிமையை என்னுள் உணர்கிறேன். இப்போது நான் அச்சமின்றி இருக்கிறேன். உங்களது ஒளி என்றென்றும் என்னுள் பிரகாசிக்கும். உங்களை மேலும் பெருமைப்படுத்துவேன். லவ் யூ அப்பா. மை சூப்பர் ஸ்டார்" எனக் குறிப்பிட்டிருக்கிறார். இந்த பதிவு ரசிகர்களை கண்கலங்க வைத்துள்ளது.



    ×