search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "அசம் கான்"

    இந்த விமர்சனத்தை ஆடியோ வடிவில் கேட்க "Play" பட்டனை கிளிக் செய்யவும்
    • பாகிஸ்தானில் ஏழ்மையில் இருக்கும் குடிமக்களை இழிவுபடுத்துவதாக சமூக ஊடகங்களில் பரவலாக பேசப்பட்டு வருகிறது.
    • 5 ஆண்டுகள் கேப்டனாக இருந்தும் பாபர் அசாமுக்கு எப்படி நடந்துகொள்வது என்று தெரியவில்லை.

    பாகிஸ்தான் விக்கெட் கீப்பர்-பேட்டர் அசம் கான் ஒரு பஸ் பயணத்தின் போது சக வீரர்களுடன் 'உணர்ச்சியற்ற' வீடியோவை உருவாக்கினார்.

    அந்த வீடியோவில் அவர் பணத்தால் வியர்வையைத் துடைப்பதைக் காணலாம். அவரது நகைச்சுவையின் ஒரு பகுதியாக, கிரிக்கெட் வீரரும் தனது கேப்டன் பாபர் ஆசாமுக்கு பதிலளிக்கும் போது அதையே செய்வதைப் பற்றி தற்பெருமை செய்வது போல் காட்டினார்.

    பாகிஸ்தான் கேப்டன் அசம் கான் தனது முகத்தை கரன்சி நோட்டுகளால் துடைக்கும் வீடியோவைப் பகிர்ந்ததை அடுத்து ரசிகர்கள் சமூக ஊடகங்களில் பாபர் ஆசாமை விமர்சித்து பேசி வருகின்றனர்.

    சர்ச்சைக்குரிய வீடியோ, பாகிஸ்தானில் ஏழ்மையில் இருக்கும் குடிமக்களை இழிவுபடுத்துவதாக சமூக ஊடகங்களில் பரவலாக பேசப்பட்டு வருகிறது.

    இந்த நடவடிக்கை அவரது அருகாமையில் இருந்த சக ஊழியர்களிடமிருந்து அதிக சிரிப்பலை ஏற்படுத்தியிருந்தாலும், இது சமூக ஊடகங்களில் நெட்டிசன்கள் மத்தியில் பரவலான சீற்றத்தை ஈர்த்தது. ஒரு குறிப்பிட்ட சமூக ஊடகப் பயனர், ஆசம் கானின் 'உணர்ச்சியற்ற' செயல் தற்போது வெப்பத்தால் பாதிக்கப்பட்டுள்ள 'ஏழை பாகிஸ்தானிய' குடிமக்களை இலக்காகக் கொண்டது என்று கூறினார்.

    இன்னும் சிலர், பாகிஸ்தான் கிரிக்கெட் வீரர்கள் உண்மையில் உணர்ச்சியற்ற முட்டாள்கள். பாகிஸ்தானில் வெயிலின் தாக்கத்தால் மக்கள் இறக்கின்றனர். இவர்கள் இங்கிலாந்தில் அமர்ந்து ஏழை பாகிஸ்தானியர்களை கேலி செய்து பணத்தால் வியர்வையை துடைக்கிறார்கள். 5 ஆண்டுகள் கேப்டனாக இருந்தும் பாபர் அசாமுக்கு எப்படி நடந்துகொள்வது என்று தெரியவில்லை. என்று பல்வேறு கருத்துக்களை பகிர்ந்து வருகின்றனர்.

    • அசம் கான் ராம்பூர் தொகுதி எம்.எல்.ஏ.வாக இருந்து வந்தார்.
    • சமாஜ்வாதி கட்சியில் முக்கிய பொறுப்பு வகிப்பவர் அசம் கான்.

    லக்னோ:

    சமாஜ்வாதி கட்சி தலைவர் அசம் கான் கடந்த 2019ம் ஆண்டு நடந்த பொதுத் தேர்தலில் பிரதமர் மோடி, முதல் மந்திரி யோகி ஆதித்யநாத் ஆகியோரை அவதூறாகப் பேசியதாகக் கூறப்படுகிறது. இதுதொடர்பாக அசம் கான் மீது வழக்குப்பதிவு செய்யப்பட்டு விசாரணை நடந்து வந்தது.

    இதற்கிடையே, இந்த வழக்கு உத்தர பிரதேச சிறப்பு ஐகோர்ட்டில் நேற்று விசாரணைக்கு வந்தது. வழக்கை விசாரித்த ஐகோர்ட், சமாஜ்வாதி கட்சி தலைவர் அசம் கான் மற்றும் இருவருக்கு 3 ஆண்டு சிறைத் தண்டனையும் 2000 ரூபாய் அபராதமும் விதித்து தீர்ப்பளித்தது.

    இந்நிலையில், உ.பி.யின் ராம்பூர் தொகுதி எம்.எல்.ஏ பதவியில் இருந்து அசம் கானை தகுதிநீக்கம் செய்து பேரவை தலைவர் உத்தரவிட்டுள்ளார்.

    • சமாஜ்வாதி கட்சியில் முக்கிய பொறுப்பு வகிப்பவர் அசம் கான்.
    • கடந்த பொதுத்தேர்தலில் பிரதமர், முதல் மந்திரி ஆகியோரை அவதூறாகப் பேசியிருந்தார்.

    லக்னோ:

    சமாஜ்வாதி கட்சி தலைவர் அசம் கான் கடந்த 2019ம் ஆண்டு நடந்த பொதுத் தேர்தலில் பிரதமர் மோடி, முதல் மந்திரி யோகி ஆதித்யநாத் ஆகியோரை அவதூறாகப் பேசியதாகக் கூறப்படுகிறது.

    இதுதொடர்பாக அசம் கான் மீது வழக்குப்பதிவு செய்யப்பட்டு விசாரணை நடந்து வருகிறது.

    இந்நிலையில், இந்த வழக்கு உத்தர பிரதேச ஐகோர்ட்டில் விசாரணைக்கு வந்தது. வழக்கை விசாரித்த ஐகோர்ட், சமாஜ்வாதி கட்சி தலைவர் அசம் கான் மற்றும் இருவருக்கு 3 ஆண்டு சிறைத் தண்டனையும் 2000 ரூபாய் அபராதமும் விதித்து தீர்ப்பளித்தது.

    ×