என் மலர்
நீங்கள் தேடியது "சத்ரு"
- சேலம் மாவட்டம் ஏத்தாப்பூர் பகுதியில் அமைந்துள்ள உலகிலேயே மிக உயரமான 146 அடி உயரம் கொண்ட முத்து மலைமுருகன் கோவிலில் முதலாம் ஆண்டு சூரசம்கார விழா வருகிற 30-ந் தேதி விமர்சையாக நடைபெறுகிறது.
- இதில் ஆயிரக்கணக்கான் பக்தர்கள் கலந்து கொண்டனர்.
ஆத்தூர்:
சேலம் மாவட்டம் ஏத்தாப்பூர் பகுதியில் அமைந்துள்ள உலகிலேயே மிக உயரமான 146 அடி உயரம் கொண்ட முத்து மலைமுருகன் கோவிலில் முதலாம் ஆண்டு சூரசம்கார விழா வருகிற 30-ந் தேதி விமர்சையாக நடைபெறுகிறது.
இதையொட்டி தினம் தோறும் சத்ரு சம்கார சிறப்பு பூஜை, யாகம் நடைபெற்று வருகிறது. 3-ம் நாள் நிகழ்ச்சியாக காலை மூலவர் சுவாமிக்கு சிறப்பு அபிஷேகம் நடத்தப்பட்டு யாகம் நடைபெற்றது.
விழாவிற்கான ஏற்பாடு களை கோயிலின்நிர்வாகி ஸ்ரீதர் செய்தி ருந்தார். அர்ச்சகர் ஹரி தலைமை யிலான குழு வினர் சிறப்பு பூஜை, அலங்காரம், யாகத்துக்கான ஏற்பாடுகளை செய்தனர். இரவு கந்த புராண சொற்பொழிவு நடை பெற்றது. இந்த நிகழ்ச்சிகளில் சுற்று வட்டாரப் பகுதிகளில் இருந்து ஆயிரக்கணக்கான பக்தர்கள் திரளாக கலந்து கொண்டனர்.