என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "தூண் அமைக்கும் பணி"

    • இந்த சாலை யில் போக்குவரத்து நெரிசல் அதிகமாக காணப்படுகிறது.
    • நடுவில் ராட்சத எந்திரங்களை கொண்டு குழி தோண்டப்பட்டு உள்ளது. இந்த குழியை சுற்றிலும் இரும்பு தடுப்புகள் அமைக்கப்பட்டு உள்ளது.

    கோவை,

    கோவை-அவினாசி ரோட்டில் ஏராளமான கல்லூரிகள், ஆஸ்பத்திரிகள், வர்த்தக நிறுவனங்கள் அதிகமாக உள்ளது.

    இதனால் பரபரப்பாக காணப்படும் இந்த சாலை யில் போக்குவரத்து நெரிசல் அதிகமாக காணப்படுகிறது. இதனை குறைப்பதற்காக கோவை உப்பிலிபாளையம் சிக்னலில் இருந்து சின்னியம்பாளையம் வரை 10.1 கிலோ மீட்டர் தூரத்துக்கு ரூ.1.621 கோடி மதிப்பீட்டில் உயர்மட்ட மேம்பாலம் அமைக்கப்பட்டு வருகிறது.

    இந்த மேம்பாலம் அமைக்கும் பணி வேகமாக நடந்து வருகிறது. சின்னியம்பாளையத்தில் இருந்து தூண்கள் அமைக்கும் பணி தொடங்கியது. தற்போது தூண் அமைக்கும் பணி முக்கிய சிக்னலான அண்ணா சிலை சிக்னல் அருகே நடந்து வருகிறது. தூண்கள் அமைக்கும் பணிக்காக சிக்னலின் நடுவில் ராட்சத எந்திரங்களை கொண்டு குழி தோண்டப்பட்டு உள்ளது. இந்த குழியை சுற்றிலும் இரும்பு தடுப்புகள் அமைக்கப்பட்டு உள்ளது.

    இந்த பணிகள் நடைபெறுவதால் காலை மற்றும் மாலை நேரங்களில் போக்குவரத்து நெரிசல் அதிகமாக காணப்படுகிறது. இதன் காரணமாக வாகன ஓட்டிகள் அவதிக்குள்ளாகி உள்ளனர். 

    ×