என் மலர்
நீங்கள் தேடியது "ரூ.11.50 லட்சம்"
- ராஜேஷ்குமார் எம்.எல்.ஏ. அடிக்கல் நாட்டினார்
- மாங்கரையில் அமைந்துள்ள அங்கன்வாடி மையம் 23-ல் பழைய கட்டிடம் பழுதடைந்து காணப்பட்டது.
கன்னியாகுமரி:
கிள்ளியூர் சட்ட மன்ற தொகுதியில் கிள்ளியூர் பேரூராட்சிக் குட்பட்ட, மாங்கரையில் அமைந்துள்ள அங்கன்வாடி மையம் 23-ல் உள்ள பழைய கட்டிடம் பழுதடைந்து காணப்பட்டது.
இதனால் இந்த அங்கன் வாடி மையத்திற்கு புதிய கட்டிடம் கட்டிதர வேண்டும் என்று இப்பகுதி காங்கிரஸ் கட்சியினர், பொதுமக்கள் மற்றும் அங்கன்வாடி பணியாளர்கள் கிள்ளியூர் சட்டமன்ற உறுப்பினர் ராஜேஷ்குமாரிடம் கோரிக்கை விடுத்தனர்.
இவர்களின் கோரிக்கை யை ஏற்று மாங்கரையில் பழுதடைந்து காணப்பட்ட அங்கன்வாடி கட்டிடத்தை அகற்றி, குழந்தைகள் நலன் கருதி புதிய அங்கன்வாடி கட்டிடம் அமைக்க சட்ட மன்ற உறுப்பினர் ராஜேஷ் குமார் எம்.எல்.ஏ தனது தொகுதி மேம்பாட்டு திட்ட நிதியில் இருந்து ரூ.11.50 லட்சம் நிதி ஒதுக்கீடு செய்தார். இதனையடுத்து புதிய அங்கன்வாடி கட்டி டம் அமைக்க அடிக்கல் நாட்டி பணியை ராஜேஷ்குமார் எம்.எல்.ஏ. தொடங்கி வைத்தார்.
இந்நிகழ்ச்சியில் காங்கிரஸ் நிர்வாகிகள், அங்கன்வாடி பணியாளர், அங்கன்வாடி குழந்தைகள், பெற்றோர்கள் உட்பட பலர் கலந்துகொண்டனர்.