search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "பொருளாதார சுரண்டல்"

    • அபராதம் என்பது அடையாளமாக இருக்க வேண்டுமே தவிர, பகல் கொள்ளையாக இருக்க கூடாது என முன்னாள் அமைச்சர் வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியுள்ளார்.
    • இளைய சமுதாயத்தின் மீதான பொருளாதார சுரண்டல் எனவும் கூறியுள்ளார்.

    மதுரை

    முன்னாள் அமைச்சர் ஆர்.பி.உதயகுமார் இன்று வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது:-

    இருசக்கர வாகன ஓட்டிகளுக்கும், 4 சக்கர வாகன ஓட்டிகளுக்கும் சாலை விபத்து குறித்து விழிப்புணர்வுகளை ஏற்படுத்த வேண்டும்.

    சட்டம் மக்களை பாதுகாக்கத் தான். ஆனால் மக்களுக்கான பாதுகாப்பு சட்டம், தற்போது மக்களை வாட்டி வதைக்கும் நிலையில் உள்ளது.

    கடந்த ஒரு வார காலமாக எங்கு பார்த்தாலும் வேதனை குரலை இளைஞர் சமுதாயம் எழுப்பி வருகிறது.

    தமிழகத்தில் ஏறக்குறைய 2½ கோடி இருசக்கர வாகனங்கள் உள்ளன. இந்த 2½ கோடி இருசக்கர வாகனத்திற்கும் இந்த அரசு அபதாரம் விதிக்குமோ? இது மறைமுக பொருளாதார சுரண்டல் இல்லையா?

    இளைஞர்களை முடக்கும் வேலையா? அபராதம் என்பது அடையாளமாக இருக்க வேண்டுமே தவிர, அது பகல் கொள்ளையாக இருக்க கூடாது.

    இளைய சமுதாயத்தில் நம்பிக்கை ஒளி ஏற்ற வேண்டிய அரசு, இன்றைக்கு வாகன விதிமீறல் என்று சொல்லி அபாண்டமாக பொருளாதார சுரண்டலை இளைய சமுதாயத்தின் மீது ஏவி இருக்கிற மிகப்பெரிய தாக்குதலை நிறுத்த வேண்டும்.

    ஆகவே இந்த அரசு கணிவுடன் பரிசீலிக்க வேண்டும். அரசின் நடவடிக்கையில் மனித நேயம் இருக்க வேண்டும். நோக்கம் சரியானதாக இருக்க வேண்டும்.

    அரசு கட்டமைப்புகளை மேம்படுத்த வேண்டும். போக்குவரத்து விதிமுறைகளை கடுமையாக கடைபிடிக்கட்டும். ஆனால் அது அபராதம் என்பது அடையாளமாக இருக்க வேண்டுமே தவிர அபாயகரமான கட்டணமாக இருக்கக் கூடாது.

    இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.

    ×