search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "கலாம் உலக விருது"

    • இந்தியாவின் அனைத்து மாநிலங்களுடைய பெயர்களையும், யூனியன் பிரதேசங்களின் பெயர்களையும், அதனுடைய தலைநகரங்களையும் வரிசையாக 47 செகண்ட்டில் கூறி சாதனை படைத் துள்ளார்.
    • உலக நாடுகளில் உள்ள 60 நாடுகளின் பெயர் களையும், கொடிகளையும், தலைவர்களுடைய பெயர்களையும், இந்திய சுதந்திர போராட்டத்தின் வீரர்களின் பெயர்களையும் சரளமாக கூறும் திறமை பெற்றுள்ளார்.

    கன்னியாகுமரி:

    கூட்டாலுமூடு அருகே சென்னிநின்றவிளையை சேர்ந்தவர்கள் பிரேம் குமார்-ராணி தம்பதியினர். இவரது மகள் ஸ்ருதி (வயது 4).

    இவர் கூட்டாலுமூடு பத்ரேஸ்வரி மெட்ரிக் மேல்நிலை பள்ளியில் எல்.கே.ஜி. பயின்று வருகிறார். இவர் பிரிகேஜி பயிலும் போது பேச்சுப்போட்டி, ஓவியப்போட்டியில் முதல் பரிசு வென்றுள்ளார்.

    மேலும் இந்தியாவின் அனைத்து மாநிலங்க ளுடைய பெயர்களையும், யூனியன் பிரதேசங்களின் பெயர்களையும், அதனுடைய தலைநகரங்களையும் வரிசையாக 47 செகண்ட் டில் கூறி சாதனை படைத் துள்ளார்.

    தொடர்ந்து ஆங்கிலே எழுத்துக்களை இசட்டில் இருந்து திருப்பி ஏ வரை யிலும், உலக நாடுகளில் உள்ள 60 நாடுகளின் பெயர் களையும், அந்த நாட்டி னுடைய கொடிகளையும், தலைவர்களுடைய பெயர்களையும், இந்திய சுதந்திர போராட்டத்தின் வீரர்களின் பெயர்களையும் சரளமாக கூறும் திறமை பெற்றுள்ளார்.

    இவருடைய திறமையை பாராட்டி அப்துல் கலாம் வேர்ல்ட் ரெக்கார்டு என்ற அமைப்பு விருது வழங்கி உள்ளது. விருது பெற்ற மாணவி ஸ்ருதியை கூட்டாலுமூடுமெட்ரிக் மேல்நிலைப்பள்ளி தலைவர் குமார், செய லாளர் துளசிதாஸ் (பொறுப்பு), பொருளாளர் சவுந்தரராஜன், துணை தலைவர் முருகன், முதல்வர் நாராயணன், துணை முதல்வர் சந்தோஷ் உட்பட ஆசிரிய-ஆசிரியைகள் பாராட்டினர்.

    ×