search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "51-வது ஆண்டு"

    • தளவாய்சுந்தரம் எம்.எல்.ஏ. தகவல்
    • நாகர்கோவில் வாட்டர் டேங்க் ரோட்டில் உள்ள ஓய்.ஆர் மஹாலில் மாலை 5 மணிக்கு நடக்கிறது

    நாகர்கோவில்:

    கன்னியாகுமரி மாவட்டத்தில் அனைத்திந்திய அண்ணா திராவிட முன்னேற்றக் கழகத்தின் 51-வது ஆண்டு தொடக்க விழா மற்றும் முன்னாள் அமைச்சரும், முன்னாள் மாநிலங்களவை உறுப்பினருமான நாஞ்சில் வின்சென்ட்டு-க்கு புரட்சித்தலைவர் எம்.ஜி.ஆர் விருது வழங்கும் விழா நாகர்கோவில் வாட்டர் டேங்க் ரோட்டில் உள்ள ஓய்.ஆர் மஹாலில் நாளை(1-ந்தேதி) மாலை 5 மணிக்கு நடக்கிறது.

    விழாவிற்கு குமரி கிழக்கு மாவட்ட கழக அவைத்தலைவர் சேவியர்ம னோகரன் தலைமை தாங்குகிறார்.

    மாவட்ட அண்ணா தொழிற்சங்க செயலாளர் சுகுமாரன் வரவேற்று பேசுகிறார். மாவட்ட கழக இணைச் செயலாளர் சாந்தினிபகவதியப்பன், மாவட்ட கழக துணைச் செயலாளர் பார்வதி, மாவட்ட கழகப் பொருளா ளர் திலக், கிழக்கு பகுதி கழகச் செயலாளர் ஜெய கோபால், தெற்கு பகுதி கழகச் செயலாளர் முரு கேஷ்வரன், மேற்கு பகுதி கழகச் செயலாளர் ஜெவின் விசு, மாமன்ற உறுப்பினர் கோபால சுப்பிரமணியம்,

    சேகர், ஸ்ரீலிஜா, அனிலாசுகுமாரன், கிழக்கு மாவட்ட அம்மா பேரவைச் செயலாளர் ராஜாராம் ஆகியோர் முன்னிலை வகிக்கின்றனர். கழக அமைப்புச் செயலாளரும்,

    முன்னாள் அமைச்சரும், கன்னியாகுமரி சட்டமன்ற உறுப்பினருமான தளவாய்சுந்தரம் சிறப்புரையாற்றுகிறார்.

    அமைப்புச் செய லாளர்கள் சின்னத்துரை, சுதா பரமசிவன், தலைமைக் கழகப் பேச்சாளர் சுப்பையா பாண்டியன், கழக எம்.ஜி.ஆர் மன்ற இணைச் செயலாளர் கிருஷ்ணதாஸ், கழக எம்.ஜி.ஆர் இளைஞரணி இணைச் செயலாளர் சிவசெல்வராஜன், கழக வழக்கறிஞர் பிரிவு துணைச் செயலாளரும்,

    மாவட்ட கவுன்சிலருமான பரமேஸ்வரன், குமரி மேற்கு மாவட்ட கழகச் செயலாளர் ஜாண்தங்கம், குமரி மேற்கு மாவட்ட கழக அவைத்தலைவர் சிவ.குற்றாலம் ஆகியோர் சிறப்புரையாற்றுகிறார்கள்.

    விழாவில் முன்னாள் அமைச்சரும், முன்னாள் மாநிலங்களவை உறுப்பினருமான நாஞ்சில் வின்சென்டுக்கு எம்.ஜி.ஆர் விருதினை தளவாய்சுந்தரம் எம்.எல்.ஏ. வழங்குகிறார்.

    இதனைத் தொடர்ந்து நாஞ்சில் எம்.வின்சென்ட் ஏற்புரையாற்றுகிறார். மாமன்ற உறுப்பினர் அக்சயா கண்ணன் நன்றி கூறுகிறார்.

    இவ்விழாவில் மாநில, மாவட்ட, மாநகர, ஒன்றிய, நகர, பேரூராட்சி, ஊராட்சி, கிளைக் கழக நிர்வாகிகள், கழக செயல் வீரர்கள், உள்ளாட்சி பிரதிநிதிகள், கூட்டுறவு சங்கப் பிரதிநிதிகள், அண்ணா தொழிற்சங்க நிர்வாகிகள், கழகத் தொண்டர்கள் பெரும் திரளாக கலந்து கொண்டு சிறப்பிக்குமாறு அமைப்புச் செயலாளரும், முன்னாள் அமைச்சரும், கன்னியாகுமரி சட்டமன்ற உறுப்பினருமான தளவாய்சுந்தரம் கேட்டு கொண்டுள்ளார்.

    ×