search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "சிறப்பு தேர்வு"

    • மே மாதம் சிறப்பு தேர்வு நடத்தப்படுமென அண்ணாமலை பல்கலைக்கழகம் அறிவித்துள்ளது.
    • தொலைதூர கல்வி பயின்று தேர்ச்சி பெறாத மாணவர்களுக்கு சிறப்பு தேர்வு நடக்கவுள்ளது.

    திருப்பூர் :

    தொலைதூர கல்வி வழியில் பயின்று தேர்ச்சி பெறாத மாணவர்களுக்காக மே மாதம் சிறப்பு தேர்வு நடத்தப்படுமென அண்ணாமலை பல்கலைக்கழகம் அறிவித்துள்ளது.

    அண்ணாமலை பல்கலைக்கழக தொலைதூர கல்வி இயக்ககம், திருப்பூர் படிப்பு மைய பொறுப்பு அதிகாரி அருள்அரசு கூறியதாவது :- திருப்பூர் அண்ணாமலை பல்கலைக்கழகத்தில் தொலைதூர கல்வி பயின்று தேர்ச்சி பெறாத மாணவர்களுக்கு சிறப்பு தேர்வு நடக்கவுள்ளது. கடந்த, 2002 முதல் 2014 வரையிலான கல்வியாண்டில் தொலைதூர கல்வி வழியில் பயின்று தேர்ச்சி பெறாத மாணவர்களுக்காக வரும் மே 2023 - டிசம்பர் 2023 இரு பருவங்களில் சிறப்பு தேர்வு நடக்கிறது.இதில் மே மாதம் நடக்கவுள்ள சிறப்பு தேர்வை எழுத விரும்பும் மாணவர்கள் www.coe.annamalaiuniversity.ac.in என்ற பல்கலைக்கழக இணையதளத்தில் வரும் மார்ச் 31-ந் தேதிக்குள் பதிவு செய்யலாம். இந்த வாய்ப்பை பயன்படுத்தி தேர்ச்சி பெறாத மாணவர்கள் வெற்றி பெறலாம்.இவ்வாறு அவர் கூறினார். 

    • பல்கலைக்கழகம் சார்பில் வருகிற டிசம்பர் மாதம் தனித்தேர்வர்களுக்கான சிறப்பு தேர்வுகள் நடத்தப்பட உள்ளன.
    • பல்கலைக்கழகம் சார்பில் வருகிற டிசம்பர் மாதம் தனித்தேர்வர்களுக்கான சிறப்பு தேர்வுகள் நடத்தப்பட உள்ளன.

    திருப்பூர்:

    பாரதியார் பல்கலைக்கழகம் சார்பில் 1982 - 83 ம்கல்வியாண்டு முதல் 2006 - 07 வரையிலான காலத்தில் பயின்று தேர்வில் தோல்வியான தனித்தேர்வர்களுக்கு, பிரத்யேக தேர்வுகள் நடத்த கோரிக்கை விடப்பட்டது. இதையடுத்து பல்கலைக்கழகம் சார்பில் வருகிற டிசம்பர் மாதம் தனித்தேர்வர்களுக்கான சிறப்பு தேர்வுகள் நடத்தப்பட உள்ளன.

    இந்த சிறப்பு தேர்வுகளில் பங்கேற்க அபராதம் இன்றி வரும், 4-ந் தேதிக்குள் விண்ணப்பிக்க பல்கலைக்கழகம் அறிவுறுத்தியுள்ளது. அபராதத்துடன் செலுத்த, வருகிற 10-ந் தேதி இறுதிநாள் என தெரிவிக்கப்பட்டுள்ளது.இத்தேர்வுகளில் பங்கேற்க விரும்பும் மாணவர்கள், 2007 - 08ம் ஆண்டுக்கான பாடத்திட்டத்தை பின்பற்ற வேண்டும் என பல்கலைக்கழகம் தெரிவித்துள்ளது.

    ×