என் மலர்
நீங்கள் தேடியது "முக்கூடல்"
- செவிலியர் நோயாளிகளை தரக்குறைவாக பேசுவதாக கூறி பொதுமக்கள் ஆரம்ப சுகாதார நிலையத்தை முற்றுகையிட்டனர்.
- செவிலியரை இடமாற்றம் செய்வதாக டாக்டர் உறுதி அளித்ததால் அவர்கள் கலைந்து சென்றனர்.
முக்கூடல்:
முக்கூடலில் அமைந்துள்ள அரசு ஆரம்ப சுகாதார நிலையத்திற்கு தினமும் ஏராளமான நோயாளிகள் சிகிச்சைக்காக வந்து செல்கின்றனர்.
முற்றுகை
இங்கு பணியாற்றும் செவிலியர் ஒருவர், நோயாளிகளை தரக்குறைவாக பேசுவதுடன் அவர்களுக்கு விரைந்து முதலுதவி சிகிச்சை செய்வதில்லை, கர்ப்பிணிகளுக்கு பிரசவம் பார்க்காமல் வேறு ஆஸ்பத்திரிகளுக்கு அனுப்பி வைத்துவிடுவதாக கூறி அந்த பகுதியை சேர்ந்த பொதுமக்கள் ஆரம்ப சுகாதார நிலையத்தை முற்றுகையிட்டனர்.
இந்த முற்றுகை போராட்டத்திற்கு பொன்னரசு தலைமை தாங்கினார். பார்த்திபன், முத்துசாமி முன்னிலை வகித்தனர். பேரூராட்சி கவுன்சிலர்கள் வனிதா, சிந்துஜா, ராஜலட்சுமி, ஜெனிஷா மற்றும் பொதுமக்கள் பல்வேறு கோரிக்கை அங்கு இருந்த மருத்துவரிடம் தெரிவித்து முற்றுகையிட்டனர்.
கலைந்து சென்றனர்
உடனே செவிலியரை இடமாற்றம் செய்வதாக டாக்டர் உறுதி அளித்ததால் அவர்கள் கலைந்து சென்றனர். இதுகுறித்து அங்கிருந்த பணியாாளர்கள் கூறுகையில், இந்த மருத்துவமனையில் 5 டாக்டர்கள் பணியாற்ற வேண்டும். ஆனால் தற்போது 3 டாக்டர்கள் மட்டுமே பணியாற்றி வருகிறார்கள். மேலும் ஒரு ஆண் செவிலியர் மற்றும் ஒரு பெண் செவிலியர் பற்றாக்குறை உள்ளது. இதனால் கூட பணிகள் தாமதமாகலாம் என்றனர்.
- பங்குனி உத்திர திருவிழாவை முன்னிட்டு திருவிளக்கு பூஜை நடைபெற்றது.
- தினமும் மதியம், பகல்- இரவு நேரங்களில் சிறப்பு பூஜைகள் நடைபெற்று வருகிறது.
முக்கூடல்:
முக்கூடல் அருகே உள்ள சடையப்பபுரத்தில் அமைந்துள்ள இந்து நாடார்களுக்கு பாத்தியப்பட்ட சந்தன மாரியம்மன் கோவிலில் பங்குனி உத்திர திருவிழாவை முன்னிட்டு திருவிளக்கு பூஜை நடைபெற்றது. கடந்த செவ்வாய்க்கிழமை கால்நாட்டு விழா நடைபெற்றது. அதனை தொடர்ந்து தினமும் மதியம், பகல்- இரவு நேரங்களில் சிறப்பு பூஜைகள் நடைபெற்று வருகிறது. தொடர்ந்து தினமும் அன்னதானம் நடைபெறுகிறது. விழாவிற்கான ஏற்பாடுகளை கோவில் டிரஸ்டி ஹரிராம் சேட் தலைமையில் விழா குழுவினர் செய்துள்ளனர்.
- தாமிரபரணி ஆற்றில் 50 ஆயிரம் கன அடி வெள்ள நீர் சென்று கொண்டிருக்கிறது.
- தொடர்ந்து ஆற்றில் வெள்ளம் அதிகரித்ததால் நீரேற்று நிலையத்திலேயே சிக்கிக்கொண்டனர்.
வி.கே.புரம்:
நெல்லை மாவட்டம் அம்பை, முக்கூடல், வீரவநல்லூர் உள்பட சுற்றுவட்டார பகுதிகள் மற்றும் மேற்கு தொடர்ச்சி மலையில் உள்ள மாஞ்சோலை தேயிலை தோட்ட பகுதிகளில் நேற்று காலையில் இருந்து தொடர் மழை பெய்து வருகிறது.
இதனால் பல்வேறு பகுதிகளில் குளங்களில் இருந்து உபரி நீர் வெளியேறி குடியிருப்புகளை சூழ்ந்துள்ளது. மேலும் தாமிரபரணி ஆற்றில் தற்போது சுமார் 50 ஆயிரம் கன அடி வரை வெள்ள நீர் சென்று கொண்டிருக்கிறது.
இந்நிலையில் முக்கூடல் பகுதி தாமிரபரணி ஆற்றங்கரை ஓரத்தில் உள்ள நீரேற்று நிலை யத்திற்கு அங்கு பணி யாற்றும் ஊழியர்களான ராஜரத்தினம், லோகராஜ், சங்கர சுப்பிரமணியன், சங்கர நாராயணன் ஆகிய 4 பேர் சென்றுள்ளனர். தொடர்ந்து ஆற்றில் வெள்ளம் அதிகரித்ததால் அவர்கள் அங்கிருந்து வெளியேற முடியாமல் நீரேற்று நிலையத்திலேயே சிக்கிக்கொண்டனர்.
இதுகுறித்து தகவல் அறிந்த மாவட்ட தீயணைப்பு நிலைய அதிகாரி வினோத்குமார் தலைமையில், அம்பை தீயணைப்பு நிலைய அலுவலர் பலவேசம் மற்றும் சேரன்மகாதேவி தீயணைப்புத் துறையினர் அங்கு விரைந்து சென்றனர்.
பின்னர் அவர்கள் கயிறு கட்டி, கடும் வெள்ளத்தில் நீரேற்று நிலையத்திற்குள் சென்று அங்கு சிக்கியிருந்த 4 பேரையும் அதே கயிறு மூலமாக பத்திரமாக கரைக்கு அழைத்து வந்தனர். இந்த சம்பவம் அப்பகுதியில் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.
- 7 பேர் கும்பல் வழிமறித்து தாக்குதல்.
- தோள்பட்டை, கால் உள்ளிட்ட இடங்களில் சரமாரியாக அரிவாளால் வெட்டியது.
நெல்லை:
நெல்லை மாவட்டம் முக்கூடல் அருகே உள்ள பள்ளக்கால் பொதுக்குடி கிராமம் பள்ளிவாசல் தெருவை சேர்ந்தவர் செய்யது மசூது (வயது 55). இவர் அப்பகுதியில் பிள்ளையார்கோவில் தெருவில் உள்ள ஒரு ஓட்டலில் ஊழியராக வேலை பார்த்து வருகிறார்.
வழக்கம்போல் நேற்று இரவு 11.25 மணி அளவில் அவர் ஓட்டலில் வேலையை முடித்துவிட்டு வீட்டுக்கு நடந்து சென்று கொண்டிருந்தார். அவர் அம்பை-ஆலங்குளம் சாலையில் சென்றபோது எதிரே 2 மோட்டார் சைக்கிள்களில் வந்த 7 பேர் கும்பல் அவரை வழிமறித்தது. இதனால் பயந்துபோன மசூது அருகில் உள்ள தெருவுக்குள் ஓட்டம் பிடித்தார்.

உடனே மோட்டார் சைக்கிளில் இருந்து இறங்கிய 4 பேர் கும்பல் மசூதுவை ஓட ஓட விரட்டிச்சென்று கை, தோள்பட்டை, கால் உள்ளிட்ட இடங்களில் சரமாரியாக அரிவாளால் வெட்டியது. பின்னர் கண்ணிமைக்கும் நேரத்தில் அந்த கும்பல் அங்கிருந்து தப்பிச்சென்றது. இதனை அந்த வழியாக சென்றவர்கள் பார்த்து பாப்பாக்குடி போலீசாருக்கு தகவல் தெரிவித்தனர்.
தகவலின்பேரில் சம்பவ இடத்திற்கு விரைந்து வந்த போலீசார் காயம் அடைந்த மசூதுவை மீட்டு அம்பை அரசு ஆஸ்பத்திரியில் சிகிச்சைக்கு சேர்த்தனர். அப்போது அந்த பகுதியில் பள்ளிவாசல் தெருவில் உள்ள ஒருவீட்டில் பெட்ரோல் குண்டு வீசப்பட்டதாக கிடைத்த தகவல் அடிப்படையில் அங்கு போலீசார் விரைந்து சென்றனர்.
அப்போது அந்த பகுதியில் வசிக்கும் பாய் வியாபாரியான மைதீன்(52) என்பவரது வீட்டின் கதவு மற்றும் ஜன்னலை ஒரு கும்பல் அரிவாளால் வெட்டிவிட்டு பெட்ரோல் குண்டை மர்ம கும்பல் வீசிவிட்டு சென்றது தெரியவந்தது.
அதன்பின்னரே அந்த சம்பவத்தில் தொடர்புடைய அதே கும்பல் ஓட்டல் தொழிலாளியான மசூதுவை வெட்டிவிட்டு சென்றுள்ளது. அந்த கும்பல் பாப்பாக்குடி மற்றும் நந்தன்தட்டை பகுதிகளில் உள்ள 6 வீடுகளின் கதவுகளை அரிவாளால் வெட்டியதோடு, முக்கிய பகுதிகளில் உள்ள சி.சி.டி.வி. காமிராக்களையும் உடைத்து விட்டு தப்பிச்சென்றது.
இந்த சம்பவம் தொடர்பாக பாப்பாக்குடி போலீஸ் இன்ஸ்பெக்டர் (பொறுப்பு) ரமேஷ் கண்ணா வழக்குப்பதிவு செய்து மர்ம கும்பலை தேடி வருகின்றனர்.
இதற்கிடையில் மசூதுவை வெட்ட அரிவாளுடன் மர்ம கும்பல் ஓடும் சி.சி.டி.வி. காட்சிகள் வெளியாகி பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது. நள்ளிரவில் கும்பல் பெட்ரோல் குண்டு வீசி அரிவாளால் வாலிபரை வெட்டிய சம்பவத்தால் அப்பகுதி மக்கள் அதிர்ச்சி அடைந்துள்ளனர்.
இதையடுத்து மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு சிலம்பரசன் உத்தரவின்பேரில் பாப்பாக்குடி, பள்ளக்கால் பொதுக்குடி உள்ளிட்ட இடங்களில் போலீஸ் பாதுகாப்பு போடப்பட்டுள்ளது. மேலும் இடைகால் உள்ளிட்ட முக்கிய சாலை சந்திப்புகளில் பேரிகார்டுகள் போடப்பட்டு போலீசார் வாகன சோதனையில் ஈடுபட்டு வருகின்றனர்.
மேலும் போலீஸ் சூப்பிரண்டு சிலம்பரசன் மேற்பார்வையில் 2 தனிப்படைகள் அமைக்கப்பட்டு மர்ம கும்பலை தேடி வருகின்றனர்.
இதுகுறித்து போலீசார் நடத்திய விசாரணையில் திடுக்கிடும் தகவல்கள் வெளியாகி உள்ளது. பள்ளக்கால் பொதுக்கு டியில் உள்ள அரசு பள்ளியில் படித்துக் கொண்டிருந்த பாப்பாக்குடியை சேர்ந்த செல்வசூர்யா என்ற மாணவன் கடந்த 2022-ம் ஆண்டு பள்ளியில் நடந்த தகராறில் கொலை செய்யப்பட்டார்.
இந்த சம்பவம் அதிர்வலைகளை ஏற்படுத்திய நிலையில் பள்ளக்கால் பொதுக்குடி, பாப்பாக்குடி உள்ளிட்ட பகுதிகளை சேர்ந்த சிலர் கைது செய்யப்பட்டனர்.
இந்நிலையில் செல்வசூர்யாவின் கொலைக்கு பழிக்குப்பழி வாங்கும் விதமாக அவருக்கு நெருக்கமானவர்கள் இந்த சம்பவத்தில் ஈடுபட்டிருப்பது தெரியவந்துள்ளது. அந்த முன்விரோதத்தில் அவரது கொலையில் தொடர்புடையவர்களின் உறவினர்கள் வீடுகளை குறி வைத்து அரிவாளால் கதவுகளை வெட்டியும், பெட்ரோல் குண்டு வீசியும் அட்டகாசம் செய்துள்ளனர்.
மேலும் சமீபத்தில் அவர்கள் மோட்டார் சைக்கிளில் ஊருக்குள் வேகமாக சென்றதை தட்டிக் கேட்டவர் வீடு, தங்களுக்கு வழக்கமாக கடையில் பொருட்களை கடனாக வழங்கிய நிலையில் தற்போது பொருட்கள் வழங்க மறுத்த கடைக்காரர் வீடு என அனைத்து தரப்பினரின் வீடுகளையும் அந்த கும்பல் அரிவாளால் வெட்டியது விசாரணையில் தெரியவந்துள்ளது.
இந்த சம்பவத்தில் ஈடுபட்டவர்களில் பெரும்பாலானோர் 18 வயதுக்கும் கீழ் உள்ளவர்கள் என்பது தெரிய வந்துள்ளது. அவர்களை கைது செய்ய போலீசார் தீவிர தேடுதல் வேட்டை நடத்தி வருகின்றனர்.
- காரை அரிவாளால் வெட்டியும், வீட்டு ஜன்னல் கண்ணாடிகளை உடைத்தும் ரகளை.
- முக்கூடல் போலீசார் 3 பேரையும் தேடி வருகின்றனர்.
முக்கூடல்:
நெல்லை மாவட்டம் முக்கூடல் அருகே உள்ள வடக்கு அரியநாயகிபுரத்தை சேர்ந்தவர் ராஜேந்திரன். இவரது மகன் செல்வ குமரேசன் (வயது 38).
இவர் நக்சல் தடுப்பு பிரிவில் போலீசாக பணியாற்றி வருகிறார். இவர் நேற்று வேலை விஷயமாக மதுரையில் உள்ள நக்சல் தடுப்பு பிரிவு அலுவலகத்துக்கு சென்றிருந்தார்.
இந்நிலையில் நேற்று இரவு மோட்டார் சைக்கிளில் வந்த 3 பேர் கும்பல் வடக்கு அரியநாயகிபுரம் ஊருக்குள் சென்றது. அங்கிருந்த செல்வகுமரேசன் வீட்டுக்குள் புகுந்த அந்த கும்பல் வீட்டின் முன்பு நிறுத்தப்பட்டிருந்த அவரது காரை அரிவாளால் வெட்டியும், வீட்டு ஜன்னல் கண்ணாடிகளை உடைத்தும் ரகளையில் ஈடுபட்டது.
பின்னர் அரிவாளை வீட்டின் கதவு மேல் வீசிவிட்டு அந்த கும்பல் அங்கிருந்து தப்பிச்சென்றது. இந்த சம்பவம் தொடர்பாக வீட்டில் இருந்த செல்வ குமரேசன் குடும்பத்தினர், மதுரைக்கு சென்றிருந்த செல்வகுமரேசனிடம் செல்போனில் தகவல் தெரிவித்தனர். அவர் உடனடியாக முக்கூடல் போலீசாருக்கு தகவல் தெரிவித்தார்.
இதையடுத்து போலீசார் அங்கு விரைந்து சென்று செல்வகுமரேசன் வீட்டில் பொருத்தப்பட்டிருந்த சி.சி.டி.வி. காமிராக்களை ஆய்வு செய்தபோது, 3 பேர் கும்பல் மோட்டார் சைக்கிளில் வந்து அட்டகாசத்தில் ஈடுபட்டது தெரியவந்தது.
அதில் மோட்டார் சைக்கிளை ஓட்டிய நபர் ஹெல்மட் அணிந்திருந்த நிலையில், பின்னால் அமர்ந்திருந்த நபரின் முகம் தெளிவாக தெரிந்தது.
அந்த காட்சிகளை கொண்டு நடத்திய விசாரணையில், அட்டகாசத்தில் ஈடுபட்டவர்கள் சேரன்மகாதேவி அருகே உள்ள சங்கன்திரடு பகுதியை சேர்ந்த முப்புடாதி (வயது 28), அவரது நண்பர் முத்துக்குமார் (27) மற்றும் அவரது கூட்டாளி ஒருவர் என்பது தெரியவந்தது.
இதையடுத்து அவர்கள் எதற்காக செல்வகுமரேசன் வீட்டில் புகுந்தனர் என்பது குறித்து விசாரித்தபோது திடுக்கிடும் தகவல்கள் வெளியாகின.
கடந்த 3 மாதங்களுக்கு முன்பு செல்வகுமரேசன் சுத்தமல்லி போலீஸ் நிலையத்தில் தலைமை காவலராக பணியாற்றி வந்தார். அப்போது முப்புடாதியும், முத்துக்குமாரும் அரிய நாயகிபுரம் காட்டுப்பகுதியில் அமர்ந்து மதுகுடித்துவிட்டு தகராறு செய்ததாகவும், அதனை அந்த வழியாக சென்ற செல்வகுமரேசன் தட்டி கேட்டதாகவும் கூறப்படுகிறது.
இதுதொடர்பாக அவர்களுக்குள் வாக்குவாதம் ஏற்பட்ட நிலையில், அங்கு வந்த செல்வகுமரேசனின் உறவினர் ஒருவர், முப்புடாதியை தாக்கியுள்ளார். இதனால் அவர்களுக்குள் ஏற்பட்ட முன்விரோதத்தில் நேற்று இரவு முப்புடாதி தனது கூட்டாளிகளுடன் வந்து தாக்குதல் சம்பவத்தில் ஈடுபட்டது தெரியவந்தது.
இதையடுத்து 3 பேரையும் போலீசார் வலைவீசி தேடி வருகின்றனர். சம்பவத்தில் தொடர்புடைய முப்புடாதி மீது 2 கொலை வழக்குகளும், முத்துகுமார் மீது சில வழக்குகளும் நிலுவையில் இருக்கிறது. இதனால் இவர்கள் பெயர் ரவுடிகள் பட்டியலில் வைக்கப்பட்டுள்ளதாகவும் போலீசார் தெரிவித்தனர்.
மேலும் முப்புடாதி அவரது நண்பருடன் இணைந்து அரிவாளால் தாக்குவது, பின்னர் மோட்டார் சைக்கிளில் தப்பிச்செல்வது உள்ளிட்ட சி.சி.டி.வி. காட்சிகள் தற்போது சமூக வலைதளங்களில் வைரலாகி வருகிறது. அதன் அடிப்படையில் முக்கூடல் போலீசார் 3 பேரையும் தேடி வருகின்றனர்.