search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "முக்கூடல்"

    • பங்குனி உத்திர திருவிழாவை முன்னிட்டு திருவிளக்கு பூஜை நடைபெற்றது.
    • தினமும் மதியம், பகல்- இரவு நேரங்களில் சிறப்பு பூஜைகள் நடைபெற்று வருகிறது.

    முக்கூடல்:

    முக்கூடல் அருகே உள்ள சடையப்பபுரத்தில் அமைந்துள்ள இந்து நாடார்களுக்கு பாத்தியப்பட்ட சந்தன மாரியம்மன் கோவிலில் பங்குனி உத்திர திருவிழாவை முன்னிட்டு திருவிளக்கு பூஜை நடைபெற்றது. கடந்த செவ்வாய்க்கிழமை கால்நாட்டு விழா நடைபெற்றது. அதனை தொடர்ந்து தினமும் மதியம், பகல்- இரவு நேரங்களில் சிறப்பு பூஜைகள் நடைபெற்று வருகிறது. தொடர்ந்து தினமும் அன்னதானம் நடைபெறுகிறது. விழாவிற்கான ஏற்பாடுகளை கோவில் டிரஸ்டி ஹரிராம் சேட் தலைமையில் விழா குழுவினர் செய்துள்ளனர். 

    • செவிலியர் நோயாளிகளை தரக்குறைவாக பேசுவதாக கூறி பொதுமக்கள் ஆரம்ப சுகாதார நிலையத்தை முற்றுகையிட்டனர்.
    • செவிலியரை இடமாற்றம் செய்வதாக டாக்டர் உறுதி அளித்ததால் அவர்கள் கலைந்து சென்றனர்.

    முக்கூடல்:

    முக்கூடலில் அமைந்துள்ள அரசு ஆரம்ப சுகாதார நிலையத்திற்கு தினமும் ஏராளமான நோயாளிகள் சிகிச்சைக்காக வந்து செல்கின்றனர்.

    முற்றுகை

    இங்கு பணியாற்றும் செவிலியர் ஒருவர், நோயாளிகளை தரக்குறைவாக பேசுவதுடன் அவர்களுக்கு விரைந்து முதலுதவி சிகிச்சை செய்வதில்லை, கர்ப்பிணிகளுக்கு பிரசவம் பார்க்காமல் வேறு ஆஸ்பத்திரிகளுக்கு அனுப்பி வைத்துவிடுவதாக கூறி அந்த பகுதியை சேர்ந்த பொதுமக்கள் ஆரம்ப சுகாதார நிலையத்தை முற்றுகையிட்டனர்.

    இந்த முற்றுகை போராட்டத்திற்கு பொன்னரசு தலைமை தாங்கினார். பார்த்திபன், முத்துசாமி முன்னிலை வகித்தனர். பேரூராட்சி கவுன்சிலர்கள் வனிதா, சிந்துஜா, ராஜலட்சுமி, ஜெனிஷா மற்றும் பொதுமக்கள் பல்வேறு கோரிக்கை அங்கு இருந்த மருத்துவரிடம் தெரிவித்து முற்றுகையிட்டனர்.

    கலைந்து சென்றனர்

    உடனே செவிலியரை இடமாற்றம் செய்வதாக டாக்டர் உறுதி அளித்ததால் அவர்கள் கலைந்து சென்றனர். இதுகுறித்து அங்கிருந்த பணியாாளர்கள் கூறுகையில், இந்த மருத்துவமனையில் 5 டாக்டர்கள் பணியாற்ற வேண்டும். ஆனால் தற்போது 3 டாக்டர்கள் மட்டுமே பணியாற்றி வருகிறார்கள். மேலும் ஒரு ஆண் செவிலியர் மற்றும் ஒரு பெண் செவிலியர் பற்றாக்குறை உள்ளது. இதனால் கூட பணிகள் தாமதமாகலாம் என்றனர்.

    ×