என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "ரோப்கார் நிறுத்தம்"

    • வழக்கமாக வருடத்திற்கு ஒருமாதமும், மாதத்திற்கு ஒருநாளும் பராமரிப்பு பணிக்காக ரோப்கார் நிறுத்தப்படுகின்றது.
    • வடகயிறுகள் சீரமைக்கப்பட்டு இழுவைக்காக புதிய ஆயில் மாற்றப்படுகிறது.

    பழனி:

    தமிழ்கடவுள் முருகனின் 3-ம் படை வீடான பழனிக்கு தமிழகம் மட்டுமின்றி வெளிமாநிலங்கள், வெளிநாடுகளில் இருந்து ஏராளமான பக்தர்கள் வருகின்றனர். அடிவாரத்தில் இருந்து படிப்பாதை, யானைப்பாதை, மின்இழுவை ரெயில், ரோப்கார் மூலம் மலைக்கோவிலுக்கு செல்கின்றனர். இதில் பக்தர்கள் ரோப்காரில் செல்வதற்கு ஆர்வம் காட்டி வருகின்றனர்.

    3 நிமிடத்தில் மலைக்கோவிலை எட்டிவிடலாம். மேலும் இயற்கை எழில்கொஞ்சும் பழனி மலையை கண்டு ரசித்தவாறு செல்லலாம் என்பதால் குழந்தைகள் முதல் பெரியவர்கள் வரை இதில் பயணம் செய்ய ஆர்வம் காட்டுகின்றனர். வழக்கமாக வருடத்திற்கு ஒருமாதமும், மாதத்திற்கு ஒருநாளும் பராமரிப்பு பணிக்காக ரோப்கார் நிறுத்தப்படுகின்றது. அப்போது வடகயிறுகள் சீரமைக்கப்பட்டு இழுவைக்காக புதிய ஆயில் மாற்றப்படுகிறது.

    அதன்படி இன்று மாதாந்திர பராமரிப்பு பணிக்காக ரோப்கார் நிறுத்தப்படுவதாக கோவில் நிர்வாகம் அறிவித்தது. பக்தர்கள் மாற்றுப்பாதையிலும், மின்இழுவை ரெயிலையும் பயன்படுத்த அறிவுறுத்தப்பட்டனர். இன்று கோவிலுக்கு பக்தர்கள் வருகை குறைவாகவே இருந்தது. தொடர்ந்து மழை பெய்ததால் குறைந்த அளவு பக்தர்கள் மலைக்கோவிலுக்கு சென்றனர்.

    மேலும் பஸ்நிலையம், அடிவாரம் பகுதியிலும் பக்தர்கள் வருகை குறைவாகவே காணப்பட்டது.

    ×