search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "ரூ.50 கோடி"

    • அமைச்சர் மனோ தங்கராஜ் தகவல்
    • நிகழ்ச்சியில் அனைத்துத்துறை அதிகாரிகள் கலந்து கொண்டு 160-க்கும் மேற்பட்ட மனுக்கள் பெற்றனர்.

    கன்னியாகுமரி:

    கன்னியாகுமரி மாவட்டம் குழித்துறை நகராட்சிக்குட்பட்ட வெட்டுமணி ஒய்.எம்.சி.ஏ. கலையரங்கில் பொதுமக்களின் கோரிக்கை மனுக்களை பெறும் தீர்வுதளம் நிகழ்ச்சி நடைபெற்றது.

    நிகழ்ச்சியில் அமைச்சர் மனோ தங்கராஜ் கலந்து கொண்டு பொதுமக்களின் பல்வேறு கோரிக்கை மனுக்களை பெற்றார். மேலும் அந்த கோரிக்கை மனுக்கள் மீது உடனடி நடவடிக்கை மேற்கொள்ள துறை சார்ந்த அலுவலர்களுக்கு அறிவுறுத்தினார். பின்னர் அவர் கூறியதாவது:-

    கன்னியாகுமரி மாவட்ட நெடுஞ்சாலைத் துறைக்கென ரூ.165 கோடியும், பழுதடைந்த நெடுஞ்சாலைகளை சீரமைப்பதற்காக ரூ.15 கோடியும் நிதி ஒதுக்கீடு பெற்று பணிகள் நடைபெற்று வருகிறது. ஊரக மற்றும் நகர்புற உள்ளாட்சி சாலைகளை சீரமைப்பதற்கென ரூ.200 கோடி நிதி ஒதுக்கீடு செய்யப்பட்டு பணிகள் நடைபெற்று வருகிறது. மாவட்டத்திற்குட்பட்ட திருக்கோவில்களை சீரமைப்பதற்கு ரூ.50 கோடி நிதி ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது.

    கன்னியாகுமரி மாவட்டத்தின் பல்வேறு பகுதிகளில் குப்பைகள் தேங்கியிருந்த நிலையில் தற்போது அந்த குப்பைகளை படிப்படியாக அகற்றிவருவதோடு, பிளாஸ்டிக் இல்லா மாவட்டமாக மாற்றுவதற்கு பல்வேறு முன்னெடுப்பு பணிகள் மேற்கொள்ளப்பட்டு வருகிறது.

    கன்னியாகுமரி மாவட்டத்தை குப்பையில்லா மாவட்டமாக மாற்றிட பொதுமக்கள் அனைவரும் ஆதரவு வழங்க வேண்டும்.

    இவ்வாறு அவர் கூறினார்.

    நிகழ்ச்சியில் மார்த்தாண்டம் தொழில் வர்த்தக சங்க தலைவர் அல்அமீன், செயலாளர் கார்த்திகேயன் முதல் மனுவை கொடுத்தனர். மனுவில், மார்த்தாண்டம் மேம்பாலத்தின் கீழ் பகுதியில் உள்ள சாலையை முழுமையாக தார் போட்டு சீரமைத்து அனைத்து பஸ்களையும் இயக்க வேண்டும் என கூறியிருந்தனர்.

    நிகழ்ச்சியில் அனைத்துத்துறை அதிகாரிகள் கலந்து கொண்டு 160-க்கும் மேற்பட்ட மனுக்கள் பெற்றனர்.

    ×