என் மலர்
நீங்கள் தேடியது "6 அடி"
- தீயணைப்பு துறையினர் மீட்டனர்
- வனத்துறையினரிடம் ஒப்படைத்தனர்
கன்னியாகுமரி:
தக்கலை அருகே பத்மனாபபுரம் செக்கால தெருவை சேர்ந்தவர் நடராஜபிள்ளை. இவரது வீட்டுக்கு பின்புறம் கோழி கூடு உள்ளது. இன்று காலை கோழி கூட்டை திறக்க சென்ற போது ஒரு கோழி செத்து கிடந்தது. கூண்டு வழியாக பார்த்த போது ஒரு பாம்பு நெளிந்த படி இருந்தது.
உடனே தக்கலை தீயணைப்பு துறைக்கு தகவல் கொடுத்தார். தீயணைப்பு அலுவலர்ஜீவன்ஸ் தலைமையில் சம்பவ இடத்திற்கு விரைந்து சென்றனர். அங்கு சென்று பார்த்த போது விஷம் கூடிய 6 அடி நல்ல பாம்பு என தெரியவந்தது. உடனே பாம்பு பிடிக்கும் கருவி மூலம் அதனை பிடித்து வனத்துறையினரிடம் ஒப்படைத்தனர்.