என் மலர்
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
நீங்கள் தேடியது "நீர் வெளியேற்றம்"
- ஒகேனக்கல்லுக்கு நீர்வரத்து நேற்று வினாடிக்கு 75 ஆயிரம் கனஅடியாக அதிகரித்தது.
- இன்று காலை அணைக்கு நீர்வரத்து வினாடிக்கு 1,25,500 கனஅடியாக இருந்தது.
தமிழகத்தின் மிகப்பெரிய நீர் ஆதாரமாக மேட்டூர் அணை விளங்குகிறது. இந்த அணையின் மொத்த உயரம் 124 அடி ஆகும். அணையின் பாதுகாப்பு கருதி 120 அடி தண்ணீர் தேக்கி வைக்கப்படும். அணையில் இருந்து ஆண்டுதோறும் ஜூன் மாதம் 12-ந் தேதி பாசனத்துக்கு தண்ணீர் திறப்பது வழக்கம்.
ஆனால் இந்த ஆண்டு பருவமழை தாமதமானதால் அணையில் இருந்து கடந்த 28-ந் தேதி காவிரி டெல்டா பாசனத்துக்கு வினாடிக்கு 12 ஆயிரம் கனஅடி வீதம் தண்ணீர் திறந்து விடப்பட்டது. இதையடுத்து அணைக்கு நீர்வரத்து சீராக உயர்ந்து வந்தது. நேற்று முன்தினம் அணை நீர்மட்டம் 118.41 அடியாக உயர்ந்ததால் முதற்கட்ட வெள்ள அபாய எச்சரிக்கை விடப்பட்டது.
இதனிடையே நேற்று கர்நாடக அணைகளில் இருந்து வினாடிக்கு 2 லட்சத்து 30 ஆயிரம் கன அடியாக தண்ணீர் திறப்பு அதிகரிக்கப்பட்டது.
இதனால் ஒகேனக்கல்லுக்கு நீர்வரத்து நேற்று வினாடிக்கு 75 ஆயிரம் கனஅடியாக அதிகரித்தது. ஒகேனக்கல் ஐந்தருவிகளில் பாறைகளை மூழ்கடித்தபடி தண்ணீர் சீறிப்பாய்ந்து சென்றது.
இதன் தொடர்ச்சியாக மேட்டூர் அணைக்கும் நேற்று நீர்வரத்து அதிகரித்தது. இன்று காலை அணைக்கு நீர்வரத்து வினாடிக்கு 1,25,500 கனஅடியாக இருந்தது. அந்த தண்ணீர் அப்படியே வெளியேற்றப்பட்டது.
அணை மின் நிலையம் மற்றும் சுரங்க மின் நிலையம் வழியாக 21,500 கன அடி, 16 கண் மதகு வழியாக 1,03,500 கன அடி, கிழக்கு மற்றும் மேற்கு கால்வாயில் 500 கன அடி வீதம் நீர் திறக்கப்பட்டது.
இந்நிலையில், மேட்டூர் அணைக்கு வரும் நீரின் அளவு வினாடிக்கு 1,25,500 கன அடியில் இருந்து 1,70,500 கன அடியாக அதிகரித்துள்ளது.
மேட்டூர் அணை முழு கொள்ளளவை எட்டியுள்ள நிலையில் அணைக்கு வரும் நீர் அப்படியே வெளியேற்றப்படுகிறது.
- கரையோரம் வசிக்கும் பொதுமக்களுக்கு வெள்ள அபாய எச்சரிக்கை
- பாதுகாப்பாக இருக்க கலெக்டர் அறிவுறுத்தல்
வாலாஜா:
ராணிப்பேட்டை மாவட்டத்தில் தொடர் மழை காரணமாக வாலாஜா தடுப்பணைக்கு நீர் வரத்து அதிகரித்துள்ளதை தொடர்ந்து, மகேந்திரவாடி, சக்கரமல்லூர், தூசி, காவேரிப்பாக்கம் ஆகிய பாசன ஏரிகளுக்கு விநாடிக்கு 855 கனஅடி நீர் வெளியேற்றப்பட்டுவதால் கரையோரம் வசிக்கும் பொதுமக்கள் பாதுகாப்பாக இருக்க கலெக்டர் பாஸ்கர பாண்டியன் அறிவுறுத்தியுள்ளார்.
855 கனஅடி நீர் வெளியேற்றம்
வாலாஜாபேட்டை அருகே உள்ள அணைக்கட்டு தடுப்பணைக்கு தொடர் மழை காரணமாக நீர் வரத்து அதிகரித்துள்ளது.
இதன் காரணமாக காவேரிப்பாக்கம் பெரிய ஏரிக்கு 257 கனஅடியும், மகேந்திரவாடி ஏரிக்கு 110 கன அடியும், சக்கரமல்லூர் ஏரிக்கு140 கன அடியும், தூசி ஏரிக்கு 365 கன அடி தண்ணீர் வெளியேற்றப்பட்டு வருகிறது.மொத்தமாக வாலாஜாப்பேட்டை அனைக்கட்டு தடுப்பணையிலிருந்து விநாடிக்கு 872கன அடி தண்ணீர் வெளி யேற்றப்பட்டு வருகிறது.
இதனால் பாசன ஏரிகளுக்கு செல்லும் ஓடைகளில் நீர் வரத்து அதிகரித்துள்ளதால் கரையோரங்களில் வசிக்கும் பொதுமக்கள் பாதுகாப்பாக இருக்க ராணிப்பேட்டை கலெக்டர் பாஸ்கர பாண்டியன் அறிவுறுத்தியுள்ளார்.
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்