என் மலர்
நீங்கள் தேடியது "ஏபி டிவில்லியர்ஸ்"
- பிலிப் சால்ட் போன்ற வீரர்கள் இருக்கிறார்கள்.
- கோலி கடந்த பல வருடங்களைப் போல் இம்முறையும் போட்டியை கட்டுப்படுத்தும் அளவுக்கு விளையாட வேண்டும்.
ஐபிஎல் தொடர் மார்ச் 22-ம் தேதி கொல்கத்தாவில் தொடங்குகிறது. தொடரின் முதல் போட்டியில் நடப்புச் சாம்பியன் கொல்கத்தா அணியை பெங்களூரு சந்திக்கிறது.
17 வருடங்களாக ஒரு கோப்பையை கூட வெல்லாததால் கிண்டலடிக்கப்பட்டு வரும் அந்த அணி இம்முறை ரஜத் படிதார் தலைமையில் முதல் சாம்பியன் பட்டத்தை முத்தமிடும் முனைப்புடன் களமிறங்க உள்ளது.
கடந்த வருடம் விராட் கோலி 741 ரன்கள் அடித்து ஆர்சிபி அணி பிளே ஆப் சுற்றுக்கு செல்ல முக்கிய பங்காற்றினார். ஆனாலும் அவர் குறைவான ஸ்ட்ரைக் ரேட்டில் விளையாடியது ஒருபுறம் பெங்களூரு அணிக்கு பின்னடைவை கொடுத்தது. அதனால் விராட் கோலி விமர்சனங்களையும் சந்தித்தார்.
இந்நிலையில் விராட் கோலியின் ஸ்ட்ரைக் ரேட் பிரச்சினையில்லை என்று அந்த அணியின் முன்னாள் ஜாம்பவான் வீரர் ஏபி டீ வில்லியர்ஸ் கூறியுள்ளார்.
இது குறித்து அவர் கூறியதாவது:-
பிலிப் சால்ட் போன்ற வீரர்கள் இருக்கிறார்கள். எனவே விராட் கோலி தனது ஸ்ட்ரைக் ரேட்டை உயர்த்த வேண்டிய அவசியமில்லை. ஐபிஎல் மற்றும் இதர தொடர்களில் பிலிப் சால்ட் மிகவும் அட்டாக் செய்யக்கூடிய ஒரு வீரராக விளையாடி வருகிறார். அவர் விராட் கோலி மீதான அழுத்தத்தை எடுத்து விடுவார் என்று நினைக்கிறேன்.
அது போன்ற சூழ்நிலையில் விராட் கோலி கடந்த பல வருடங்களைப் போல் இம்முறையும் போட்டியை கட்டுப்படுத்தும் அளவுக்கு விளையாட வேண்டும். எப்போது ரிஸ்க் எடுக்க வேண்டும் எப்போது கூடாது என்பது அவருக்குத் தெரியும். இந்தத் தொடரில் அவர் பெங்களூரு அணியின் பேட்டிங் துறையின் கேப்டனாக செயல்பட்டு புத்திசாலித்தனமான கிரிக்கெட்டை விளையாட வேண்டும்.
ஏனெனில் இம்முறை பெங்களூரு அணி நிறைய மைதானங்களுக்கு பயணித்து விளையாட உள்ளது. அங்கே பேட்டிங் ஆர்டரில் குறைந்த ரன்களுக்குள் சரிவு ஏற்படாமல் இருப்பதை பார்த்துக்கொள்ள வேண்டும். தன்னைச் சுற்றி அதிரடியாக விளையாடும் வீரர்கள் இருப்பதால் விராட் புத்திசாலித்தனமான கிரிக்கெட்டை விளையாட வேண்டும்.
என்று டிவில்லியர்ஸ் கூறினார்.
- உலகிலேயே 360 டிகிரியில் விளையாடக்கூடிய ஒரே ஒரு வீரர் ஏபி டீ வில்லியர்ஸ் மட்டுமே என்று சூர்யகுமார் யாதவ் கூறினார்.
- 360 டிகிரி என்பதையும் தாண்டிய உச்சத்தை நீங்கள் அடையப் போகிறீர்கள் என்று தனது ட்விட்டரில் பாராட்டியுள்ளார்.
ஆஸ்திரேலியாவில் டி20 உலக கோப்பையின் சூப்பர் 12 சுற்று எதிர்பாராத திருப்பங்களுடன் முடிந்துள்ளது. இந்தியா 5 போட்டிகளில் 4 வெற்றிகளை பதிவு செய்து குரூப் 2 புள்ளி பட்டியலில் முதலிடம் பிடித்து அரை இறுதிக்கு தகுதி பெற்றுள்ளது. குறிப்பாக முதல் 4 போட்டிகளிலேயே அரையிறுதி வாய்ப்பை உறுதி செய்த இந்தியா நவம்பர் 6ஆம் தேதியன்று நடைபெற்ற ஜிம்பாபேவுக்கு எதிரான சம்பிரதாய கடைசி போட்டியில் 71 ரன்கள் வித்தியாசத்தில் பெரிய வெற்றி பெற்றது.
6 பவுண்டரி 4 சிக்ஸர்களுடன் 61* (25) ரன்களை குவித்த சூர்யகுமார் யாதவ் ஆட்டநாயகனாக அறிவிக்கப்பட்டார். குறுகிய காலத்திலேயே உலகின் நம்பர் ஒன் டி20 பேட்ஸ்மேனாக முகமது ரிஸ்வானை முந்தி சாதனை படைத்துள்ளார்.
இந்திய ரசிகர்களும் ரிக்கி பாண்டிங் போன்ற முன்னாள் வீரர்களும் அவரை இந்தியாவின் ஏபிடி என்றும் இந்தியாவின் மிஸ்டர் 360 டிகிரி பேட்ஸ்மேன் என்றும் புகழாரம் சூட்டி வருகிறார்கள். அதற்கு எடுத்துக்காட்டாக மீண்டும் ஒருமுறை நேற்றைய போட்டியில் வெளுத்து வாங்கிய அவரை நீங்கள் ஏபி டி வில்லியர்ஸ் போல மிஸ்டர் 360 டிகிரி பேட்ஸ்மேனாக செயல்படுகிறீர்கள் என்று போட்டி முடிந்ததும் முன்னாள் இந்திய வீரர் இர்பான் பதான் பாராட்டினார்.
அதற்கு உலகிலேயே ஏபி டீ வில்லியர்ஸ் மட்டுமே 360 வீரர் என்று மறுப்பு தெரிவித்த சூர்யகுமார் யாதவ் அடக்கத்துடன் பேசியது பின்வருமாறு. உலகிலேயே 360 டிகிரியில் விளையாடக்கூடிய ஒரே ஒரு வீரர் மட்டுமே உள்ளார் என்று கூறினார். அவரது இந்த அடக்கமான பதில் சமூக வலைதளங்களில் வைரலாகி ஏபி டீ வில்லியர்ஸ் கவனத்தை நேரடியாக ஈர்த்தது.
அதனால் மகிழ்ச்சியடைந்த அவர் நீங்கள் அந்த இடத்திற்கு மிகவும் வேகமாக வந்து கொண்டிருக்கிறீர்கள். சொல்லப்போனால் 360 டிகிரி என்பதையும் தாண்டிய உச்சத்தை நீங்கள் அடையப் போகிறீர்கள் என்று தனது ட்விட்டரில் பாராட்டியுள்ளார். இது பற்றி ஏபி டிவில்லியர்ஸ் ட்விட்டரில் கூறியுள்ளது பின்வருமாறு. "நீங்கள் அங்கே மிகவும் விரைவாக வருகிறீர்கள் நண்பரே. (சொல்லப்போனால்) இன்னும் அதிகமாக. இன்று மிகச் சிறப்பாக விளையாடினீர்கள்" என்று பதிவிட்டுள்ளார். அப்படி இந்திய வீரரை மனதார பாராட்டிய ஏபி டீ வில்லியர்ஸ் கொடுத்த அந்த பதில் தற்போது சமூக வலைதளங்களில் வைரலாகி வருகிறது.
- ஆஸ்திரேலியாவுக்கு எதிரான 2-வது டெஸ்ட் போட்டியில் ஷமார் ஜோசப் 7 விக்கெட்டுகளை வீழ்த்தினார்.
- ஆட்டநாயகன் மற்றும் தொடர் நாயகன விருதை ஜோசப் தட்டிச் சென்றார்.
பிரிஸ்பேன்:
வெஸ்ட் இண்டீஸ் கிரிக்கெட் அணி ஆஸ்திரேலியாவில் சுற்றுப்பயணம் செய்து விளையாடி வருகிறது. இரு அணிகளுக்கு இடையே நடந்த முதல் டெஸ்டில் ஆஸ்திரேலிய அணி அபார வெற்றி பெற்றது. இரு அணிகளுக்கு இடையிலான 2-வது மற்றும் கடைசி டெஸ்ட் போட்டி 25-ந் தேதி தொடங்கி நடைபெற்றது.
இந்த போட்டியில் வெஸ்ட் இண்டீஸ் அணி 8 ரன்கள் வித்தியாசத்தில் த்ரில் வெற்றி பெற்றது. அத்துடன் டெஸ்ட் தொடரை 1-1 என சமனில் முடிந்தது. வெஸ்ட் இண்டீஸ் தரப்பில் ஷமார் ஜோசப் 7 விக்கெட் வீழ்த்தி ஆட்ட நாயகன் மற்றும் தொடர் நாயகன் விருதை தட்டிச் சென்றார்.
இதன்மூலம், வெஸ்ட் இண்டீஸ் அணி, ஆஸ்திரேலிய மண்ணில் 27 ஆண்டுகளுக்குப் பிறகு ஆஸ்திரேலியாவை வீழ்த்தி அபாரமாக வெற்றி பெற்றுள்ளது.
இந்நிலையில் வெஸ்ட் இண்டீஸ் வெற்றிக்கு முக்கிய பங்காற்றிய ஷமார் ஜோசப்-ன் வாழ்க்கையை விக்கிபீடியாவில் படித்து கண் கலங்கியதாக தென் ஆப்பிரிக்கா அணியின் முன்னாள் வீரர் டி வில்லியர்ஸ் தெரிவித்துள்ளார்.
இது குறித்து அவர் கூறியதாவது:-
நீங்கள் ஒரு உதவி செய்யுங்கள். அவருடைய வாழ்க்கையை பற்றி விக்கிபீடியாவில் படியுங்கள். அவரது பயணத்தை பற்றி படிக்கும் போது எனது கண்களில் கண்ணீர் வந்தது. எளிமையா சொல்லனும் என்றால் உங்களுக்கு ஊக்கமளிக்கும்.
இவ்வாறு டிவில்லியர்ஸ் கூறினார்.
- ஐபிஎல் 2023 சீசனின் முடிவில் டோனி ஓய்வு பெறுவார் என்று எதிர்பார்க்கப்பட்டது
- சென்னை சூப்பர் கிங்ஸ் அணிக்காக ஐபிஎல் 2024 சீசனில் விளையாட போகிறேன் என்று அவர் தெரிவித்தார்.
இந்தியன் பிரீமியர் லீக் 2024 தொடர் இம்மாதம் 22-ம் தேதி துவங்க இருக்கிறது. இந்த சீசனின் முதல் போட்டியில் சென்னை சூப்பர் கிங்ஸ் மற்றும் பெங்களூரு ராயல் சேலஞ்சர்ஸ் அணிகள் மோதவுள்ளன. இதற்காக சென்னை அணி வீரர்கள் சேப்பாக்கம் மைதானத்தில் பயிற்சி மேற்கொண்டு வருகின்றனர்.
இதனையொட்டி தாமதமாக அணியின் கேப்டன் மகேந்திர சிங் டோனி சென்னை வந்தடைந்த நிலையில் அணி வீரர்களுடன் இணைந்து பயிற்சியை மேற்கொண்டு வருகிறார். சில நாட்களுக்கு முன்னர் அவர் பேட்டிங் செய்த புகைப்படம் சமூக வலைத்தளங்களில் வைரலானது.
ஐபிஎல் 2023 சீசனின் முடிவில் டோனி ஓய்வு பெறுவார் என்று எதிர்பார்க்கப்பட்டது. ஆனால் அவர் ஓய்வு பெறவில்லை. சென்னை சூப்பர் கிங்ஸ் அணிக்காக ஐபிஎல் 2024 சீசனில் விளையாட போகிறேன் என்று அவர் தெரிவித்தார். பல ஆண்டுகளாக என் மீது அன்பை பொழியும் ரசிகர்களுக்கு நான் அளிக்கும் பரிசு இது என்று அப்போது அவர் தெரிவித்தார்.
இந்நிலையில் கேப்டன் டோனியின் ஓய்வு குறித்து தென் ஆப்ரிக்க அதிரடி வீரர் ஏபி டிவில்லியர்ஸ் கருது தெரிவித்துள்ளார்.
அதில், இந்த ஐபிஎல் தொடர் தான் டோனியின் கடைசி தொடராக இருக்குமோ? அதை யார் அறிவார். டோனி ஒரு டீசல் எஞ்சினை போன்றவர். அது எப்படி முடிவில்லாமல் ஓடிக்கொண்டு இருக்கிறதோ அப்படியே டோனியும் இருக்கிறார். அவர் என்ன ஒரு அற்புதமான வீரர். என்ன ஒரு அற்புதமான கேப்டன்" என்று அவர் தெரிவித்துள்ளார்.
- கவுரவமிக்க பட்டியலில் புதிதாக 3 பேரை சேர்த்து ஐசிசி அறிவிப்பு வெளியிட்டுள்ளது.
- இந்த பட்டியலில் இந்திய வீராங்கனை நீது டேவிட் இடம் பிடித்துள்ளார்.
துபாய்:
சர்வதேச கிரிக்கெட் போட்டியில் சாதித்த வீரர், வீராங்கனைகளை சர்வதேச கிரிக்கெட் கவுன்சில் (ஐ.சி.சி.) 'ஹால் ஆப் பேம்' என்ற பட்டியலில் இணைத்து கவுரவம் அளித்து வருவது வழக்கமான ஒன்றாக இருந்து வருகிறது.
அதன்படி அந்த கவுரவமிக்க பட்டியலில் புதிதாக 3 பேரை சேர்த்து ஐசிசி அறிவிப்பு வெளியிட்டுள்ளது. அதில் இங்கிலாந்து அணியின் அலெஸ்டைர் குக் மற்றும் இந்திய வீராங்கனை நீது டேவிட், தென் ஆப்பிரிக்காவின் அதிரடி பேட்ஸ்மேன் ஏபி டிவில்லியர்ஸ் ஆகிய 3 கிரிக்கெட் நட்சத்திரங்களை 'ஹால் ஆப் பேம்' பட்டியலில் இணைத்து சர்வதேச கிரிக்கெட் கவுன்சில் கவுரவப்படுத்தியது.
இந்திய வீரர்களான பிஷன்சிங் பெடி, கவாஸ்கர், கபில்தேவ், கும்ப்ளே மற்றும் ராகுல் டிராவிட் ஆகியோர் ஏற்கனவே இந்த கவுரவத்தை பெற்றுள்ளனர்.
சர்வதேச போட்டியில் இருந்து ஓய்வு பெற்ற வீரர்கள், 5 ஆண்டுகளுக்கு பிறகுதான் இந்த கவுரவத்துக்கு பரிந்துரைக்கப்படுவார்கள் என்பது குறிப்பிடத்தக்கது.

- ஹால் ஆப் பேம் பட்டியலில் டிவில்லியர்சை இணைத்து சர்வதேச கிரிக்கெட் கவுன்சில் கவுரவப்படுத்தி உள்ளது.
- இதற்காக டிவில்லியர்ஸ்-க்கு இந்திய வீரர் விராட் கோலி வாழ்த்து தெரிவித்து உள்ளார்.
துபாய்:
சர்வதேச கிரிக்கெட் போட்டியில் சாதித்த வீரர், வீராங்கனைகளை சர்வதேச கிரிக்கெட் கவுன்சில் (ஐ.சி.சி.) 'ஹால் ஆப் பேம்' என்ற பட்டியலில் இணைத்து கவுரவம் அளித்து வருவது வழக்கமான ஒன்றாக இருந்து வருகிறது. அதன்படி அந்த கவுரவமிக்க பட்டியலில் புதிதாக 3 பேரை சேர்த்து ஐ.சி.சி அறிவிப்பு வெளியிட்டுள்ளது.
அதில் இங்கிலாந்து அணியின் அலெஸ்டைர் குக் மற்றும் இந்திய வீராங்கனை நீது டேவிட், தென் ஆப்பிரிக்காவின் அதிரடி பேட்ஸ்மேன் ஏபி டிவில்லியர்ஸ் ஆகிய 3 கிரிக்கெட் நட்சத்திரங்களை 'ஹால் ஆப் பேம்' பட்டியலில் இணைத்து சர்வதேச கிரிக்கெட் கவுன்சில் கவுரவப்படுத்தி உள்ளது.
இந்நிலையில் இந்த 3 பேரில் ஒருவரான ஏபி டிவில்லியர்ஸுக்கு இந்திய அணியின் நட்சத்திர வீரர் விராட் கோலி வாழ்த்து தெரிவித்துள்ளார்.
இது குறித்து அவர் கூறியதாவது:-
உங்கள் இடத்திற்கு நீங்கள் முற்றிலும் தகுதியானவர். எல்லாவற்றிற்கும் மேலாக, ஹால் ஆப் பேம் என்பது விளையாட்டில் உங்கள் தாக்கத்தின் பிரதிநிதித்துவமாகும். மேலும் உங்களுடையது உண்மையிலேயே தனித்துவமானது.
மக்கள் எப்போதும் உங்கள் திறனைப் பற்றி பேசுகிறார்கள், அது சரி. நான் விளையாடியதில் நீங்கள் மிகவும் திறமையான கிரிக்கெட் வீரர். முழுவதிலும் நம்பர் ஒன் வீரர். நிறைய வீரர்கள் ஈர்க்கக்கூடிய எண்களைக் கொண்டிருக்கலாம். ஆனால் மிகச் சிலரே பார்ப்பவர்களின் ஆன்மாவில் தாக்கத்தை ஏற்படுத்துகிறார்கள்.
என்னைப் பொறுத்தவரை, ஒரு கிரிக்கெட் வீரராக நீங்கள் வைத்திருக்கக்கூடிய மிக உயர்ந்த மதிப்பு அதுவே. அதுவே உங்களை மிகவும் சிறப்பானதாக்குகிறது. உங்களுடன் மற்றும் எதிராக நான் விளையாடும் நேரத்தில், நீங்கள் எப்போதுமே விளையாட்டை எப்படி விளையாட வேண்டும் என்பது பற்றிய தெளிவான புரிதலை நீங்கள் பெற்றிருக்கிறீர்கள்.
மேலும் நீங்கள் சிறப்பாகச் செயல்படுகிறீர்களா இல்லையா என்பதைப் பொருட்படுத்தாமல், அதிலிருந்து நீங்கள் ஒருபோதும் விலகியிருக்கவில்லை.
என்று விராட் கோலி கூறினார்.
- ஜூலையில் நடைபெறும் உலக சாம்பியன்ஷிப் லெஜண்ட் தொடரில் விளையாட உள்ளேன் என்றார் டிவில்லியர்ஸ்.
- டி வில்லியர்சின் இந்த திடீர் அறிவிப்பு ரசிகர்களை மகிழ்ச்சியில் ஆழ்த்தியுள்ளது.
டர்பன்:
தென் ஆப்பிரிக்கா கிரிக்கெட் ஜாம்பவான் ஏ.பி.டிவில்லியர்ஸ் அனைத்து விதமான கிரிக்கெட் போட்டிகளில் இருந்து ஓய்வுபெற்ற நிலையில் தற்போது மீண்டும் கிரிக்கெட் களத்திற்கு திரும்பப் போவதாக அறிவித்துள்ளார்.
கடந்த சில தினங்களுக்கு முன் டிவில்லியர்ஸ் கிரிக்கெட் போட்டிக்குத் திரும்ப வாய்ப்பு உள்ளதாக தெரிவித்திருந்தார்.
முன்னாள் கிரிக்கெட் ஜாம்பவான்கள் பங்கேற்ற உலக சாம்பியன்ஷிப் லெஜண்ட் (WCL) என்ற தொடர் மிகவும் பிரபலமாக ரசிகர்கள் மத்தியில் இருந்தது. இதில் யுவராஜ் சிங் தலைமையிலான இந்திய அணி சாம்பியன் பட்டத்தை வென்றது. தற்போது இந்த தொடரில் தென் ஆப்பிரிக்க அணியின் கேப்டனாக டிவில்லியர்ஸ் பங்கேற்க ஒப்பந்தமாகி இருக்கிறார்.
இந்நிலையில், வரும் ஜூலை மாதம் நடைபெற உள்ள உலக சாம்பியன்ஷிப் லெஜண்ட் தொடரில் விளையாட உள்ளேன் என டிவில்லியர்ஸ் தெரிவித்தார்.
இதுதொடர்பாக பேட்டியளித்த டிவில்லியர்ஸ், 4 ஆண்டுக்கு முன் நான் அனைத்துவித கிரிக்கெட் போட்டிகளில் இருந்து ஓய்வுபெற்றேன். மீண்டும் கிரிக்கெட் விளையாட வேண்டும் என்ற நினைப்பு இல்லாமல் இருந்தேன். காலம் செல்ல மீண்டும் எனக்கு கிரிக்கெட் போட்டிகளுக்கு திரும்ப வேண்டும் என்ற நினைப்பு தோன்றுகிறது.
அதற்கு காரணம் நான் என்னுடைய மகன்களுடன் இணைந்து கிரிக்கெட் விளையாடுகிறேன். அப்போது எனக்குள் இன்னும் கிரிக்கெட் வேட்கை இருந்ததை உணர முடிந்தது. எனவே தற்போது ஜிம்முக்கு சென்று உடற்பயிற்சி மேற்கொண்டு வருகிறேன். அது மட்டுமின்றி பேட்டிங் பயிற்சியும் செய்து வருகிறேன்.
இதன்மூலம் வரும் ஜூலை மாதம் நடைபெற உள்ள உலக சாம்பியன்ஷிப் லெஜண்ட் தொடரில் நான் விளையாட தயாராகி விடுவேன் என தெரிவித்துள்ளார்.
இந்த தென் ஆப்பிரிக்க அணியில் காலிஸ், கிப்ஸ், ஸ்டெயின், இம்ரான் தாகிர் போன்ற வீரர்களும் விளையாட உள்ளனர்.
டி வில்லியர்சின் இந்த திடீர் அறிவிப்பு ரசிகர்களை மகிழ்ச்சியில் ஆழ்த்தியுள்ளது.
- துபாயில் உள்ள மைதானம் சுழற்பந்து வீச்சுக்கு சாதகமாக இருக்கும்.
- அவர் ஆடுகளத்தின் சூழ்நிலை புரிந்துகொண்டு நிச்சயம் இந்தியாவுக்கு முக்கிய பங்காற்றுவார்.
9-வது ஐ.சி.சி. சாம்பியன்ஸ் கோப்பை கிரிக்கெட் போட்டி பாகிஸ்தான் மற்றும் துபாயில் பிப்ரவரி 19-ந் தேதி முதல் மார்ச் 9-ந்தேதி வரை நடைபெற உள்ளது. இதில் பங்கேற்கும் 8 அணிகள் இரு பிரிவாக பிரிக்கப்பட்டுள்ளன. 'ஏ' பிரிவில் இந்தியா, பாகிஸ்தான், நியூசிலாந்து, வங்காளதேசம் அணிகளும், 'பி' பிரிவில் ஆஸ்திரேலியா, இங்கிலாந்து, தென் ஆப்பிரிக்கா, ஆப்கானிஸ்தான் அணிகளும் இடம் பெற்றுள்ளன. இந்திய அணியின் ஆட்டங்கள் துபாயில் நடைபெறுகிறது.
இந்த நிலையில் சாம்பியன்ஸ் டிராபியில் இந்திய அணியில் சுழற்பந்து வீச்சாளர் குல்தீப் யாதவ் முக்கிய பங்கு வகிப்பார் என்று தென் ஆப்பிரிக்க முன்னாள் வீரர் டிவில்லியர்ஸ் தெரிவித்துள்ளார்.
இதுகுறித்து அவர் கூறியதாவது:-
சாம்பியன்ஸ் டிராபி கிரிக்கெட் போட்டியின் இந்திய அணியில் குல்தீப் யாதவ் இருக்கிறார். அவர் இந்திய அணியின் ஒரு முக்கிய வீரராக இருப்பார். இந்திய அணி, துபாயில் உள்ள மைதானங்களில் மட்டும்தான் விளையாட இருக்கிறது. அந்த மைதானம் சுழற்பந்து வீச்சுக்கு சாதகமாக இருக்கும். எனவே இதில் குல்தீப் யாதவ் சிறப்பாக செயல்படுவார் என்று நம்புகிறேன். அவர் ஆடுகளத்தின் சூழ்நிலை புரிந்துகொண்டு நிச்சயம் இந்தியாவுக்கு முக்கிய பங்காற்றுவார்.
இவ்வாறு அவர் கூறினார்.
சமீப காலமாக காயத்தால் இந்திய அணியில் இடம்பெறாமல் இருந்து வந்த குல்தீப் யாதவ், இங்கிலாந்து அணிக்கு எதிரான ஒருநாள் தொடரில் மீண்டும் விளையாட உள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.