search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "செட்டிவிளை முத்தாரம்மன் கோவில்"

    • பரிவார தெய்வங்களுக்கு சிறப்பு தீபாராதனை நடக்கிறது.
    • நையாண்டி மேளம், வில்லிசை, முளைப்பாரி எடுத்து வருதல் நிகழ்ச்சி, சாமிக்கு மஞ்சள் நீராட்டு நிகழ்ச்சி நடக்கிறது.

    நாகர்கோவில்:

    சாமிதோப்பு அருகே செட்டிவிளை முத்தாரம்மன் கோவில் மார்கழி கொடை விழா நாளை தொடங்கி 2 நாட்கள் நடக்கிறது.

    20-ந்தேதி காலையில் 5 மணிக்கு கடல் தீர்த்தம் கொண்டு வருதலும் இதைத் தொடர்ந்து நடைதிறப்பும் நடக்கிறது. மாலை 6 மணிக்கு நையாண்டி மேளம், திருவிளக்கு பூஜை வழிபாடு நடக்கிறது. 9.30 மணிக்கு வில்லிசை, இரவு 11 மணிக்கு சாஸ்தாவுக்கு பூஜை, 12 மணிக்கு சாமிக்கு பூஜை, 2.30 மணிக்கு அம்மன் மற்றும் பரிவார தெய்வங்களுக்கு பூஜை நடக்கிறது.

    21-ந்தேதி காலை 8 மணிக்கு நையாண்டி மேளம், 10 மணிக்கு வில்லிசை, 10.30 மணிக்கு முளைப்பாரி எடுத்து வருதல் நிகழ்ச்சி, 12 மணிக்கு மஞ்சள் மாரியம்மன்,வெள்ளை மாரியம்மன் சாமிக்கு மஞ்சள் நீராட்டு நிகழ்ச்சி நடக்கிறது. மதியம் 1 மணிக்கு சமபந்தி விருந்து நடைபெறும். 2.30 மணிக்கு அம்மன் மற்றும் பரிவார தெய்வங்களுக்கு சிறப்பு தீபாராதனை நடக்கிறது.

    இரவு 8 மணிக்கு நையாண்டி மேளமும், 9 மணிக்கு வில்லிசையும், 12 மணிக்கு உச்சினிமாகாளி அம்மனுக்கு பூப்படைப்பு அலங்கார பூஜையும், 2 மணிக்கு செங்கடகர சாமி, வழி வேட்டைக்கார சாமிக்கு பூஜையும், அதி காலை 5 மணிக்கு பிரம்ம சக்தி மற்றும் சுடலை மாட சாமிக்கு பூஜையும் நடக்கிறது.

    • சாமிதோப்பு அருகே செட்டிவிளை முத்தாரம்மன் கோவில் கும்பாபிஷேக விழா இன்று நடந்தது .
    • இதில் திரளான பக்தர்கள் கலந்து கொண்டனர்.

    கன்னியாகுமரி:

    சாமிதோப்பு அருகே செட்டிவிளை முத்தாரம்மன் கோவில் கும்பாபிஷேக விழா இன்று நடந்தது . இதில் திரளான பக்தர்கள் கலந்து கொண்டனர்.

    ×