என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "பல்லி விழுந்த உணவு"

    • பல்லி விழுந்த உணவு சாப்பிட்ட குழந்தைகள் சிகிச்சைக்கு பின் வீடு திரும்பினர்.
    • உணவு சாப்பிட்ட 7 குழந்தைகள் உள்பட 9 பேரும் கீழக்கரை அரசு மருத்துவமனையில் சேர்க்கப்பட்டனர்.

    ராமநாதபுரம்

    ராமநாதபுரம் மாவட்டம் கீழக்கரை அருகே உள்ள தில்லையேந்தல் ஊராட்சி பனையங்கால் பகுதியில் அங்கன்வாடி மையம் உள்ளது. இங்கு நேற்று குழந்தைகள் தர்ஷன் (வயது 4), காவ்யா (4), ரெனீஸ் வருண் (3), பெத்ரு பாண்டியன் (2), ஜான்சன் (2), தன்சிகா (2), மிகாயான் (2) ஆகியோர் தக்காளி சாதம் சாப்பிட்டுள்ளனர். மேலும் அங்கு சென்றிருந்த பெற்றோர் தேவிகா (30), ஜென்சியா (27) ஆகியோரும் உணவை ருசித்துள்ளனர்.

    அப்போது உணவில் பல்லி இறந்து கிடைந்ததை கண்டு அதிர்ச்சி அடைந்து குழந்தைகள் அதனை சாப்பிட வேண்டாம் என்று தெரிவிக்கப்பட்டது. உணவு சாப்பிட்ட 7 குழந்தைகள் உள்பட 9 பேரும் கீழக்கரை அரசு மருத்துவமனையில் சேர்க்கப்பட்டனர். அங்கு தலைமை டாக்டர் ஜவாஹிர் உசேன் தலைமையில் மருத்துவர்கள் குழந்தைகளுக்கு சிகிச்சை அளித்தனர்.

    தகவல் அறிந்ததும் மாவட்ட கலெக்டர் ஜானி டாம் வர்கீஸ் கீழக்கரை அரசு மருத்துவமனைக்கு வருகை தந்து குழந்தைகளின் பெற்றோர்களிடம் நலம் விசாரித்தார். இது தொடர்பாக அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது:-

    பனையங்கால் அங்க ன்வாடி மையத்தில் 10 குழந்தைகள் படித்து வருகின்றனர். இன்று 7 குழந்தைகள் வருகை புரிந்துள்ளனர். இவர்கள் அனைவருக்கும் மதிய உணவு வழங்கும் வகையில் 4 குழந்தைகளுக்கு உணவு பரிமாறி 5-வது குழந்தைக்கு உணவு பரிமாற செல்லும் போது உணவில் பல்லி இருப்பது கண்டறியப்பட்டு உணவு பரிமாறுவது நிறுத்தப்பட்டது.

    உணவு சாப்பிட்ட குழந்தைகளை உடனடியாக மருத்துவமனைக்கு அழைத்துச் சென்று மருத்துவ பரிசோதனை செய்யப்பட்டது. மேலும் மருத்துவர்கள் கண்காணிப்பில் இருப்பதுடன் அனைத்து குழந்தைகளும் நலமுடன் உள்ளார்கள். யாரும் எவ்வித அச்சமும் கொள்ளத்தேவையில்லை.

    இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.

    அரசு மருத்துவமனை தலைமை டாக்டர் ஜவாஹீர் உசேன் கூறுகையில், அங்கன்வாடியில் பல்லி விழுந்த உணவு சாப்பிட்டு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்ட 7 குழந்தைகள் உட்பட 9 பேர் நலமாக உள்ளனர் என்றார்.

    ×