என் மலர்
நீங்கள் தேடியது "டி.சி.டபிள்யூ"
- தமிழ்நாடு நுகர்வோர் பேரவை சார்பில் ஒவ்வொரு ஆண்டும் சிறப்பான செயல்பாடுகளுக்கான விருது வழங்கப்பட்டு வருகிறது.
- சிறப்பு விருது ஆறுமுகநேரி சாகுபுரம் டி.சி.டபிள்யூ. நிறுவனத்திற்கு வழங்கப்பட்டது.
ஆறுமுகநேரி:
தேசிய நுகர்வோர் தினவிழாவை முன்னிட்டு ஆறுமுகநேரி அருகேயுள்ள சாகுபுரம் டி.சி.டபிள்யூ. நிறுவனத்திற்கு நுகர்வோர் பேரவை சிறப்பு விருது வழங்கப்பட்டது.
தமிழ்நாடு நுகர்வோர் பேரவை சார்பில் ஒவ்வொரு ஆண்டும் சிறப்பான செயல்பாடுகளுக்கான விருது வழங்கப்பட்டு வருகிறது. இந்த ஆண்டு நுகர்வோர் பேரவை ஆய்வு குழுவின் அறிக்கையின் அடிப்படையில் சுற்றுசூழல், தொழிலாளர்கள் இணக்கம், பொதுமக்கள் நல்லுறவு ஆகியவற்றிற்கான சிறப்பு விருது ஆறுமுகநேரி சாகுபுரம் டி.சி.டபிள்யூ. நிறுவனத்திற்கு வழங்கப்பட்டது.
தமிழ்நாடு நுகர்வோர் பேரவை மாநில தலைவர் மோகனசுந்தரம் இந்த விருதை வழங்க அதனை டி.சி.டபிள்யூ. மூத்த செயல் உதவி தலைவர் சீனிவாசன் பெற்றுக்கொண்டார். இந்த நிகழ்ச்சியின் போது நுகர்வோர் பேரவையின் மாவட்ட சட்ட ஆலோசகர் திலீப்குமார், ஸ்பிக்நகர் உறுப்பினர்கள் சந்திரசேகரன், கீதா சந்திரசேகரன் ஆகியோர் உடன் இருந்தனர்.