search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "மேல்சிகிச்சை"

    • வெங்கடேசன் சென்னையில் இருந்து காரில் விருத்தாசலம் நோக்கி சென்றுக் கொண்டிருந்தார்.
    • இந்த விபத்தில் முகமது கையூப்புக்கு தலையில் பலத்த காயம் ஏற்பட்டது.

    கடலூர்:

    விருத்தாசலம் மங்கலம் பேட்டை அருகே உள்ள எறுமனூர் கிராமம், நடுத் தெருவைச் சேர்ந்த வெங்க டேசன் (வயது 40) என்பவர், சம்பவத்தன்று காரில், தனது குடும்பத்துடன் சென்னையில் இருந்து விருத்தாசலம் நோக்கி சென்றுக் கொண்டிருந்தார்.அப்போது, மங்கலம் பேட்டை அருகே உள்ள பில்லூர் புறவழிச் சாலை அருகே கார் வந்தபோது, அந்த வழியாக வந்த மோட்டார் சைக்கிளில் வந்த மங்கலம்பேட்டை, ஷேக் நகர் பகுதியைச் சேர்ந்த நாசர் உசேன் மகன் முகமது கையூப் (19) என்பவர் மீது கார் மோதியது. இந்த விபத்தில் முகமது கையூப்புக்கு தலையில் பலத்த காயம் ஏற்பட்டது.

    இது குறித்து தகவல் அறிந்து சம்பவ இடத்திற்கு விரைந்து வந்த மங்கலம்பேட்டை போலீசார் முகமது கையூபை உளுந்தூர்பேட்டை அரசு மருத்துவமனையில் சிகிச்சைக்காக சேர்த்தனர். பின்னர், மேல் சிகிச்சைக் காக முண்டியம்பாக்கம் அரசு மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வந்த அவர், பின்னர் மேல் சிகிச்சைக்காக சென்னை ராஜீவ் காந்தி அரசு மருத்துவமனையில் சேர்க்கப்பட்டு சிகிச்சை பெற்று வந்தார். இந்நிலையில் முகமது கையூப் சிகிச்சை பலனின்றி இன்று அதிகாலை பரிதாபமாக இறந்தார். இதுகுறித்த புகாரின் பேரில், மங்கலம்பேட்டை போலீசார் வழக்குப் பதிவு செய்து, விசாரணை நடத்தி வருகின்றனர்.

    • இந்நிலையில் சம்பவத்தன்று ராம்பாக்கம் மின்மாற்றியில் பழுது செய்ய மின்கம்பத்தில் ஏறிய போது மின்சாரம் தாக்கி படுகாயம் அடைந்தார்.
    • இதுகுறித்து வளவனூர் போலீஸ் இன்ஸ்பெக்டர் பாலமுருகன் வழக்குபதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

    விழுப்புரம்:

    வளவனூர் அருகே கொங்கம்பட்டு மாரியம்மன்கோவில் தெருவை சேர்ந்தவர் ஏழுமலை (வயது 49) இவர் சொர்ணாவூர் மேல்பாதி பகுதியில் மின்ஊழியராக வேலை செய்து வந்தார். இந்நிலையில் சம்பவத்தன்று ராம்பாக்கம் மின்மாற்றியில் பழுது செய்ய மின்கம்பத்தில் ஏறிய போது மின்சாரம் தாக்கி படுகாயம் அடைந்தார். இதை அருகில் இருந்தவர்கள் பார்த்து அதிர்ச்சியடைந்து படுகாயமடைந்த ஏழுமழையை மீட்டு புதுவை ஜிப்மர் ஆஸ்பத்திரியில் சிகிச்சைக் கு சேர்த்தனர்.

    பின்னர் மேல்சிகிச்சைக்காக விழுப்புரம் முண்டியம்பாக்கம் ஆஸ்பத்திரியில் சேர்க்கப்பட்டு அங்கு ஏழுமலைக்கு சிகிச்சை அளிக்கப்பட்டது. இந்நிலையில் சிகிச்சை பலனின்றி ஏழுமலை பரிதாபமாக உயிரிழந்தார். இதுகுறித்து வளவனூர் போலீஸ் இன்ஸ்பெக்டர் பாலமுருகன் வழக்குபதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

    ×