என் மலர்
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
நீங்கள் தேடியது "கோவில் வாசல்"
- மீனாட்சி அம்மன் கோவில் வாசலில் கழிவுநீர் ஆறாக ஓடும் அவல நிலை ஏற்பட்டுள்ளது.
- மதுரை மாநகராட்சி நடவடிக்கை எடுக்க கோரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.
மதுரை
பிரசித்தி பெற்ற மதுரை மீனாட்சி அம்மன் கோவிலுக்கு உள்ளூர் மக்கள் மட்டுமின்றி வெளிநாடு, வெளி மாநிலங்களில் இருந்தும் பல்லாயிரக்கணக்கான பக்தர்கள் வந்து செல்கின்றனர்.
கோவிலை சுற்றியுள்ள சித்திரை வீதிகளில் பக்தர்கள் வெறும் காலில் கிரிவலம் செல்வது வழக்கம். ஆனால் சித்திரை வீதிகள் முழுவதும் பதிக்கப்பட்டுள்ள கருங்கற்கள் பக்தர்களின் கால்களை பதம் பார்க்கின்றன. இதனால் பக்தர்கள் காலணி அணிந்தபடி கிரிவலம் செல்லும் நிலை ஏற்பட்டுள்ளது.
கிழக்கு சித்திரை வீதியில் உள்ள பாதாள சாக்கடையில் உடைப்பு ஏற்பட்டு, கழிவு நீர் வெளியேறி ஆறாக வழிந்து ஓடுகிறது. இதனால் அந்த பகுதி துர்நாற்றம் வீசுகிறது. பக்தர்கள் முகச்சுளிப்புடன் அந்தப் பகுதிகளை கடந்து செல்ல வேண்டிய நிலை உள்ளது. இதுகுறித்து அங்குள்ள கடை வியாபாரிகள் கூறுகையில், மீனாட்சி அம்மன் கோவில் சித்திரை வீதிகளில் ஓராண்டாக கழிவுநீர் வெளியேறி வருகிறது. இது குறித்து மாநகராட்சி நிர்வாகத்திடம் பலமுறை புகார் கொடுத்தோம். எந்த வித நடவடிக்கையும் இல்லை. மாநகராட்சி நிர்வாகம் இந்த விஷயத்தில் உடனடியாக நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று கோரிக்கை விடுத்தனர்.
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்