என் மலர்
நீங்கள் தேடியது "யானைக்கூட்டம்"
- தனியார் பள்ளி அருகே உள்ள சோளக்காட்டில் புகுந்து நின்றது.
- சுற்று வட்டார பகுதியினர் ஏராளமானோர் அங்கு திரண்டதால் பரபரப்பு நிலவியது.
வடவள்ளி
கோவை மதுக்கரை வனத்துறைக்கு உட்பட்ட பகுதியான ஐயாசாமி மலை பகுதியில் இருந்து இன்று காலை சுமார் மூன்று குட்டிகளுடன் மூன்று பெரிய யானைகள் என ஆறு யானைகள் ஜெகந்நாதன் நகர் பகுதியில் ஊருக்குள் புகுந்தது.
பேரூர் பச்சாபாளையம் பகுதியில் குட்டிகளுடன் யானைகள் திரிவதை கண்ட பொதுமக்கள் அலறி அடித்து ஓட்டம் பிடித்தனர். இது குறித்து மதுக்கரை வனத்துறையினருக்கு தகவல் தெரிவிக்கப்பட்டது. வனத்துறையினர் யானையை விரட்டுப் பணியில் ஈடுபட்டனர்.
தொடர்ந்து மலைப்பகுதிக்கு செல்லாமல் போக்கு காட்டிய யானை கூட்டம், தனியார் பள்ளி அருகே உள்ள சோளக்காட்டில் புகுந்து நின்றது.
உதவி வனப்பாது காவலர் செந்தில்குமார், மதுக்கரை வனச்சரகர் அருண்குமார், வனச்சரகர் பிரபு, உள்ளிட்டவர்கள் சம்பவ இடத்திற்கு விரைந்து வந்து யானையை கண்காணிக்கும் பணியில் ஈடுபட்டனர்.
குட்டிகளுடன் யானை இருப்பதால் மாலை 6 மணிக்கு மேல் யானை கூட்டத்தை வனத்திற்குள் விரட்டும் பணி செய்ய இருப்பதாக வனத்துறை சார்பில் தெரிவித்தனர். இதற்கிடையே யானை கூட்டத்தை காண சுற்று வட்டார பகுதியினர் ஏராளமானோர் அங்கு திரண்டதால் பரபரப்பு நிலவியது.
- நேற்று தேக்கடி ஏரி மனக்கவலை பகுதியில் குட்டியுடன் கூடிய யானைக்கூட்டம் தண்ணீர் குடிக்க ஏரிக்கரை பகுதிக்கு வந்தது.
- சுற்றுலா பயணிகள் படகை நிறுத்தி நீண்டநேரம் இக்காட்சியை கண்டு ரசித்தனர்.
கூடலூர்:
சர்வதேச சுற்றுலா தலமான கேரள மாநிலம் தேக்கடிக்கு இந்தியாவின் பல மாநிலங்களில் இருந்தும் சுற்றுலா பயணிகள் அதிகளவில் வருகின்றனர். தேக்கடியில் யானைசவாரி, டைகர் வியூ, மூங்கில் படகு சவாரி என பல பொழுதுபோக்கு அம்சங்கள் இருந்தாலும் படகு சவாரியின் போது நீர்நிலைகளுக்கு வரும் யானைகள் , மான்கள், காட்டு யானைகள், காட்டு எருமை கூட்டங்கள் மற்றும் பல்வேறு வகையான பறவை இனங்களையும் காணவே சுற்றுலா பயணிகள் அதிகம் வருகின்றனர்.
அதனால் இங்குள்ள சுற்றுலா இடங்களில் படகுசவாரியே முதலிடம் வகிக்கிறது. இங்கு படகு சவாரிக்கு டிக்கெட் கட்டணம் ரூ.385 ஆகவும், நுழைவு கட்டணம் ரூ.70ஆகவும் நிர்ணயிக்கப்பட்டுள்ளது. தற்போது பெரியாறு அணையின் நீர்மட்டம் குறைந்துள்ளதால் தேக்கடி ஏரியில் தண்ணீர் குறைந்து காணப்படுகிறது. இதனால் வனப்பகுதியில் இருந்து யானை, மான், காட்டெருமை உள்ளிட்ட விலங்குகள் தண்ணீர் குடிக்க ஏரியின் கரை பகுதிக்கு வருகின்றன. இதனை படகு சவாரி செய்யும் சுற்றுலா பயணிகள் மகிழ்ச்சியுடன் பார்த்து ஆரவாரம் செய்கின்றனர்.
இந்நிலையில் நேற்று தேக்கடி ஏரி மனக்கவலை பகுதியில் குட்டியுடன் கூடிய யானைக்கூட்டம் தண்ணீர் குடிக்க ஏரிக்கரை பகுதிக்கு வந்தது. அப்போது சுற்றுலா பயணிகள் படகை நிறுத்தி நீண்டநேரம் இக்காட்சியை கண்டு ரசித்தனர்.
- படகு சவாரிக்கு டிக்கெட் கட்டணம் ரூ.385 ஆகவும், நுழைவு கட்டணம் ரூ.70ஆகவும் நிர்ணயிக்கப்பட்டுள்ளது.
- படகு சவாரி செய்யும் சுற்றுலா பயணிகள் மகிழ்ச்சியுடன் பார்த்து ஆரவாரம் செய்கின்றனர்.
கூடலூர்:
சர்வதேச சுற்றுலா தலமான கேரள மாநிலம் தேக்கடிக்கு இந்தியாவின் பல மாநிலங்களில் இருந்தும் சுற்றுலா பயணிகள் அதிகளவில் வருகின்றனர். தேக்கடியில் யானை சவாரி, டைகர் வியூ, மூங்கில் படகு சவாரி என பல பொழுதுபோக்கு அம்சங்கள் இருந்தாலும் படகு சவாரியின்போது நீர்நிலைகளுக்கு வரும் யானைகள் , மான்கள், காட்டு யானைகள், காட்டு எருமை கூட்டங்கள் மற்றும் பல்வேறு வகையான பறவை இனங்களையும் காணவே சுற்றுலா பயணிகள் அதிகம் வருகின்றனர்.
அதனால் இங்குள்ள சுற்றுலா இடங்களில் படகு சவாரியே முதலிடம் வகிக்கிறது. இங்கு படகு சவாரிக்கு டிக்கெட் கட்டணம் ரூ.385 ஆகவும், நுழைவு கட்டணம் ரூ.70ஆகவும் நிர்ணயிக்கப்பட்டுள்ளது. தற்போது பெரியாறு அணையின் நீர்மட்டம் குறைந்துள்ளதால் தேக்கடி ஏரியில் தண்ணீர் குறைந்து காணப்படுகிறது. இதனால் வனப்பகுதியில் இருந்து யானை, மான், காட்டெருமை உள்ளிட்ட விலங்குகள் தண்ணீர் குடிக்க ஏரியின் கரை பகுதிக்கு வருகின்றன. இதனை படகு சவாரி செய்யும் சுற்றுலா பயணிகள் மகிழ்ச்சியுடன் பார்த்து ஆரவாரம் செய்கின்றனர்.
இந்நிலையில் நேற்று தேக்கடி ஏரி மனக்கவலை பகுதியில் குட்டியுடன் கூடிய யானைக்கூட்டம் தண்ணீர் குடிக்க ஏரிக்கரை பகுதிக்கு வந்தது. அப்போது சுற்றுலா பயணிகள் படகை நிறுத்தி நீண்டநேரம் இக்காட்சியை கண்டு ரசித்தனர்.
- யானைக்கூட்டம் ஒன்று நீந்திக் கடக்கும் அபூர்வ வீடியோ.
- பிரம்மபுத்திரா ஆற்றில் டிரோன் உதவியுடன் படமாக்கப்பட்டுள்ளது.
ஆழமான ஆற்றை யானைக்கூட்டம் ஒன்று நீந்திக் கடக்கும் அபூர்வ வீடியோ காட்சி சமூக வலைத்தளத்தில் வைரலாகி உள்ளது. அது அசாமின் நிமதி கட் வனப்பகுதியில் பிரம்மபுத்திரா ஆற்றில் டிரோன் உதவியுடன் படமாக்கப்பட்டுள்ளது. புகைப்பட கலைஞர் சச்சின் பரலி இந்த அரிய காட்சியை படமாக்கி சமூக வலைத்தளத்தில் வெளியிட்டார்.

யானைக்கூட்டம் பொதுவாக காடுகளை கடந்து செல்வதை பார்த்து இருக்கலாம். நீர்நிலைகளுக்கு அருகில்கூட அவை பெருங்கூட்டமாக வந்து நீர்அருந்தி கடந்து செல்லும். ஆனால் அதிக எடையுடைய யானைகள் நீர்நிலைகளை அவ்வளவு எளிதில் நீந்தி கடக்க முயலாது என்று பலரும் எண்ணிக் கொண்டிருக்கிறோம்.
அந்த எண்ணத்தை மாற்றும் விதமாக, ஆழமான ஆற்றையும் அசாதரணமாக எங்களால் கடக்க முடியும் என்பதைப்போல, ௮௦-க்கும் மேற்பட்ட யானைகள் பெருங்கூட்டமாக பிரமாண்டமான பிரம்மபுத்திராவை நீந்திக்கடக்கின்றன. அவற்றின் முதுகு பகுதிகள் மட்டுமே மேலே தெரியும் அளவில் ஆழமான இடத்தில் அவை நீந்தி செல்லும் காட்சி பார்ப்பவர்களை வியக்க வைக்கிறது.
வழக்கமாக காட்டு மாடுகள்தான் நூற்றுக்கணக்கில் இப்படி மந்தையாக ஆற்றைக்கடக்கும் காட்சியை பார்க்க முடியும். அதுபோல அதிக எண்ணிக்கையிலான யானைக்கூட்டம் நீந்தும்காட்சி அரிதாக படம்பிடிக்கப்பட்டு இருப்பது புகைப்படக் கலைஞருக்கு பாராட்டுகளை குவித்துள்ளது. இந்த காட்சி வலைத்தளத்தில் 42 லட்சத்துக்கும் மேலானவர்களால் ரசிக்கப்பட்டு உள்ளது. 3.5 லட்சம் பேரின் விருப்பங்களை பெற்றுள்ளது.