என் மலர்
நீங்கள் தேடியது "கொலையாளி"
- மோட்டார் சைக்கிளில் வந்த வாலி பர்களுக்கும் ராஜதுரைக் கும் இடையே ஏற்பட்ட தகராறில் அவரை கொலை செய்திருப்பது உறுதி செய் யப்பட்டுள்ளது.
- சி.சி.டி.வி. கேமராவில் ராஜதுரை அந்த பகுதியில் உள்ள ரோட்டில் நடந்து செல்வது போன்ற காட்சி பதிவாகி உள்ளது.
கன்னியாகுமரி :
ராஜாக்கமங்கலம் அருகே உள்ள எறும்புக்காடு புல்லு விளை பகுதியை சேர்ந்தவர் ராஜதுரை (வயது 50), கட்டிட தொழிலாளி. இவரது மனைவி முருகம்மாள். இவர்களுக்கு 2 மகன்கள் உள்ளனர்.
நேற்று முன்தினம் ராஜதுரை வீட்டில் இருந்து வெளியே சென்று வருவதாக கூறிவிட்டு சென்றார். பின்னர் இரவு வீடு திரும்பவில்லை.இந்த நிலையில் நேற்று காலை மேலகிருஷ்ணன் புதூர் பகுதியில் உள்ள ரோட்டோரத்தில் ராஜதுரை பிணமாகக் கிடந்தார். இதை பார்த்த பொதுமக்கள் சுசீந்திரம் போலீசுக்கு தகவல் தெரிவித்தனர்.
இன்ஸ்பெக்டர் சாய் லட்சுமி தலைமையிலான போலீசார் சம்பவ இடத் திற்கு விரைந்து வந்து விசா ரணை நடத்தினார்கள். பிணமாக கிடந்த ராஜதுரை உடலில் காயங்கள் இருந்தது.மர்ம நபர்கள் அவரை செங்கற்களால் தாக்கி கொலை செய்திருப்பது தெரிய வந்தது.
இதையடுத்து பிணமாக கிடந்த ராஜதுரை உடலை கைப்பற்றி பிரேத பரிசோ தனைக்காக ஆசாரிப்பள்ளம் ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைத்தனர். கொலையாளி களை பிடிக்க டி.எஸ்.பி. ராஜா தலைமையில் 2 தனிப்படை அமைக்கப்பட்டது. தனிப் படை போலீசார் இது தொடர்பாக விசாரணை மேற்கொண்டனர்.
கொலை நடந்த பகுதியில் உள்ள சி.சி.டி.வி. கேமராவின் காட்சிகளை கைப்பற்றி விசாரித்தனர். அப்போது சி.சி.டி.வி. கேமராவில் ராஜதுரை அந்த பகுதியில் உள்ள ரோட்டில் நடந்து செல்வது போன்ற காட்சி பதிவாகி உள்ளது.
அப்போது மோட்டார் சைக்கிளில் வந்த வாலி பர்களுக்கும் ராஜதுரைக் கும் இடையே ஏற்பட்ட தகராறில் அவரை கொலை செய்திருப்பது உறுதி செய் யப்பட்டுள்ளது.
இதையடுத்து போலீசார் மோட்டார் சைக்கிளில் வந்த நபர் யார்? என்பது குறித்து விசாரணை மேற்கொண்டு வருகிறார்கள்.
- கொலை செய்யப்பட்ட வாலிபர் காங்கேயம் அடுத்த மேட்டுக்காட்டு வலசு பகுதியை சேர்ந்த அஜித்குமார்(23) என்பதுதெரிய வந்தது.
- அஜித்குமாரை காணவில்லை என அவர்களது பெற்றோர் நல்லூர் போலீஸ் நிலையத்தில் புகார் செய்துள்ளனர்.
திருப்பூர் :
திருப்பூர் கல்லம்பாளையம் நொய்யல் ஆற்றங்கரை ஓரம் உள்ள காட்டுப் பகுதியில் துர்நாற்றம் வீசியது. இதையடுத்து அப்பகுதியை சேர்ந்தவர்கள் திருப்பூர் வடக்கு போலீசாருக்கு தகவல் அளித்தனர். சம்பவ இடத்திற்கு வந்த போலீசார் அங்கு சோதனை செய்தபோது காட்டுப்பகுதியில் பயன்படுத்தப்படாத கட்டிடத்தின் உள்ளே அழுகிய நிலையில் வாலிபர் ஒருவர் இறந்து கிடந்தார். கை, கால்கள் கட்டப்பட்டு கத்தியால் குத்தியதில் ரத்தம் வெளியேறிய நிலையில் இறந்து கிடந்தார். அருகில் மது பாட்டில்கள் கிடந்தது.
இதையடுத்து உடலை மீட்ட போலீசார் பிரேத பரிசோதனைக்காக திருப்பூர் அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். மேலும் தடயவியல் நிபுணர்கள் மற்றும் மோப்பநாய் வரவழைக்கப்பட்டு ஆய்வு மேற்கொள்ளப்பட்டது. இதுகுறித்து திருப்பூர் வடக்கு போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தினர்.
அப்போது கொலை செய்யப்பட்ட வாலிபர் திருப்பூர் மாவட்டம் காங்கேயம் அடுத்த மேட்டுக்காட்டு வலசு பகுதியை சேர்ந்த அஜித்குமார்(23) என்பதும் இவர் ராக்கியாபாளையம் பகுதியில் தங்கியிருந்து பனியன் நிறுவனத்தில் வேலை செய்து வந்ததும் தெரிய வந்தது. மேலும் கடந்த சில நாட்களுக்கு முன்பு அஜித்குமாரை காணவில்லை என அவர்களது பெற்றோர் நல்லூர் போலீஸ் நிலையத்தில் புகார் செய்துள்ளனர். அவர்கள் கொடுத்த அங்க அடையாளத்தின் படி ஆய்வு செய்தபோதுதான் கொலை செய்யப்பட்டது அஜித்குமார் என தெரியவந்துள்ளது. இந்த கொலை தொடர்பாக மூன்று தனிப்படைகள் அமைத்து போலீசார் விசாரணை மேற்கொண்டுள்ளனர். நண்பர்களுடன் மது குடிக்க சென்றபோது அங்கு தகராறு ஏற்பட்டு கொலை நடந்ததா? அல்லது கொடுக்கல் வாங்கலில் கொலை நடந்துள்ளதா? என்பது குறித்து போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.
விசாரணையின் போதுகொலை செய்யப்பட்ட அஜித்குமார் மீது போக்சோ வழக்கு இருப்பது தெரியவந்துள்ளது. கடந்த 6 மாதங்களுக்கு முன்பு காங்கேயம் பகுதியில் உள்ள இரண்டு வயது குழந்தையிடம் பாலியல் சீண்டலில் ஈடுபட்டுள்ளார். இது தொடர்பான புகாரின் பேரில் அஜித்குமாரை போக்சோ வழக்கில் கைது செய்து கோவை மத்திய சிறையில் அடைத்துள்ளனர். கடந்த இரண்டு மாதங்களுக்கு முன்பு ஜாமீனில் வெளியே வந்த அஜித்குமார் திருப்பூர் ராக்கியாபாளையம் பகுதியில் தங்கி இருந்து வேலைக்கு சென்று வந்துள்ளார்.
இதனிடையே சிறையில் தன்னுடன் தங்கி இருந்த நண்பர்கள் திருப்பூர் வந்திருப்பதாகவும், அவர்களை பார்த்துவிட்டு வருவதாக வீட்டில் உள்ளவர்களிடம் அஜித் குமார் கூறி சென்றுள்ளார். எனவே சிறையில் இருந்து வெளியே வந்த அஜித்குமாரின் நண்பர்கள் யார் யார்? அவர்கள் எந்த ஊரைச் சேர்ந்தவர்கள்? எதற்காக அஜித்குமாரை பார்க்க வந்துள்ளனர்என்பது குறித்து தீவிர விசாரணை நடைபெற்று வருகிறது. கோவை சிறைக்கு சென்றுள்ள தனிப்படை போலீசார் சிறையில் இருந்து சமீபத்தில் வெளியே வந்த நபர்கள் யார் யார் என்பது குறித்த பட்டியலை தயார் செய்து விசாரணை செய்து வருகின்றனர். இந்தநிலையில் கொலை சம்பவம் தொடர்பாக சந்தேகத்தின் பேரில் ஒருவரை போலீசார் பிடித்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
- முன்னாள் ராணுவ வீரர் ஒருவரை கொன்றுவிட்டு அவரின் முதுகில் 'Dhokebaaz' (ஏமாற்றுபவர்) என்று எழுதி வைத்துள்ளார்
- கொலை செய்த பிறகு அவர்களின் பாதங்களைத் தொட்டு, வருத்தப்பட்டு மன்னிப்பு கேட்டதாக தெரிவித்தார்
பஞ்சாபில் கடந்த 18 மாதங்களுக்குள் 11 ஆண்களை கொன்ற சீரியல் கில்லர் கொலையாளி போலீசில் பிடிபட்டுள்ளார்.
ஹோஷியார்பூரில் உள்ள கர்ஷங்கரின் சௌரா கிராமத்தில் வசித்து வருபவர் 33 வயதான ராம் சரூப். போலீஸ் கூற்றுப்படி கொலை செய்யப்பட்ட அனைவருக்கும் தனது வாகனத்தில் லிப்ட் கொடுத்து அழைத்து சென்று அவர்களிடம் பாலியல் ரீதியாக அத்துமீறி, அதன்பின் அவர்களை கொலை செய்து கொள்ளையடித்துச் சென்றுள்ளார்.
பெரும்பாலான சந்தர்ப்பங்களில், துணியால் அவர்களின் கழுத்தை நெரித்ததாகவும்,சிலருக்குத் தலையில் காயங்கள் இருந்ததாகவும் போலீஸ் தெரிவித்துள்ளது.
அவ்வாறு தனியார் தொழிற்சாலையில் காவலாளியாக பணிபுரியும் முன்னாள் ராணுவ வீரர் ஒருவரை கொன்றுவிட்டு அவரின் முதுகில் 'Dhokebaaz' (ஏமாற்றுபவர்) என்று எழுதி வைத்துள்ளார் ராம் சரூப்.
ஆகஸ்ட் 18 அன்று மோத்ராவில் உள்ள சுங்கச்சாவடி அருகே டீ மற்றும் தண்ணீர் விற்கும் 37 வயது நபரை கொன்ற வழக்கில் ரூப்நகர் மாவட்டத்தில் வைத்து நேற்று [செவ்வாய்க்கிழமை] ராம் சரூப் கைது செய்யப்பட்டார். அதன்பின் நடந்த விசாரணையில்தான் அவர் மேலும் 10 பேரை கொலை செய்துள்ளது அம்பலமாகி உள்ளது.
இவற்றில் 5 கொலை வழக்குகள் இதுவரை உறுதி செய்யப்பட்டுள்ள நிலையில், எஞ்சிய கொலைகளைக் கண்டறிய விசாரணை நடைபெற்று வருவதாக போலீஸ் தெரிவித்துள்ளது.
ஆகஸ்ட் 18 அன்று டோல் பிளாசா மோத்ராவில் டீ மற்றும் தண்ணீர் பரிமாறப் பழகிய 37 வயது நபர் கொலை செய்யப்பட்ட வழக்கில் குற்றம் சாட்டப்பட்டவர் முதலில் கைது செய்யப்பட்டார்.
விசாரணையில் சரூப் மேலும் 10 பேரைக் கொன்றது தெரியவந்தது. இவற்றில் ஐந்து வழக்குகள் இதுவரை உறுதி செய்யப்பட்டுள்ள நிலையில், எஞ்சிய கொலைகளைக் கண்டறிய விசாரணைகள் நடைபெற்று வருவதாக காவல்துறை தெரிவித்துள்ளது. ஹோஷியார்பூர் மற்றும் ஃபதேகர் மாவட்டங்களில் இந்த கொலைகள் நடந்துள்ளன.
ஏப்ரல் 5 ஆம் தேதி 34 வயதான டிராக்டர் பழுதுபார்ப்பவரின் கொலை மற்றும் ஜனவரி 24 அன்று காரில் சடலமாக கண்டுபிடிக்கப்பட்ட இளைஞன் ஒருவரின் கொலை ஆகியவற்றையும் ராம் சரூப் தான் செய்துள்ளார் என்று தெரியவந்துள்ளது.

கூலித் தொழிலாளியாக பணிபுரிந்த ராம் சரூப் போதைப்பொருளுக்கு அடிமையானவர் என்று அதிகாரிகள் தெரிவித்தனர். குடிபோதையில் தான் குற்றங்களை செய்ததாக அவர் ஒப்புக்கொண்ட நிலையில் கொலை செய்த பிறகு அவர்களின் பாதங்களைத் தொட்டு, வருத்தப்பட்டு மன்னிப்பு கேட்டதாக விசாரணையின்போது தெரிவித்துள்ளார்.
ராம் சரூப் -க்கு திருமணமாகி மூன்று குழந்தைகள் இருக்கும் நிலையில் ஓரினச்சேர்க்கை காரணமாக 2 ஆண்டுகளுக்கு முன்பு அவரது குடும்பத்தினரால் கைவிடப்பட்டுள்ளார்.

- 2019 ஆம் ஆண்டு சந்தீப் புதோலியா என்ற நபரை இப்பெண் திருமணம் செய்துள்ளார்.
- திருமணத்திற்கு பிறகு மேலும் வரதட்சணை கேட்டு கணவரின் குடும்பத்தினர் கொடுமைப்படுத்தியுள்ளனர்.
உத்தரப்பிரதேச மாநிலம் ஜான்சியில் 27 வயது பெண் தூக்கில் தொங்கியபடி சடலமாக மீட்கப்பட்டார். முதலில் இதை தற்கொலை என்ற கோணத்தில் போலீசார் விசாரணையை தொடங்கியுள்ளனர். ஆனால் பெண்ணின் குடும்பத்தினர் அவளது கணவர் மற்றும் மாமியார் தான் தங்கள் மகளின் மரணத்திற்கு காரணம் என்று குற்றம் சாட்டினார்.
2019 ஆம் ஆண்டு சந்தீப் புதோலியா என்ற நபரை இப்பெண் திருமணம் செய்துள்ளார். கணவரின் குடும்பத்தினருக்கு 20 லட்சம் வரதட்சணை கொடுக்க பெண்ணின் தந்தை தெரிவித்தார். ஆனால் திருமணத்திற்கு பிறகு மேலும் வரதட்சணை கேட்டு கணவரின் குடும்பத்தினர் அப்பெண்ணை கொடுமைப்படுத்த, இது தொடர்பாக பெண்ணின் தந்தை போலீசில் புகார் அளிக்க பின்னர் இருவீட்டாரும் சமரசத்துக்கு வந்துள்ளனர்.
இதனையடுத்து இந்த தம்பதிக்கு பெண் குழந்தை ஒன்று பிறந்துள்ளது. பெண் குழந்தை பிறந்தது அவளது மாமியாருக்கு பிடிக்கவில்லை என்று பெண்ணின் தந்தை தெரிவித்தார்.
இந்நிலையில், இந்த கொலையை நேரில் பார்த்த அப்பெண்ணின் 4 வயது மகள், தாயை அடித்துக்கொன்று தந்தை தூக்கில் தொங்கவிட்டது போன்று ஓவியம் வரைந்துள்ளார். இதனையடுத்து அப்பெண்ணின் கணவரை போலீசார் கைது செய்தனர்.