என் மலர்
நீங்கள் தேடியது "கால்பந்து வீராங்கனை"
+2
- பள்ளியில் படிக்கும்போதே பிரியாவுக்கு கால்பந்து விளையாட்டில் ஆர்வம் ஏற்பட்டது
- ஆபரேசன் என்றதும் தயங்கி பிரியாவை வேறு சில மருத்துவர்களிடம் அழைத்து சென்றதாக கூறப்படுகிறது.
ஒரு இளம் கல்லூரி மாணவியின் கனவு, ஆசை, லட்சியம்... எல்லாம் உருவானதுமே உருத்தெரியாமல் போய் சோகத்தில் ஆழ்த்தி இருக்கிறது.
பிரியா!
பதினேழு வயதான பிரியா சென்னை ராணிமேரி கல்லூரி மாணவி. கால்பந்தாடி எதிரிகளை மைதானத்தில் பந்தாடுவார்! அவரது லாவகமான நகர்த்தல் ரசிகர்களை ஈர்க்கும். விளையாட்டு உடையில் கல்லூரி மைதானத்தில் அவர் பயிற்சி பெறும்போது காலுக்குள் சிக்கிய பந்தை நாலா புறமும் கால்களை சுழற்றி அடித்து விரட்டினாலும் தன் கால் எல்லைக்குள் கட்டுப்படுத்தி அவர் ஆடும் ஆட்டத்தை சக கல்லூரி மாணவிகள் ஆச்சரியமாக பார்ப்பார்கள்.
ஆனால் இன்று காலே இல்லாமல் ஆஸ்பத்திரி படுக்கையில் இருப்பதை பார்த்து அத்தனை பேரும் கண்ணீர் வடிக்கிறார்கள். மாவட்ட அளவிலும் மிகச்சிறந்த வீராங்கனையான பிரியா தனது ஆசை, கனவு எல்லாமே துண்டிக்கப்பட்ட காலுடன் துண்டித்து போனதை எண்ணி எண்ணி கண்ணீர் வடிக்கிறார்.
சென்னையில் வியாசர்பாடியை சேர்ந்தவர் ரவிக்குமார்-உஷாராணி தம்பதியர். இவர்களின் மகள் தான் பிரியா. இவருக்கு 3 அண்ணன்கள். ஏழை குடும்பமாக இருந்தாலும் பாசத்துக்கு பஞ்சமில்லாத குடும்பம். தங்கையின் மீது அண்ணன்கள் அனைவரும் அளவுகடந்த பாசம் வைத்துள்ளார்கள்.
பள்ளியில் படிக்கும்போதே பிரியாவுக்கு கால்பந்து விளையாட்டில் ஆர்வம் ஏற்பட்டது. 6-ம் வகுப்பு படிக்கும்போதே கால்பந்து விளையாட்டில் பயிற்சி பெற்று வருகிறார். அவரது திறமையை பார்த்து உடற்கல்வி ஆசிரியர்கள் பயிற்சி அளித்து வந்தனர்.
பள்ளி அணியில் விளையாடியவர் மாவட்ட அளவிலான அணியில் இடம்பிடித்து தனது சிறப்பான ஆட்டத்தை வெளிப்படுத்தி வந்தார். எப்படியும் தேசிய அளவில் மிகச் சிறந்த கால்பந்து வீராங்கனையாக வர வேண்டும் என்பதே பிரியாவின் லட்சியமாக இருந்தது.
அதற்கு ஏற்ற வகையில் ராணிமேரி கல்லூரியில் உடற்கல்வியியல் பாடத்தை எடுத்து படித்து வந்தார். தினமும் மைதானத்தில் அவர் கால்பந்து பயிற்சியிலும் ஈடுபடுவது வழக்கம். கடந்த மாதம் 20-ந்தேதி வழக்கம் போல் பயிற்சியில் ஈடுபட்டபோது வலது காலில் சுளுக்கு ஏற்பட்டது போல் வலி ஏற்பட்டுள்ளது.
தாங்க முடியாத வலியால் துடித்த தங்கையை பார்த்து அவரது மூத்த அண்ணன் லாரன்சும் துடித்து போயிருக்கிறார். லாரன்சுக்கும் பெரியார் நகர் ஆஸ்பத்திரியில் பணியாற்றும் நர்சுக்கும் திருமணம் நிச்சயிக்கப்பட்டுள்ளது. உடனே அவர் அந்த நர்சிடம் தொடர்புகொண்டு விசயத்தை கூறி இருக்கிறார்.
வருங்கால நாத்தனாருக்கு பிரச்சினை என்றதும் அழைத்து வரும்படி கூறியிருக்கிறார். அங்கு பிரியாவின் காலை பரிசோதித்த டாக்டர் காலில் லேசாக ஜவ்வு கிழிந்து இருக்கிறது. லேசர் முறையில் சின்னதாய் ஒரு ஆபரேசன் செய்தால் போதும். சரியாகிவிடும். அவர் முன்பு போல் ஆடலாம், ஓடலாம், விளையாடலாம் என்று கூறி இருக்கிறார்.
ஆபரேசன் என்றதும் தயங்கி பிரியாவை வேறு சில மருத்துவர்களிடம் அழைத்து சென்றதாக கூறப்படுகிறது. ஒரு வகையிலும் கால் வலி குறையாததால் கடந்த 7-ந்தேதி மீண்டும் பெரியார் நகர் ஆஸ்பத்திரிக்கு அழைத்து சென்று ஆபரேசனுக்கு சம்மதித்துள்ளனர்.
ஆஸ்பத்திரியில் ஆபரேசன் செய்யப்பட்டு தொடை முதல் கால் மூட்டின் கீழ் வரை கட்டுப்போடப்பட்டிருந்ததாகவும் மூட்டு பகுதியில் சதைப்பகுதி கடினமானதாக இருந்ததால் தொடை பகுதியில் இருந்து சதை எடுத்து போட்டிருந்ததாகவும் அதனால் தான் கட்டு பெரிதாக போடப்பட்டதாகவும் டாக்டர்கள் தெரிவித்துள்ளார்கள்.
ஆபரேசன் செய்த பிறகும் வலி குறைவதற்கு பதில் அதிகரித்துள்ளது. மறுநாளே கால் பெரிய அளவு வீங்கி இருக்கிறது. வலியும் குறையவில்லை. உடனே டாக்டர்கள் விலை உயர்ந்த ஊசி போட வேண்டும். எனவே ராஜீவ்காந்தி அரசு ஆஸ்பத்திரிக்கு அழைத்து செல்லுங்கள் என்று கூறி இருக்கிறார்கள்.
அதன்படி ஆம்புலன்ஸ் மூலம் அழைத்துவரப்பட்ட பிரியா ராஜீவ்காந்தி அரசு ஆஸ்பத்திரியில் அனுமதிக்கப்பட்டதும் கட்டை பிரித்து டாக்டர்கள் பரிசோதித்து இருக்கிறார்கள். அப்போது ரத்தக்குழாயில் அடைப்பு ஏற்பட்டுள்ளது. உடனடியாக அறுவை சிகிச்சை செய்ய வேண்டும் என்று கூறி இருக்கிறார்கள்.
4 மணிநேரம் ஆபரேசன் நடைபெற்றுள்ளது. அதன்பிறகு வெளியே வந்து டாக்டர்கள் கூறியதை கேட்டு எல்லோரும் அதிர்ந்து போனார்கள்.
பிரியாவின் காலில் தொற்று ஏற்பட்டுள்ளது. உடனே காலை துண்டிக்க வேண்டும். இல்லாவிட்டால் உயிருக்கு ஆபத்து ஏற்படும் என்று கூறி இருக்கிறார்கள். அதை கேட்டு தவித்த குடும்பத்தினர் வேறு வழியில்லாமல் சம்மதித்துள்ளார்கள். நேற்று மாலை பிரியாவின் கால் துண்டித்து அகற்றப்பட்டது.
கால் இல்லாமல் வெளியே அழைத்து வரப்பட்ட பிரியாவை பார்த்து மொத்த குடும்பமும் கதறி அழுதது. நம் கண்முன் துள்ளிக்குதித்து விளையாடிய மகள் முடமானதை நினைத்து கண்ணீர் வடிக்கிறார்கள்.
தவறான சிகிச்சையால்தான் தங்கள் மகள் காலை இழந்து விட்டதாக பெற்றோர் புகார் கூறுகிறார்கள். ஆனால் தொடர் சிகிச்சையின் போதே ராஜீவ்காந்தி அரசு ஆஸ்பத்திரியில் அனுமதிக்கப்பட்டதாகவும், இதுகுறித்த விசாரணையின்போது உரிய விளக்கம் அளிக்கப்படும் என்றும் மருத்துவர்கள் தெரிவித்துள்ளனர்.
வாழ்க்கையில் சோதனையும், வேதனையும் எப்படி எல்லாமோ வருகிறது. பிரியாவின் கால்களால் உதைக்கப்பட்ட பந்து நன்றாக இருக்கிறது. உதைத்த கால்தான் இல்லாமல் போனது.
- தமிழகத்தில் கொசு ஒழிப்பு நடவடிக்கைக்கு தேவையான நடவடிக்கைகள் எடுக்கப்பட்டு வருகின்றன.
- பெரியார் நகர் அரசு மருத்துவமனையில் தவறான சிகிச்சை அளிக்கப்பட்டதாக குற்றம்சாட்டப்பட்ட கால்பந்து வீராங்கனை மாணவிக்கு சரியான மருத்துவ சிகிச்சை தான் அளிக்கப்பட்டுள்ளது.
ஆலந்தூர்:
தமிழ்நாடு மக்கள் நல்வாழ்வுத்துறை அமைச்சர் மா.சுப்பிரமணியன், சிங்கப்பூரில் நடந்த உலக சுகாதார அமைப்பின் மாநாட்டில் கலந்துகொண்டு சிங்கப்பூரில் இருந்து விமானத்தில் சென்னை திரும்பினார்.
சென்னை விமான நிலையத்தில் அவர் நிருபர்களுக்கு பேட்டி அளித்தார். அவர் கூறியதாவது:-
சிங்கப்பூரில் உலக சுகாதார அமைப்பின் மாநாடு நடந்தது. இதில் உலக அளவில் நூற்றுக்கு மேற்பட்ட நாடுகளில் இருந்து மருத்துவ ஆராய்ச்சியாளர்கள், மருத்துவப் பல்கலைக்கழகம் பேராசிரியர்கள் உட்பட பல்வேறு நிபுணர்கள் கலந்து கொண்டு சுகாதார நடவடிக்கைகள் குறித்து பேசினார்கள்.
இந்த மாநாட்டில் கடந்த 8-ந்தேதி நடைபெற்ற நிகழ்ச்சியை தொடங்கி வைக்கின்ற வாய்ப்பு எனக்கு கிடைத்தது. அதை தொடங்கி வைத்து, கொரோனா பேரிடர் கால தடுப்பு நடவடிக்கைகள், தொற்று நோய்களால் ஏற்படும் அபாயங்கள் குறித்தும், பல்வேறு வைரஸ் குறித்து மாநாட்டில் விவாதிக்கப்பட்டது.
இத்தகைய மாநாட்டில் கலந்து கொண்டது மகிழ்ச்சி அளிப்பதோடு, தமிழகத்தின் கருத்துகளும் சிறப்பாக எடுத்துச் சொல்லப்பட்டது. பேரிடர், புதிய வைரஸ் போன்றவைகள் பரவும் சூழ்நிலையில் எதிர்காலத்தில் எடுக்க வேண்டிய நடவடிக்கைகள் குறித்தும் மாநாட்டில் விவாதிக்கப்பட்டது.
தமிழகத்தில் கொசு ஒழிப்பு நடவடிக்கைக்கு தேவையான நடவடிக்கைகள் எடுக்கப்பட்டு வருகின்றன. கொசு மருந்து அடித்தல், புகை அடித்தல் போன்றவைகள் செய்யப்பட்டு வருகின்றன.
சென்னை மாநகராட்சி, மலேரியா ஒழிப்பு துறை ஆயிரக்கணக்கான ஊழியர்களை வைத்து அப்பணிகளை மேற்கொண்டு வருகிறது. மழை காரணமாக கொசுக்கள் உருவாகி டெங்கு, மலேரியா பரவுகின்றன. அந்த நோய்கள் பரவுவதை தடுப்பதற்காக தான், மக்களுக்கு கொசு வலை வழங்கப்படுகிறது. இதை குறிப்பிட்ட சதவீதத்தினர் கேலி செய்கின்றனர். ஆனால் பெரும்பாலான மக்கள் வரவேற்கின்றனர்.
பெரியார் நகர் அரசு மருத்துவமனையில் தவறான சிகிச்சை அளிக்கப்பட்டதாக குற்றம்சாட்டப்பட்ட கால்பந்து வீராங்கனை மாணவிக்கு சரியான மருத்துவ சிகிச்சை தான் அளிக்கப்பட்டுள்ளது. மேல் சிகிச்சைக்காக தான் சென்னை ராஜீவ் காந்தி மருத்துவமனைக்கு, கல்லூரி மாணவியை அனுப்பி வைத்ததாக மருத்துவமனை அதிகாரிகள் என்னிடம் கூறினர். அரசு மருத்துவமனைகளில் சிறிய பாதிப்பு ஏற்பட்டாலும், தவறான சிகிச்சையால் பாதிப்பு ஏற்பட்டதாக கருத்துக்களை பரப்புகின்றனர். இது சரியானது அல்ல.
மருத்துவர்கள் ஆத்மார்த்தமாகத்தான் பணியாற்றுவார்கள். யாரையும் பாதிக்கும் விதத்தில் பணியாற்ற மாட்டார்கள்.
இருந்தபோதிலும், பாதிக்கப்பட்ட மாணவியின் பெற்றோர் புகாரையும் ஒதுக்கி தள்ளாமல், அதுகுறித்து விசாரணை நடத்தி உரிய நடவடிக்கை எடுக்கப்படும்.
இவ்வாறு அவர் கூறினார்.
- தவறான ஆபரேசன் காரணமாக மறுநாளே பிரியாவிற்கு கால் பெரிய அளவு வீங்கி இருக்கிறது.
- உயிருக்கு ஆபத்து என்ற மருத்துவர்கள் கூறியதை அடுத்து, ராஜீவ்காந்தி அரசு மருத்துவமனையில் பிரியாவுக்கு வலது கால் துண்டித்து அகற்றப்பட்டது.
சென்னை:
சென்னை வியாசர்பாடியை சேர்ந்த ரவிக்குமார்-உஷாராணி தம்பதியின் மகள் பிரியா, ராணிமேரி கல்லூரியில் உடற்கல்வியியல் பாடத்தை எடுத்து படித்து வந்தார். கால்பந்து வீராங்கனையாகும் லட்சியத்துடன் தினமும் பயிற்சியில் ஈடுபட்ட வந்த அவர், கடந்த மாதம் 20-ந்தேதி வலது காலில் சுளுக்கு ஏற்பட்டது போல் வலியால் அவதிப்பட்டுள்ளார். இதையடுத்து பெரியார் நகர் மருத்துவமனையில் சிகிச்சைக்காக அவர் அனுமதிக்கப்பட்டுள்ளார்.
அங்கு நடந்த தவறான ஆபரேசன் காரணமாக மறுநாளே கால் பெரிய அளவு வீங்கி இருக்கிறது. இதையடுத்து அவரது உயிருக்கு ஆபத்து என்ற மருத்துவர்கள் கூறியதை அடுத்து, ராஜீவ்காந்தி அரசு மருத்துவமனையில் பிரியாவுக்கு வலதுகால் துண்டித்து அகற்றப்பட்டது.
இந்நிலையில் சென்னையில் நேற்று செய்தியாளர்களிடம் பேசிய சுகாதாரத்துறை அமைச்சர் மா.சுப்பிரமணியன், தற்போது மாணவிக்கு உள்ள காயம் சரியான உடன், பெங்களூருவில் இருந்து செயற்கை கால் வாங்கி பொருத்தப்படும் என்றும், அந்த மாணவிக்கு அரசு வேலை வழங்க நடவடிக்கை எடுக்கப்படும் என்றும் கூறி இருந்தார். மருத்துவக்குழு அளித்துள்ள விளக்கத்தின் அடிப்படையில் மாணவிக்கு சிகிச்சை வழங்கிய மருத்துவர்கள் பணியிட மாற்றம் செய்யப்பட்டுள்ளதுடன் துறை ரீதியான நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது என்றும் அமைச்சர் தெரிவித்து இருந்தார்.
இந்நிலையில் ராஜீவ் காந்தி அரசு மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வந்த கால்பந்து வீராங்கனை பிரியா சிகிச்சை பலனின்றி இன்று காலை 7.15 மணிக்கு உயிரிழந்தார். இதையடுத்து மருத்துவமனையில் போலீசார் குவிக்கப்பட்டுள்ளனர்.
- பிரியாவின் சகோதரருக்கு அரசு வேலை வழங்கப்படும் என்று சுகாதாரத்துறை அமைச்சர் மா.சுப்பிரமணியன் தெரிவித்துள்ளார்.
- பணியிட மாற்றம் செய்யப்பட்ட மருத்துவர்கள் இருவரும் பணியிடை நீக்கம் செய்யப்படுகின்றனர்.
சென்னை:
சென்னை வியாசர்பாடியை சேர்ந்த ரவிக்குமார்-உஷாராணி தம்பதியின் மகள் பிரியா, ராணிமேரி கல்லூரியில் உடற்கல்வியியல் பாடத்தை எடுத்து படித்து வந்தார். கால்பந்து வீராங்கனையாகும் லட்சியத்துடன் தினமும் பயிற்சியில் ஈடுபட்ட வந்த அவர், கடந்த மாதம் 20-ந்தேதி வலது காலில் சுளுக்கு ஏற்பட்டது போல் வலியால் அவதிப்பட்டுள்ளார். இதையடுத்து பெரியார் நகர் மருத்துவமனையில் சிகிச்சைக்காக அவர் அனுமதிக்கப்பட்டுள்ளார்.
அங்கு நடந்த தவறான ஆபரேசன் காரணமாக மறுநாளே கால் பெரிய அளவு வீங்கி இருக்கிறது. இதையடுத்து அவரது உயிருக்கு ஆபத்து என்ற மருத்துவர்கள் கூறியதை அடுத்து, ராஜீவ்காந்தி அரசு மருத்துவமனையில் பிரியாவுக்கு வலதுகால் துண்டித்து அகற்றப்பட்டது.
இந்நிலையில் ராஜீவ் காந்தி அரசு மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வந்த கால்பந்து வீராங்கனை பிரியா சிகிச்சை பலனின்றி இன்று காலை உயிரிழந்தார். இதனால் மருத்துவமனையில் போலீசார் குவிக்கப்பட்டுள்ளனர்.
இதையடுத்து கால்பந்து வீராங்கனை பிரியா குடும்பத்திற்கு ரூ.10 லட்சம் நிவாரணம் வழங்க முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் உத்தரவிட்டுள்ளார்.
பிரியாவின் சகோதரருக்கு அரசு வேலை வழங்கப்படும் என்று சுகாதாரத்துறை அமைச்சர் மா.சுப்பிரமணியன் தெரிவித்துள்ளார்.
பணியிட மாற்றம் செய்யப்பட்ட மருத்துவர்கள் இருவரும் பணியிடை நீக்கம் செய்யப்படுகின்றனர். தவறான சிகிச்சை அளித்த மருத்துவர்கள் மீது உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும் என்றும் அமைச்சர் மா.சுப்பிரமணியன் தெரிவித்துள்ளார்.
- பிரியாவின் குடும்பத்திற்கு ரூ.10 லட்சம் நிவாரணம் வழங்க முதலமைச்சர் உத்தரவிட்டுள்ளார்.
- திறனற்ற திமுக ஆட்சியில் ஒவ்வொரு அரசு துறையும் அழிந்து கொண்டிருப்பதாக அண்ணாமலை குற்றச்சாட்டு
சென்னை:
சென்னையில் தவறான சிகிச்சையால் காலை இழந்து அரசு மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வந்த கல்லூரி மாணவி பிரியா இன்று உயிரிழந்தார். கால்பந்து வீராங்கனையாகும் லட்சியத்துடன் தொடர்ந்து பயிற்சியில் ஈடுபட்டு வந்த அவர் மரணம் அடைந்தது அவரது குடும்பத்தினரை கடும் துயரத்தில் ஆழ்த்தி உள்ளது.
மாணவி பிரியா மறைவு குறித்து முதல்வர் மு.க.ஸ்டாலின் இரங்கல் தெரிவித்ததுடன், பிரியாவின் குடும்பத்திற்கு ரூ.10 லட்சம் நிவாரணம் வழங்க முதலமைச்சர் உத்தரவிட்டுள்ளார். பிரியாவின் சகோதரருக்கு அரசு வேலை வழங்கப்படும் என்று சுகாதாரத்துறை அமைச்சர் மா.சுப்பிரமணியன் தெரிவித்துள்ளார்.
தவறான சிகிச்சை அளித்ததாக பணியிட மாற்றம் செய்யப்பட்ட மருத்துவர்கள் இருவரும் பணியிடை நீக்கம் செய்யப்படுகின்றனர். தவறான சிகிச்சை அளித்த மருத்துவர்கள் மீது உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும் என்றும் அமைச்சர் மா.சுப்பிரமணியன் தெரிவித்துள்ளார்.
பிரியா மறைவு குறித்து தமிழக பாஜக தலைவர் அண்ணாமலை இரங்கல் தெரிவித்துள்ளார். அவர் தனது டுவிட்டர் பக்கத்தில் கூறியிருப்பதாவது:-
அறுவை சிகிச்சையின் போது அரசு மருத்துவர்கள் தவறான சிகிச்சை வழங்கியதால் கல்லூரி மாணவி, கால்பந்து வீராங்கனை சகோதரி பிரியா சென்னை ராஜீவ் காந்தி அரசு மருத்துவமனையில் உயிரிழந்த செய்தி அதிர்ச்சி அளிக்கிறது. சகோதரி பிரியா அவர்களின் குடும்பத்தாருக்கு எனது ஆழ்ந்த இரங்கலை தெரிவித்துக் கொள்கிறேன்.
இந்த திறனற்ற திமுக ஆட்சியில் ஒவ்வொரு அரசு துறையும் அழிந்து கொண்டிருக்கிறது. அந்த வரிசையில் மருத்துவ துறையும் சேர்ந்திருப்பது வேதனை அளிக்கிறது. தவறான சிகிச்சை வழங்கிய அரசு மருத்துவர்களை பணியிடை நீக்கம் செய்ய வேண்டும்.
திமுக அரசு, சகோதரி பிரியா அவர்களின் குடும்பத்தில் ஒருவருக்கு அரசு வேலை மற்றும் நஷ்ட ஈடாக இரண்டு கோடி ரூபாய் அவரது குடும்பத்தாருக்கு உடனடியாக வழங்க வேண்டும். இவ்வாறு அண்ணாமலை கூறி உள்ளார்.
- டாக்டர்களின் கவனக்குறைவான சிகிச்சை ஒரு அப்பாவி மாணவியின் உயிரை பலி வாங்கி இருக்கிறது.
- சிறுநீரகம், கல்லீரல் ஆகியவற்றிலும் தொற்று பரவியதால் உடல்நிலை மிகவும் மோசம் அடைந்தது.
சென்னை:
சென்னை வியாசர்பாடியைச் சேர்ந்தவர் ரவிக்குமார்-உஷாராணி தம்பதி. இவர்களுக்கு 3 மகன்கள் மற்றும் பிரியா (17) என்ற மகள் உள்ளனர். இவர்களில் பிரியா ராணிமேரி கல்லூரியில் விளையாட்டு துறையில் படித்து வந்தார். பிரியா மிகச்சிறந்த கால்பந்து வீராங்கனை. 6-ம் வகுப்பிலேயே பயிற்சி எடுத்து வந்த பிரியா மாவட்ட அளவிலும், மாநில அளவிலும் விளையாடி வந்தார்.
கடந்த மாதம் 20-ந்தேதி பயிற்சியில் ஈடுபட்டிருந்த பிரியாவுக்கு வலது காலில் தசை பிடிப்பு போல் வலி ஏற்பட்டுள்ளது. வலியால் துடித்த பிரியாவை பெரியார் நகர் அரசு ஆஸ்பத்திரியில் சிகிச்சைக்காக அழைத்து சென்றனர். அவரை பரிசோதித்த டாக்டர்கள் சிறு அறுவை சிகிச்சை செய்துள்ளார்கள்.
அறுவை சிகிச்சை முடிந்து காலில் கட்டு போட்டு இருக்கிறார்கள். அதன் பிறகும் வலி குறையாததால் 2 நாட்களுக்கு பிறகு மேல் சிகிச்சைக்காக ராஜீவ்காந்தி அரசு ஆஸ்பத்திரியில் சேர்த்துள்ளார்கள்.
அங்கு காலில் போடப்பட்டிருந்த கட்டுக்களை பிரித்து பார்த்த டாக்டர்கள் ரத்தக்குழாய்களில் அடைப்பு ஏற்பட்டு ரத்த ஓட்டமும் தடைபட்டு தொற்றுக்கள் உருவாகி இருந்ததை பார்த்து அதிர்ச்சி அடைந்தனர்.
இதையடுத்து காலை துண்டிப்பதை தவிர வேறு வழியில்லை என்ற நிலை ஏற்பட்டது. காலை துண்டித்தால் மட்டுமே தொற்றுக்கள் மேற்கொண்டு பரவாது என்று முடிவு செய்தனர். அதன்படி கால் மூட்டின் மேல் பகுதியில் இருந்து கால் துண்டித்து அகற்றப்பட்டது.
அதை தொடர்ந்து ராஜீவ் காந்தி அரசு ஆஸ்பத்திரியில் தொடர் சிகிச்சையில் இருந்து வந்தார். அவரது உடல்நிலையை டாக்டர்கள் தீவிரமாக கண்காணித்து வந்தனர். இருப்பினும் உடல் நிலையில் முன்னேற்றம் ஏற்படவில்லை.
சிறுநீரகம், கல்லீரல் ஆகியவற்றிலும் தொற்று பரவியதால் உடல்நிலை மிகவும் மோசம் அடைந்தது.
சிகிச்சை பலன் அளிக்காமல் இன்று அதிகாலையில் பிரியா பரிதாபமாக இறந்தார். அவர் இறந்ததை அறிந்ததும் பெற்றோர்களும், சகோதரர்களும் கதறி அழுதது பார்க்க பரிதாபமாக இருந்தது.
டாக்டர்களின் கவனக்குறைவான சிகிச்சை ஒரு அப்பாவி மாணவியின் உயிரை பலிவாங்கி இருக்கிறது.
குறிப்பிட்ட ஆபரேசனை செய்ததும் கட்டு போட்டிருக்கக்கூடாது என்று கூறப்படுகிறது. ஆனால் மருத்துவர்கள் கவனக்குறைவால் மிகவும் இறுக்கமாக கட்டு போட்டுள்ளார்கள். இதனால் ரத்த நாளங்களில் ரத்த ஓட்டம் தடைபட்டுள்ளது.
இதனால் கால் அழுகி தொற்று உருவாகி இருக்கிறது. இதுவே பிரியாவின் உயிரை பறித்து இருக்கிறது.
மாணவி பிரியாவின் மரணம் பலரையும் சோகத்தில் ஆழ்த்தி உள்ளது. தகவல் அறிந்ததும் அமைச்சர் மா.சுப்பிரமணியன் ஆஸ்பத்திரிக்கு விரைந்தார்.
அங்கு வைக்கப்பட்டிருந்த மாணவியின் உடலை பார்த்து கண்கலங்கினார். பின்னர் பெற்றோருக்கும் அவரது சகோதரர்களுக்கும் ஆறுதல் கூறினார்.
ஏற்கனவே மாணவி பிரியாவை நேரில் பார்த்து தைரியம் சொல்லி பேட்டரியால் இயங்கும் செயற்கை காலுக்கு ஏற்பாடு செய்வதாகவும் கூறி இருந்தார். இந்த நிலையில் பிரியாவின் இழப்பு மிகப்பெரிய துயரத்தை தருவதாக அவர் கூறினார்.
- பிரியாவுக்கு அளிக்கப்பட்ட சிகிச்சை குறித்து விசாரிக்கப்பட வேண்டும்.
- கால்பந்து வீராங்கனை பிரியாவின் குடும்பத்திற்கு தமிழக அரசால் அறிவிக்கப்பட்டுள்ள ரூ.10 லட்சம் இழப்பீடு போதுமானதல்ல.
சென்னை:
பா.ம.க. தலைவர் டாக்டர் அன்புமணி ராமதாஸ் வெளியிட்டுள்ள இரங்கல் செய்தியில் கூறியிருப்பதாவது:-
சென்னை கொளத்தூர் அரசு மருத்துவமனையில் மூட்டு சவ்வு கிழிந்ததற்காக அறுவை சிகிச்சை செய்துகொண்ட கால்பந்து வீராங்கனையும், கல்லூரி மாணவியுமான பிரியா அடுத்தடுத்து ஏற்பட்ட உடல் நல பாதிப்பால் உயிரிழந்தது மிகுந்த வேதனை அளிக்கிறது.
பிரியாவுக்கு அளிக்கப்பட்ட சிகிச்சை குறித்து விசாரிக்கப்பட வேண்டும். மருத்துவர்கள் தவறு செய்திருந்தால் அவர்கள் மீது சட்டப்படி நடவடிக்கை எடுக்க வேண்டும்.
கால்பந்து வீராங்கனை பிரியாவின் குடும்பத்திற்கு தமிழக அரசால் அறிவிக்கப்பட்டுள்ள ரூ.10 லட்சம் இழப்பீடு போதுமானதல்ல. அவரது குடும்பத்திற்கு ரூ.1 கோடி இழப்பீடு வழங்க வேண்டும்.
இவ்வாறு அதில் கூறியுள்ளார்.
- பிரியாவின் குடும்பத்தினர் தற்போது உறவினர் வீட்டில் வசித்து வரும் நிலையில், வீடு ஒதுக்கீடு செய்ய முடிவு செய்யப்பட்டுள்ளது.
- நிவாரணம் ரூ.10 லட்சம், மற்றும் ரூ.18 ஆயிரம் சம்பளத்தில் அரசு வேலைக்கான ஆணை விரைந்து வழங்கப்படும்.
சென்னை வியாசர்பாடியை சேர்ந்த ரவிக்குமார்- உஷாராணி தம்பதியின் மகள் பிரியா (வயது17). கால்பந்து வீராங்கனையான இவர் மூட்டு வலி சிகிச்சைக்காக பெரியார் நகர் அரசு ஆஸ்பத்திரியில் ஆபரேஷன் செய்து கொண்டார்.
அதன்பிறகும் கால் வலி அதிகரித்ததால் ராஜீவ்காந்தி அரசு மருத்துவமனையில் மேல்சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டிருந்த நிலையில் அவரது வலது காலில் ரத்த ஓட்டம் தடைப்பட்டதால் அறுவை சிகிச்சை மூலம் அவரது காலை அகற்றிவிட்டனர்.
அதன்பிறகு அவரது உடல்நிலை படிப்படியாக மோசம் அடைந்து நேற்று பிரியா பரிதாபமாக இறந்து விட்டார்.
இந்த சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்திய நிலையில் மாணவி பிரியாவின் குடும்பத்துக்கு ரூ.10 லட்சம் நிவாரணம் வழங்கவும் அவரது சகோதரர்களில் ஒருவருக்கு அரசு வேலை வழங்கவும் முடிவு செய்யப்பட்டுள்ள தாக அமைச்சர் மா.சுப்பிரமணியன் கூறி இருந்தார்.
அதன்படி பிரியாவின் சகோதரர்கள் 3 பேரில் யாருக்கு அரசு வேலை தர வேண்டும் என்பதை அரவது குடும்பத்தார் முடிவு செய்து சொன்னால் அவருக்கு அரசு வேலை கிடைக்க ஏற்பாடு செய்யப்படும் என்றும் அமைச்சர் மா.சுப்பிரமணியன் அறிவித்திருந்தார்.
பிரியாவின் சகோதரர்கள் 3 பேர் இருப்பதால் இதில் யாருக்கு அரசு வேலை வழங்க வேண்டும் என்பதை பிரியாவின் பெற்றோர் இன்று முடிவு செய்து அரசுக்கு தகவல் தெரிவிக்க உள்ளனர்.
அதன் அடிப்படையில் நிவாரணம் ரூ.10 லட்சம், மற்றும் ரூ.18 ஆயிரம் சம்பளத்தில் அரசு வேலைக்கான ஆணை விரைந்து வழங்கப்படும் என்று அமைச்சர் மா.சுப்பிரமணியன் தெரிவித்தார்.
இந்நிலையில், உயிரிழந்த மாணவி பிரியாவின் குடும்பத்திற்கு சொந்த வீடு வழங்க தமிழக அரசு முடிவு செய்யப்பட்டுள்ளது.
பிரியாவின் குடும்பத்தினர் தற்போது உறவினர் வீட்டில் வசித்து வரும் நிலையில், வீடு ஒதுக்கீடு செய்ய முடிவு செய்யப்பட்டுள்ளது. பிரியாவின் தாய் அமைச்சர் சேகர் பாபுவிடம் வைத்த கோரிக்கையின் அடிப்பையில் தமிழக அரசு முடிவு செய்துள்ளது.
மாணவி பிரியா குடும்பத்திற்கு நகர்புற வாழ்விட மேம்பாட்டு வாரியம் சார்பில் வீடு ஒதுக்கீடு செய்ய திட்டமிடப்பட்டுள்ளது.
இதையடுத்து, பிரியாவின் குடும்பத்திற்கு வீடு ஒதுக்குவதற்கான பணிகள் தீவிரப்படுத்தப்பட்டுள்ளது.
- கால்பந்து வீராங்கனை பிரியா உயிரிழந்த விவகாரத்தில் துறை ரீதியாகவும், சட்ட ரீதியாகவும் நடவடிக்கை எடுக்கப்பட்டு வருகிறது.
- மருத்துவர் தலைமறைவாக இருந்தால் காவல்துறை நடவடிக்கை எடுப்பார்கள்.
சென்னை:
சென்னை சைதாப்பேட்டையில் நீர்நிலை ஓரங்களில் உள்ள குடும்பங்களுக்கு விலையில்லா கொசுவலையை அமைச்சர் மா.சுப்பிரமணியன் வழங்கினார். அப்போது அவர் நிருபர்களிடம் கூறியதாவது:-
நீர்நிலைகள் ஓரம் வசிக்கும் பொதுமக்கள் கொசுக்கடி பாதிப்பில் இருந்து தற்காத்துக்கொள்ள 2 லட்சத்து 60 ஆயிரம் கொசு வலைகள் மாநகராட்சியிடம் கையிருப்பில் உள்ளன. சைதாப்பேட்டையில் 23 ஆயிரம் குடும்பங்களுக்கு கொசுவலை வழங்கப்படுகிறது.
மழைக்கால நோய்களில் இருந்து மக்களை பாதுகாக்க சிறப்பு முகாம்கள், காய்ச்சல் முகாம்கள் தமிழகம் முழுவதும் நடந்து வருகின்றன. 55 நாட்களில் 76 லட்சம் பேர் முகாம்கள் மூலம் பயன் அடைந்தனர். காய்ச்சல் முகாம் மூலம் ஒரு லட்சத்து 4 ஆயிரம் பேர் சிகிச்சை பெற்றுள்ளனர். இதுவரையில் 48 ஆயிரம் முகாம்கள் நடந்துள்ளன.
சென்னையை பொறுத்தவரை 3,362 முகாம்கள் நடத்தப்பட்டதில் 2.33 லட்சம் பேர் பரிசோதனை செய்துள்ளனர். டெங்கு, மலேரியா பாதிப்பில் இருந்து மக்களை பாதுகாக்க முதல்-அமைச்சர் உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று அறிவுறுத்தி உள்ளார்.
டெங்கு காய்ச்சலால் ஜனவரி மாதம் முதல் இதுவரையில் 5 பேர் உயிரிழந்துள்ளனர். இது கடந்த ஆண்டை விட குறைவாகும்.
கால்பந்து வீராங்கனை பிரியா உயிரிழந்த விவகாரத்தில் துறை ரீதியாகவும், சட்ட ரீதியாகவும் நடவடிக்கை எடுக்கப்பட்டு வருகிறது. மருத்துவர் தலைமறைவாக இருந்தால் காவல்துறை நடவடிக்கை எடுப்பார்கள்.
மரண இறுதி அறிக்கை இன்னும் வரவில்லை. இந்த சம்பவம் கவனக்குறைவாக நடந்துள்ளது என்று நான் விளக்கமாக கூறி உள்ளேன்.
ஆனால் சிலர் இதில் அரசியல் செய்கிறார்கள். குஜராத்தில் தொங்கு பாலம் அறுந்து விழுந்து 150 பேர் உயிரிழந்தனர். அந்த பணியில் ஈடுபட்ட கட்டுமான நிறுவனம் கடவுள் விதி என்று கூறியுள்ளது. நாங்கள் அதுபோல கூறவில்லை. கவனக்குறைவாக நடந்ததாக ஒப்புக்கொண்டுள்ளோம்.
தமிழகத்தில் 20 ஆயிரம் அரசு டாக்டர்கள் பணிபுரிகிறார்கள். அதில் ஒன்று இரண்டுபேரின் கவனக்குறைவு, அலட்சியத்தால் இதுபோன்ற சம்பவம் நடக்கிறது.
இவ்வாறு அவர் கூறினார்.
- ரத்த ஓட்டம் தடைப்பட்டதால் அறுவை சிகிச்சை மூலம் காலை அகற்றிவிட்டனர்.
- கவனக்குறைவான சிகிச்சை தொடர்பாக 2 மருத்துவர்கள் சஸ்பெண்ட் செய்யப்பட்டுள்ளனர்.
சென்னை:
சென்னை வியாசர்பாடியை சேர்ந்த ரவிக்குமார்- உஷாராணி தம்பதியின் மகள் பிரியா (வயது17). கால்பந்து வீராங்கனையான இவர் மூட்டு வலி சிகிச்சைக்காக பெரியார் நகர் அரசு ஆஸ்பத்திரியில் ஆபரேஷன் செய்து கொண்டார். அதன்பிறகும் கால் வலி அதிகரித்ததால் ராஜீவ்காந்தி அரசு மருத்துவமனையில் மேல்சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டிருந்த நிலையில் அவரது வலது காலில் ரத்த ஓட்டம் தடைப்பட்டதால் அறுவை சிகிச்சை மூலம் அவரது காலை அகற்றிவிட்டனர்.
அதன்பிறகு அவரது உடல்நிலை படிப்படியாக மோசம் அடைந்து நேற்று பிரியா பரிதாபமாக இறந்து விட்டார். இந்த சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது. இது தொடர்பாக 2 மருத்துவர்கள் சஸ்பெண்ட் செய்யப்பட்டுள்ளனர்.
இந்நிலையில் கால்பந்து வீராங்கனை பிரியா மரணம் குறித்து மாநில மனித உரிமைகள் ஆணையம் தாமாக முன்வந்து வழக்கை விசாரணைக்கு எடுத்துள்ளது. பிரியா மரணம் தொடர்பாக 6 வாரங்களில் விரிவான அறிக்கை தாக்கல் செய்யும்படி சுகாதாரத்துறைக்கு உத்தரவிட்டுள்ளது.
- பிரியாவின் சகோதரர்கள் தேர்வு செய்யும் 10 பெண்களின் பயிற்சிக்கான செலவை பாஜக ஏற்கும்.
- நிர்வாக கோளாறு காரணமாக ஒரு உயிர் பறிபோயுள்ளது.
சென்னையில் அரசு மருத்துவர்களின் தவறான சிகிச்சையால் உயிரிழந்த மாணவி பிரியாவின் வீட்டிற்கு நேரில் சென்ற பாஜக மாநிலத் தலைவர் அண்ணாமலை மாணவியின் படத்திற்கு மலர் தூவி அஞ்சலி செலுத்தினார். பின்னர் அவரது குடும்பத்தினரை சந்தித்து ஆறுதல் கூறினார். அவருடன், மத்திய இணையமைச்சர் எல்.முருகன் பிரியாவின் பெற்றோரை சந்தித்து ஆறுதல் கூறினார்.
பின்னர் செய்தியாளரிடம் பேசிய அண்ணாமலை கூறியதாவது:-
இந்தியாவில் மருத்துவ கட்டமைப்பு மிக நன்றாக இருக்கக்கூடிய மாநிலம் தமிழகம். இதுபோன்ற சம்பவங்கள் நடைபெறாமல் இருக்க தமிழக அரசு நவடிக்கை எடுக்க வேண்டும்.
மாணவி பிரியாவின் பெயரில் சென்னை முழுவதும் கால்பந்தாட்ட போட்டியை பாஜக நடத்த உள்ளது.
மேலும், பிரியாவின் சகோதரர்கள் தேர்வு செய்யும் 10 பெண்களின் பயிற்சிக்கான செலவை பாஜக ஏற்கும்.
பிரியாவின் சிகிச்சை குறித்து அமைச்சர் மா.சுப்பிரமணியன் முரண்பட்ட தகவல்களை தெரிவிக்கிறார்.
முதலமைச்சரின் தொகுதியில் உள்ள மருத்துவமனையில் இந்த தவறு நடந்துள்ளது. நிர்வாக கோளாறு காரணமாக ஒரு உயிர் பறிபோயுள்ளது.
இந்த உயிரிழப்புக்கு சுகாதாரத்துறை அமைச்சர் பொறுப்பேற்க வேண்டும். அரசு பொறுப்பேற்க வேண்டும்.
இவ்வாறு அவர் கூறினார்.
- விவகாரம் தொடர்பாக சம்பந்தப்பட்ட மருத்துவர்கள் மீது நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது.
- கால்பந்து வீராங்கனை பிரியா மரணம் தொடர்பான விசாரணை அறிக்கை காவல்துறையிடம் ஒப்படைக்கப்பட்டது.
சென்னை:
சென்னை அரசு ஆஸ்பத்திரியில் தவறான சிகிச்சையால் காலை இழந்த கால்பந்து வீராங்கனை பிரியா சிகிச்சை பலனின்றி இரு தினங்களுக்கு முன் இறந்தார். அவர் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வந்தபோது மருத்துவ குழுவினர் அவரிடம் விசாரணை நடத்தினர். அதில் சிகிச்சையின் போது மருத்துவர்கள் அஜாக்கிரதையாக இருந்ததும், மாணவிக்கு தவறான சிகிச்சை அளித்ததும் தெரிய வந்தது.
இதையடுத்து, மருத்துவர்கள் பணியிடை நீக்கம் செய்யப்பட்டு அவர்கள்மீது துறை ரீதியிலான விசாரணை நடைபெற்று வருகிறது. மேலும், அவர்கள்மீது சட்ட நடவடிக்கை எடுக்க வேண்டும் என மாணவியின் உறவினர்கள் கோரிக்கை விடுத்தனர்.
மாணவிக்கு மருத்துவர்கள் அளித்த சிகிச்சை குறித்த விவரங்கள் காவல்துறைக்கு கிடைக்காததால் அவர்கள்மீது வழக்குப்பதிவு செய்ய முடியாத நிலை ஏற்பட்டது.
இந்நிலையில், பிரியா மரணம் தொடர்பான விசாரணை அறிக்கையை மருத்துவ கல்வி இயக்குனரகம், காவல்துறையிடம் ஒப்படைத்தது. விசாரணை அறிக்கையைப் பொறுத்து அடுத்தகட்ட நடவடிக்கையை போலீசார் மேற்கொள்ளுவார்கள் எனத் தகவல் வெளியாகி உள்ளது.