என் மலர்
நீங்கள் தேடியது "கூட்டுறவு இணைப்பதிவாளர்"
- ரேசன் கடை விற்பனையாளர் பணிக்கு 14-ந் தேதிக்குள் விண்ணப்பிக்க வேண்டும் என்று கூட்டுறவு இணைப்பதிவாளர் தகவல் தெரிவித்துள்ளார்.
- மேலும், இணையதளம் வழியாக விண்ணப்பிக்க கடைசி தேதி வருகிற 14.11.2022 மாலை 5.45 மணி ஆகும்.
விருதுநகர்
விருதுநகர் மண்டல கூட்டுறவு சங்கங்களின் இணைப்பதிவாளர் செந்தில்குமார் விடுத்துள்ள செய்திக்குறிப்பில் கூறியிருப்பதாவது:-
விருதுநகர் மாவட்டத்தில் கூட்டுறவு சங்கங்களின் பதிவாளரின் கட்டுப்பாட்டில் உள்ள கூட்டுறவு சங்கங்களால் நடத்தப்படும் நியாய விலைக்கடைகளில் காலிப்பணியிடங்களாக உள்ள 146 விற்பனை யாளர்கள் மற்றும் 18 கட்டுநர்கள் பணியி டங்களுக்கு நேரடி நியமனம் செய்வதற்கான விண்ணப்பங்கள் தகுதிவாய்ந்த விண்ணப்பதாரர்களிடம் இருந்து https://www.vnrdrb.net என்ற இணையதளம் வழியாக (ஆன்லைன்) மூலம் கடந்த 13.10.2022 முதல் விண்ணப்பங்கள் பெறப்பட்டு வருகிறது.
மேலும், இணையதளம் வழியாக விண்ணப்பிக்க கடைசி தேதி வருகிற 14.11.2022 மாலை 5.45 மணி ஆகும். எனவே, விண்ணப்பம் சமர்ப்பிக்க இறுதி நேரத்தில் எழும் தொழில்நுட்ப பிரச்சினைகளை தவிர்க்க, முன்கூட்டியே இணையதளம் வழியாக விண்ணப்பங்களை சமர்ப்பிக்க வேண்டும்.
இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.