search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "ஆருத்ர கபாலீஸ்வரர் கோவில்"

    • தேரோட்ட நிகழ்ச்சி இன்று காலை நடந்தது.
    • இதனால் அந்த பகுதியில் போக்கு வரத்து நெரிசல் ஏற்பட்டது.

    ஈரோடு:

    ஈரோடு கோட்டை வருணாம்பிகை உடனமர் ஆருத்ர கபாலீஸ்வரர் வகையறா திருக்கோவில் வைகாசி விசாக தேர்த் திருவிழா கணபதி ஹோமத்துடன் கடந்த 23-ந் தேதி தொடங்கியது. தொடந்து மேல் வாஸ்து சாந்தி, மிருத்சங்கிரஹனம் உள்ளிட்ட நிகழ்ச்சிகள் நடைபெற்றன.

    தொடர்ந்து வரும் ஜுன் மாதம் 3-ந் தேதி வரை 10 நாள்கள் நடைபெறுகிறது. இந்த வைகாசி தேர்த்திரு விழாவில் முதல் நாள் நிகழ்ச்சியாக கடந்த 24-ந் தேதி அதிகாலை 5.30 மணி முதல் 6.30 மணி வரை விருஷப யாகம், த்வஜ பட பூஜை, தேவ ரக்ஷாபந்தனம் உள்ளிட்ட நிகழ்ச்சிகள் நடைபெற்றன.

    இதையடுத்து மாலை 6.30 மணிக்கு மேல் யாக சாலை பூஜை தொடக்கம், நவ சந்தி, இந்திர விமா னத்தில் சோமாஸ்கந்தர் சோடச உபசார பூஜையுடன் ரதவீதி பிரதட்சனம் உள்ளிட்ட நிகழ்ச்சிகள் நடைபெற்றன. தொடர்ந்து ஒவ்வொரு நாளும் அதிகாலை மற்றும் மாலை நேரங்களில் சுவாமிக்கு சிறப்பு அபிஷேகம், அலங்கார பூஜைகள் நடைபெற்றன.

    வைகாசி விசாகத்தின் முக்கிய நிகழ்ச்சியான தேரோட்ட நிகழ்ச்சி இன்று காலை நடந்தது. சரஸ்வதி எம்.எல்.ஏ., துணை மேயர் வெல்வராஜ், இந்து அறநிலையத்துறை அறங்காவல் குழு தலைவர் எல்லப்பாளையம் சிவக்குமார், செயல் அலுவலர் கயல்விழி, கவுன்சிலர் பழனியப்பா செந்தில்குமார் உள்பட பலர் தேரை வடம் பிடித்து இழுத்தனர்.

    தேர் ஈஸ்வரன் கோவில் வீதி, மணிக்கூண்டு பகுதி, பன்னீர் செல்வம் பார்க், மீனாட்சி சுந்தரனார் சாலை, காமராஜர் வீதி வழியாக மீண்டும் தேர் இன்று மாலை கோவிலில் நிலை நிறுத்தப்படுகிறது.

    தேரோட்டத்தை ஆயிரக்கணக்கான பக்தர்கள் கலந்து கொண்டனர். இதனால் அந்த பகுதியில் போக்கு வரத்து நெரிசல் ஏற்பட்டது. இதைத் தொடர்ந்து 3-ந் தேதி வரை திருவிழா நடைபெறுகிறது.

    • சிவபெருமானுக்கு அன்னத்தால் சிறப்பு அபிஷேகம் செய்யப்பட்டு அன்னாபிஷேக விழா நடந்தது.
    • பக்தர்களுக்கு அன்னம் பிரசாதமாக வழங்கப்பட்டது.

    காங்கயம் :

    காங்கயம் அருகே உள்ள மடவளாகம் ஆருத்ர கபாலீஸ்வரர் மற்றும் ரகுபதி நாராயண பெருமாள் கோவில்களில் வருடாந்திர ஐப்பசி மாத பவுர்ணமியையொட்டி சிவபெருமானுக்கு அன்னத்தால் சிறப்பு அபிஷேகம் செய்யப்பட்டு அன்னாபிஷேக விழா நடந்தது. விழாவில் கொங்கு வேளாள கவுண்டர்கள் சமூகத்தை சேர்ந்த தோடை, கண்ணந்தை, காடை, கீரை ஆகிய கோவிலின் குலத்தவர்களும், பக்தர்களும் மடவளாகம், பாப்பினி, பச்சாபாளையம், காங்கயம் உள்பட சுற்றுவட்டார பகுதி பொதுமக்களும், பக்தர்களும் திரளாக கலந்துகொண்டு சாமியை வழிபட்டனர்.

    விழாவில் கலந்துகொண்ட பக்தர்களுக்கு அன்னம் பிரசாதமாக வழங்கப்பட்டது. விழாவிற்கான ஏற்பாடுகளை கோவிலின் நிர்வாக தலைவர் எஸ்.தங்கமுத்து, அன்னதான கமிட்டி நிர்வாகி பாலசுப்பிரமணி ஆகியோர் செய்திருந்தனர். இக்கோவில்களின் கும்பாபிஷேகம் வருகிற ஜனவரி மாதம் 27-ந் தேதி நடைபெற உள்ளது குறிப்பிடத்தக்கது.

    ×