என் மலர்
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
நீங்கள் தேடியது "Jayalalitha’s Birthday"
- 11-ந்தேதி ஜெயலலிதா பிறந்தநாள் பொதுக்கூட்டம் நடக்கிறது.
- இதற்காக பிரமாண்ட மேடை அமைக்கும் பணி தீவிரமாக நடந்து வருகிறது.
சிவகங்கை
சிவகங்கையில் வருகிற 11-ந்தேதி அ.தி.மு.க. சார்பில் ஜெயலலிதா பிறந்தநாள் பொதுக்கூட்டம் நடைபெறுகிறது. இதில் பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமி பங்கேற்கிறார். இதற்காக சிவகங்கை-மதுரை 4 வழிச்சாலையில் பிரமாண்ட மேடை அமைக்கும் பணியை மாவட்ட செயலாளர் செந்தில்நாதன் எம்.எல்.ஏ. நேரில் பார்வையிட்டு ஆய்வு செய்தார். அருகில் முன்னாள் அமைச்சர் பாஸ்கரன், அ.தி.மு.க. நகர் செயலாளர் ராஜா, ஒன்றிய செயலாளர்கள் கருணாகரன், சேவியர்தாஸ், செல்வமணி, ஜெகன், கோபி, இலக்கிய அணி மாவட்ட செயலாளர் ராஜேந்திரன், தகவல் தொழில் நுட்ப பிரிவு இணைச்செயலாளர் தமிழ்செல்வன், மாவட்ட பாசறை இணைச்செய லாளர் மோசஸ், பாசறை மாவட்ட பொருளாளர் சரவணன் மற்றும் நிர்வாகிகள் உள்ளனர்.
- கண்டனூரில் ஜெயலலிதா பிறந்தநாள் பொதுக்கூட்டம் நடந்தது.
- முன்னாள் பேரூராட்சி தலைவர் ஆறுமுகம் தலைமை தாங்கினார்.
காரைக்குடி
சிவகங்கை மாவட்டம் காரைக்குடி சட்டமன்ற தொகுதி அ.தி.மு.க. சார்பில் ஜெயலலிதாவின் 75-வது பிறந்தநாள் பொதுக்கூட்டம் இடைக்கால பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமி ஆணைக்கிணங்க காரைக்குடி அருகே உள்ள கண்டனூரில் நடந்தது.
முன்னாள் பேரூராட்சி தலைவர் ஆறுமுகம் தலைமை தாங்கினார்.சாக்கோட்டை மேற்கு ஒன்றிய செயலாளர் செந்தில்நாதன், காரைக்குடி நகர செயலாளர் மெய்யப்பன், சாக்கோட்டை ஒன்றிய தலைவர் சரண்யா செந்தில்நாதன் முன்னிலை வகித்தனர்.கண்டனூர் பேரூராட்சி செயலாளர் சேகர் வரவேற்றார்.
மாவட்ட செயலா ளரும், சிவகங்கை தொகுதி சட்டமன்ற உறுப்பினருமான செந்தில்நாதன், முன்னாள் அமைச்சர் வைகை செல்வன் ஆகியோர் சிறப்புரையாற்றினர்.
வைகை செல்வன் பேசுகையில், மக்களுக்கு ஒரு பிரச்சினை என்றால் தட்டிக் கேட்கும் இயக்கம் அ.தி.மு.க.. இடைத்தேர்தலில் தோல்வி அடைந்த 3 நாட்களில் பீனிக்ஸ் பறவையாய் எழுச்சியோடு இங்கே கூடியுள்ளோம். தி.மு.க அரசு குடும்பத் தலைவிகளுக்கு மாதம் ரூ.1000, பழைய ஓய்வூதியத் திட்டம் உள்பட பல்வேறு தேர்தல் வாக்குறுதிகளை நிறைவேற்றாமல் மக்களை ஏமாற்றி வருகிறது என்றார்.
முன்னாள் எம்.எல்.ஏ. கற்பகம் இளங்கோ, ஒன்றிய செயலாளர்கள் மாசான், சுப்பிரமணியன், தேவகோட்டை நகர்மன்ற தலைவர் சுந்தரலிங்கம், மாவட்ட பேரவை ஊரவயல் ராமு, எம்.ஜி.ஆர். மன்ற செயலாளர் நருவிழி கிருஷ்ணன், துணை செயலாளர் சுரேஷ், மாவட்ட மகளிரணி துணை செயலாளர் சோபியா பிளாரன்ஸ், காரைக்குடி நகர்மன்ற கவுன்சிலர்கள் ராம்குமார், அமுதா, கனகவள்ளி, ராதா உள்பட பலர் கலந்து கொண்டனர்.நகர தலைவர் அருள்ஜோதி நன்றி கூறினார்.
- ஜெயலலிதா பிறந்தநாளையொட்டி 51 ஏழை எளிய மணமக்களுக்கு முன்னாள் முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி திருமணத்தை நடத்தி வைக்கிறார்.
- இந்த தகவலை முன்னாள் அமைச்சர் ஆர்.பி.உதயகுமார் தெரிவித்துள்ளார்.
மதுரை
ஜெயலலிதா பேரவை மற்றும் மதுரை புறநகர் மேற்கு மாவட்ட அ.தி.மு.க. சார்பில் டி.குன்னத்தூரில் உள்ள அம்மா கோவிலில் ஆலோசனை கூட்டம் நடந்தது. இதில் முன்னாள் அமைச்சர் ஆர்.பி. உதய குமார் பேசியதாவது:-
வெள்ள தடுப்பு மற்றும் வெள்ளமீட்பு நடவடிக்கை களை தி.மு.க. அரசு எடுக்காத காரணத்தால், தற்போது தண்ணீரில் தமிழகம் தத்தளிக்கிறது. இதனால் மக்கள் கண்ணீரில் மிதக்கிறார்கள். அவர்களுக்கு எடப்பாடி பழனிசாமி ஆணைக்கிணங்க ஜெயலலிதா பேரவை சார்பிலும், மதுரை புறநகர் மேற்கு மாவட்ட அ.தி.மு.க. சார்பிலும் நிவாரணம் வழங்கப்படும்.
மேலும் பருவ மழை யால் பாதிக்கப்பட்ட விவசாயிகளுக்கு ஏக்கருக்கு ரூ.30ஆயிரம் இழப்பீடு தொகையை தி.மு.க. அரசு உடனடியாக வழங்க வேண்டும்.7 பேர் விடுதலைக்கு 2014-ம் ஆண்டு முதல் முதலாக விடுதலைக்கு வித்திட்டவர் ஜெயலலிதா. அதனை தொடர்ந்து 2018-ம் ஆண்டு எடப்பாடி பழனிசாமி தீர்மானத்தை நிறைவேற்றினார். 7 பேர் விடுதலைக்கு முக்கிய காரணமாக இருந்தவர்கள் இந்த இருவர் மட்டும் தான்.
எம்.ஜி.ஆரின் 106-வது பிறந்த நாளை முன்னிட்டும், ஜெயலலிதா வின் 75-வது பிறந்தநாளை முன்னிட்டும், அ.தி.மு.க.வின் 51-வது பொன்விழாவை முன்னிட்டும், ஜெயலலிதா பேரவை சார்பிலும், மதுரை புறநகர் மேற்கு மாவட்ட அ.தி.மு.க. சார்பிலும் பிப்ரவரி 23-ந் தேதி, டி. குன்னத்தூரில் உள்ள அம்மா கோவிலில் 51 ஏழை எளிய மணமக்களுக்கு, இடைக்கால பொதுச் செயலாளர், முன்னாள் முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி திருமணத்தை நடத்தி வைக்கிறார். இதில் முன்னாள் மூத்த அமைச்சர்கள், தலைமை கழக நிர்வாகிகள், மாவட்ட செயலாளர்கள் பங்கேற்கி றார்கள்.
இவ்வாறு அவர் பேசினார்.
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்