search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "சிவப்பு"

    • பரமத்தி வேலூர் தாலுகா கபிலர்மலை வட்டாரத்தில் நிலக்கடலை சாகுபடி பரவலாக மேற்கொள்ளப்பட்டு உள்ளது.
    • தற்பொழுது பூச்சிகளுக்கு சாதகமான கால சூழ்நிலை நிலவுவதால் நிலக்கடலையில் பூச்சிகளின் தாக்குதல் அதிகரித்து காணப்படுகிறது.

    பரமத்தி வேலூர்:

    நாமக்கல் மாவட்டம் பரமத்தி வேலூர் தாலுகா கபிலர்மலை வட்டாரத்தில் நிலக்கடலை சாகுபடி பரவலாக மேற்கொள்ளப்பட்டு உள்ளது. தற்பொழுது பூச்சிகளுக்கு சாதகமான கால சூழ்நிலை நிலவுவதால் நிலக்கடலையில் பூச்சிகளின் தாக்குதல் அதிகரித்து காணப்படுகிறது. குறிப்பாக, நிலக்கடலையில் சிவப்பு கம்பளிப்புழுவின் தாக்குதல் பொருளாதார சேதநிலைக்கு அதிகமாக உள்ளதால் விவசாயிகள் பயிர் பாதுகாப்பு நடவடிக்கைகளை உடனடியாக மேற்கொள்ள வேண்டும். என வேளாண்மைத்துறை அறிவுறுத்தி உள்ளது. அதன் ஒரு பகுதியாக சிவப்பு கம்பளிப்புழு தாக்குதல் உள்ள வயல்களில் ஒரு ஏக்கருக்கு சைபர்மெத்ரின் 3 சதம் மற்றும் குயினால்பாஸ் 20 சதம் ஈசிகலந்த 500 மில்லி ரசாயன மருந்து கலவையை 120 லிட்டர் தண்ணீருடன் செடியில் மருந்து ஒட்டுவதற்கு 25 மில்லி சிலிகான் ஒட்டும் திரவம் கலந்து உடனே தெளிக்குமாறு விவசாயிகளை கபிலர்மலை வட்டார வேளாண்மை உதவி இயக்குனர் ராதாமணி அறிவுறுத்தியுள்ளார்.

    • சிவப்பு எள் ஒரு கிலோ ரூ.93-க்கு ஏலம் போனது
    • க.பரமத்தி விவசாயிகள் மகிழ்ச்சி

    கரூர்:

    கரூர் மாவட்டத்தில் க.பரமத்தி,கரூர் ஆகிய இரு வெவ்வேறு ஒன்றிய பகுதிகளில் உள்ளன. இதில் பெரும்பாலும் கிராம புறங்களில் மானாவாரி நிலங்களில் எள், கம்பு, சோளம் போன்ற பல விதமான பணப்பயிர்களை விவசாயிகள் பயிரிட்டு அறுவடை செய்து பிழைத்து வரு கின்றனர். குறிப்பாக க.பரமத்தி ஒன்றியத்தில் பவித்திரம், புன்னம், காருடையாம்பாளையம், நெடுங்கூர், க.பரமத்தி, குப்பம், முன்னூர், அத்திப்பாளையம் ஆகிய பகுதிகளில் அதிகமாக மானாவாரி நிலங்களில் எள் விவசாயிகள் பயிரிட்டு அறுவடை செய்கின்றனர். தங்களது தேவைக்கு எண்ணை எடுத்தது போக மீதம் உள்ளவற்றை அருகேயுள்ள சாலைபுதூர் ஒழுங்கு முறை விற்பனை கூடத்தில் நடைபெறும் ஏலத் திற்கு கொண்டு செல்கின்றனர். அங்கு 4 மூட்டை சிவப்பு எள் எடைக்கு நடந்த ஏலத்தில் ஒரு கிலோ குறைந்த விலையாக ரூ.88, அதிக விலையாக கிலோ ரூ.93-க்கு ஏலம் போனதால் விவசாயிகள் மகிழ்ச்சி அடைந்துள்ளனர்.

    ×