என் மலர்
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
நீங்கள் தேடியது "அர்ப்பணிப்பு விழா"
- மதுரை அருகே கீழமாத்தூரில் நாளை புதிய தியான மந்திர் அர்ப்பணிப்பு விழா நடக்கிறது.
- இந்த விழாவில் சுவாமி அமரானந்தகிரி பங்கேற்கிறார்.
மதுரை
யோகதா சத்சங்க சொசைட்டி ஆப் இந்தியா அமைப்பு ஸ்ரீஸ்ரீ பரமஹம்ஸ் யோகானந்தரால் 1917-ம் ஆண்டு நிறுவப்பட்டது. இந்த அமைப்பு பல்வேறு ஆன்மீக சேவைகளை ஆற்றி வருவதோடு தியானங்களை பற்றியும் கற்றுத்தருகிறது.
அந்த வகையில் மதுரை அருகே திருவேடகம் வழியில் உள்ள கீழமாத்தூரில் யோகம் நகர் ஷிவானி கார்டனில் புதிய தியான மந்திர் அமைக்கப்பட்டுள் ளது. இதன் அர்ப்பணிப்பு விழா மற்றும் தியானம், ஆன்மீக சொற்பொழிவு, மகா பிரசாதம் வழங்கும் நிகழ்ச்சி நாளை (25-ந்தேதி, செவ்வாய்க்கிழமை) காலை 9 மணியளவில் நடைபெறுகிறது.
விழாவில் யோகதா சத்சங்க சொசைட்டி ஆப் இந்தியா அமைப்பின் மூத்த சன்னியாசி சுவாமி அமரானந்த கிரி கலந்துகொண்டு புதிய தியான மண்டபத்தை அர்ப்பணித்து வைக்கிறார். இதற்கான ஏற்பாடுகளை யோகதா சத்சங்க சொசைட்டி ஆப் இந்தியா அமைப்பின் நிர்வாகிகள் சிறப்பாக செய்து வருகிறார்கள்.
- முன்னாள் மாவட்ட கவுன்சிலர் வெங்கடாசலம் ஆகியோர் வாழ்த்தி பேசினர்.
- மங்கலம் ஊராட்சி மன்ற உறுப்பினர் ரபிதீன் ,இளைஞர் அணி நிர்வாகி சிராஜ்தீன் ஆகியோர் முன்னிலை வகித்தனர்.
மங்கலம்:
திருப்பூர் மாவட்டம், மங்கலத்தில் இந்திய யூனியன் முஸ்லிம் லீக் கட்சியின் இளைஞர் அணி சார்பில் மங்கலத்தில் ஆம்புலன்ஸ் அர்ப்பணிப்பு விழா நடைபெற்றது. இந்த நிகழ்ச்சியானது இந்திய யூனியன் முஸ்லிம் லீக் கட்சியின் மங்கலம் பகுதி தலைவர் ஜக்காரியா சேட் தலைமையில் நடைபெற்றது. நிகழ்ச்சிக்கு மங்கலம் ஊராட்சி மன்றத் துணைத் தலைவர் தாஹாநசீர் , மங்கலம் ஊராட்சி மன்ற உறுப்பினர் ரபிதீன் ,இளைஞர் அணி நிர்வாகி சிராஜ்தீன் ஆகியோர் முன்னிலை வகித்தனர். நிகழ்ச்சியில் மங்கலம் ஊராட்சி மன்ற தலைவர் எஸ்.எம்.பி.மூர்த்தி, காங்கிரஸ் கட்சியின் நிர்வாகியும், மங்கலம் ஊராட்சி மன்ற முன்னாள் தலைவருமான வே. முத்துராமலிங்கம், முன்னாள் மாவட்ட கவுன்சிலர் வெங்கடாசலம் ஆகியோர் வாழ்த்தி பேசினர்.
முடிவில் இந்திய யூனியன் முஸ்லிம் லீக் கட்சியின் பொதுச்செயலாளர் அபூபக்கர் மற்றும் இந்திய யூனியன் முஸ்லிம் லீக் கட்சியின் திருப்பூர் மாவட்ட செயலாளர் இப்ராஹிம் சிறப்புரையாற்றினர். முடிவில் தெளபிக் நன்றி கூறினார். இந்த ஆம்புலன்ஸ் சேவையானது குறைந்த கட்டணத்தில் செயல்படும் என தெரிவித்தனர்.
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்