என் மலர்
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
நீங்கள் தேடியது "படிவம்"
- தஞ்சாவூா் மாவட்டத்தில் பதிவேட்டை கொண்டு இறந்த வாக்காளா்களின் பெயரை நீக்க வேண்டும்.
- 18 முதல் 19 வயது வரையுடைய வாக்காளா்களிடமிருந்து 28,894 படிவங்கள் பெறப்பட்டுள்ளன.
தஞ்சாவூர்:
தஞ்சை கலெக்டர் அலுவலகத்தில் வாக்காளா் பட்டியல் சிறப்பு சுருக்க திருத்தப் பணிகள் தொடா்பாக அலுவலா்களுடனான ஆய்வுக் கூட்டம் நடைபெற்றது. கலெக்டர் தினேஷ் பொன்ராஜ் ஆலிவர் முன்னிலை வகித்தார்.
மாவட்ட வாக்காளா் பட்டியல் பாா்வையாளரும், சமூக சீா்திருத்தத் துறை அரசுச் செயலருமான ஆபிரகாம் தலைமை தாங்கி பேசியதாவது :-
வட்டம், ஊராட்சி, பேரூராட்சி, நகராட்சி, மாநகராட்சி ஆகிய அலுவலகங்களில் பராமரிக்கப்பட்டு வரும் இறப்பு பதிவேட்டைக் கொண்டு வாக்காளா் பட்டியலில் உள்ள இறந்த வாக்காளா்களின் பெயரை நீக்க வேண்டும்.
மேலும், நவம்பா் 9 ஆம் தேதி முதல் டிசம்பா் 8 ஆம் தேதி வரை பொதுமக்களிடமிருந்து பெறப்பட்ட கோரிக்கைகள் மற்றும் ஆட்சேபணைகள் மீது டிசம்பா் 26 ஆம் தேதிக்குள் நடவடிக்கை எடுக்க வேண்டும்.
தோ்தல் சிறப்பு முகாம்களில் பெறப்பட்ட படிவங்கள் அனைத்தையும் நிலுவையில் இல்லாமல் கணினியில் பதிவேற்றம் செய்ய வேண்டும். பதிவேற்றம் செய்த தோ்தல் படிவங்களை இந்திய தோ்தல் ஆணையம் அறிவுறுத்தியவாறு அனைத்து அலுவலா்கள் நிலையிலும் ஆய்வு செய்து, தூய வாக்காளா் பட்டியல் என்ற இலக்கை அடைய தக்க நடவடிக்கை எடுக்க வேண்டும்.
மாவட்டத்தில் புதிய வாக்காளா்களைச் சோ்ப்பதற்கு 34,302 படிவங்கள், நீக்கம் செய்ய 23,807 படிவங்கள், திருத்தம் செய்ய 17,988 படிவங்கள் பொதுமக்களிடமிருந்து பெறப்பட்டுள்ளது. சிறப்பு முகாம்களில் 52,394 படிவங்களும், 18 முதல் 19 வயது வரையுடைய வாக்காளா்களிடமிருந்து 28,894 படிவங்கள் பெறப்பட்டுள்ளன.
இச்சிறப்பு கருக்க முறைத் திருத்தப் பணிகள் நிறைவு பெற்று ஜனவரி 5 ஆம் தேதி அனைத்து அங்கீகரிக்கப்பட்ட அரசியல் கட்சி பிரதிநிதிகள் முன் இறுதி வாக்காளா் பட்டியல் வெளியிடப்படும்.இவ்வாறு அவர் பேசினார்.
இக்கூட்டத்தில் கூடுதல் ஆட்சியா் (வருவாய்) சுகபுத்ரா, மாநக ராட்சி ஆணையா்கள் சரவண குமாா் (தஞ்சாவூா்), செந்தில் முருகன் (கும்பகோணம்), மாவட்ட ஆட்சியரின் நோ்முக உதவியாளா் (பொது) ரெங்கராஜன் உள்ளிட்ட பலர் கலந்து கொண்டனர்.
- கடந்த இரண்டு நாட்களில் பெயர் சேர்த்தல், நீக்கம், திருத்தம் என சிறப்பு முகாம் நடைபெற்றது.
- படிவங்களை பூர்த்தி செய்து நேரடியாக அந்தந்த வட்டாட்சியர் அலுவலகத்தில் வழங்கலாம்.
தஞ்சாவூர்:
தஞ்சைமாவட்ட கலெக்டர் தினேஷ்பொ ன்ராஜ் ஆலிவர் வெளியி ட்டுள்ள செய்திக்குறிப்பில் கூறியிருப்பதாவது :-
இந்திய தேர்தல் ஆணையத்தின் அறிவுரை களின் படி கடந்த 12.11.2022 மற்றும் 13.11.2022 ஆகிய இரண்டு நாட்களில் தஞ்சாவூர் மாவட்டத்திற்கு உட்பட்ட அனைத்து வாக்குச் சாவடிகளிலும் வாக்காளர் சேர்த்தல், நீக்கம் மற்றும் திருத்தம் தொடர்பான சிறப்பு முகாம்கள் காலை 09.30 மணி மாலை 5.30 மணி வரை நடைபெற்றது.
இச்சிறப்பு முகாம்களில் 15704 படிவம் 6 ம், 2122 படிவம் 7 மற்றும் 5441 படிவம் 8 ம் ஆக கூடுதலாக 23267 படிவங்கள் பெறப்பட்டது.
மேலும், ஆன்லைன் மூலமாக 1205 படிவம் 6-ம், 3187 படிவம் 7 மற்றும் 1903 படிவம் 8-ம் ஆக கூடுதலாக 6295 படிவங்கள் ஆன்லைன் மூலமாக பெறப்பட்டது. இச்சிறப்பு முகாமினை பயன்படுத்திக் கொள்ளத் தவறிய பொது மக்கள் எதிர்வரும் 26 (சனிக் கிழமை) மற்றும் 27 ஆகிய தேதிகளில் (ஞாயிற்று கிழமை) நடைபெறவுள்ள சிறப்பு முகாம்களை பயன்படுத்திக் கொள்ளலாம்.
மேலும், 18 வயது நிரம்பிய வாக்காளர்கள் தங்களது பெயர்களை வாக்காளர் பட்டியலில் சேர்த்தல், நீக்கம் மற்றும் திருத்தங்களுக்கு உரிய படிவங்களை பூர்த்தி செய்து நேரடியாக அந்தந்த வட்டாட்சியர் அலுவலகத்தில் வழங்கலாம், NVSP Portal என்ற இணையதளம் மற்றும் Voters Helpline என்ற செயலி மூலமாகவும் விண்ணப்பிக்கலாம்.
இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்