search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "குரூப் 1 தேர்வு"

    • குரூப் 1 தேர்வில் 35-ம் இடத்தை பிடித்து வணிக வரித்துறையில் உதவி ஆணையராக பொறுப்பேற்க உள்ளார்.
    • இன்றைக்கு அதையும் கடந்து குரூப் 1 தேர்வுக்கு விண்ணப்பித்து, கிடைக்கும் நேரங்களில் படித்து தற்போது 10-ம் இடத்தை பிடித்து உதவி ஆட்சியராக பொறுப்பேற்க உள்ளார்.

    திருப்பூர்:

    ஈரோடு மாவட்டம் நம்பியூர் சின்ன செட்டிபாளையத்தை சேர்ந்தவர் சுபாஷினி ( வயது 26). பொறியியல் பட்டதாரி. தமிழ்நாடு அரசுப் பணியாளர் தேர்வாணையம் நடத்திய குரூப் 2 தேர்வில் வெற்றி பெற்று, கடந்த 2020-ம் ஆண்டு முதல் திருப்பூர் கூட்டுறவு துறையில் முதுநிலை ஆய்வாளராக பணியாற்றி வருகிறார்.

    இந்நிலையில் வேலைக்கு இடையே, தொடர்ந்து போட்டித்தேர்வுக்கான படிப்பையும் கைவிடாது படித்து இன்றைக்கு, தேர்வாணையத்தின் குரூப்-1 தேர்வில் தமிழ்நாட்டில் 49-ம் இடம்பிடித்து கூட்டுறவுத்துறையிலேயே, துணைப் பதிவாளர் பணிக்கு தேர்வாகி உள்ளார். இவரது தந்தை காளியப்பசாமி, விவசாயி. தாய் உமா மகேஸ்வரி. தம்பி, தங்கை உள்ளனர்.

    சுபாஷினி கூறும்போது, வேலைக்கு சென்று வந்த எஞ்சிய நேரத்தில் தான் படித்தேன். திருப்பூர் மாவட்ட வேலைவாய்ப்பு அலுவலர் சுரேஷ் உள்ளிட்டோர் தந்த ஊக்கமும், பயிற்சியும் எனக்கு பக்கபலமாக இருந்தன. இன்றைக்கு நான் வெற்றி பெற்றதை பார்த்து என் தங்கை இன்றைக்கு போட்டித்தேர்வுக்கு தீவிரமாக படித்து வருகிறாள்." இவ்வாறு அவர் தெரிவித்தார்.

    உடுமலையை சேர்ந்தவர் இந்திரா பிரியதர்ஷினி (28). பிஎஸ்சி., வேளாண்மை படித்தவர். திருப்பூர் மாவட்டம் மடத்துக்குளத்தில் வேளாண்மை அலுவலராக கடந்த 2019-ம் ஆண்டு பணிக்கு சேர்ந்தவர். தற்போது மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் பணியாற்றுகிறார்.

    தொடர்ந்து குரூப் 1 தேர்வில் 35-ம் இடத்தை பிடித்து வணிக வரித்துறையில் உதவி ஆணையராக பொறுப்பேற்க உள்ளார். இந்திரா பிரியதர்ஷினி கூறும்போது, "வேளாண்மை அலுவலராக இருந்ததால், பல்வேறு பகுதிகளில் பணியிடங்களுக்கு சென்றுவிட்டு வீடு திரும்பவே தாமதமாகும். ஆனால் தொடர்ந்து குரூப் 1 தேர்வுக்கு கிடைக்கும் நேரங்களில் எல்லாம் படித்து வந்தேன். இன்றைக்கு வெற்றி பெற்றுள்ளேன் என்றார். இவரது தந்தை கேசவன், தொழில் செய்து வருகிறார். தாய் ரேகாதேவி செஞ்சேரிப்புத்தூர் அரசுப் பள்ளி ஆசிரியையாக உள்ளார்.

    தமிழ்நாடு அரசுப் பணியாளர் தேர்வாணையம் குரூப் 4-ல் வெற்றிபெற்று இளநிலை உதவியாளராக கடந்த 2020-ம் ஆண்டு பணிக்கு சேர்ந்தவர் நித்யா (26). பிஎஸ்சி., வேளாண்மை படித்தவர். அரசு வேலை கிடைத்துவிட்டது என தேங்கிவிடாமல், தொடர்ந்து படித்து வேளாண்மை அலுவலராக குரூப் 2 தேர்வில் தேர்ச்சி பெற்று, மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் பணியாற்றுகிறார்.

    இன்றைக்கு அதையும் கடந்து குரூப் 1 தேர்வுக்கு விண்ணப்பித்து, கிடைக்கும் நேரங்களில் படித்து தற்போது 10-ம் இடத்தை பிடித்து உதவி ஆட்சியராக பொறுப்பேற்க உள்ளார். இவர் ஈரோடு மாவட்டம் பெருந்துறை துடுப்பதி கிராமத்தை சேர்ந்த விவசாயி பழனிசாமி-பழனியம்மாளின் மகள் ஆவார்.

    3 பேரும் கூறும்போது, தமிழ்நாட்டில் குரூப் 1-ல் 95 பேர் தேர்ச்சி பெற்றுள்ளனர். அதில் 3 பேர் திருப்பூர் மாவட்ட கலெக்டர் அலுவலகத்தில் பல்வேறு நிலைகளில் பணியாற்றி வருவது எங்களுக்கு ஆச்சர்யம். அரசு வேலை கிடைத்த பின்பும், மனம் தளராமல் தொடர்ந்து படித்தோம். வாழ்க்கையின் எந்த இடத்திலும் நாங்கள் தேங்கவில்லை. எங்களின் அடுத்தடுத்த முயற்சிகளே தமிழ்நாடு அரசுப் பணியாளர் தேர்வாணையத்தின் குரூப் 1- வெற்றிக்கு மிக முக்கிய காரணம் என்றனர்.

    • இணைய வழி மூலம் மட்டுமே விண்ணப்பிக்க வேண்டும்.
    • ஏப்ரல் 27-ந்தேதி நள்ளிரவு வரை விண்ணப்பிக்கலாம்.

    சென்னை:

    அரசு துறையில் உயர் பதவிக்கான துணை கலெக்டர், போலீஸ் துணை கண்காணிப்பாளர், வணிக வரிகள் உதவி ஆணையர், கூட்டுறவு சங்கங்களின் துணைப் பதிவாளர், ஊரக வளர்ச்சி உதவி இயக்குனர், மாவட்ட வேலைவாய்ப்பு அலுவலர் தீயணைப்பு மாவட்ட அலுவலர் ஆகிய 90 பணியிடங்களை நிரப்புவதற்கு போட்டித் தேர்வு தேதியை தமிழ்நாடு அரசு பணியாளர் தேர்வாணையம் அறிவித்துள்ளது.

    இணைய வழி மூலம் மட்டுமே விண்ணப்பிக்க வேண்டும். ஏப்ரல் 27-ந்தேதி நள்ளிரவு வரை விண்ணப்பிக்கலாம். முதல் நிலைத் தேர்வு ஜூலை மாதம் 13-ந்தேதி நடக்கிறது. முதல் நிலை தேர்வு முடிவுகள் அறிவிக்கப்படும் போது முதன்மை தேர்வு நடைபெறும் நாள் வெளியிடப்படும்.

    • 10, 113 பேர் எழுதினர்
    • 5 நடமாடும் குழுக்கள் பணியில் ஈடுபட்டனர்

    வேலூர்:

    தமிழ்நாடு அரசு பணியாளர் தேர்வா ணையம் சார்பில் குரூப் 1 முதல் நிலை தேர்வு தமிழகம் முழுவதும் இன்று நடந்தது.

    துணை ஆட்சியர், துணை போலீஸ் சூப்பிரண்டு, துணைப்பதிவாளர், மாவட்ட வேலைவாய்ப்பு அலுவலர் உள்ளிட்ட பணிகளுக்கு இந்த தேர்வு நடந்தது. திருப்பத்தூர் மாவட்டத்தில் 14 மையங்க ளில் 3,883 பேர் தேர்வு எழுதினர்.

    இதேபோல் வேலூர் மாவட்டத்தில் 6,230 பேர் தேர்வு எழுதினர் காட்பாடி அரசு ஆண்கள் மேல்நிலைப்பள்ளி காட்பாடி அரசு பெண்கள் மேல்நிலைப்பள்ளி, வேலூர் வெங்கடேஸ்வரா பள்ளி, சத்துவாச்சாரி ேஹாலி கிராஸ் பள்ளி, ஊரீஸ் பள்ளி உள்பட மாவட்டத்தில் உள்ள 23 மையங்களில் நடந்தது.

    தேர்வு மையங்களில் பல்வேறு முன்னேற்பாடுகள் செய்யப்பட்டு இருந்தன.

    அனைத்து தேர்வு மையங்களிலும் குடிநீர் மின்சாரம் கழிவறை உள்ளிட்ட அடிப்படை வசதிகள் செய்யப்பட்டு இருந்தது. மாவட்ட வருவாய் அலுவலர் துணை ஆட்சியர் அளவிலான 2 பறக்கும் படை அலுவலர்கள் துணை வட்டாட்சியர்கள் முதுநிலை வருவாய் ஆய்வாளர்கள் போலீசார் அலுவலக உதவியாளர் ஆகியோர் சேர்ந்து 5 நடமாடும் குழுக்கள் உள்ளிட்ட பல்வேறு துறைகளை சார்ந்த அலுவலர்கள் பணியில் ஈடுபட்டு இருந்தனர்.

    அனைத்து நிகழ்வு களையும் வீடியோவாக பதிவு செய்தனர். தேர்வு எழுத காலை 9 மணிக்குள் தேர்வர்கள் தேர்வு மையங்களுக்குள் அனுமதிக்கப்பட்டனர்.

    தேர்வு எழுத வந்தவர்கள் கொண்டு வந்த செல்போன், டிஜிட்டல் வாட்ச், ஸ்மார்ட் வாட்ச், கால்குலேட்டர் போன்றவற்றை தேர்வு மையத்திற்குள் எடுத்து செல்ல அனுமதிக்கப்பட வில்லை.

    • திருப்பூர் மாவட்டத்தில் குரூப் 1 தேர்வு எழுத 5856 பேர் விண்ணப்பித்து இருந்தனர்.
    • மாவட்டம் முழுவதும் 13 பள்ளிகள் மற்றும் 2 கல்லூரிகள் என மொத்தம் 20 மையங்களில் தேர்வு நடந்தது.

    திருப்பூர்:

    தமிழ்நாடு அரசுப்பணியாளர்கள் தேர்வாணையம் (டி.என்.பி.எஸ்.சி.) ஒவ்வொரு ஆண்டும் குரூப் 1, குரூப் 2, குரூப் 2 ஏ, குரூப் 4 உள்ளிட்ட பதவிகளுக்கான தேர்வுகளை நடத்தி வருகிறது.

    இந்நிலையில் டி.என்.பி.எஸ்.சி. சார்பில் உயர் பதவிகளுக்கான குரூப் 1 பதவியில் காலியாக உள்ள துணை கலெக்டர் 18 இடங்கள், துணை காவல் கண்காணிப்பாளர் (டி.எஸ்.பி.) 26, வணிக வரித்துறை உதவி இயக்குனர் 25, கூட்டுறவுத்துறை பதிவாளர் 13, ஊரக வளர்ச்சித்துறை உதவி இயக்குனர் 7, மாவட்ட தீயணைப்புத்துறை அதிகாரி 3 பதவிகள் என 92 பணியிடங்களுக்கான அறிவிப்பை டி.என்.பி.எஸ்.சி. கடந்த ஜூலை மாதம் 21-ந்தேதி வெளியிட்டது. இதையடுத்து ஏராளமானவர்கள் போட்டி தேர்வுக்கு விண்ணப்பித்திருந்தனர்.

    திருப்பூர் மாவட்டத்தில் குரூப் 1 தேர்வு எழுத 5856 பேர் விண்ணப்பித்து இருந்தனர். மாவட்டம் முழுவதும் 13 பள்ளிகள் மற்றும் 2 கல்லூரிகள் என மொத்தம் 20 மையங்களில் தேர்வு நடந்தது. திருப்பூர் மாநகரில் ஜெய்வாபாய் மாநகராட்சி பள்ளி உள்பட சில முக்கியமான பள்ளிகளில் தேர்வு மையங்கள் அமைக்கப்பட்டிருந்தன. காலை 9.30 மணிக்கு தொடங்கிய தேர்வு, மதியம் 12.30 மணி வரை நடந்தது. தேர்வு மையங்களில் போலீஸ் பாதுகாப்பும் போடப்பட்டிருந்தது.

    இந்தநிலையில் திருப்பூர் மாவட்டத்தில் 5856பேர் தேர்வுக்கு விண்ணப்பித்திருந்த நிலையில் 3,239 பேர் தேர்வு எழுத வந்திருந்தனர். 2,617 பேர் தேர்வு எழுத வரவில்லை. 45 சதவீதம் பேர் தேர்வு எழுத வராததால் அதிகாரிகள் அதிர்ச்சியடைந்தனர்.

    ×